Dinamani Tiruvannamalai - March 01, 2025Add to Favorites

Dinamani Tiruvannamalai - March 01, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruvannamalai along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruvannamalai

1 Year $33.99

Buy this issue $0.99

Gift Dinamani Tiruvannamalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 01, 2025

உத்தரகண்ட்: பனிச்சரிவில் சிக்கிய 32 பேர் மீட்பு

மேலும் 25 தொழிலாளர்களை மீட்க போராட்டம்

1 min

சூரியனின் ஒளிவெடிப்பை காட்சிப்படுத்திய ஆதித்யா விண்கலம்: இஸ்ரோ

சூரியனின் புறவெளியில் நிகழ்ந்த ஒளிவெடிப்பை ஆதித்யா விண்கலத்தில் உள்ள கருவி காட்சிப்படுத்தியுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.

1 min

நட்சத்திர கோயிலில் அரிய வகை மரக்கன்றுகள் நடும் பணி

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், உக்கம்பெரும்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள 27 நட்சத்திர கோயிலில் 70 வகையான அரிய வகை மரக்கன்றுகள் வெள்ளிக்கிழமை நடப்பட்டன.

1 min

கர்ப்பிணியிடம் தாலிச்சங்கிலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூரில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த கர்ப்பிணியின் தாலிச் சங்கிலியை மர்ம நபர் வியாழக்கிழமை பறித்துச் சென்றார்.

1 min

விதை பண்ணைகளில் உதவி இயக்குநர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி வட்டம், கண்ணமங்கலம் அருகே விதைப்பண்ணைகளை மாவட்ட விதைச்சான்று உதவி இயக்குநர் குணசேகரன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

வந்தவாசியில் கண்காணிப்பு கேமராக்கள் இயக்கி வைப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வணிகர்கள் சங்க பேரமைப்பு சார்பில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை வந்தவாசி டிஎஸ்பி கங்காதரன் வெள்ளிக்கிழமை இயக்கி வைத்தார்.

1 min

ஓய்வூதியர்களுக்கான குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர் மற்றும் குடும்ப ஓய்வூதியருக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டன ஆர்ப்பாட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min

கலைக் கல்லூரியில் கருத்தரங்கு

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டர் எம்ஜிஆர் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் உயிர் வேதியியல் துறை சார்பில் 'அடிப்படை பயன்பாட்டு உயிரியல் ஆராய்ச்சியில் சமீபத்திய முன்னேற்றம்' என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

விநாடி-வினா போட்டியில் சிறப்பிடம்: மாணவிகளுக்கு பாராட்டு

மாநில அளவிலான விநாடி-வினா போட்டிகளில் முதலிடம் பெற்ற செய்யாறு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவிகளை ஓ.ஜோதி எம்.எல்.ஏ வெள்ளிக்கிழமை பாராட்டினார்.

1 min

மாட வீதிகளில் வாகனம் வைத்திருப்போருக்கு இன்று அடையாள அட்டை வழங்கும் முகாம்

திருவண்ணாமலை மாட வீதிகளில் சொந்த வாகனங்கள் வைத்திருப்போருக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு முகாம்கள் சனிக்கிழமை (மார்ச் 1) நடைபெறுகிறது.

1 min

வழக்குரைஞர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்).

1 min

மும்மொழிக் கொள்கைக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் நகர திமுக சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

1 min

ஜெயலலிதா பேரவையினர் திண்ணை பிரசாரம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த குண்ணத்தூரில் மத்திய மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் திண்ணைப் பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை வழிபாடு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min

தேவிகாபுரத்தில் வருவாய் ஆய்வாளரை முற்றுகையிட்டு பாஜகவினர் வாக்குவாதம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் குறுவட்ட வருவாய் ஆய்வாளரை பாஜக மற்றும் இந்து முன்னணியினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

1 min

லஞ்சம்: போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம்

கடலூரில் கடந்த வாரம் நடைபெற்ற முதல்வர் பங்கேற்ற விழாவின்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் லஞ்சம் பெற்றது தொடர்பாக, அவர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

கொலை வழக்கு: குண்டர் சட்டத்தில் 6 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அருகே இ-சேவை மைய உரிமையாளர் கொலை வழக்கில் 6 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min

கலைக் கல்லூரி-தனியார் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

திருவண்ணாமலை சண்முகா தொழிற்சாலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனியார் நிறுவனம் வேலை வாய்ப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன.

