Dinamani Virudhunagar - May 09, 2025

Dinamani Virudhunagar - May 09, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 09, 2025
பாகிஸ்தான் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன
இந்திய எல்லைக்குள் வியாழக்கிழமை இரவு ஊடுருவி தாக்குதல் நடத்த முயன்ற பாகிஸ்தானின் அதிநவீன இரு ஜெட்-17 போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியதாக ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min
பள்ளி வாகனங்களை ஆட்சியர் ஆய்வு
ராமநாதபுரத்தில் பள்ளி வாகனங்களை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில் சித்திரைப் பௌர்ணமி விழா மே 11-இல் தொடக்கம்
சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சித்திரைப் பௌர்ணமி விழா ஞாயிற்றுக்கிழமை (மே 11) தொடங்குகிறது.
1 min
சிங்கம்புணரி, கல்லல் ஊராட்சிகளில் நிறைவடைந்த திட்டங்கள் தொடங்கிவைப்பு
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, கல்லல் ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பகுதிகளில் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களை கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min
பரமக்குடி விசாலாட்சி அம்பிகா, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம்
பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாளான வியாழக்கிழமை விசாலாட்சி அம்பிகா-சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடைபெற்றது.
1 min
மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் - சோமநாதர் சுவாமி திருக்கல்யாணம்
மானாமதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி, ஆனந்தவல்லி அம்மன் - உடனுறை சோமநாதர் சுவாமி கோயிலில் சுவாமி - அம்மன் திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
புதுப்பாளையம் மாரியம்மன் பூச்சப்பரத்தில் வீதி உலா
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை இரவு பூச்சப்பரத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.
1 min
பிளஸ் 2: விருதுநகர் மாவட்டத்தில் 96.64 சதவீதம் பேர் தேர்ச்சி
விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 96.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
1 min
ராஜபாளையம் நகர்மன்றக் கூட்டம்: தூய்மைப் பணிகளை நகராட்சியே மேற்கொள்ள முடிவு
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் நகராட்சி தூய்மைப் பணிகளை நகராட்சியே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
1 min
சிவகங்கை மாவட்டத்தில் 96.71 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 96.71 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர்.
1 min
பணம் கையாடல்: ஊராட்சி செயலர் பணியிடை நீக்கம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கம் ஊராட்சி செயலர் பணம் கையாடல் செய்தது தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
ராமநாதபுரத்தில் மீனாட்சி-சொக்கநாதர் திருக்கல்யாணம்
ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் சுவாமி - அம்பிகை திருக்கல்யாணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தெருநாய் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயம்
சிவகங்கை நகரில் தெருநாய்கள் கடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
1 min
மானாமதுரை வீரஅழகர் கோயிலில் சித்திரைத் திருவிழா தொடக்கம்
மே 12- இல் அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவம்
1 min
உ. சிறுவயலில் தமிழ் இலக்கிய விழா மே 11- இல் தொடக்கம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள உ.சிறுவயலில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில் 65-ஆம் ஆண்டு தமிழ் இலக்கிய விழா வருகிற ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 11, 12) நடைபெறும் என தமிழ் இலக்கிய மன்ற நிறுவனரும், அதன் பொதுச் செயலருமான கவிஞர் அரு.நாகப்பன் தெரிவித்தார்.
1 min
திருவாடானை அருகே மீன்கள் விலை அதிகரிப்பு
தொண்டி பகுதியில் மீன்கள் வரத்து குறைந்ததால் இவற்றின் விலை அதிகரித்தது.
1 min
ராஜபாளையம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வீட்டில் கள்ளச் சாராயம் காய்ச்சிய இருவரை போலீஸார் கைது செய்து, ஒரு லிட்டர் சாராயம், 10 லிட்டர் ஊறல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
1 min
சிவகங்கை மாவட்டத்தில் நிதிசார் கல்வி அறிவு முகாம்கள்
சிவகங்கை மாவட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் நிதிசார் கல்வி அறிவு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
1 min
பாகம்பிரியாள் கோயில் சித்திரைத் திருவிழா: நந்தி வாகனத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா
திருவாடானை அருகேயுள்ள திருவெற்றியூர் பாகம்பரியாள் சமேத ஸ்ரீவல்மீகநாதர் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, நந்தி வாகனத்தில் சுவாமியும், அம்பாளும் எழுந்தருளி வீதியுலா வந்தனர்.
1 min
அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி பிறந்தநாளையொட்டி ஏழை களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
பிளஸ் 2: ராமநாதபுரம் மாவட்டத்தில் 94.96 சதவீதம் பேர் தேர்ச்சி
ராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 94.96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.
1 min
ராஜகம்பீரத்தில் திமுக பொதுக்கூட்டம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், ராஜகம்பீரத்தில் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கடந்த புதன் கிழமை நடைபெற்றது.
