Dinamani Perambalur & Ariyalur - March 26, 2025

Dinamani Perambalur & Ariyalur - March 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Perambalur & Ariyalur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Perambalur & Ariyalur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 26, 2025
சிறுபான்மையினரை அணுக பாஜக புதிய பிரசார திட்டம்
நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை சமூகத்தினரைச் சென்றடைய, 'சௌகத்-ஏ-மோடி' எனும் தேசிய அளவிலான பிரசார திட்டத்தை பாஜக தொடங்கியுள்ளது.
1 min
தில்லி நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு ஆய்வு
கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணையை எதிர்கொண்டுள்ள தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் உச்சநீதிமன்றக் குழு செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டது.
1 min
அமித் ஷா - எடப்பாடி பழனிசாமி சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்தார்.
1 min
தமிழ் மொழியைக் காக்க விரைவில் புதிய அறிவிப்புகள்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
1 min
பெரம்பலூர் அருகே சட்ட விழிப்புணர்வு முகாம்
பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அறக்கட்டளை சார்பில் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
உலக காசநோய் தினம்: பெரம்பலூரில் விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை சார்பில், காசநோய் விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி
பெரம்பலூர் மாவட்டம், பிலிமிசை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சார்பில், மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
உலக காசநோய் தின மருத்துவக் கருத்தரங்கம்
உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ் மற்றும் மருத்துவமனையில் மருத்துவக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
சின்னதாராபுரத்தில் பாஜகவினர் 20 பேர் கைது
சின்னதாராபுரத்தில் செவ்வாய்க்கிழமை மதுக்கடையில் தமிழக முதல்வரின் படத்தை ஒட்ட முயன்ற பாஜகவினர் 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
அரியலூரில், மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துறையினர் சார்பில் தீண்டாமை ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்விச் சுற்றுலா
பெரம்பலூர் மாவட்ட சுற்றுலாத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில், மாற்றுத்திறனாளி மாணவர்கள் திங்கள்கிழமை ஒருநாள் கல்விச் சுற்றுலா சென்றனர்.
1 min
அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
சுகாதார வளாக மாதிரிப் பூங்காவை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
கரூர் தாந்தோணிமலையில் முள்புதராக மாறிய சுகாதார வளாக மாதிரி பூங்காவை அகற்றி மாற்று பயன்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்த அனுமதி
அரியலூர் மாவட்டத்தில், நிர்ணயிக்கப்பட்டுள்ள இடங்களில் மட்டுமே போராட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றார் ஆட்சியர் பொ.ரத்தினசாமி.
1 min
பெரியமறை ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் தேரோட்டம்
அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த சுள்ளங்குடி பெரியமறை கிராமத்திலுள்ள ஸ்ரீநிவாச பெருமாள் திருக்கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோத்ஸவ விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு டிஎன்பிஎல் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்
புகழூர் டிஎன்பிஎல் ஆலை சார்பில் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
1 min
காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கை: அரியலூர் ஆட்சியர்
காசநோய் இல்லாத மாவட்டமாக மாற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றார் அரியலூர் மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி.
1 min
கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள கோம்புபாளையம் சீனிவாச பெருமாள் கோயிலில் செவ்வாய்க்கிழமை காலை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
கரூரில் கட்டட பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூரில் கட்டிட பொறியாளர்கள் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை காலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அரியலூரில் இன்று செல்லப்பிராணிகள் கண்காட்சி
அரியலூர் அடுத்த வாலாஜா நகரத்திலுள்ள அன்னலட்சுமி ராஜாபாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், புதன்கிழமை செல்லப் பிராணிகளின் கண்காட்சி நடைபெறுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
1 min
கரூரிலிருந்து காது கேளாத, வாய் பேசாத குழந்தைகள் திருச்சிக்கு சுற்றுலா
கரூரில் காது கேளாத, வாய் பேசாத மற்றும் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் திருச்சிக்கு செவ்வாய்க்கிழமை சுற்றுலா சென்றனர்.
1 min
குற்றவாளிகள், ரெளடிகளின் வீடுகளில் போலீஸார் திடீர் சோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரெளடிகள் வீடுகளில் போலீஸார் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
1 min
காசநோய் இல்லாத ஊராட்சிகளுக்கு ஆட்சியர் பாராட்டுச் சான்றிதழ்
பெரம்பலூர் மாவட்டத்தில் காசநோயாளிகள் இல்லாத 10 ஊராட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்.
