Dinamani Tiruvallur - May 13, 2025

Dinamani Tiruvallur - May 13, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruvallur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruvallur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 13, 2025
தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் கெஞ்சியது
தாக்குதலை நிறுத்துமாறு இந்தியாவிடம் பாகிஸ்தான் கெஞ்சியது. ஆனால், அத்துமீறல்களை நிறுத்துவதாக அந்த நாடு வாக்குறுதி அளித்த பின்னரே சண்டை நிறுத்தம் குறித்து இந்தியா பரிசீலித்தது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
2 mins
திருவாலங்காடு அருகே ரயிலில் திடீர் பழுது: ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
சென்னை- அரக்கோணம் மார்க்கத்தில் திருவாலங்காடு அருகே மின்சார ரயிலில் ஏற்பட்ட பழுதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 min
காஞ்சிபுரத்தில் புத்த பூர்ணிமா
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் அமைந்துள்ள புத்த விகாரில் திங்கள்கிழமை நடைபெற்ற புத்த பூர்ணிமாவையொட்டி ஊர்வலம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
1 min
சித்ரா பௌர்ணமி: திருத்தணி கோயில்களில் வழிபாடு
சித்ரா பௌர்ணமியை யொட்டி திருத்தணியில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது.
1 min
திருத்தணி அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம்
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விரும்பும் மாணவர்களுக்கு உதவும் வகையில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
1 min
கொடிநாள் வசூலில் சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மொத்தம் 355 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பெற்றுக்கொண்டார்.
1 min
செங்கல்பட்டு குறைதீர் கூட்டத்தில் 332 மனுக்கள்
செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில், 332 மனுக்கள் பெறப்பட்டன.
1 min
திருவடிசூலத்தில் சித்திரை திருவிழா
திருவடிசூலம் கோயில்புரத்தில் சித்திரைத் திருவிழா நடைபெற்றது.
1 min
திருவள்ளூர் குறைதீர் கூட்டத்தில் 532 மனுக்கள் அளிப்பு
திருவள்ளூரில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் 532 கோரிக்கை மனுக்களை ஆட்சியர் மு.பிரதாப் பெற்றுக் கொண்டார்.
1 min
புற்றுநோய் கண்டறியும் திட்டம்: 12 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்
சமுதாய அளவிலான புற்றுநோய் கண்டறியும் திட்டம் மாநில அளவில் மேலும் 12 மாவட்டங்களுக்கு ரூ.27 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டது. திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் துணை சுகாதார நிலையத்திலிருந்து திங்கள்கிழமை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சா.மு.நாசர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 min
மாதவரம் அருகே இளைஞர் கொலை: 3 பேர் கைது
மாதவரம் அருகே இளைஞரை கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
பாரம்பரிய உலக விழாக்கள் புகைப்படக் கண்காட்சி: மேயர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார்
காஞ்சிபுரத்தில் யுனெஸ்கோ அமைப்பு அங்கீகரித்ததுள்ள பாரம்பரிய உலக விழாக்கள் புகைப்படக் கண்காட்சியை மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ் தொடங்கி வைத்து பார்வையிட்டார் (படம்).
1 min
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: நல உதவிகள் அளிப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் மற்றும் வல்லக்கோட்டை பகுதிகளில் பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.
1 min
போதைப் பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட்: ஆணையர் கி.சங்கர் தொடங்கி வைத்தார்
ஆவடியில் போதைப் பொருள்களுக்கு எதிராக 80 அணிகள் பங்கேற்ற தொடர் கிரிக்கெட் போட்டியை காவல் ஆணையர் கி.சங்கர் தொடங்கி வைத்தார்.
1 min
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை மகளிர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கிறது.
1 min
செவிலியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
உலக செவிலியர் தினத்தையொட்டி (மே 12), செவிலியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடந்து சென்ற இரு கல்லூரி மாணவர்கள் மின்சார ரயில் மோதி உயிரிழந்தனர்.
1 min
உதகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மலர்க் கண்காட்சியைத் தொடங்கிவைப்பதற்காக உதகைக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னேரு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
1 min
கழுத்தை அறுத்து மனைவி கொலை: ஹிந்து முன்னணி மாவட்ட நிர்வாகி கைது
பரமத்தி வேலூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக ஹிந்து முன்னணி நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: ஆளுநர், தலைவர்கள் வாழ்த்து
அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளையொட்டி (திங்கள்கிழமை) அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
1 min
மரக்கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண்கள் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே திங்கள்கிழமை ஆலமரக் கிளை முறிந்து விழுந்ததில் 3 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் காயமடைந்தனர்.
1 min
மதுரை சித்திரைத் திருவிழாவில் பங்கேற்ற இருவர் உயிரிழப்பு
மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை யாற்றில் எழுந்தருளிய நிகழ்வில் பங்கேற்ற இருவர் உயிரிழந்தனர்.