1 min

பள்ளி மாணவர்களுக்கு எழுதுபொருள்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுவாமி சதுபுஜானந்தர் வெள்ளிக்கிழமை எழுது பொருள்களை வழங்கினார்.

1 min

விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த வெம்பாக்கத்தில் விளையாட்டு வீரர்களுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை ஓ.ஜோதி எம்.எல்.ஏ வியாழக்கிழமை வழங்கினார்.

1 min

மனைவி வெட்டிக் கொலை: கணவர் கைது

திருப்பத்தூரில் குடும்பத் தகராறில் மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மார்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மார்ச் 3 முதல் 9-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன.

1 min

கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்கக் கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியல்

வாணியம்பாடி அருகே மலைக் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படிக்கும் சில மாணவிகளை பாலியல் சீண்டல் செய்ததாக கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்கக் கோரி அதே பள்ளி மாணவர்கள் வெள்ளிக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

மும்மொழிக் கொள்கையில் அரசியல் கூடாது

மாணவர்களின் நலன் கருதி, மும்மொழிக் கொள்கையில் ஆட்சியாளர்கள் அரசியல் செய்யாமல் அதை அமல்படுத்த முன்வர வேண்டுமென தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

1 min

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 பேர் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

1 min

மயிலாடுதுறை ஆட்சியர் பணியிட மாற்றம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1 min

செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் 21-க்கு ஒத்திவைப்பு

தமிழக அரசுப் போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரும் மனு மீதான விசாரணையை மார்ச் 21-க்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min

ரமலான் நோன்பு நாளை தொடக்கம்

ரமலான் நோன்பு வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

சிறந்த பால் உற்பத்தியாளர்களுக்கு தலா ரூ.25,000 பரிசு

ஆவினின் சிறந்த பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சங்கச் செயலர்கள் என மொத்தம் 22 பேருக்கு தலா ரூ.25,000 பரிசுத் தொகையை பால்வளத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் வழங்கினார்.

1 min

குழந்தையின் பாலினத்தை தெரிவித்த அரசு மருத்துவர், 8 செவிலியர்கள் பணியிடை நீக்கம்

சேலத்தில் தனியார் ஸ்கேன் மையத்தில் கருவில் உள்ள குழந்தையின் பாலினம் குறித்து தெரிவித்த அரசு பெண் மருத்துவர், செவிலியர்கள் 8 பேர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

1 min

இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவராக பி.அமுதா நியமனம்

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவராக பி.அமுதா (படம்) சனிக்கிழமை (மார்ச் 1) பொறுப்பேற்கவுள்ளார்.

1 min

காவல் துறை அணுகுமுறை தவறானது

வீட்டில் அழைப்பாணையை ஒட்டிய விவகாரத்தில் காவல் துறையினரின் அணுகுமுறை தவறானது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.

1 min

சீமான் வீட்டில் கைதானவர்கள் குறித்த மனு: அவசரமாக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த ஆட்கொணர்வு மனுவை அவசரமாக விசாரிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

1 min

நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் முடிவு

1 min

பாலியல் வன்கொடுமை வழக்கு: சீமானிடம் போலீஸார் விசாரணை

நடிகை விஜயலட்சுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் வளசரவாக்கம் போலீஸார் வெள்ளிக்கிழமை இரவு விசாரணை செய்தனர்.

2 mins

பழைய ஓய்வூதியத் திட்டம் வேண்டும்... மீண்டும்!

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், பஞ்சாப், ஹிமாசல பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வந்துவிட்டது. ஆக, பல மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் அதை அமல்படுத்த ஏன் தயக்கம் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

3 mins

தேவை, தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை!

பேசாத மாநிலங்கள் ஏற் ட்டில் வேலையில்லாத் திண்டாட் டம், ரூபாய் மதிப்பு சரிவு, அத்தியா வசியப் பொருள்களின் விலை உயர்வு, 80 கோடிக்கும் அதிகமான மக்கள் இன்னமும் மாதந்தோறும் மத்திய அரசின் 5 கிலோ இலவச அரிசியை எதிர்பார்த்திருப்பது, ஜிஎஸ்டி குளறுபடிகள் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து, இரு மொழிக் கொள்கையா, மும்மொழிக் கொள்கையா என்ற தேவையற்ற சர்ச்சை தலைதூக்கியுள்ளது.