1 min
பேறுகால விடுப்பு: அவசர ஊர்தி தொழிலாளர்கள் வலியுறுத்தல்
பேறுகால விடுப்புடன் சம்பளம் வழங்க வேண்டுமென பெரம்பலூர் மாவட்ட அவசர கால ஊர்தி தொழிலாளர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணி தீவிரம்
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்துள்ள சின்னதாராபுரத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
1 min
பெரம்பலூரை மாநகராட்சியாக்க ஆலோசனை: அமைச்சர் கே.என்.நேரு
ராமநாதபுரம், பெரம்பலூர் ஆகிய இரு நகராட்சிகளையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min
அய்யர்மலை அருகே மாடுகள் மாலை தாண்டும் விழா
அய்யர்மலை அருகே உள்ள வில்லுகாரன்பட்டியில் செவ்வாய்க்கிழமை மாடுகள் மாலை தாண்டும் விழா நடைபெற்றது.
1 min
குற்றவாளிகளை கைது செய்வதில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு பாராட்டு
குற்ற வழக்குகளில் குற்றவாளிகளை கண்டறிந்து சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா செவ்வாய்க்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
1 min
போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை
பெரம்பலூர் அருகே பள்ளி மாணவியைக் கடத்திச் சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1 லட்சம் அபராதமும் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கட்டுமானப் பொருள்களின் விலை: குழு அமைக்கக் கோரிய மனு தள்ளுபடி
கட்டுமானப் பொருள்களின் விலையை முறைப்படுத்த மாநில அளவில் குழு அமைக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
மோகனூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: புதுக்கை கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழப்பு
மோகனூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சம்மன்
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக மார்ச் 27-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு செவ்வாய்க்கிழமை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
1 min
மரத்தில் இருசக்கர வாகனம் மோதல்: தொழிலாளர்கள் இருவர் உயிரிழப்பு
நீடாமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மரத்தில் மோதிய விபத்தில் நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருவர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தனர்.
1 min
இருசக்கர வாகனங்கள் மோதல் இளைஞர் உயிரிழப்பு; 4 பேர் காயம்
தளவாபாளையம் அருகே செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min
வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 1.63 கோடி மோசடி செய்தவர் கைது
தஞ்சாவூர் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ.1.63 கோடி மோசடி செய்த நபரை காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
திருச்சியில் ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான 12,500 போதை மாத்திரைகள் பறிமுதல் பெண் உள்பட 4 பேர் கைது
திருச்சியில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த பெண் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
நிற்காமல் சென்ற அரசுப் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய பிளஸ் 2 மாணவி
ஓட்டுநர் பணியிடை நீக்கம்
1 min
காலமானார் ஷிஹான் ஹுசைனி
நடிகரும் வில்வித்தை பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி (60) உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) காலமானார்.
1 min
டாஸ்மாக் வழக்கு விசாரணையிலிருந்து நீதிபதிகள் விலகல்
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு களின் விசாரணையிலிருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்தது.
1 min
பிளஸ் 2 பொதுத் தேர்வு நிறைவு: மே 9-இல் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இறுதித் தேர்வான இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் மே 9-ஆம் தேதி வெளியிடப்படவுள்ளன.
1 min
பதவி உயர்வு மூலம் டி.எஸ்.பி. ஆனவர்களை ஏடி.எஸ்.பி.களாக நியமிக்க இடைக்காலத் தடை
பதவி உயர்வு மூலம் காவல் துணைக் கண்காணிப்பாளர்களாக (டிஎஸ்பி) நியமிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாக (ஏடி.எஸ்.பி.) பதவி உயர்வு வழங்க இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
கச்சத்தீவு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப்.15-இல் இறுதி விசாரணை
கச்சத்தீவு தொடர்பாக இந்தியா- இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணைக்காக வரும் செப்.15-ஆம் தேதிக்கு வழக்கை பட்டியலிட உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
அனைத்து மதத்தினருக்கும் மரியாதை அளிக்க வேண்டும்
அனைத்து மதத்தினரும் ஒருவருக்கொருவர் மரியாதை அளித்து வாழ வேண்டும் என்று தினமணி ஈகைப் பெருநாள் மலர் வெளியீட்டு விழாவில் ஆற்காடு இளவரசரின் திவான் நவாப்ஜாதா முஹம்மத் ஆசிப் அலி தெரிவித்தார்.
1 min
சென்னையில் அடுத்தடுத்து 6 இடங்களில் பெண்களிடம் நகை பறிப்பு
சென்னையில் 6 இடங்களில் தங்கச் சங்கிலியைப் பறித்துவிட்டு மும்பை செல்வதற்காக விமானத்தில் செல்லத் தயாரான இருவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், ரயிலில் தப்பிச் சென்ற ஒருவரை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் போலீஸார் கைது செய்தனர்.
2 mins
தூய்மைப் பணியாளர்களை பணியிலிருந்து நீக்க மாட்டோம்
அமைச்சர் கே.என்.நேரு
1 min
அமைச்சரை ‘மாப்பிள்ளை’ என அழைத்த எம்எல்ஏ!