1 min
வெப்பமும் தாக்கமும்
வெப்ப அலை என்பது எப்போதோ நடக்கும் பாதிப்பாக அல்லாமல் அடிக்கடி நிகழ்வாகவே மாறி இந்தியாவின் சுகாதாரத்திற்கும் பொருளாதாரத்துக்கும் சவாலை உருவாக்கியுள்ளது.
2 mins
சான்றிதழ் வழங்குவதில் தாமதம் கூடாது!
பொருளாதார ரீதியாக நலிவடைந்தோர், இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் போன்ற சான்றிதழ்களை வழங்குவதில் உள்ள நடைமுறை சிக்கல்களைத் தீர்க்க, விதிகளில் உரிய மாற்றங்களை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
3 mins
மனமது செம்மையானால்...
டும்ப உறவுகளில் சுமுகத்தன்மை நிலவ குடும்ப உறுப்பினர்களிடையே விட்டுக் கொடுத்தல், சகிப்புத் தன்மை, உள் ஒன்று வைத்துப் புறமொன்று பேசாத வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடித்தல் போன்ற குணங்கள் அவசியமாகும்.
2 mins
முழுமையான காஷ்மீரே நமது இலக்கு!
சச்சின் பைலட் சிறப்புப் பேட்டி
2 mins
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுறுத்தல்
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள 3,935 பணியிடங்களுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாற்றுத்திறனாளிகள் கூடுதல் சான்றிதழ்களைப் பதிவேற்றத் தேவையில்லை என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min
விரைவான விசாரணைக்கு சிறப்பு நீதிமன்றங்கள்: அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரம் அவகாசம்
சிறப்பு சட்டங்களின்கீழ் வழக்கு விசாரணைகள் விரைந்து நடைபெற வசதியாக, பிரத்யேக சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் 2 வாரங்கள் அவகாசம் அளித்துள்ளது.
1 min
பேராசிரியர் வருகைப் பதிவில் குறைபாடு
தமிழகத்தில் 34 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு என்எம்சி நோட்டீஸ்
1 min
பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் தொடக்கம்
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில், மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
இந்தியாவின் ட்ரோன் தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு; பாகிஸ்தான்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இந்தியா நடத்திய ட்ரோன் தாக்குதல், துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் உயிரிழந்ததாகவும் 6 பேர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.
1 min
டிரம்ப்பின் புதிய உத்தரவால் இந்தியாவில் மருந்து விலை உயர வாய்ப்பு
அமெரிக்காவில் மருந்துகளின் விலையை 30 முதல் 80 சதவீதம் வரை குறைக்கும் நிர்வாக உத்தரவில் கையொப்பமிடும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் திட்டத்தால் இந்தியா போன்ற நாடுகளில் மருந்துகளின் விலை உயர்வதற்கு வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
1 min
உ.பி. மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்குப் பெயர் ‘சிந்தூர்’
பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
1 min
சத்தீஸ்கர்: லாரி மீது சரக்கு வாகனம் மோதி குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இழுவை லாரி மீது சரக்கு வாகனம் மோதி பெண்கள், குழந்தைகள் என 13 பேர் உயிரிழந்தனர். 14 பேர் காயமடைந்தனர்.
1 min
நாட்டின் பாதுகாப்பில் செயற்கைக்கோள்கள் முக்கியப் பங்கு
குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காக விண்வெளியில் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.
1 min
பாகிஸ்தானின் அணு ஆயுதப் பகுதியைத் தாக்கவில்லை
இந்திய விமானப் படை
1 min
ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மனு
கடவுள் ராமர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்ய உத்தரவிடக் கோரி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான புகார்களை விசாரிக்கும் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
1 min
வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி மீது விமர்சனம்
அரசியல் கட்சிகள் கண்டனம்
1 min
இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் தலைவர் திடீர் நீக்கம்
இந்திய சூரிய எரிசக்திக் கழகத்தின் (எஸ்இசிஐ) தலைவர் மற்றும் தலைமை இயக்குநராகப் பதவி வகித்துவந்த ரமேஷ்வர் பிரசாத் குப்தா மத்திய அரசால் திடீரென நீக்கப்பட்டார்.
1 min
விடைபெற்றார் விராட் கோலி
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி (36), டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min
புரோ லீக் ஹாக்கி: 24 பேருடன் இந்திய மகளிர் அணி
மகளிர் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஐரோப்பிய லெக் மோதலுக்காக 24 பேர் கொண்ட இந்திய மகளிர் அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
மே 17 முதல் மீண்டும் ஐபிஎல்
இந்தியா - பாகிஸ்தான் போர்ப் பதற்றத்தை அடுத்து பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் போட்டி, வரும் 17-ஆம் தேதி மீண்டும் தொடங்கி, ஜூன் 3-ஆம் தேதி நிறைவடையவுள்ள தாக பிசிசிஐ திங்கள்கிழமை அறிவித்தது.
