Dinamani Virudhunagar - May 19, 2025

Dinamani Virudhunagar - May 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 19, 2025
பாகிஸ்தானுக்கு கடனுதவி: ஐஎம்எஃப் நிபந்தனை
பாகிஸ்தானுக்கு அடுத்தகட்ட கடன் தவணையை விடுவிக்க கூடுதலாக 11 நிபந்தனைகளை சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) விதித்துள்ளது.
1 min
அரபிக் கடலில் புயல்சின்னம் உருவாக வாய்ப்பு
அரபிக் கடலில் வரும் 22-ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
தொழில்நுட்பக் கோளாறு: இலக்கை எட்டாத பிஎஸ்எல்வி சி-61
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 18) விண்ணில் ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கை சென்றடையவில்லை.
1 min
செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
மானாமதுரை செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 10, 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
1 min
சிவகங்கை மாவட்டத்தில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணைக்கு பதிவு
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1,939 ஹெக்டேரில் விதைப் பண்ணை பதிவுகள் மேற்கொள்ளப்பட்டது.
1 min
தேசியக் கொடியுடன் பாஜகவினர் பேரணி
சிவகாசி, மே 18: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்து வெற்றி கண்ட இந்திய ராணுவ வீரர்களுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக விருதுநகர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில், சிவகாசியில் தேசியக் கொடி பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
கமுதி வட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் நாளை தொடக்கம்
கமுதி வட்டத்தில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகிற செவ்வாய்க்கிழமை (மே 20) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை வருவாய்த் தீர்வாயத் தணிக்கை கணக்குகள் நடைபெறும் என கமுதி வட்டாட்சியர் சே.காதர் முகைதீன் தெரிவித்தார்.
1 min
குடிநீர் விநியோகிக்க கோரிக்கை
திருவாடானை அருகேயுள்ள பாண்டுகுடி ஊராட்சியில் குடிநீர் விநியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min
ராமநாதசுவாமி கோயிலைச் சுற்றி பக்தர்களுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தம்
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் பகுதியில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 min
மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
1 min
தார்ச் சாலை வசதி செய்து தர பொதுமக்கள் வலியுறுத்தல்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ராசிநகர் பகுதியில் தார்ச் சாலை வசதி செய்து தர வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min
நாளை கொப்புடையநாயகியம்மன் கோயில் தேரோட்டம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கொப்புடையநாயகியம்மன் கோயில் செவ்வாய்ப் பெருந்திருவிழாவையொட்டி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (மே 20) மாலை நடைபெறுகிறது.
1 min
ராமேசுவரத்தில் இன்று மின் தடை
ராமேசுவரத்தில் உயர் மின் அழுத்த மின் கம்பங்கள் சீரமைக்கும் பணிக்காக திங்கள்கிழமை (மே 19) மின் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
1 min
அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கக் கூடாது
இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்
1 min
33 நிமிஷம், 33 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றிய கமுதி மாணவர்கள்
நாமக்கல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சியில் 33 நிமிஷம் 33 வினாடிகள் தொடர்ந்து சிலம்பம் சுற்றிய கமுதி மாணவர்களுக்கு சான்றிதழ் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
1 min
அருப்புக்கோட்டை ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரிக்கை
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள ரயில் நிலைய சாலையைச் சீரமைக்கக் கோரி, முன்னாள் ராணுவத்தினர் முன்னேற்றச் சங்கம் சார்பில் ரயில்வே அதிகாரியிடம் ஞாயிற்றுக்கிழமை மனு அளிக்கப்பட்டது.
1 min
மானாமதுரை வைகையாற்றில் ராட்டினங்களை சூழ்ந்த தண்ணீர்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆற்றில் மழையால் நீர்வரத்து ஏற்பட்டு, அங்கு அமைக்கப்பட்டுள்ள ராட்டினங்களை தண்ணீர் சூழ்ந்தது.
1 min
புனித சவேரியார் ஆலயத் தேர் பவனி
விருதுநகர் அருகே கன்னிசேரிபுதூர் புனித சவேரியார் ஆலயத் திருவிழா வையொட்டி, தேர் பவனி சனிக் கிழமை நடைபெற்றது.
1 min
வீட்டில் பட்டாசுகளை பதுக்கியவர் கைது
சிவகாசி அருகே வீட்டில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
கஞ்சா விற்ற இளைஞர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
பைக் மீது வேன் மோதல்: பாட்டி, பேரன் உயிரிழப்பு
ராஜபாளையம் அருகே ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் பாட்டி, பேரன் உயிரிழந்தனர்.
1 min
சர்வதேச அருங்காட்சியக தின விழா
சிவகங்கை மாவட்டம், நகர வயிரவன்பட்டி செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் மோதல் தேவையற்றது
இந்தியா-பாகிஸ்தான் மோதல் தேவையற்றது; அதைத் தவிர்த்திருக்கலாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.
1 min
முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் காயம்
திருமங்கலம் அருகே சொத்துப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட தகராறில் முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டதில் சிறுவன் உள்பட இருவர் காயமடைந்தனர்.
