Dinamani Virudhunagar - April 25, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 25, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 25, 2025

பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை

அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு

1 min

மதுரை உள்பட 12 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் வியாழக்கிழமை மதுரை உள்பட 12 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்து வெப்பநிலை பதிவானது.

1 min

சென்னையில் குடிமைப் பணி தேர்வுப் பயிற்சி மையம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு நேசக்கரம்!

பஹல்காம் தாக்குதலையொட்டி கத்தார், ஜோர்டான், இராக் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் மற்றும் அரபு நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளன.

1 min

சாயல்குடியில் தவெக ஆலோசனைக் கூட்டம்

சாயல்குடியில் கடலாடி ஒன்றிய அளவிலான தவெக ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பினர் சாலை மறியல்

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் போலீஸாரைக் கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

1 min

சிவகாசியில் சுற்றுவட்டச் சாலை: அதிகாரிகள் ஆய்வு

சிவகாசியில் தேவையான இடங்களில் சுற்றுவட்டச் சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min

கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தொழிலாளியைக் கொலை செய்த வழக்கில் இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

போக்சோ வழக்கில் அண்ணன், தம்பிக்கு 5 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் அண்ணன், தம்பிக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கையில் உள்ள போக்சோ நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

1 min

நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

1 min

செம்மொழிநாள் கட்டுரை, பேச்சுப் போட்டி: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அழைப்பு

செம்மொழி நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் வருகிற மே 9, 10-ஆம் தேதிகளில் சிவகங்கை மருது பாண்டியர் நகர், அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது.

1 min

அய்யனார் கோயில் சித்திரை திருவிழா: சுவாமி வீதி உலா

திருவாடானையில் உள்ள அய்யனார் கோயில் சித்திரைத் திருவிழாவையொட்டி, சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

1 min

தென்னையில் வெள்ளை ஈ தாக்குதல்: விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டாரத்தில் தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறையினர் அறிவுறுத்தினர்.

1 min

கண்டரமாணிக்கத்தில் மஞ்சுவிரட்டு: 47 பேர் காயம்

திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் மாடுபிடி வீரரை முட்டித் தள்ளிய காளை.

1 min

மானாமதுரையில் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அமைக்க இடம் தேர்வு

மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

1 min

கோடைகால கால்பந்து பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடி பொருள்களை போலீஸார் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min

பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் தயாரிப்பு: ஆலை உரிமையாளர் மீது வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பாதுகாப்பற்ற முறையில் பட்டாசுகள் உற்பத்தி செய்த ஆலை உரிமையாளர், பங்குதாரர்கள் மீது போலீஸார் புதன்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனர்.

1 min

மானாமதுரையில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

மானாமதுரை, ஏப். 24: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்கப்படுவதைக் கண்டு, அனைத்து அரசியல் கட்சிகள், விவசாயிகள் சங்கங்களை உள்ளடக்கிய ஆலை எதிர்ப்பு இயக்கம் சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் வேலை வழங்கக் கோரி, கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min

சிவகங்கையில் கவிதை நூல் வெளியீடு

சிவகங்கையில் உலக புத்தக தினத்தையொட்டி, கவிதை நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 மணி நேரம் மின் தடை

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் நீடித்த மின் தடையால் நோயாளிகள் அவதிப்பட்டனர்.

1 min

மின் வயர்கள் எரிந்து சேதம் இருளில் மூழ்கிய ராமசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையம்

கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மின் வயர்கள் எரிந்து சேதமடைந்ததால் கடந்த 10 நாள்களாக மின்சாரமின்றி நோயாளிகள், பணியாளர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

1 min

பிரமனூர் கண்மாயைச் சீரமைக்கக் கோரி மனு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூர் பெரிய கண்மாயில் உள்ள ஆகாய தாமரைச் செடிகளை அகற்றி சீரமைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min

ராமேசுவரத்துக்கு 15 நாள்களில் 95 ஆயிரம் பேர் ரயிலில் வருகை

பாம்பன் புதிய ரயில் பாலம் திறக்கப்பட்ட பிறகு கடந்த 15 நாள்களில் 95 ஆயிரம் பேர் ரயில் மூலம் ராமேசுவரத்துக்கு வந்ததாக ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

இளையான்குடி புதிய பேருந்து நிலையத்துக்குள் அனைத்துப் பேருந்துகளும் வந்து செல்ல நடவடிக்கை

பேரூராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

1 min

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசால் வழங்கப்படும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன் பெற இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார்.

1 min

ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் தர்னா

உயர் அழுத்த மின் கோபுரத்துக்குக் கீழே வீட்டுமனை ஒதுக்கப்பட்டதுற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகள் வியாழக்கிழமை தர்னாவில் ஈடுபட்டனர்.

1 min

பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாட பகுதிகளை குறைக்கக் கோரிக்கை

பிளஸ் 1, பிளஸ் 2 கணிதப் பாடப் புத்தகங்களில் கூடுதலாக உள்ள பாடப் பகுதிகளை நீக்க வேண்டுமென முதுநிலை கணித ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.