1 min
மாணவர்களுக்கு மரக்கன்றுகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் சி.எஸ்.ஐ. தூய தோமா தேவாலயத்தில் நடைபெற்று வரும் விடுமுறை வேதாகமப் பள்ளியில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், 30 ஆசிரியர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
1 min
விவசாயிகளுக்கு கலைநிகழ்ச்சி மூலம் வேளாண் தொழில்நுட்ப விளக்கம்
சிவகங்கை வட்டாரம், தமராக்கி வடக்கு கிராமத்தில் வேளாண் தொழில் நுட்ப மேலாண் முகமை (அட்மா திட்டம்), மாநில விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில் நுட்பம் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் விவசாயிகளுக்கு வியாழக்கிழமை விளக்கப்பட்டது.
1 min
மதுரைக்கு வந்தது அழகரின் தங்கக் குதிரை வாகனம்
சித்திரைத் திருவிழாவில் மதுரை வைகையாற்றில் அழகர் எழுந்தருளும் வைபவத்துக்காக, அழகர்கோயிலிலிருந்து தங்கக் குதிரை வாகனம் தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலுக்கு வியாழக்கிழமை கொண்டு வரப்பட்டது.
1 min
மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தை முன்னிட்டு, வைகை அணையிலிருந்து வியாழக்கிழமை வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
1 min
கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு: தேனி ஆட்சியர் இன்று பதிலளிக்க உத்தரவு
தமிழ்நாடு-கேரள எல்லையில் அமைந்துள்ள கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழாவுக்கு வருவோரிடம் அன்னதானம் வழங்க நிதி வசூலித்து முறை கேடு செய்யும் தனியார் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், தேனி மாவட்ட ஆட்சியர் வெள்ளிக்கிழமை (மே 9) பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
மதுரையில் மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.
1 min
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில் இட ஒதுக்கீடு: பள்ளிக் கல்வித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பள்ளிகளில், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கையை உறுதிப்படுத்தக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித் துறை செயலர், சிபிஎஸ்இ மண்டல அலுவலர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தார்.
1 min
விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் சிற்றுந்து மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழந்தார்.
1 min
போராட்டங்களுக்கு இடையே நல்லாட்சி
கனிமொழி
1 min
மீன்பிடிக்கச் சென்றவர் குளத்தில் மூழ்கியதில் உயிரிழப்பு
திண்டுக்கல் அருகே குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறை
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
பொறுப்புடன் பகிர்வோம்!
லை ஒன்றின் ஓரத்தில் ஆமை ஒன்று ஊர்ந்து கொண்டிருந்தது. அந்த வழியாகச் சென்றுகொண்டிருந்த சிறார்கள் சிலர், அந்த ஆமையின் ஓட்டின்மீது கற்களை வீசித் துன்புறுத்திக் கொண்டிருந்தனர்.
2 mins
அரசமைப்புச் சட்டம் தோற்றுவிட்டது!
அடிமை நிலையிலும், சுதந்திர நிலையிலும் இவ்வளவு அகன்ற மாணப் பெரிய நாட்டில், நேர்மை, வாய்மை, அறிவுக் கூர்மை ஆகியவை பொதுவாழ்வில் கோலோச்சியதற்கு எம்மான் காந்தியின் தலைமையே காரணம். அவன் நடந்தான்; அவன் தடம் பார்த்து நாடு நடந்தது.
3 mins
மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்
பெற்றோருக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் வேண்டுகோள்
1 min
நேர்மறை எண்ணத்துடன் தேர்வு முடிவுகளை அணுகுங்கள் பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
பிளஸ் 2 மாணவர்களுக்கு முதல்வர் அறிவுரை
1 min
அமைச்சர் துரைமுருகனிடமிருந்து கனிமங்கள் - சுரங்கத் துறை பறிப்பு ரகுபதியிடம் ஒப்படைப்பு
மூத்த அமைச்சர் துரைமுருகன் வசமிருந்த கனிமங்கள், சுரங்கத் துறை பறிக்கப்பட்டு, அவரிடம் சட்டத் துறை கூடுதலாக அளிக்கப்பட்டு உள்ளது.
1 min
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை குறித்து உலகுக்கு தெளிவான தகவலைத் தெரியப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வலியுறுத்தினர்.
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த 32 கிலோ கஞ்சா பறிமுதல்
உச்சிப்புளி அருகே வியாழக்கிழமை இலங்கைக்கு கடத்தவிருந்த 32 கிலோ கஞ்சாவை க்யூ பிரிவு போலீஸார் கைப்பற்றினர்.
1 min
குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகர்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனர்.
