Dinamani Tiruvannamalai - March 02, 2025

Dinamani Tiruvannamalai - March 02, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvannamalai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 02, 2025
தமிழகத்தின் உரிமையை விட்டுத் தர மாட்டேன்
முதல்வர் ஸ்டாலின் உறுதி
1 min
உத்தரகண்ட் பனிச்சரிவு: 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம், மனா கிராமத்தின் உயர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய எல்லைச் சாலை அமைப்பு (பிஆர்ஓ) தொழிலாளர்கள் மேலும் 17 பேரை மீட்புப் படையினர் சனிக்கிழமை மீட்டனர். இதுவரை 50 தொழிலாளர்கள் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் நால்வர் உயிரிழந்தனர்.
1 min
மணிப்பூர் நிலவரம்: அமித் ஷா ஆய்வு
வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
விதிமுறைகள் மீறல்: 20 ஆட்டோக்கள் பறிமுதல்
திருவண்ணாமலையில் விதிமுறைகளை மீறி இயங்கிய 20 ஆட்டோக்களை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் சனிக்கிழமை பறிமுதல் செய்து, ரூ.4 லட்சம் அபராதம் விதித்தனர்.
1 min
செய்யாறு - வந்தவாசி சாலையில் மேம்பாட்டுப் பணிகள்
செய்யாறு - வந்தவாசி புறவழிச் சாலையில் நடைபெற்று வரும் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியை நெடுஞ்சாலைத் துறை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் மு.சரவணன் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
1,706 பேருக்கு பட்டா: அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை மாநகராட்சியில் 1,706 குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டார்.
1 min
மாடவீதி குடியிருப்புவாசிகளின் வாகனங்களுக்கு அடையாள அட்டை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் மாட வீதிகளைச் சுற்றி வசிக்கும் குடியிருப்பு வாசிகளின் வாகனங்களுக்கு, அடையாள அட்டைகள் பெறுவதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை நடைபெற்றன.
1 min
91 ஏரிகளில் சீரமைப்புப் பணி: அதிகாரிகள் ஆய்வு
ஆரணி, போளூர் வட்டங்களில் 91 ஏரிகளில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை பொதுப் பணித்துறை அதிகாரிகள் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலையில் அமைக்கப்பட்டுள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வு மையங்களில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் ஆய்வு செய்தார்.
1 min
பள்ளி மாணவிகள் 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை முயற்சி
ஆரணி-சேத்துப்பட்டு சாலையில் உள்ள பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மகளிர் தினத்தையொட்டி, சனிக்கிழமை மாணவிகள் 150 பேர் 8 மணி நேரம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
1 min
அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்ப்பு
செங்கம் அருகே வெள்ளாலம்பட்டி கிராமத்தில் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர், உறுப்பினர்கள் வீடு வீடாகச் சென்று மாணவர்களை அரசுப்பள்ளியில் சேர்த்து வருகின்றனர்.
1 min
அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா
கீழ்பென்னாத்தூரை அடுத்த ஜமீன் அகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள்: திமுகவினர் நல உதவி
திமுக தலைவரும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த நாளையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திமுக கொடியேற்றிவைத்து, பொதுமக்களுக்கு சனிக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
செங்கத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ராமகிருஷ்ண மடத்தில் ஸ்ரீராமகிருஷ்ணரின் 190-ஆவது ஜெயந்தி விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம்
திருவண்ணாமலை மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் ஆரணியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
வாணியம்பாடி பாலத்தில் மின் விளக்குகள்
வாணியம்பாடி நகரத்துடன் இணையும் பாலத்தில் மின் விளக்குகள் சனிக்கிழமை அமைக்கப்பட்டன.
1 min
டி.கல்லேரி கிராமத்தில் சிறப்புக் கருத்தரங்கம்
திருவண்ணாமலையை அடுத்த டி.கல்லேரி கிராமத்தில், கிராமப்புற வளம் குறித்த சிறப்புக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
செய்யாறு, திருவண்ணாமலையில் திமுகவினர் நல உதவி
செய்யாறு, திருவண்ணாமலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுகவினர் நல உதவிகளை வழங்கினர்.