1 min

தென் மாவட்டங்களிலிருந்து புதிய ரயில்களை இயக்க வேண்டும்

தென் மாவட்டங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு புதிய ரயில்களை இயக்க வேண்டும் என மதுரை கோட்ட ரயில்வே ஆலோசனைக் குழு கூட்டத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

2 mins

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பிவைப்பு

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டத்தை யொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாள் சூடிக் களைந்த பட்டு வஸ்திரம், கிளி உள்ளிட்ட மங்கலப் பொருள்கள் ஸ்ரீரங்கத்துக்கு வியாழக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

1 min

மூதாட்டி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், குற்றவாளிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

ராமேசுவரத்துக்கு சிறப்பு அதிவிரைவு ரயில்

சென்னை, பிப்.24: கோடை காலத்தை முன்னிட்டு விழுப்புரம்-ராமேசுவரம் இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்தது.

1 min

ராமேசுவரத்தில் மீனவர் கொன்று புதைப்பு: ஒருவர் கைது

ராமேசுவரத்தில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டது தொடர்பாக மற்றொரு மீனவர் கைது செய்யப்பட்டார்.

1 min

இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.25) மாலை 4.30 மணி அளவில் நடைபெறவுள்ளது.

1 min

குடும்ப நல நீதிமன்றங்களுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

தமிழகம் முழுவதும் உள்ள குடும்ப நல நீதிமன்றங்களுக்கு மே 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைவு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.72,040-க்கு விற்பனையானது.

1 min

அமைச்சர் பொன்முடி வழக்கில் முதல்வர் குறித்த கருத்தை நீக்க மனுதாரருக்கு நீதிமன்றம் உத்தரவு

சைவம் மற்றும் வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை பதவி நீக்கம் செய்யக் கோரிய வழக்கில் முதல்வர் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துகளை நீக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக ஜூன் 5-க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

1 min

தமிழகத்தில் மயோனைஸுக்கு ஓராண்டு தடை

அரசு உத்தரவு

1 min

புதிய ஐஏஎஸ் அதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டும்

புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அரசுக்கும், மக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்பட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.

1 min

துணைவேந்தர்கள் மாநாடு உதகையில் இன்று தொடக்கம்

குடியரசு துணைத் தலைவர், ஆளுநர் பங்கேற்பு

1 min

பயங்கரவாதிகள் நம் எதிரிகள்!

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைன் மரக்காடுகள் அடர்ந்த மலையால் சூழப்பட்ட பைசாரன் பள்ளத்தாக்கு உலகளாவிய சுற்றுலாப் பயணிகள் கோடைக்காலத்தில் கூடும் பகுதி.

2 mins

அமெரிக்காவுக்கு இந்தியா அவசியம்!

மருந்துகளை இந்தியாவிலிருந்து அதிக அளவில் அமெரிக்கா இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மருந்துகளுக்கு வரி அதிகரிக்கும் நிலையில் அமெரிக்காவில் மருந்துகளின் விலை உயரும். இதனால், அமெரிக்க மக்களே அதிகம் பாதிப்படைவார்கள்.

2 mins

குடமுழுக்கும் அறநிலையத் துறையும்!

டி.எஸ்.ஆர்.வேங்கட ரமணா

2 mins

பேரவையில் இன்று...

ட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஏப். 25) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லாத நேரத்தில் சில முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

1 min

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை தொடராதது ஏன்?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் விழுப்புரத்தில் அமைக்கப்பட்ட பல்கலைக்கழகத்தைத் தொடராதது ஏன் என்று அதிமுக கேள்வி எழுப்பியது.

1 min

முருகன் கோயில்களில் ரூ.1,085 கோடியில் திருப்பணிகள்

தமிழ்நாட்டில் உள்ள முருகன் கோவில்களில் ரூ.1,085 கோடியில் 884 திருப்பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

1 min

ஊரகப் பகுதி நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம்: அமைச்சர் உறுதி

ஊரகப் பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கட்டுநர்கள் நியமனம் செய்யப்படுவர் என்று உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி உறுதிபட தெரிவித்தார்.

1 min

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம்

முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில், கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

1 min

யார் ஆட்சியில் ஆசிரியர்கள் நியமனம் அதிகம்?

பேரவையில் கடும் விவாதம்

1 min

பயங்கரவாதிகளுக்கு கற்பனையிலும் நினைக்காத தண்டனை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் உலகின் எந்த மூலைக்கு ஓடினாலும் தேடிப்பிடித்து அவர்களின் கற்பனையிலும் நினைக்காத தண்டனை வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சூளுரைத்தார்.

