Dinamani Thoothukudi - May 19, 2025

Dinamani Thoothukudi - May 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thoothukudi along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thoothukudi
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 19, 2025
பாகிஸ்தானுக்கு கடனுதவி: ஐஎம்எஃப் நிபந்தனை
பாகிஸ்தானுக்கு அடுத்தகட்ட கடன் தவணையை விடுவிக்க கூடுதலாக 11 நிபந்தனைகளை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது.
1 min
அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு
அரபிக் கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தொழில்நுட்பக் கோளாறு இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-61
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.
1 min
கோவில்பட்டி கோயில் திருவிழாவில் நலஉதவிகள்
கோவில்பட்டி அருள்மிகு பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நலஉதவிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
நித்திரவிளை அருகே மீன் கழிவுகளை கொட்டிய இருவர் கைது
நித்திர விளை அருகே லாரியில் மீன் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டியதாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் சேர மே 23-க்குள் விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சேர இணையதளம் மூலம் இம் மாதம் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
1 min
140 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கர ஸ்கூட்டர்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் 140 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச்சக்கரங்கள் பொருத்திய ஸ்கூட்டர்கள் அண்மையில் வழங்கப்பட்டன.
1 min
ராஜீவ் காந்தி ஜோதி யாத்திரை குமரி வருகை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அம்மாநில முதல்வர் சித்தராமய்யா தொடங்கிவைத்த 34ஆவது ஜோதி யாத்திரை ஞாயிற்றுக்கிழமை கன்னியாகுமரி வந்தது.
1 min
குலசேகரன்பட்டினம் கோயிலில் அன்னதானம் திட்ட விரிவாக்கம்
குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் அன்னதானம் திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
தூத்துக்குடியில் இன்று மகளிர் நலவாரிய சிறப்பு முகாம்
தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் தூத்துக்குடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை (மே 19) நடைபெறும்.
1 min
கோவில்பட்டியில் நாளை மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை (மே 20) மின் நுகர்வோர் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
1 min
கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு வரவேற்பு
கோவில்பட்டியில் ராஜீவ் காந்தி நினைவு ஜோதி யாத்திரைக்கு தூத்துக்குடி, வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
1 min
குலசேகரம் எஸ்ஆர்கே இன்டர்நேஷனல் பள்ளி 100% தேர்ச்சி
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வில் குலசேகரம் எஸ்.ஆர்.கே. இன்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.
1 min
தூத்துக்குடியில் முதல்வர் மருத்துவக் காப்பீடு திட்ட முகாம்
தூத்துக்குடியில் 46-ஆவது வார்டுக்குள்பட்ட பாத்திமாநகரில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஆறுமுகனேரி பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஆறுமுகனேரி இந்து மேல்நிலைப் பள்ளியில், 2013ஆம் ஆண்டு பிளஸ் 2 படித்த மாணவர்-மாணவியரின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு அடிக்கல்
சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் மீன் ஏலக் கூடத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
1 min
பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தை ரூ. 41 லட்சத்தில் சீரமைக்கும் பணி தொடக்கம்
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் தெப்பக்குளத்தை ரூ.41 லட்சத்தில் சீரமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
அரியநாயகிபுரம் கந்தூரி விழாவில் பொது விருந்து
அரியநாயகிபுரத்தில் முஸ்லிம் சுன்னத் ஜமாஅத், வளர்பிறை இளைஞர் பேரவை ஆகியவை சார்பில் திரு நபியின் உதய தினத்தையொட்டி கந்தூரி விழா, சமத்துவப் பொது விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற்றன.
1 min
ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் ரூ. 11.34 கோடியில் பணிகள்
தோவாளை வட்டம் உடையடி பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நல நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியர் ரா. அழகுமீனா சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
லஞ்சப் புகார்: வனவர் பணியிடை நீக்கம்
தென்காசி மாவட்டம் புளியறை வனத்துறை சோதனைச் சாவடியில் லாரி ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்குவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பணியிலிருந்த வனவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
பக்தர்கள் வசதிக்காக ஏடிஎம் மையங்கள்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ராஜகோபுரம் அருகே உள்ள புதிய கட்டடத்தில், பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம் மையங்களை ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன்.
1 min
புகையிலைப் பொருள் விற்பனை: பெட்டிக்கடைக்காரர் கைது
சாத்தான்குளம் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றதாக, பெட்டிக்கடைக்காரரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
உடன்குடியில் ஒருவர் வெட்டிக் கொலை: இளைஞர் போலீஸில் சரண்
உடன்குடியில் சனிக்கிழமை இரவு ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் இளைஞர் சரணடைந்தார்.
1 min
சாத்தான்குளம் அருகே விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37 பவுன் நகைகள் மீட்பு
சாத்தான்குளம் அருகே மீரான்குளம் பகுதியில் சனிக்கிழமை கிணற்றுக்குள் கார் பாய்ந்து 5 பேர் உயிரிழந்த விபத்தின்போது கிணற்று நீரில் மூழ்கிய 37 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
1 min
ஆறுமுகனேரி-சென்னைக்கு நேரடி கோடைகால ரயில் இயக்க கோரிக்கை
கோடை விடுமுறையை முன்னிட்டு, தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் கூடுதலாக ஆறுமுகனேரியில் இருந்து சென்னைக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என ஆறுமுகனேரி ரயில்வே வளர்ச்சிக்குழுவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறல்: கேரள விசைப்படகு சிறைபிடிப்பு
தூத்துக்குடி கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கேரள விசைப்படகை மீன்வளத் துறையினர், கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் சிறைபிடித்தனர்.