1 min
சித்திரை முழு நிலவு மாநாடு: நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற பாமகவுக்கு உத்தரவு
சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என்று வடக்கு மண்டல ஐஜி-யிடம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என பாமகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் வெண்கலச் சிலை
14 ஆண்டுகளாக திறக்கப்படாததை முதல்வர் திறந்துவைத்தார்
2 mins
பொருளாதாரத்தில் தமிழகத்தை உயர்த்தியவர் முதல்வர் ஸ்டாலின்
அதிமுக ஆட்சியில் அதலபாதாளத்தில் கிடந்த தமிழக பொருளாதாரத்தை உயர்த்தி, நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உருவாக்கியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
1 min
அமைச்சர் துரைமுருகன் மருத்துவமனையில் அனுமதி
அமைச்சர் துரைமுருகன் (86) உடல்நலக்குறைவு காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
70 வயது மூதாட்டி தேர்ச்சி
கோவையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 70 வயது மூதாட்டி தேர்ச்சி பெற்றுள்ளார்.
1 min
அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள்
திமுகவை விட, அதிமுக ஆட்சியில்தான் அதிக மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன என்று அதிமுக பொதுச்செயலரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்ட பிளஸ் 2 மாணவி 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியானது வியாழக்கிழமை தெரிய வந்தது.
1 min
பதற்றத்தைத் தணிப்பது
பாகிஸ்தான் பொறுப்பு:
1 min
பதற்றத்தை தணிப்பது பாகிஸ்தான் பொறுப்பு: விக்ரம் மிஸ்ரி
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடு.
1 min
முக்கிய கட்டமைப்புகளை பாதுகாக்க சிறப்புப் படைகளை நிறுத்தியுள்ளோம்
கர்நாடக அமைச்சர் ஜி.பரமேஸ்வர்
1 min
இந்தியா-பாகிஸ்தான் பதற்றம்: பிரிட்டன் நாடாளுமன்றத்தில் விவாதம்
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானில் இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் அதைத் தொடர்ந்து இருநாட்டு எல்லையில் நிலவும் மோதல் குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை விவாதம் நடைபெற்றுள்ளது.
1 min
ஜம்மு-காஷ்மீர், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம்; குடிமக்களுக்கு சிங்கப்பூர், இஸ்ரேல் அறிவுரை
ஜெருசலேம்/சிங்கப்பூர், மே 8: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் மோதல் தீவிரமடைந்திருப்பதால், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்கு வரும் நாள்களில் செல்ல வேண்டாம் என்று தங்களின் குடிமக்களுக்கு இஸ்ரேல், சிங்கப்பூர் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
1 min
பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா-பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்: சீனா
'அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக பொறுமையைக் கடைப்பிடித்து, பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கைகளை இந்தியா, பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும்' என்று சீனா வலியுறுத்தியது.
1 min
குஜராத்தை குறிவைத்த பாகிஸ்தான்: எல்லையில் 'ட்ரோன்' பாகங்கள் மீட்பு
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லை ஒட்டிய பகுதியில் உடைந்த சிதறிய 'ட்ரோன்' உதிரி பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
1 min
உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
பாகிஸ்தானுடன் நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், சிவில் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துதல், தவறான தகவல்களைத் தடுப்பது, முக்கிய உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை குறித்து மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தினார்.
1 min
மும்பையில் வளாகம் அமைக்கும் சிகாகோ இலினாய்ஸ் பல்கலைக்கழகம்: யுஜிசி ஒப்புதல்
அமெரிக்காவின் சிகாகோ நகரில் அமைந்த இலினாய்ஸ் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், மும்பையில் தனது வளாகத்தை அமைக்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது தில்லி சிறப்பு நீதிமன்றம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, அவரின் மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிரான நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு வழக்கு விசாரணையை வரும் மே 21, 22-ஆம் தேதிகளுக்கு ஒத்திவைத்து தில்லி சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
நாட்டின் உயர்நீதிமன்றங்களில் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட குற்றவியல் மேல்முறையீட்டு மனுக்கள் நிலுவையில் உள்ள சூழலில், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்துக்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
1 min
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் துப்பாக்கிச் சண்டை 3 கமாண்டோக்கள் வீரமரணம்
தெலங்கானாவில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல் துறையின் கமாண்டோக்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
1 min
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட முதல் நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ‘அர்னாலா’ எனப்படும் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வியாழக்கிழமை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
1 min
லாலுவை கைது செய்ய குடியரசுத் தலைவர் அனுமதி
ரயில்வே பணி வழங்க நிலம் பெற்ற வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான லாலு பிரசாதை (76) கைதுசெய்ய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அனுமதி வழங்கியதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
1 min
உத்தரகண்ட்: ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு
உத்தரகண்டில் கங்கோத்ரி கோயிலுக்கு செல்லும் வழியில் தனியார் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 5 பெண் பக்தர்கள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.