2 mins

மொழி உணர்வு குறித்து தமிழர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்

ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி பதில்

1 min

புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 34% அதிகரிப்பு

புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் மாணவிகளின் சேர்க்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக மாநில திட்டக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஈஷா அறக்கட்டளை விவகாரம் உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அனுப்பப்பட்ட விளக்கம் கேட்கும் நோட்டீஸை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது.

1 min

ஹிந்தி -சம்ஸ்கிருத ஆதிக்கத்துக்கு இடம் கொடுக்க மாட்டோம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

1 min

அரசு மருத்துவமனைகளில் 1,300 யோகா பயிற்சியாளர்களை நியமிக்க உத்தரவு

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும், தேசிய ஆயுஷ் நல மையங்களிலும் 1,300 யோகா பயிற்சியாளர்களை நியமிக்க இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை உத்தரவிட்டுள்ளது.

1 min

ராஜேந்திர பாலாஜிக்கு எதிரான வழக்கு கோப்பு தமிழக ஆளுநரிடம் உள்ளது

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

1 min

மொழியைத் தேர்வு செய்வதில் தமிழக மாணவர்களுக்கு சுதந்திரமில்லை

மொழியைத் தேர்வு செய்து படிப்பதில் தமிழக மாணவர்களுக்கு சுதந்திரமில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டினார்.

1 min

பிகார், மேற்கு வங்கத்தில் பலத்த நில அதிர்வு

பிகார், மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த நில அதிர்வு ஏற்பட்டது.

1 min

இபிஎஃப் மீதான வட்டி 8.25%-ஆக தொடரும்

2024-25-ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) மீதான வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடர தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஆணையம் (இபிஎஃப்ஓ) வெள்ளிக்கிழமை முடிவெடுத்தது.

1 min

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் சர்ச்சைக்குரிய வகையில் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சி உரிமை மீறல் நோட்டீஸை அளித்தது.

1 min

ஐ.நா. துணை அமைப்புகளின் பணிகளில் வெளிப்படைத்தன்மை: இந்தியா வலியுறுத்தல்

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்புகளில் பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை கோரி முன்வைக்கப்படும் கோரிக்கைகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என இந்தியா வலியுறுத்தியுள்ளது.

1 min

ஆந்திர மாணவர்களுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500

ஆந்திரத்தில் தேர்தலின் போது அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளான மாணவ, மாணவியருக்கு ஆண்டுக்கு ரூ.15,000, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பெண்களுக்கு மாதம் ரூ.1,500, இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை அமல்படுத்தப்படும் என ஆந்திர மாநில பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

ஐ.டி. ஊழியர் தற்கொலை: மனைவியை குற்றஞ்சாட்டி விடியோ வெளியீடு

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் 30 வயதான ஐ.டி. ஊழியர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இந்த முடிவுக்கு தனது மனைவியே காரணம் என அவர் ஏற்கனவே பதிவு செய்த விடியோ வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

மணிப்பூர்: வழிபாட்டுத் தலம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு

மணிப்பூரின் கிழக்கு இம்பால் மாவட்டத்தில் மைதேயி சமூகத்தினரின் மத வழிபாட்டுத் தலம் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

1 min

திரிவேணி சங்கமத்தில் தொடர்ந்து குவியும் பக்தர்கள்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா நிறைவடைந்தபோதிலும் அங்கு மக்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றனர்.

1 min

சிறந்த கல்வி வழங்குவது மத்திய, மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு

வரும் தலைமுறையினருக்கு சிறந்த கல்வியை வழங்குவது மத்திய மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்பு என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

1 min

ஐஐடி-களில் தொடர்கதையாகும் மாணவர் தற்கொலை: ஆராய விரிவான நடைமுறை

உச்சநீதிமன்றம் உறுதி

1 min

கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சந்திப்பு

கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்த பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், மாநில பட்ஜெட்டில் பெங்களூருக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை மனு அளித்தனர்.

1 min

5 ஹிஸ்புல் பயங்கரவாதிகளின் சொத்துகள் முடக்கம்

ஜம்மு-காஷ்மீர் ராம்பன் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாதிகள் 5 பேரின் அசையாத சொத்துக்களை காவல் துறையினர் முடக்கினர்.

