Dinamani Virudhunagar - April 24, 2025Add to Favorites

Dinamani Virudhunagar - April 24, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Virudhunagar along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99

$12/month

(OR)

Subscribe only to Dinamani Virudhunagar

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Virudhunagar

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

April 24, 2025

காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்

தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு

1 min

துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை

துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

1 min

பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து

செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

2 mins

நூறு நாள் திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு சரிவர ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

விருதுநகரில் மே 4-இல் கல்லூரிக் கனவு விழிப்புணர்வு ஓட்டம்

விருதுநகரில் கல்லூரிக் கனவு விழிப்புணர்வு தொலைவு ஓட்டமானது வரும் மே 4-ஆம் தேதி நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் வீ.ப. ஜெயசீலன் தெரிவித்தார்.

1 min

சிவகாசி அரசு மருத்துவமனைக்கு குருதி பகுப்பாய்வு உபகரணங்கள்

சிவகாசி அரசு மருத்துவமனையில் குருதி (ரத்தம்) வங்கிக்கு புதிதாக வாங்கப்பட்ட குருதி பகுப்பாய்வு உபகரணங்களை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் புதன்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

1 min

எல்லைப் பிடாரி அம்மன் கோயில் திருவிழா நிறைவு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை எல்லைப் பிடாரி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடி இறக்கத்துடன் நிறைவு பெற்றது.

1 min

சிவகங்கை மாவட்டத்தில் இயற்கை சந்தை நடத்தும் சுய உதவிக் குழுக்கள்

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமின் போது மகளிர் சுய உதவிக் குழுவினர் இயற்கை விளை பொருள்கள் சந்தை நடத்துகின்றனர்.

1 min

ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

சிவகாசி இந்திரா நகரைச் சேர்ந்த சமையல் மனைவி தவசியம்மாள் (46). இவர் கடந்த சில மாதங்களாக நோயினால் அவதிப்பட்டு வந்தார்.

1 min

கல்வியியல் கல்லூரியில் கருத்தரங்கு

ராமநாதபுரம் சி.எஸ்.ஐ. கல்வியியல் கல்லூரியில் 'சிறந்த மனவெழுச்சியும் வலிமையான மனமும் பள்ளி செல்லும் ஆசிரியர்களின் கருவிகள்' என்ற தலைப்பில் புதன்கிழமை கருத்தரங்கம் நடைபெற்றது.

1 min

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவு: காரைக்குடியில் மௌன ஊர்வலம்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி, சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மௌன அஞ்சலி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை

சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு பட்டாசு, கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை தலைமைச் செயலகத்தில் வருவாய்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

1 min

நூலகத் துறை சார்பில் உலக புத்தக தின விழா

காஞ்சிரங்கால் அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட மைய நூலகம், நூலக நண்பர்கள் திட்டத்தின் சார்பில் உலக புத்தக தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நியாய விலைக் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நியாய விலைக் கடை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

காவிரி– குண்டாறு கால்வாய் திட்டத்துக்கு நிதி ஒதுக்க வலியுறுத்தி ஏப். 29- இல் மாநாடு

காவிரி-வைகை-கிருதுமால்- குண்டாறு இணைப்புக் கால்வாய் திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்க வலியுறுத்தி, விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் வருகிற 29-ஆம் தேதி விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை மாநாடு நடைபெறுகிறது.

1 min

மருந்து, நோயாளிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் அருள்மிகு கலசலிங்கம் பார்மசி கல்லூரியில் தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலை.யுடன் இணைந்து மருந்து, நோயாளிகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

1 min

சிங்கம்புணரியில் நவீன கலையரங்கம் கட்ட பூமிபூஜை

சிவகங்கை கீழ் மாவட்டம், சிங்கம்புணரியில் நவீன கலையரங்கம் கட்டுவதற்கான பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: தமிழகத்தில் 57 பேர் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபி எஸ்சி) நடத்திய 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணித் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் தேர்ச்சிபெற்றனர். தமிழக அளவில் சிவச்சந்திரன் முதலிடம் பெற்றார்.

1 min

கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை

தொடர் மழையால் மிளகாய் செடியிலேயே அழுகி, இழப்பு ஏற்பட்டதால் நிவாரணம் வழங்கக் கோரி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min

ராஜபாளையத்தில் கொடிக் கம்பங்கள் அகற்றம்

ராஜபாளையம் நகராட்சிப் பகுதிகளில் சாலைகளில் அமைக்கப்பட்டிருந்த 100-க்கும் மேற்பட்ட கொடிக் கம்பங்கள் புதன்கிழமை அகற்றப்பட்டன.

1 min

தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாடு மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு, மீட்புப் பணி வீரர்கள் புதன் கிழமை உயிருடன் மீட்டனர்.

1 min

படந்தால் சந்திப்பில் மேம்பாலப் பணிக்கான பூமிபூஜை

படந்தால் சந்திப்பில் மேம்பாலப் பணிக்கான பூமிபூஜையை மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் புதன்கிழமை தொடங்கிவைத்தார்.

1 min

ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.47 கோடி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.47 கோடி கிடைத்தது.

