Dinamani Virudhunagar - April 26, 2025

Dinamani Virudhunagar - April 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Virudhunagar
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 26, 2025
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
1 min
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை
பொதுமக்கள் பயன் பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
1 min
அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.
1 min
உரிமைத் தொகை: விடுபட்ட மகளிர் ஜூன் மாதம் விண்ணப்பிக்கலாம்
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்ட தகுதியான மகளிர் ஜூன் மாதம் நடைபெறும் முகாமில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
நீர்நிலைகளைத் தூர்வார வேண்டும்: குறைதீர் முகாமில் விவசாயிகள் வலியுறுத்தல்
ராமநாதபுரம் மாவட்டத்தில் நீர்நிலைகளைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறைதீர் முகாமில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
1 min
பொறியியல் மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு
வெம்பக்கோட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
1 min
பெண் அலுவலர் தற்கொலை முயற்சி
தற்காலிகப் பணி நீக்க உத்தரவால், மாவட்ட தொழில் மைய பெண் அலுவலர் விஷம் குடித்து வெள்ளிக்கிழமை தற்கொலைக்கு முயன்றார்.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
ராஜபாளையத்தில் தமிழக ஆளுநரைக் கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
தலையில் கல்லைப் போட்டு விவசாயியைக் கொன்ற இளைஞர் கைது
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே தூங்கிக் கொண்டிருந்த விவசாயி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் தங்கத் தகடு பதிக்கும் பணி
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூர் சௌமியநாராயணப் பெருமாள் கோயிலில் ஆஷ்டாங்க விமான தங்கக் கோபுர திருப்பணிக்கு தங்கத் தகடு பதிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி, திருப்பத்தூர் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
1 min
பணம் கையாடல்: வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு
உள்ளாட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை கையாடல் செய்த புகாரில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட 3 பேர் மீது ஊழல் கண்காணிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது
மல்லாங்கிணறில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
திருப்பத்தூரில் சேங்காய் வெட்டு வைபவம்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அய்யனார் கோயில் புரவியெடுப்பு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை சேங்காய் வெட்டு வைபவம் நடைபெற்றது.
1 min
நீதிமன்றம் உத்தரவிட்டும் அகற்றப்படாத அரசியல் கட்சிக் கொடிக் கம்பங்கள்
சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட அவகாசம் முடிந்தும், திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்கள் அகற்றப்படாமல் உள்ளன.
1 min
தொண்டியில் மீன்கள் வரத்து குறைவு
திருவாடானை அருகேயுள்ள தொண்டி கடற்கரை பகுதியில் மீன்கள் வரத்து குறைவாக இருப்பதாக நாட்டுப் படகு மீனவர்கள் கவலை தெரிவித்தனர்.
1 min
நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு
சிவகாசி அருகேயுள்ள நாரணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வெள்ளிக்கிழமை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆய்வு செய்தார்.
1 min
வரதட்சிணை கொடுமை: 5 பேர் மீது வழக்கு
பெண்ணிடம் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவர், மாமியார் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மின்னல் பாய்ந்ததில் வழக்குரைஞர் உயிரிழப்பு
திருச்சுழி அருகே வெள்ளிக்கிழமை மின்னல் பாய்ந்ததில் வழக்குரைஞர் உயிரிழந்தார்.
1 min
வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து நிலை வருவாய்த் துறை அலுவலர்களின் பணி பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். வருவாய்த் துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை மாலை ஒரு மணி நேரம் வெளிநடப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
பைக் விபத்தில் இளைஞர் உயிரிழப்பு
சாத்தூர் அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த இளைஞர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி காங்கிரஸ் அஞ்சலி
காஷ்மீர் மாநிலம் பகல்ஹாமில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு ராமநாதபுரத்தில் காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
1 min
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சிவகாசி வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை
மாநகராட்சி ஆணையர் உத்தரவு
1 min
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தம்பதியர் மதுரை திரும்பினர்
காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற போது, பயங்கரவாதத் தாக்குதலால் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று, வெள்ளிக்கிழமை மதுரைக்கு திரும்பிய பாலச்சந்திரன், அவரது மனைவி கஸ்தூரியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா வரவேற்றார்.