மின்சாரத் துறை அமைச்சரை, மாப்பிள்ளை என அழைத்த அதிமுக உறுப்பினரின் பேச்சால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
1 min
11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும்
திருச்செங்கோடு, உடுமலைப்பேட்டை, பழனி உள்ளிட்ட 11 நகராட்சிகள் தரம் உயர்த்தப்படும் என்று நகராட்சித் துறை அமைச்சர் கே.என். நேரு அறிவித்தார்.
1 min
அமெரிக்கர்களும் விரும்பும் ஆவின் நெய்
ஆவின் நெய்யை அமெரிக்க நாட்டினரும் விரும்புவதாக பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
கிராமங்களிலும் கட்டுநர்கள் நியமனம் அமைச்சர் அர.சக்கரபாணி உறுதி
நகரப் பகுதிகளைப் போன்று, கிராமங்களில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களிலும் கட்டுநர்கள் நியமிக்கப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.
1 min
தகவல் தொழில்நுட்பவியல் துறையிலும் நிதித் தட்டுப்பாடு
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்
1 min
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை
1 min
ரூ.704 கோடியில் நகராட்சிகளில் குடிநீர் மேம்பாட்டுப் பணிகள்
அமைச்சர் அறிவிப்பு
1 min
மத்திய அரசால் சொத்து வரி உயர்வு: கே.என்.நேரு
சொத்து வரியை உயர்த்தினால்தான், தமிழகத்துக்கான நிதி வரும் என்று மத்திய அரசு கூறியதால் சொத்துவரி உயர்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min
கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது
கோவை விமான நிலைய விரிவாக்க கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.
1 min
இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம்
இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று மத்திய வர்த்தக துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா தெரிவித்தார்.
1 min
நாடாளுமன்றத்தில் நிறைவேறியது பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா
தேசிய-மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்களின் திறன்மிக்க செயல்பாட்டை உறுதி செய்யும் பேரிடர் மேலாண்மை திருத்த மசோதா-2024, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
1 min
உ.பி.யைவிட தமிழகத்துக்கு அதிக நிதி: மத்திய அமைச்சர் பதில்
'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (100 நாள் வேலைத் திட்டம்) 20 கோடி மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தைவிட, 7 கோடி மக்கள்தொகை கொண்ட தமிழகத்துக்கு ஒரு நிதியாண்டில் அதிக நிதி வழங்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் பெம்மசானி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
35 அரசு திருத்தங்களுடன் நிதி மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
இணைய வழி விளம்பரங்களுக்கு 6 சதவீத வரியை ரத்து செய்யும் திருத்தம் உள்பட மத்திய அரசின் 35 திருத்தங்களுடன், மக்களவையில் நிதி மசோதா 2025 செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்டது.
1 min
தகுதி இல்லாமல் பணம் பெற்றவர்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்பு
விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் பணம் பெற்றவர்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
'ஒரே நாடு ஒரே தேர்தல்' குழுவின் பதவிக் காலம் நீட்டிப்பு
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரு மசோதாக்களை ஆய்வு செய்வதற்காக பாஜக எம்.பி. பி.பி. சௌதரி தலைமையில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பதவிக் காலத்தை மழைக்கால கூட்டத்தொடரின் இறுதி வாரத்தின் முதல் நாள் வரை மக்களவை செவ்வாய்க்கிழமை நீட்டித்தது.
1 min
சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
போஃபர்ஸ் ஊழல் தொடர்பாக பத்திரிகையாளர் சித்ரா சுப்ரமணியம் எழுதியுள்ள புத்தகத்தை சுட்டிக் காட்டி உள்ள பாஜக, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தியும் தங்கள் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: மேலும் ஒருவரின் உடல் மீட்பு
தெலங்கானா சுரங்க விபத்தில் உயிரிழந்த மேலும் ஒருவரின் உடல் ஒரு மாதத்துக்கு பிறகு செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது.
1 min
ஏழைகளுக்கு சிகிச்சை மறுத்தால் தில்லி அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்ற உத்தரவிட நேரிடும்
ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிக்காவிட்டால், தில்லியில் உள்ள இந்திர பிரஸ்தா அப்போலோ மருத்துவமனையைக் கைப்பற்றுமாறு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு உத்தரவிட நேரிடும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை எச்சரித்தது.
1 min
ஜம்மு-காஷ்மீர் பேரவையிலிருந்து பாஜக வெளிநடப்பு
ஜம்மு-காஷ்மீரில் நீர்வளத் துறை பணியாளர்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனர்.