1 min
இந்தியாவைத் தாக்கினால் மிக வலுவான பதிலடி
'பாகிஸ்தானுடன் பதற்றத்தை அதிகரிக்க இந்தியாவுக்கு எந்த நோக்கமும் இல்லை; அதே நேரம், இந்தியா மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், மிக மிக வலுவான பதிலடி தரப்படும்' என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.
1 min
காலிறுதியில் ஆயுஷ், உன்னாட்டி
சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி, உன்னாட்டி ஹூடா ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
அரசர் சிவாஜி குறித்த தகவல்களை புத்தகங்களில் அதிகப்படுத்த தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்
அரசர் சிவாஜியின் வாழ்க்கை வரலாறு குறித்த தகவல்களை பள்ளி பாடப்புத்தகங்களில் அதிகப்படுத்துமாறு மத்திய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு (என்சிஇஆர்டி) மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தினார்.
1 min
வில்வித்தை: அரையிறுதியில் ரிஷப், மதுரா
சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், மதுரா தமங்கான்கர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறினர்.
1 min
உஸ்பெகிஸ்தானுடன் மோதும் இந்திய மகளிர் கால்பந்து அணி
இந்திய மகளிர் கால்பந்து அணி, ஃபிஃபாவின் சர்வதேச நட்பு ரீதியிலான 2 ஆட்டங்களில் உஸ்பெகிஸ்தான் மகளிர் அணியுடன் மோதுகிறது.
1 min
உச்சநீதிமன்றம் குறித்து அவதூறு கருத்து: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேக்கு கண்டிப்பு
வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கை விசாரிக்கும் உச்சநீதிமன்றம் குறித்தும் தலைமை நீதிபதி குறித்தும் அவதூறாக கருத்து தெரிவித்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபேவை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
1 min
வெளியேறியது ஆர்செனல்; இறுதியில் பிஎஸ்ஜி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனலை வெளியேற்றி, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி) இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
1 min
குகேஷ் - பிரக்ஞானந்தா ‘டிரா’
ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் முதல் சுற்றில், நடப்பு உலக சாம்பியனும், இந்தியருமான டி.குகேஷ், சக இந்தியரான ஆர்.பிரக்ஞானந்தாவுடன் டிரா செய்தார்.
1 min
பஞ்சாப் - மும்பை ஆட்டம் அகமதாபாதுக்கு மாற்றம்
பஞ்சாப் கிங்ஸ் - மும்பை இண்டியன்ஸ் அணிகள் தர்மசாலாவில் வரும் 11-ஆம் தேதி விளையாடவிருந்த ஆட்டம், அதே நாளில் அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.
1 min
போர்ப் பதற்றம்; ஆட்டம் பாதியில் நிறுத்தம்
ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வியாழக்கிழமை மோதிய 58-ஆவது ஆட்டம், போர்ப் பதற்றம் காரணமாக பாதியில் முடித்துக்கொள்ளப்பட்டது.
1 min
3-ஆவது சுற்றில் ஸ்வியாடெக், பாலினி
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், இத்தாலியின் ஜாஸ்மின் பாலினி ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
தான் அறிவித்த போர் நிறுத்தத்தையே 734 முறை மீறியது ரஷியா
உக்ரைன் குற்றச்சாட்டு
1 min
தயார் நிலையில் வ.உ.சி. துறைமுக 3-ஆவது வடக்கு சரக்கு தளம்
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் உள்ள 3-ஆவது வடக்கு சரக்கு தளம், இடைக்கால வணிக நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக துறைமுக ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min
வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
வட கொரியா வியாழக்கிழமை பல்வேறு வகையான குறுகிய தொலைவு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதித்ததாக தென் கொரிய ராணுவம் தெரிவித்தது.
1 min
கோல் இந்தியா நிகர லாபம் 12% உயர்வு
அரசுக்குச் சொந்தமான கோல் இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
சென்செக்ஸ் சரிவுடன் முடிவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
புதிய போப் '14-ஆம் லியோ'
வாடிகனில் வியாழக்கிழமை நடைபெற்ற கார்டினல்களின் கூட்டத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் (69) புதிய போப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
பாவம் போக்கும் சித்ரகுப்தர்...
சித்திரை மாதத்தில், சித்திரை நட்சத்திரத்துடன் பௌர்ணமியும் சேர்ந்து வந்த நாளில் பார்வதி தேவி, தன்னிடம் இருந்த தங்கத் தாம பாளத்தில் கையில் சுவடியையும் எழுத்தாணியையும் வைத்திருக்கும் உருவம் ஒன்றை வரைந்தார். சித்திரத்தை பார்வதி வாயால் ஊதி அந்த உருவம் உயிர்பெற்றது. அந்த உருவத்துக்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்தார் சிவன்.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only