1 min
மகளிர் குழுக்களுக்கு ரூ.4 கோடி கடன்
பஞ்சாப் நேஷனல் வங்கி ஆம்பூர் கிளை சார்பில் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா ஆம்பூர் லயன்ஸ் சங்க கூட்ட அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min
பி.எஃப். நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை
வேலூர் மண்டலத்தில் பி.எஃப். நிலுவை தொகை செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மண்டல பிஎஃப் ஆணையர்-1 ரித்தேஷ் எச்சரித்துள்ளார்.
1 min
கூகுள்பேவில் தவறுதலாக பணம் அனுப்பினால் 48 மணி நேரத்தில் திரும்பப் பெறலாம்
சைபர் குற்றப்பிரிவு போலீஸார்
1 min
வேலூர் பேருந்து நிலையங்களுக்குள் ஆட்டோக்கள் நுழைய தடை
போலீஸார் எச்சரிக்கை
1 min
உயரழுத்த மின் கம்பியில் ஏணி உரசியதில் மின்சாரம் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் சம்பவம்
1 min
தமிழகத்தில் மக்களின் பாதுகாப்பு சீர்குலைந்துள்ளது
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவுக்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாகக் கூறி, அதிமுக பொதுச் செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
அரியலூர் ரயில் நிலையத்தில் பயணியிடம் ரூ.77 லட்சம் பறிமுதல்
அரியலூரில் ரயில் நிலையத்தில் சனிக்கிழமை நின்று கொண்டிருந்த பயணியிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட சோதனையில், கணக்கில் காட்டப்படாத ரூ.77.11 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
1 min
மாணவர் சேர்க்கை உத்தரவு: முதல்வர் வழங்கினார்
வரும் கல்வியாண்டுக்கான அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான உத்தரவை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை வழங்கினார்.
1 min
மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்
தமிழ்நாட்டில் மணல் குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்தார்.
1 min
தூங்கிக்கொண்டே இருப்பதுதான் நல்லது!
ங்குவது, உடலுக்கு நல்லது; தேவையானதும் கூட. உடல் நலம் குன்றி மருத்துவரைப் பார்க்கப்போனால், அவர் கேட்கும் கேள்விகளில் ஒன்று ‘நன்றாகத் தூங்குகிறீர்களா?’ என்பது. ஆழ்ந்த உறக்கம், மனதுக்கும் உடலுக்கும் நல்ல மருந்தாகவே இருக்கும்.
1 min
மகாகவி பாரதியார்-சில நிகழ்வுகள்...!
மகாகவி பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரியிடம் பாசம்.
3 mins
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு நாளை தொடக்கம்
8 லட்சம் பேர் எழுதுகின்றனர்
1 min
ரூ.6,471 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை
ரூ.6,471 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் பொதுமக்களிடம் உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
1 min
அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை மார்ச் 14-க்கு ஒத்திவைப்பு
அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தை பாஜக புறக்கணிக்கும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை அறிவித்துள்ளார்.
1 min
திருப்பரங்குன்றம் மலை குறித்த பதிவு: இந்து முன்னணி நிர்வாகியின் முன் பிணை மனு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை குறித்து எக்ஸ் தளத்தில் சர்சைக்குரிய விதத்தில் பதிவேற்றம் செய்த இந்து முன்னணி நிர்வாகியின் முன் பிணை மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் ஒத்திவைத்தது.
1 min
பிப்ரவரியில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.84 லட்சம் கோடி
நாட்டில் கடந்த பிப்ரவரியில் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) ரூ.1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளது.