1 min
மானாமதுரை வீர அழகர் கோயிலில் மே 8-இல் சித்திரை திருவிழா தொடக்கம் மே 12-இல் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீவீர அழகர் கோயிலில் வருகிற மே 8-ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்குகிறது. 12-ஆம் தேதி ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது.
1 min
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
சிறைகளில் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்
சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிறைகளில் மரக்கன்றுகள் நடும் பணியை முதன்மை மாவட்ட நீதிபதி கே. அறிவொளி தொடங்கிவைத்தார்.
1 min
கொலை செய்யப்பட்ட மீனவரின் உடல் தோண்டி எடுப்பு
ராமேசுவரத்தில் மனவளர்ச்சி குன்றிய தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், நண்பரால் கொன்று புதைக்கப்பட்ட மீனவரின் உடலை போலீஸார் வெள்ளிக்கிழமை தோண்டி எடுத்தனர்.
1 min
உதகை, கொடைக்கானலில் முறைகேடாக செயல்படும் விடுதிகளைக் கண்டறிய மூவர் கொண்ட குழு அமைப்பு
உதகை, கொடைக்கானலில் உரிய அனுமதியின்றி செயல்படும் தங்கும் விடுதிகளைக் கண்டறிய 3 பேர் கொண்ட குழுவை சென்னை உயர்நீதிமன்றம் அமைத்துள்ளது.
1 min
காஷ்மீர் தாக்குதல்: காங்கிரஸ் மௌன ஊர்வலம்
காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காங்கிரஸ் சார்பில் மௌன ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை
விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
1 min
வாக்குச் சாவடி முகவர்கள் குழு: எடப்பாடி பழனிசாமி அறிவுரை
வாக்குச் சாவடி முகவர்கள் குழு அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தினார்.
1 min
ஓமலூர் அருகே கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 min
லாரி மீது வேன் மோதல்: 15 பேர் காயம்
தூத்துக்குடி-மதுரை புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை சாலையோரம் நின்றிருந்த சரக்குப் பெட்டக லாரி மீது வேன் வெள்ளிக்கிழமை மோதியதில் மதுரையைச் சேர்ந்த 15 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min
ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
1 min
விளையாட்டல்ல வயது மோசடி!
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2 mins
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?
2 mins
இனி முதலீடு... தங்கத்தில்!
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
3 mins
14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
1 min
முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா
பேரவையில் அமைச்சர் தகவல்
1 min
இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
1 min
சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்
20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு
1 min
சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு
தொழில் துறை அமைச்சர்
1 min
தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்
நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்ய வாய்ப்பு: பாகிஸ்தான்
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கான வாய்ப்பு பாகிஸ்தானுக்கு இருப்பதாக அந்த நாட்டு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min
காஷ்மீர்: குண்டு வெடிப்பில் தகர்ந்த லஷ்கர் பயங்கரவாதிகளின் வீடுகள்
ஜம்மு-காஷ்மீரில் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் இருவரின் வீடுகளில் பாதுகாப்புப் படையினர் சோதனை மேற்கொண்டபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் வெடித்தன.
1 min
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்
உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்
1 min
கர்நாடகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை புதிதாக நடத்த வேண்டும்
மத்திய இணையமைச்சர் வி.சோமண்ணா
1 min
57 டண் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டண் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.
1 min
மேதா பட்கர் கைதாகி விடுவிப்பு
தில்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா தொடுத்த அவதூறு வழக்கில், சமூக ஆர்வலர் மேதா பட்கரை காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
1 min
போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது
பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு
1 min
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
2 mins
தில்லியின் புதிய மேயர் ராஜா இக்பால் சிங்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
லா லிகா: அட்லெடிகோ மாட்ரிட் வெற்றி
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் 3-0 கோல் கணக்கில் ராயோ வல்கேனோவை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.
1 min
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கபூர்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி
ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி
1 min
சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.
1 min
ஸ்ரீரங்கத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார்.
1 min
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்
காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சையளிக்கவிருக்கிறார்.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.
1 min
Dinamani Virudhunagar Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only