1 min
கனடா தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்பு: உளவுத்துறை அதிகாரி
கனடா பொதுத் தேர்தலில் இந்தியா தலையிட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு உளவுத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
1 min
இந்திய-சீன வெளியுறவு அதிகாரிகள் பேச்சு
தில்லியில் நிகழாண்டு பிற்பகுதியில் நடைபெறவுள்ள 24-ஆவது இந்திய-சீன சிறப்புப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தைக்கான முன்னேற்பாடுகளை இணைந்து மேற்கொள்ள இரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டன.
1 min
ஷிண்டே குறித்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க மாட்டேன்
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக் காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று நகைச்சுவை பேச்சாளர் குணால் காம்ரா தெரிவித்துள்ளார்.
1 min
பிரிவினைவாதத்தை கைவிடுவதாக 2 ஹுரியத் அமைப்புகள் அறிவிப்பு
பிரிவினைவாதத்தைக் கைவிடுவதாக ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த 2 அமைப்புகள் அறிவித்துள்ளன; இது, பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வைக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பைத் தொடரும் பாகிஸ்தான்
ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு
1 min
இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்?
இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணைய வழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது.
1 min
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: வெண்கலப் பதக்க சுற்றில் சுனில்
ஜோர்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் சுனில்குமார் ஆடவர்களுக்கான 87 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப் பதக்க சுற்றுக்கு வந்துள்ளார்.
1 min
முன்னேறும் சபலென்கா, ஸ்வியாடெக்; வெளியேறினார் கௌஃப்
அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், இருமுறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்களான பெலாரஸின் அரினா சபலென்கா, போலந்தின் இகா ஸ்வியாடெக் ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை தகுதிபெற்றனர்.
1 min
உலக கன்டென்டர் டேபிள் டென்னிஸ் போட்டி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்
உலக கன்டென்டர் 2025 டேபிள் டென்னிஸ் தொடரை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
ஷ்ரேயஸ் ஐயர் விளாசல்; குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப்
ஐபிஎல் போட்டியின் 5-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
இம்பாக்ட் பிளேயரின் இலக்கணம்
சென்னை எம்.ஏ. சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை, மும்பை இண்டியன்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் விளையாடிக் கொண்டிருந்தது.
2 mins
கருங்கடல் போர் நிறுத்தத்துக்கு ரஷியா - உக்ரைன் ஒப்புதல்: அமெரிக்கா
கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம் மேற்கொள்ள ரஷியாவும் உக்ரைனும் ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
1 min
10-ஆவது நாளாக யேமனில் அமெரிக்கா தாக்குதல்
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்; ஏராளமானோர் காயமடைந்தனர்.
1 min
வாகனங்களின் விலையை உயர்த்தும் மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா & மஹிந்திரா வாகனங்களின் விலை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி ஏழாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
கரூர் வைஸ்யா வங்கியின் மேலும் 4 புதிய கிளைகள்
முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கரூர் வைஸ்யா வங்கி, மேலும் நான்கு புதிய கிளைகளை தென்னகத்தில் திறந்துள்ளது.
1 min
துருக்கி: போராட்டத் தடை ஏப்ரல் வரை நீட்டிப்பு
துருக்கி தலைநகர் அங்காராவில் போராட்டம் நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடை வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
காஸா: இஸ்ரேல் குண்டுவீச்சில் மேலும் 23 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் மேலும் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
இலங்கை இறுதிக்கட்டப் போர்: முக்கியத் தளபதிகளுக்கு பிரிட்டன் தடை
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக இலங்கை முன்னாள் முப்படை தளபதி உள்ளிட்ட நான்கு பேர் மீது பிரிட்டன் அரசு பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
1 min
ஜப்பானில் ஐக்கிய தேவாலயங்கள் கலைப்பு
ஷின்ஸோ அபே படுகொலை எதிரொலி
1 min
வெப்ப வாத பாதிப்புகளுக்கு மருத்துவ உதவி எண்களை அழைக்க அறிவுறுத்தல்
வெப்ப வாத பாதிப்புகளுக்கு 104 அல்லது 108 அவசர உதவி எண்களை அழைக்கலாம் என பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
எட்டயபுரம் பாரதியார் இல்லத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து சேதம்
தூத்துகுடி மாவட்டம், எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் பிறந்த இல்லத்தின் மேற்கூரை செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்து சேதமடைந்தது.
1 min
19-ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டிலிருந்த 4 வகையான ஆண்டுக் கணக்குகள்
புதுக்கோட்டையிலுள்ள தண்டாயுதபாணி கோயில் பராமரிப்புப் பணியின் போது வெளிப்பட்ட கல்வெட்டில், கடந்த 19-ஆம் நூற்றாண்டில் 4 வகையான ஆண்டுக் கணக்குகளும் பயன்பாட்டில் இருந்துள்ளது தெரியவந்திருக்கிறது.
1 min
Dinamani Perambalur & Ariyalur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only