1 min
வாக்குச் சீட்டு முறை குறித்த கேள்வி கூட்டுக் குழு அதிகார வரம்பில் வராது
தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டுமா அல்லது வாக்குச் சீட்டு முறையில் நடத்த வேண்டுமா என்ற கேள்வி, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாக்கள் மீதான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று அக்குழுவுக்கு அளித்த பதிலில் மத்திய சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
சட்டத் துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிப்பு
திருச்சி பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
1 min
மகாராஷ்டிர பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவோம்
சிவசேனை (உத்தவ்) கட்சி
1 min
சம்பல் வன்முறை: 65 ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியில் உள்ள மசூதியில் ஆய்வு பணிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட 65 ஜாமீன் மனுக்களை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
1 min
மேற்கு வங்கத்தில் வீடு வீடாக வாக்காளர்களை ஆராயும் ஆளும் திரிணமூல் கட்சி
மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவுள்ள சூழலில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்ய பாஜக முயற்சிப்பதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் வீடு வீடாக வாக்காளர் சரிபார்ப்புப் பணியை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் சனிக்கிழமை தொடங்கினர்.
1 min
ராகுலுக்கு எதிரான அவதூறு வழக்கு மார்ச் 24-இல் விசாரணை
ஹாத்ரஸ் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டவர்கள் குறித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் கருத்துக்காக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் அடுத்த விசாரணை மார்ச் 24-ஆம் தேதி நடைபெறுகிறது.
1 min
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்; ரயில்வே அமைச்சர் ஆய்வு
மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டப் பணிகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
உலகின் உற்பத்தி மையமாக உருவெடுக்கும் இந்தியா!
'உலகின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்து வருகிறது' என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
1 min
சாமராஜ்நகரில் கார் - லாரி மோதல்: 5 பேர் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், சாமராஜ்நகர் மாவட்டத்தின் கொள்ளேகால் வட்டம், சிக்கின்துவடி கிராமத்தில் காரும் லாரியும் சனிக்கிழமை நேருக்குநேர் மோதிக்கொண்டதில் மலைமா தேஸ்வரா கோயிலுக்கு காரில் சென்ற 5 பக்தர்கள் உயிரிழந்தனர்.
1 min
தெலங்கானா சுரங்க விபத்து: ஒரு வாரமாக நீடிக்கும் மீட்புப் பணி
தெலங்கானாவில் சுரங்கத்துக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
1 min
15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கல் நிறுத்தம்: தில்லி அமைச்சர் தகவல்
தலைநகர் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் வழங்குவதை மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு தில்லி அரசு நிறுத்தும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிர்சா சனிக்கிழமை அறிவித்தார்.
1 min
சட்டவிதி 136-இன் கீழ் சிறப்பு அதிகாரங்களை உச்சநீதிமன்றம் பயன்படுத்துவது ஏற்புடையதல்ல
அரசமைப்புச் சட்ட விதி 136-ஐ குறிப்பிட்ட சமயத்தில் மட்டுமே உச்சநீதிமன்றம் பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது அதன் பயன்பாடு அதிகரித்து வருவது ஏற்புடையதல்ல என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தெரிவித்தார்.
1 min
6.5% வளர்ச்சியுடன் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும்: ஐஎம்எஃப்
2025-26-ஆம் நிதியாண்டில் 6.5 சதவீத வளர்ச்சியுடன் உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாக இந்தியா தொடரும் என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.
1 min
அமெரிக்காவின் அச்சுறுத்தலை பரஸ்பர வரி குறைப்பு மூலம் சமாளிக்கலாம்
நிதி ஆணையத் தலைவர் அரவிந்த் பனகாரியா
1 min
மத்திய அரசின் கணக்குகளை எளிமையாக்க வேண்டும்; ஐசிஏஎஸ் அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்
மத்திய அரசின் ஆண்டுக் கணக்குகளை எளிதில் அணுகும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய சிவில் கணக்குப் பணி (ஐசிஏஎஸ்) அதிகாரிகளுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
செபி தலைவராக துஹின்காந்த பாண்டே பதவியேற்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) 11-ஆவது தலைவராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி துஹின்காந்த பாண்டே (59) சனிக்கிழமை பதவி ஏற்றார்.