1 min

ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம்: குடிமக்களுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

அமெரிக்கர்கள் யாரும் ஜம்மு-காஷ்மீருக்கு பயணிக்க வேண்டாம் என்று அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

1 min

கிராமங்கள் வளர்ந்தால்தான் நாடு வளரும்

பிரதமர் மோடி

1 min

சிந்து நதி ஒப்பந்த நிறுத்த நடவடிக்கையால் தண்ணீர் நெருக்கடி அபாயத்தில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானுடன் ஆன சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா காலவரையின்றி நிறுத்திவைத்துள்ள நடவடிக்கையால் அந்நாடு கடுமையான தண்ணீர் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளது.

1 min

கோழைத்தனமான தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான்

காங்கிரஸ் தேசிய செயற்குழு

1 min

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம்: மேல்முறையீடு மனுக்கள் மீது மே 6, 7-இல் இறுதி விசாரணை

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநில அரசு, தண்டனை பெற்ற குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் மே 6, 7-ஆம் தேதிகளில் இறுதி விசாரணை தொடங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.

1 min

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் ஏவுகணை சோதனை வெற்றி

ஐஎன்எஸ் சூரத் போர்க் கப்பலில் இருந்து சுமார் 70 கி.மீ. தொலைவுக்கு பாய்ந்து தாக்கும் நடுத்தர ரக ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.

1 min

நேரடி விசாரணைக்கு என்ஐஏ ஆயத்தம்; சிறப்பு நடவடிக்கைகளுக்கு உள்துறை ஆலோசனை

காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேரடி விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தொடங்க ஆயத்தமாகியுள்ளது.

1 min

கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டன தீர்மானம்

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min

பயங்கரவாத தாக்குதலில் ஒரு வெளிநாட்டவர் மட்டுமே உயிரிழப்பு

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்த 26 பேரில் ஒருவர் மட்டுமே வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

1 min

சத்தீஸ்கர்: 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

1 min

பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு

பயங்கரவாதிகளை அழித்தொழிக்க மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிக்கிறோம் என கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

1 min

இந்தியா கெடு: அட்டாரி எல்லை வழியே வெளியேறும் பாகிஸ்தானியர்கள்

இந்தியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தானியர்கள் அமிருதசரஸில் உள்ள அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறி வருகின்றனர்.

1 min

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரர் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் உள்ள உதம்பூர் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வியாழக்கிழமை வீரமரணமடைந்தார்.

1 min

தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய வீரரைக் கைது செய்த பாகிஸ்தான்

விடுவிக்க பேச்சுவார்த்தை

1 min

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் தகனம்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வியாழக்கிழமை நல்லடக்கம், தகனம் செய்யப்பட்டன.

1 min

4 நாள் சுற்றுப்பயணம் நிறைவு: அமெரிக்கா புறப்பட்டார் ஜே.டி.வான்ஸ்

இந்தியாவில் கடந்த 4 நாள்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், ஜெய்பூரில் இருந்து வியாழக்கிழமை தங்கள் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

கோலி, படிக்கல் அதிரடி; பெங்களூரு - 205/5

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 42-ஆவது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்கள் சேர்த்தது.

1 min

சென்னை - ஹைதராபாத் இன்று மோதல்

ஐபிஎல் போட்டியின் 43-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஏப். 25) மோதுகின்றன.

1 min

ஃபெடரேஷன் கோப்பை தடகளம்: பிரவீண் சித்ரவேலுக்கு தங்கம்

கேரளத்தில் நடைபெற்ற ஃபெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் பிரவீண் சித்ரவேல் மீட் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.

1 min

காஸாவில் மேலும் 50 பேர் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 50 பாலஸ்தீனர்கள் உயிரிழந்தனர்.

1 min

டெக் மஹிந்திரா வருவாய் ரூ.13,384 கோடியாக அதிகரிப்பு

முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திரா வின் செயல்பாட்டு வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.13,384 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

டிஎம்பி நிகர லாபம் 10.35% உயர்வு

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2024-25-ஆம் நிதியாண்டில் 10.35 சதவீதம் உயர்ந்துள்ளதாக, வங்கியின் நிர்வாக இயக்குரும் தலைமை செயல் அதிகாரியுமான சலீ எஸ். நாயர் தெரிவித்தார்.

1 min

சொந்த விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பிய சீனா

தனது சொந்த விண்வெளி நிலையத்துக்கு 3 வீரர்களை சீனா வியாழக்கிழமை அனுப்பியது.

1 min

பெயர் கேட்டாலே பலன்

கயிலாயத்தின் வடபுறப் பகுதியில் இருந்த வைசிரா மகன் குபேரன், 'புட்பகம்' எனும் விமானத்தில் ஏறி சிவத் தலங்களை வழிபடுவார். ஒரு நாள் இரு நதிகளுக்கு இடையில் இருக்கும் இந்த வனத்தைக் கண்டு பூஜை செய்தார். அதுமுதல் இந்தப் பகுதி 'குபேரனின் அழகாபுரி' எனவும் இறைவன் 'அழகேசன்' எனவும் அழைக்கப்படலாயிற்று.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only