1 min

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி: இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதோடு, கொலை செய்யவும் முயன்ற இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விரைவு மகளிர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

எய்ம்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு விடுதி கட்டடம்: ஒப்பந்தம் கோருவோர் விண்ணப்பிக்கலாம்

ராமநாதபுரத்தில் இயங்கி வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு வாடகைக்கு விடுதி கட்டடம் தேவைப்படுவதால், இதற்கு ஒப்பந்தம் கோருவோர் விண்ணப்பிக்கலாம் என எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

1 min

பட்டாசு விற்பனை: சமூக வலைதள விளம்பரங்களுக்குத் தடை கோரி வழக்கு

பட்டாசு விற்பனை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசின் மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறைச் செயலர், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

குடிநீர் வடிகால் வாரியத்தில் குளோரின் வாயுக் கசிவு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மதுரை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த குளோரின் வாயு கசிந்து பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, தீயணைப்புத் துறையினர் விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொண்டனர்.

1 min

திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கு: எழுத்துப்பூர்வ மனுக்கள் தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பான வழக்கில், கூடுதல் தகவல்களைத் தெரிவிக்க விரும்புவோர் எழுத்துப்பூர்வமாக மனுக்களைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு என்எல்சி சுரங்கம் முன் தமுமுகவினர் முற்றுகைப் போராட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் பழுப்பு நிலக்கரி சுரங்கம் 2-ஆவது அலகு முன் தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி சார்பில் புதன்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 846 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும்

அண்ணாமலை

1 min

பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்

தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித் துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

1 min

காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்பற்ற பேச்சு: விசிகவுக்கு பாஜக கண்டனம்

காஷ்மீர் விவகாரத்தில் பொறுப்பற்ற முறையில் பேசிய விசிகவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

1 min

குமரி - மும்பை வாராந்திர சிறப்பு ரயில்

கோடைகாலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

1 min

தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?

தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.

1 min

அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து

வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

1 min

போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?

போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.

1 min

அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல

டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

கற்க வேண்டிய முதல் பாடம்!

புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.

2 mins

மறு தீர்ப்புக்குரிய ஒரு தீர்ப்பு

ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது மட்டுமல்ல, குடியரசுத் தலைவருக்கும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது வியப்பு; உச்சநீதிமன்றமே அந்த மசோதாக்களை சட்டமாக்கியும் விட்டதுதான் அதனினும் வியப்பு.

1 min

'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி

துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்

1 min

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும்

மதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்க்கட்சி துணைத் தலைவருக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே. சேகர்பாபு ஆகியோர் உறுதியளித்தனர்.

1 min

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?

மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.

2 mins

பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி

தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

1 min

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்

பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலுக்கு தக்க பதிலடி

ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

1 min

பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு

கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை

1 min

காஷ்மீர் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

1 min

பயங்கரவாதிகள் தப்ப முடியாது

மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

1 min

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

1 min

குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

1 min

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.

1 min

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு

காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

1 min

ராபர்ட் வதேரா கருத்தால் சர்ச்சை

முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 min

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்

கூட்டறிக்கையில் இந்தியா தகவல்

1 min

காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.

1 min

முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.

1 min

IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.

1 min

முதியவர்கள் சிகிச்சை பெறுவதில் எதிர்கொள்ளும் தடைகள்

இந்தியாவில் புற நோயாளிகள் சிகிச்சைக்கு சுமார் 15 கி.மீ. தொலைவும், மருத்துவமனையில் சேர்ந்து உள்நோயாளியாக சிகிச்சை பெற சுமார் 44 கி.மீ. தொலைவும் முதியவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக லான்செட் பிராந்திய சுகாதார (தெற்காசியா) ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டது.

1 min

2-ஆவது சுற்றில் ரடுகானு, சக்காரி

ஸ்பெயினில் புதன்கிழமை தொடங்கிய மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரிட்டனின் எம்மா ரடுகானு, கிரீஸின் மரியா சக்காரி ஆகியோர் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min

டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

1 min

சென்செக்ஸ் மேலும் முன்னேற்றம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் தொடர்ந்து ஏழாவது நாளாக நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி

சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

1 min

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி

ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.

1 min

காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு

போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.

1 min

2057-க்குள் கரியமில வாயு சமநிலை: பரோடா வங்கி இலக்கு

தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.

1 min

சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்

ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்தது.

2 mins

ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற தமிழகப் பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர்

மதுரையிலிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 30 பேர் உள்பட தமிழகப் பயணிகள் 68 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரியவந்தது.

1 min

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்

உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

முகூர்த்தம்- வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்

முகூர்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

1 min

ஜம்மு - காஷ்மீரிலிருந்து தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்

ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக பயணிகள் சுமார் 35 பேர் தங்களது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஜம்முவிலிருந்து புதன்கிழமை பாதுகாப்பாக தில்லி திரும்பினர். அதன் பின்னர், அவர்கள் தமிழகத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.

1 min

பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

1 min

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் பலத்த பாதுகாப்பு

தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை

1 min

அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

Read all stories from Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only