1 min
இந்தியா - நியூஸிலாந்து இன்று மோதல்
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்தை ஞாயிற்றுக்கிழமை எதிர்கொள்கிறது.
1 min
அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் 11-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை சனிக்கிழமை சாய்த்தது.
1 min
பாம்ப்ரி/பாபிரின் இணை சாம்பியன்
துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி/ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் இணை சனிக்கிழமை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
கம்பு ஊன்றித் தாண்டுதல்: டியூப்லான்டிஸ் மீண்டும் உலக சாதனை
ஸ்வீடனைச் சேர்ந்த கம்பு ஊன்றித் தாண்டுதல் வீரர் அர்மாண்ட் கஸ்டாவ் டியூப்லான்டிஸ் சனிக்கிழமை புதிய உலக சாதனை படைத்தார்.
1 min
கேரளா - ஜாம்ஷெட்பூர் 'டிரா'
இந்தியன் சூப்பர் லீக்கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் - ஜாம்ஷெட்பூர் எஃப்சி அணிகள் சனிக்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா ஆனது.
1 min
பெங்களூரை வென்றது டெல்லி
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை சனிக்கிழமை வீழ்த்தியது.
1 min
மும்மொழி தில்லி தமிழ்நாடு இல்லத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்
தில்லி சாணக்கியாபுரியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்திற்கு மும்மொழி விவகாரத்தைக்குறிப்பிட்டு மின்னஞ்சல் மூலமாக மனித வெடிகுண்டு மிரட்டல் சனிக்கிழமை விடுக்கப்பட்டது.
1 min
கருண் நாயர் சதம்; விதர்பா 286 ரன்கள் முன்னிலை
ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் கேரளத்துக்கு எதிராக விதர்பா 285 ரன்கள் முன்னிலையுடன் விளையாடி வருகிறது.
1 min
ஜனவரியில் மந்தமடைந்த தனிநபர் கடன் வளர்ச்சி
கடன்களை வழங்கும் 41 முக்கிய வங்கிகள் பட்டுவாடா செய்திருந்த தனி நபர் கடன்களின் வளர்ச்சி 14.2 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
சீனா: படகு விபத்தில் 11 பேர் உயிரிழப்பு
சீனாவில் பயணிகள் படகுடன் மற்றொரு பெரிய வகைப் படகு மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1 min
மாசுபட்ட நீரால் காங்கோவில் மர்ம நோய்: நிபுணர்கள் சந்தேகம்
மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பரவி வரும் மர்ம நோய்க்கு மாசுபட்ட நீர் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
1 min
துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குர்து கிளர்ச்சியாளர்கள் போர் நிறுத்தம்
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டுவந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போர் நிறுத்தம் அறிவித்தது.
1 min
ஸெலென்ஸ்கிக்கு ஐரோப்பிய நாடுகள் முழு ஆதரவு
ரஷியாவுடனான போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நேரடி காரசார விவாதத்தில் ஈடுபட்ட உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கிக்கு அவரின் ஐரோப்பிய கூட்டணி நாடுகள் முழுமையான ஆதரவைத் தெரிவித்துள்ளன.
1 min
குருவாயூர் கோயில் நுழைவுவாயிலில் புதிய வெண்கல கருடன் சிலை
கேரள மாநிலம் குருவாயூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தின் கிழக்கு நுழைவுவாயிலில் புதிதாக பிரம்மாண்ட வெண்கல கருடன் சிலை நிறுவப்பட்டுள்ளது.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் காத்திருப்புப் போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகுகளையும் விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள், அவர்களது குடும்பத்தினர் சனிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மார்ச் 2, 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
72-ஆவது பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலினுக்கு திமுகவினர் வாழ்த்து
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72-ஆவது பிறந்த தினத்தையொட்டி, அவரை நேரில் சந்தித்து திமுகவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
Dinamani Tiruvannamalai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only