Dinamani Namakkal - May 06, 2025

Dinamani Namakkal - May 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Namakkal along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Namakkal
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 06, 2025
போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை
எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை
நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
1 min
பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்
தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்குகிறது.
1 min
ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
கஞ்சா வழக்கில் வெளிமாநிலத்தவர் கைது
கஞ்சா வழக்கில் தேடப்பட்டு வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த நபரை பரமத்தி போலீஸார் கைது செய்தனர்.
1 min
செவந்திப்பட்டி ஊராட்சி செயலருக்கு எதிராக கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
செவந்திப்பட்டி ஊராட்சி செயலரைக் கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பயங்கரவாத தாக்குதல்: நாமக்கல்லில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கம் கண்டனம்
ஜம்மு காஷ்மீர், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்கம் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
1 min
எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி மாவட்டம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள்: பி.தங்கமணி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்த நாளையொட்டி, மே 12-இல் மாவட்டம் முழுவதும் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி பேசினார்.
1 min
5 ஒன்றியங்களில் 398 பேருக்கு வீடுகள் கட்ட பணி ஆணை
வெண்ணந்தூர் உள்பட 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 398 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட பணி ஆணைகளை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆர்.என். ராஜேஸ்குமார் வழங்கினார்.
1 min
முட்டை கலக்காத சைவ மயோனைஸ் விற்பனைக்கு அனுமதி
நாமக்கல் மாவட்டத்தில் முட்டை கலக்காத சைவ மயோனைஸை விற்பனை செய்யலாம் என்று ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
1 min
சேலம் மாவட்டத்துக்கான பறவை இன்று அறிவிப்பு
சேலம் மாவட்ட வனத்துறை சார்பில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பை தொடர்ந்து பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் மாவட்டத்துக்கான பறவை செவ்வாய்க்கிழமை (மே 6) அறிவிக்கப்படுகிறது.
1 min
வணிகர் தின மாநாடு: அடைக்கப்பட்டிருந்த கடைகள்
வணிகர் தின மாநாட்டையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் திங்கள்கிழமை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள், வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.
1 min
அரசு அலுவலர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
நாமக்கல் மாவட்டத்தில் கொடிநாள் வசூலில் சாதனை புரிந்த பல்வேறு துறை அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியர் ச.உமா பாராட்டு தெரிவித்தார்.
1 min
குடியிருப்பு வசதி கோரி குறவர் சமூகத்தினர் ஆட்சியரிடம் மனு
நாமக்கல் மாவட்டத்தில் குடியிருப்பு வசதிகள் இல்லாமல் வாழும் குறவர் சமூக மக்களுக்கு இலவச வீடுகள் வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ச.உமாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
1 min
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5000 கனஅடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
1 min
காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகர்கள் உயிரிழப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தரவுள்ள பிரதமர் மோடிக்கு, தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவர் கொலை
கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சென்னையில் ரூ. 23 கோடி வைர நகைகள் கொள்ளை: தூத்துக்குடியில் 4 பேர் கைது
சென்னையில் தொழிலதிபரைக் கட்டிப்போட்டு ரூ. 23 கோடி மதிப்பிலான வைர நகைகளைக் கொள்ளையடித்தது தொடர்பாக, தூத்துக்குடியில் 4 பேரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர்.
1 min
அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு
எடப்பாடி கே.பழனிசாமி உறுதி
1 min
ஒசூர் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி ரூ. 8 லட்சம் ஏமாற்றிய 10 பேர் கைது
ஒசூர் அருகே புதையல் எடுப்பதாகக் கூறி, ரூ. 8 லட்சத்தை ஏமாற்றிய 10 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக முதல்வர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்
இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக தமிழக முதல்வர் கண்டனத்தை பதிவு செய்திருக்க வேண்டும் என்று பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
1 min
விஜய் கட்சித் தொண்டரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பாதுகாவலர்
மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
1 min
சிலை கடத்தல் விவகாரம்: முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வுபெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
வணிகர் தினமான மே 5 அரசு விடுமுறை
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
1 min
பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!
பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.
1 min
காவலருக்கும் ஓய்வு தேவை!
வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
2 mins
மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்
வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
1 min
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
1 min
அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை
அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
1 min
தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்
அமித் ஷாவுக்கு அன்பில் மகேஸ் பதில்
1 min
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min
இந்தியா பாதுகாப்பாக இருக்கும், பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்
ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை
1 min
எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.
1 min
இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை
ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
1 min
பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
ஹரியாணாவுக்கு தண்ணீர் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம்
ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க முடியாது என பஞ்சாப் பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு
'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.
1 min
புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆலோசனை
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min
வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
1 min
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
1 min
கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஒலிப்பதிவு வெளியான விவகாரத்தில் புதிய அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
மணிப்பூரில் வன்முறையைத் தூண்டியதில் மாநில முன்னாள் முதல்வர் பிரேன் சிங் குக்கு பங்கிருப்பதாக கசிந்த ஒலிப்பதிவு குறித்து புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சார்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநர் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
கேஸ்பர் ரூட் சாதனை சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நார்வேயின் கேஸ்பர் ரூட் சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு
கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்
கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
1 min
'காளை' ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min
14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரித்த மின் நுகர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
1 min
பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை
தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
1 min
உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"
உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கு விற்பனையானது.
1 min
கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்
பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
1 min
பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.
1 min
‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
திருப்பதியில் பாரம்பரிய கோயில் கட்டடக் கலை, சிற்ப பயிற்சிகள்
பாரம்பரிய கோயில் கட்டடக் கலையைப் பாதுகாத்து எதிர்கால சந்ததியினருக்கு வழங்க தேவஸ்தானம் சிறப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
1 min
Dinamani Namakkal Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only