1 min
கட்டுமானப் பொருள்கள் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும்
தமிழகத்தில் கட்டுமான பொருள்கள் விலையை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என நாம் இந்தியர் கட்சியின் மாநிலத் தலைவர் என்.பி. ராஜா கோரிக்கை விடுத்துள்ளார் (படம்).
1 min
தேர்தல் வெற்றிக்கு ஒருங்கிணைந்த பணியே முக்கியம்
சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற திமுகவினர் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என்றார் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலர் கனிமொழி எம்.பி.
1 min
சாமிதோப்பில் மாநில அளவிலான வாலிபால் போட்டி
சாமிதோப்பில் நடைபெற்ற 4ஆவது மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
1 min
விஜய் அஞ்சலி
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி, ஈழப்போரில் உயிரிழந்தவர்களுக்கு தலைவர் விஜய் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.
1 min
ஏழை மாணவி உயர் கல்வி பயில கமல்ஹாசன் நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவி சோபனா உயர் கல்வி பயில, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கல்வி உதவித் தொகை வழங்கினார்.
1 min
தமிழக பாஜக தலைவரை சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை திருப்பூரில் சந்தித்துப் பேசிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
எஸ்.சி. உள் ஒதுக்கீடு விவகாரம் விரைந்து முடிவு எடுக்காவிடில் போராட்டம்
தமிழகத்தில் பட்டியலினத்தவருக்கான இட உள் ஒதுக்கீடு விவகாரம் குறித்து ஒரு மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஜூன் 18-க்குப் பிறகு போராட்டம் மேற்கொள்ளப்படும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் தலைவர் மருத்துவர் க.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: அரசியல் தலைவர்கள் அஞ்சலி
இலங்கையில் இறுதிக் கட்ட போரின் போது தமிழர்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் படுகொலையின் 16-ஆவது ஆண்டு நினைவு தினம், சென்னையில் பல்வேறு கட்சிகள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டன.
1 min
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பணப் பிரச்னையால் ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்ளிட்ட இருவர் காயமடைந்தனர்.
1 min
சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 3 பேரிடம் போலீஸார் விசாரணை
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்பதுதான் விஜயின் நிலைப்பாடு
பாஜகவுடன் திமுக கூட்டணி இல்லை என்பது தான் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் நிலைப்பாடு என்று அந்தக் கட்சியின் துணை பொதுச்செயலர் சி.டி.ஆர். நிர்மல் குமார் திட்டவட்டமாகக் கூறினார்.
1 min
ஈழத் தமிழர்கள் நீதி பெறுவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும்
ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுத் தருவதற்கான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
1 min
மீண்டும் தனித்துப் போட்டி: சீமான் திட்டவட்டம்
2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு
பட்டுக்கோட்டை அருகே அனுமதியின்றி இயங்கிய பட்டாசு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
1 min
மக்கள் ஆதரவு அளித்தால் கலைகள் செழித்தோங்கும்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
1 min
திருச்சபையின் புதிய மேய்ப்பர்!
ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறார் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்.
2 mins
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!
2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.
2 mins
உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
1 min
தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு?
தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
2 mins
பள்ளிக் கல்லூரி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய என்எம்சி முடிவு
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது.
1 min
வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்
வேளாண்மை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
1 min
அரசமைப்புச் சட்டமே உயர்வானது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
1 min
பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்
நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபர் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
மத்திய அரசின் குழுவுக்கு தலைமை வகிக்க முடிவெடுத்தது ஏன்?
சசி தரூருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்
'இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்' என்று ராணுவ அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேர்க்கப்பட்டுள்ள காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான் விமானப் படை தளங்களைத் தகர்த்த பிரமோஸ் ஏவுகணைகள்
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'பிரமோஸ்' ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகர்த்தன; அதேநேரம், சீனாவிடம் பாகிஸ்தான் கடன் வாங்கி வைத்திருந்த வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்று கிடந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்
பாதுகாப்பாக அழிப்பு
1 min
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழர்கள் அஞ்சலி
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1 min
பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங், பிகார் சேர்ந்த அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தார்.
1 min
நாடாளுமன்ற விருதுகள் 2025: 17 எம்.பி.க்கள் தேர்வு
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் 'ஸன்ஸத் ரத்னா 2025' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளித் துறைக்கு உதவும்
நிபுணர்கள் கருத்து
1 min
தன்கரின் 74-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 74-ஆவது பிறந்த தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது.
2 mins
உலக டேபிள் டென்னிஸ்: மனிகா, மானவ் வெற்றி
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மனிகா பத்ரா, மானவ் தக்கர் ஆகியோர் தங்களது பிரிவின் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
மே 31 முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.
1 min
நியூயார்க்: புரூக்ளின் பாலத்தில் கப்பல் மோதி விபத்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தைக் கடக்கும் போது மெக்ஸிகோ கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாலுமிகள் உயிரிழந்தனர்.
1 min
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் வெற்றி இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்தனர்.
1 min
புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு
திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி
1 min
சுருங்கி வரும் மன்னார் வளைகுடா தீவு!
மன்னார் வளைகுடாவில் கடலால் சூழப்பட்டுள்ள கரியாச்சல்லி தீவை காப்பாற்ற ரூ. 50 கோடியில் புனரமைப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்ததுள்ளது.
1 min
குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
1 min
பக்தர்களின் ரூ.1,336 கோடி மூலம் கோயில் திருப்பணிகள்
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
1 min
திருச்செந்தூர் கோயிலில் யாகசாலை முகூர்த்தக் கால் நடும் விழா
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை அமைப்பதற்கான முகூர்த்தக் கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
Dinamani Thoothukudi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only