1 min
புத்த பூர்ணிமா: பிரதமர் வாழ்த்து
புத்த பூர்ணிமாவையொட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
1 min
காலிறுதியில் கெளஃப், பாலினி
இப்போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், 4-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கெளஃப் 6-1, 6-1 என்ற நேர் செட்களில், பிரிட்டனின் எம்மா ரடுகானுவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
1 min
இந்தியா, பாகிஸ்தானுக்கு நேபாள பிரதமர் நன்றி
சண்டை நிறுத்த உடன்பாடு மேற்கொண்டதற்காக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி நன்றி தெரிவித்துள்ளார்.
1 min
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அல்கராஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், முன்னணி வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினார்.
1 min
ஏப்ரல் வரை 4.24 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதி
நடப்பு 2024-25-ஆம் சந்தைப்படுத்துதல் ஆண்டில் ஏப்ரல் மாதம் வரை இந்தியா 4.24 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்துள்ளது.
1 min
யூனியன் வங்கி நிகர லாபம் 50% உயர்வு
பொதுத்துறையைச் சேர்ந்த யூனியன் வங்கியின் நிகர லாபம் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் 50 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வீட்டுக் கடன் வட்டியை குறைத்தது பரோடா வங்கி
வீட்டுக் கடன் களுக்கான வட்டி விகிதங்களை பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி குறைத்துள்ளது.
1 min
அமெரிக்க பிணைக் கைதியை விடுவித்தது ஹமாஸ்
கடந்த 2023 அக். 7-ஆம் தேதி இஸ்ரேலில் இருந்து பிணைக் கைதியாகப் பிடித்துச் செல்லப்பட்ட அமெரிக்க-இஸ்ரேலிய ரான ஈடன் அலெக்ஸாண்டரை ஹமாஸ் படையினர் திங்கள்கிழமை விடுவித்தனர்.
1 min
இந்தோனேசியா: வெடி விபத்தில் 13 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் காலாவதியான வெடிகுண்டுகளை அழிக்கும் பணியின் போது திங்கள்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
1 min
90 நாள்களுக்கு வர்த்தகப் போர் நிறுத்தம்: அமெரிக்கா-சீனா ஒப்புதல்
கூடுதல் வரி விதிப்புகள் மூலம் நடத்திவரும் வர்த்தகப் போரை 90 நாள்களுக்கு நிறுத்திவைக்க அமெரிக்காவும் சீனாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
1 min
வங்கதேசம்: பயங்கரவாத குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் அறிக்கை வெளியிடத் தடை
வங்கதேசத்தின் புதிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அமைப்புகளோ, தனி நபர்களோ அறிக்கை வெளியீடு உள்ளிட்ட மக்கள் தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
1 min
போர் நிறுத்த அறிவிப்பால் பங்குச்சந்தையில் எழுச்சி சென்செக்ஸ் 2,975 புள்ளிகள் உயர்வு
போர் நிறுத்த அறிவிப்பை தொடர்ந்து இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை எழுச்சி பெற்றது.
1 min
துருக்கி: குர்து பிரிவினைவாத அமைப்பு கலைப்பு
துருக்கியில் அரசை எதிர்த்து சுமார் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (பிகேகே) கலைக்கப்படுவதாக அந்தக் கட்சி திங்கள்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1 min
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 2,360 குறைவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை திங்கள்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.70,000-க்கு விற்பனையானது.
1 min
ராமேசுவரம் ரயில்களின் நேரம் மாற்றம்
ராமேசுவரம் செல்லும் விரைவு ரயில்களின் நேரம் மே 14 முதல் முற்றிலுமாக மாற்றியமைக்கப்படவுள்ளது.
1 min
கூட்டத்தை ஒழுங்குபடுத்திய அமைச்சர் சேகர்பாபு
வைகையாற்றில் அழகர் எழுந்தருளிய இடம், காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு, திருக்கோயில் உபயதாரர்கள், முக்கியப் பிரமுகர்கள், உயர் அலுவலர்கள், செய்தியாளர்கள் உள்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோர் மட்டுமே அனுமதிக்கப்படுவது வழக்கம்.
1 min
சென்னை உள்பட 14 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் சென்னை உள்பட 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவானது.
1 min
பச்சைப் பட்டுடுத்தி வைகையில் எழுந்தருளினார் அழகர்
மதுரை அழகர் கோவில் சுந்தரராஜப் பெருமாள் கோயில் சித்திரைப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக அழகர் பச்சைப் பட்டுடுத்தி திங்கள்கிழமை காலை வைகை ஆற்றில் எழுந்தருளினார்.
1 min
Dinamani Tiruvallur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only