1 min
மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி டிசம்பரில் திருச்சியில் மாநாடு
கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி
1 min
பழனி மலைக் கோயில் உண்டியலில் பணம் திருடியவர் கைது
பழனி மலைக் கோயில் உண்டியலில் நூதன முறையில் பணம் திருடிய நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஸ்ரீவில்லிபுத்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதி அமைக்கக் கோரிக்கை
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக ரூ.8 கோடியில் தங்கும் விடுதியும், ரூ.2 கோடியில் வாகனக் காப்பகமும் அமைக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியும், அதற்கான பணிகள் தொடங்கப்படாததால், பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
1 min
சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ.1.19 கோடி மோசடி: இருவர் கைது
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 1.19 கோடி மோசடி செய்த 2 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
முள்ளிவாய்க்கால் 16-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
தஞ்சாவூர் விளார் சாலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முள்ளிவாய்க்கால் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
சிவகிரி விவசாய தம்பதி படுகொலை: 3 பேரிடம் போலீஸார் விசாரணை
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் அரச்சலூர் பகுதியைச் சேர்ந்த மூன்று பேரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1 min
தமிழக பாஜக தலைவரை சந்தித்த 2 காவலர்கள் பணியிட மாற்றம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை திருப்பூரில் சந்தித்துப் பேசிய 2 காவலர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
பாஜகவுடன் கூட்டணி கிடையாது: விஜயின் நிலைப்பாடு
தமிழக துணை பொதுச்செயலர் நிர்மல் குமார்
1 min
ஏழை மாணவி உயர் கல்வி பயில கமல்ஹாசன் நிதியுதவி
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த ஏழை மாணவி சோபனா உயர் கல்வி பயில, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கல்வி உதவித் தொகை வழங்கினார்.
1 min
பாஜகவுடன் கூட்டணி இல்லை என விஜய் அறிவிக்கவில்லை
பாஜகவுடன் கூட்டணி இல்லை என திமுக தலைவர் விஜய் இதுவரை அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறினார்.
1 min
பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: இருவர் உயிரிழப்பு
பட்டுக் கோட்டை அருகே அனுமதியின்றி இயங்கிய பட்டாசு கிடங்கில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் இளைஞர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.
1 min
மீண்டும் தனித்துப் போட்டி: சீமான் திட்டவட்டம்
2026 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு புதிய அரசியல் வரலாற்றைப் படைப்போம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
1 min
உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தல்; 7 பேருக்கு ரூ.5 லட்சம் அபராதம்
உதகையில் சந்தன மரம் வெட்டிக் கடத்தலில் ஈடுபட்ட 7 பேரை வனத் துறையினர் கைது செய்து அவர்களுக்கு மொத்தம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர்.
1 min
திருச்சபையின் புதிய மேய்ப்பர்!
ஏறத்தாழ 140 கோடி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கத்தோலிக்கத் திருச்சபையின் புதிய மேய்ப்பராக, போப் பதினான்காம் லியோ என்கிற பெயரில் பதவி ஏற்றிருக்கிறார் கார்டினல் ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட்.
2 mins
தூக்கம் நம் கண்களைத் தழுவட்டுமே...
பாறப்புறத் இராதாகிருஷ்ணன்
2 mins
ஆபரேஷன் சிந்தூர் விடுக்கும் செய்தி!
2014 முதல் உலக நாடுகளுக்கு பயணம் செய்து பிரதமர் மோடி ஏற்படுத்திய நல்லுறவு, இந்தியா குறித்து ஏற்படுத்திய புரிதல் ஆபரேஷன் சிந்தூர் சமயத்தில் பெரிதும் கைகொடுத்தது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலை, இதுவரை பாகிஸ்தானை ஆதரித்த நாடுகள்கூட புரிந்து கொண்டுள்ளன.
3 mins
உலக சுகாதார அமைப்புக்கு அரசு மருத்துவர்கள் கடிதம்
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள் இல்லை என்று உலக சுகாதார அமைப்புக்கு தமிழக அரசு மருத்துவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர்.
1 min
தமிழகத்தில் ஜூலை முதல் மின்கட்டணம் உயர்வு?
தமிழகத்தில் ஜூலை முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
டாஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் அமலாக்கத் துறை தீவிரம்
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
1 min
மாநில சுயாட்சியை காக்க ஒருங்கிணைந்த சட்டப் போராட்டம்
மாநில சுயாட்சி மற்றும் கூட்டாட்சி அமைப்பை பாதுகாக்க மத்திய அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்த சட்டப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்று 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
2 mins
பள்ளிக் கல்லூரி அமைச்சுப் பணி: மே 26 முதல் பணியிட மாறுதல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கான பணியிட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 26-ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்ய என்எம்சி முடிவு
மருத்துவக் கல்லூரிகளை மதிப்பீடு செய்து தரச்சான்று வழங்க தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) முடிவெடுத்துள்ளது.
1 min
வேளாண்மை, மீன் வளத்தில் தமிழகம் முதலிடம்
வேளாண்மை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் தேசிய அளவில் முதலிடத்தில் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்தது.