1 min

தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் ஓராண்டாக நிரப்பப்படாத முக்கிய பதவிகள்

தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் இரு முக்கிய பதவிகள் ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளன; இது, மத்திய அரசின் தலித் விரோத மனநிலையை வெளிக்காட்டுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

1 min

வட கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு

வட கர்நாடகத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கால்நடை நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min

மேக்கேதாட்டு அணை திட்டத்தை அமல்படுத்தக் கோரி மார்ச் 11-இல் தமிழக எல்லையில் முற்றுகைப் போராட்டம்

கன்னட அமைப்புகள் அறிவிப்பு

1 min

புணே பேருந்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

மகராஷ்டிர மாநிலம், புணே பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு பேருந்துக்குள் இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

1 min

பிகார் தேர்தலில் நிதீஷ் குமார் தலைமையில் போட்டி

மத்திய அமைச்சர் மாஞ்சி

1 min

6.2% வளர்ச்சியுடன் மீண்டெழுந்த இந்திய பொருளாதாரம்

நிகழ் நிதியாண்டின் (2024-25) அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 6.2 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

1 min

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் மே 29-இல் தொடக்கம்

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் போட்டி யின் 6-ஆவது சீசன், அகமதாபா தில் மே 29 முதல் ஜூன் 15 வரை நடைபெற உள்ளது.

1 min

மெத்வதெவை சாய்த்தார் கிரீக்ஸ்பூர்

துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ரஷியாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதியில் தோல்வி கண்டார்.

1 min

இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் ராஜிநாமா

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வெள்ளைப் பந்து தொடர்களுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக ஜோஸ் பட்லர் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

1 min

கேரளம் 342 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் கேரளம் முதல் இன்னிங்ஸில் 342 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணி விதர்பாவை விட 37 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.

1 min

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க 7.8% வளர்ச்சி தேவை: உலக வங்கி

2047-இல் உலகின் மிகப்பெரும் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்க சராசரியாக 7.8 சதவீதம் வளர்ச்சி தேவை என உலக வங்கி வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

லேனிங், ஷஃபாலி அதிரடி; டெல்லி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் 13-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது.

1 min

அரையிறுதியில் ஆஸி.; வெளியேறியது ஆப்கன்

சாம்பியன்ஸ்கோப்பை கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் வெள்ளிக்கிழமை மோதிய 10-ஆவது ஆட்டம் மழை காரணமாக முடிவின்றி பாதியில் கைவிடப்பட்டது.

1 min

வங்கதேசம்: புதிய கட்சி தொடங்கிய மாணவர் அமைப்பினர்

வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்வதற்குக் காரணமாக இருந்த போராட்டத்தை முன்னின்று நடத்திய மாணவர் அமைப்பினர், புதிய அரசியல் கட்சியை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.

1 min

சர்வதேச உதவிக்கு நிதி குறைப்பு: பிரிட்டன் அமைச்சர் ராஜிநாமா

வெளிநாடுகளுக்கு உதவியளிப்பதற்கான நிதி ஒதுக்கீட்டை பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் வெகுவாகக் குறைத்துள்ளதைத் தொடர்ந்து, சர்வதேச மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னிலீஸ் டாட்ஸ் (படம்) தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

1 min

சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவுடன் நிறைவு: ஒரே நாளில் நஷ்டம் ரூ.8.90 லட்சம் கோடி

இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் நிறைவடைந்தன. இதனால், சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் 8.90 லட்சம் கோடி குறைந்தது.

1 min

ஜெர்மனி: புதிய அரசை அமைக்க கட்சிகள் தீவிரம்

ஜெர்மனியில் இந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் முதலிடத்தைப் பிடித்த ஃப்ரெட்ரிச் மெர்ஸ் (படம்) தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக் கூட்டணியும் தற்போதைய பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் தலைமையிலான சோஷியல் ஜனநாயகக் கட்சியும் அடுத்த ஆட்சியை அமைப்பதற்காக தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

1 min

ஆரோவில் உதய தின விழா

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரத்தின் 57-ஆவது ஆண்டு உதய தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min

ரூ.64 ஆயிரத்துக்கு கீழ் சென்ற தங்கம் விலை

சென்னை,பிப்.28:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.400 குறைந்து ரூ.63,680-க்கு விற்பனையானது.

1 min

Read all stories from Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only