1 min
அரசமைப்புச் சட்டமே உயர்வானது
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்
1 min
பாகிஸ்தானில் லஷ்கர் பயங்கரவாதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித், அடையாளம் தெரியாத மூவரால் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம் அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்
நீர்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை மேம்படுத்த அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபர் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
1 min
மத்திய அரசின் குழுவுக்கு தலைமை வகிக்க முடிவெடுத்தது ஏன்?
சசி தரூருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கேள்வி
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் தொடரும்: ராணுவம்
'இந்தியா-பாகிஸ்தான் ராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குநர்கள் இடையே கடந்த 12-ஆம் தேதி நடந்த 2-ஆம் கட்ட பேச்சுவார்த்தையின்போது முடிவான சண்டை நிறுத்தம் தொடரும்' என்று ராணுவ அதிகாரியொருவர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
காங்கிரஸ் தலைவர்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும்
பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு ஆதரவு திரட்ட அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் சேர்க்கப்பட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர்கள், தங்கள் மனசாட்சிப்படி செயல்பட வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தான் விமானப் படை தளங்களைத் தகர்த்த பிரமோஸ் ஏவுகணைகள்
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான 'பிரமோஸ்' ஏவுகணைகள், பாகிஸ்தானின் விமானப் படை தளங்களைத் தகர்த்தன; அதேநேரம், சீனாவிடம் பாகிஸ்தான் கடன் வாங்கி வைத்திருந்த வான் பாதுகாப்பு அமைப்பு பயனற்று கிடந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
1 min
ஹைதராபாதில் பயங்கரவாதத் தாக்குதல் சதி: வெடி பொருள்களுடன் இருவர் கைது
ஹைதராபாத் நகரில் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் சதியில் ஈடுபட்டிருந்த இருவரை தெலங்கானா, ஆந்திர காவல் துறையினர் கூட்டு நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்டனர்.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் வீசிய 42 வெடிக்காத குண்டுகள்
பாதுகாப்பாக அழிப்பு
1 min
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தமிழர்கள் அஞ்சலி
இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவர்களுக்கு ஏராளமான தமிழர்கள் அஞ்சலி செலுத்தினர்.
1 min
நாடாளுமன்ற விருதுகள் 2025: 17 எம்.பி.க்கள் தேர்வு
நாடாளுமன்றத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக திருவண்ணாமலை தொகுதி திமுக எம்.பி. சி.என்.அண்ணாதுரை உள்ளிட்ட 17 எம்.பி.க்கள் 'ஸன்ஸத் ரத்னா 2025' விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
1 min
பிரசாந்த் கிஷோர் கட்சியில் இணைந்தார் முன்னாள் மத்திய அமைச்சர்
முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.சி.பி. சிங், பிகார் சேர்ந்த அரசியல் உத்தி வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் நடத்தி வரும் ஜன சுரக்ஷா கட்சியில் இணைந்தார்.
1 min
வங்கதேச இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள்: இந்திய ஜவுளித் துறைக்கு உதவும்
நிபுணர்கள் கருத்து
1 min
தன்கரின் 74-ஆவது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து
குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரின் 74-ஆவது பிறந்த தினத்தை யொட்டி, அவருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
ஜாஸ்மின் பாலினி சாதனை சாம்பியன்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உள்நாட்டு வீராங்கனை ஜாஸ்மின் பாலினி சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
உலக டேபிள் டென்னிஸ்: மனிகா, மானவ் வெற்றி
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மனிகா பத்ரா, மானவ் தக்கர் ஆகியோர் தங்களது பிரிவின் முதல் சுற்றில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றனர்.
1 min
பிளே ஆஃப் சுற்றில் பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 60-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது. இந்த அபார வெற்றியின் மூலமாக குஜராத் பிளே ஆஃபுக்கு தகுதிபெற்றது.
2 mins
மே 31 முதல் அல்டிமேட் டேபிள் டென்னிஸ்
இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6 போட்டிகள் வரும் மே 31-இல் அகமதாபாத்தில் தொடங்குகிறது.
1 min
நியூயார்க்: புரூக்ளின் பாலத்தில் கப்பல் மோதி விபத்து
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற புரூக்ளின் பாலத்தைக் கடக்கும் போது மெக்ஸிகோ கடற்படை கப்பல் மோதி விபத்துக்குள்ளானதில் 2 மாலுமிகள் உயிரிழந்தனர்.
1 min
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்
அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் வெற்றி இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 பேர் உயிரிழப்பு
காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 பேர் உயிரிழந்தனர்.
1 min
புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு
திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி
1 min
திருச்செந்தூர் கோயிலில் கும்பாபிஷேக யாகசாலைக்கு முகூர்த்தக்கால்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேக யாகசாலை முகூர்த்தக்கால் நடும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
ஒகேனக்கல்லில் குவிந்த 50 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்
ஒகேனக்கல் அருவியில் 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனர்.
1 min
20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 49 பேர் காயம்
வால்பாறையில் 20 அடி பள்ளத்தில் அரசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 49 பேர் காயமடைந்தனர்.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only