Dinamani Tiruppur - May 10, 2025Add to Favorites

Dinamani Tiruppur - May 10, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Tiruppur along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 4 Days
(OR)

Subscribe only to Dinamani Tiruppur

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Tiruppur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 10, 2025

400 ட்ரோன்களை ஏவி பாகிஸ்தான் அத்துமீறல்

பாகிஸ்தான் தொடர்ச்சியாக அத்துமீறி தாக்குதலில் ஈடுபடுவதாகவும், மே 8-9-ஆம் தேதிக்கு இடைப்பட்ட நள்ளிரவிலும், நள்ளிரவைக் கடந்தும் 400 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும் மத்திய அரசு மற்றும் பாதுகாப்புப் படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 min

பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மாவட்டத்தில் பத்ம விருதுகளுக்கு தகுதியான சாதனை புரிந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

1 min

கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min

முத்தணம்பாளையத்தில் 2 பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை

திருப்பூர் மாவட்டம், முத்தணம்பாளையம் கிராமத்தில் இனம் கண்டறிய இயலாத 2 பயனாளிகளின் இலவச பட்டாக்களை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1 min

புளியம்பட்டியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 16 பவுன் திருட்டு

பல்லடம் அருகே உள்ள புளியம்பட்டியில் தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் 16 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

1 min

இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருப்பூரில் கத்தியால் குத்தி இளைஞரைக் கொலை செய்த வழக்கில் 4 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

1 min

தாராபுரம் உழவர் சந்தையில் காய்கறிகளைத் தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

தாராபுரம் உழவர் சந்தையில் காய்கறிகளைத் தரையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min

அவிநாசியப்பர் திருத்தேர் நிலை சேர்ந்தது

இன்று கருணாம்பிகையம்மன் தேரோட்டம்

1 min

அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மே 27-க்குள் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு மே 27-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

1 min

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

சூறாவளிக் காற்றால் வாழை மரங்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

1 min

மாவட்ட தொழில் மையம் மூலமாக 4 ஆண்டுகளில் ரூ.385.67 கோடி கடனுதவி

திருப்பூர் மாவட்ட தொழில் மையம் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் 1,280 பேருக்கு ரூ.67.93 கோடி மானியத்தில் ரூ.385.67 கோடி தொழில் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

1 min

முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனை

திருப்பூர் மற்றும் பல்லடம் உழவர் சந்தைகளில் முருங்கை கிலோ ரூ.100-க்கு விற்பனையானது.

1 min

நியாய விலைக் கடை ஊழியர் பணியிடை நீக்கம்

திருப்பூரில் பொருள்கள் விநியோகம் செய்வதில் முறைகேடுகள் தொடர்பாக நியாய விலைக் கடை ஊழியர் வெள்ளிக்கிழமை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min

குண்டடம் அருகே கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

குண்டடம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

1 min

உடுமலை அரசுக் கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை

உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 2025-2026-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min

மூலனூரில் ரூ.1.48 கோடிக்கு பருத்தி விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.48 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

1 min

அவிநாசியில் பள்ளி மாணவர்களுக்கு மூன்று நாள் அறிவியல், கலைப் பயிற்சி

அவிநாசியில் 4 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் கலைப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்குகிறது.

1 min

தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் உதகை மலை ரயில் சேவை இன்றும் ரத்து

மேட்டுப்பாளையம் - குன்னூர் ரயில் பாதையில் ஹில்குரோவ் நிலையம் அருகே தண்டவாளத்தில் பெரிய பாறைகள் உருண்டு விழுந்ததால் மலை ரயில் சேவை வெள்ளி, சனிக்கிழமை ரத்து செய்யப்படுவதாக சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

உதகையில் ரோஜா கண்காட்சி இன்று தொடக்கம்

உதகையில் ரோஜா கண்காட்சி சனிக்கிழமை (மே 10) தொடங்க உள்ளது.

1 min

சத்துணவு, அங்கன்வாடி சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

பொள்ளாச்சிக்கு வந்திருந்த புதிய போப்!

கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவர் என்ற பொறுப்பில் போப்பாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோ கடந்த 2006-ஆம் ஆண்டில் கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளிக்கு வந்திருந்தார்.

1 min

கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி தொடக்கம் - நாளை நிறைவு

நீலகிரி மாவட்ட கோடை விழாவின் ஒருபகுதியாக கூடலூரில் வாசனை திரவிய கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min

வீடு திரும்பினார் துரைமுருகன்

உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் துரைமுருகன் நலமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினார்.

1 min

அமைச்சரிடம் வாக்குவாதம்; அதிமுக எம்எல்ஏக்கள் இருவர் கைது

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆர்.ராஜேந்திரனிடம் துணை மின் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்) உள்பட 15 பேரை போலீஸார் கைது செய்தனர்.

1 min

மோட்டார்சைக்கிள்- வேன் மோதல்: 2 சிறுவர்கள் உள்பட மூவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே மோட்டார்சைக்கிளும் வேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தனர்.

1 min

நகை பறிப்பு நாடகம் அம்பலம்; குழந்தை கொலையில் தாய் கைது

திருச்செந்தூரில் மன அழுத்தத்தால் தனது இரண்டரை வயது பெண்குழந்தையை கொலை செய்துவிட்டு, நகை பறிப்புக்காக மர்மநபர் கொன்றதாக நாடகமாடிய பெண் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.

1 min

நாளை குருப் பெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் சிறப்பு ஏற்பாடு

குரு பெயர்ச்சி ஞாயிற்றுக்கிழமை (மே 11) நடைபெறவுள்ளதையொட்டி, திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

1 min

நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும்

நெல்லையில் கட்டப்படவுள்ள நூலகத்துக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

1 min

அனைவருக்கும் முதுமை உண்டு!

அண்மைக்காலமாக முதியோர் தாக்கப்படுவது தொடர்பான செய்திகளை ஊடகங்களில் அதிகமாகப் பார்க்க முடிகிறது. அதுவும், அந்தத் தாக்குதல் குடும்பத்தினரால் என்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

2 mins

முன்னேற்றமாகும் மாற்றம்

சர்வதேச கல்விச் சூழலுக்கு நமது மாணவர்கள் தயாராக ஏதுவாக தேசிய கல்விக் கொள்கை அமைந்துள்ளது. வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயில விரும்பும் மாணவர்களின் கனவு நனவாக தேசிய கல்விக் கொள்கை வாய்ப்பளிக்கிறது.

3 mins

வேளாண் பட்டப் படிப்பு சேர்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

வேளாண்மை இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.

1 min

நாள் முழுவதும் கடை திறக்க அனுமதி: அரசாணை நீட்டிப்பு

நாள் முழுவதும் கடைகள், நிறுவனங்களைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்க வகை செய்யும் அரசாணை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

போர்ப் பதற்றத்தைத் தொடர்ந்து தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

1 min

தமிழகம், மேற்கு வங்கம், கேரளத்தில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கோரிய மனு தள்ளுபடி

மும்மொழித் திட்டத்தை உள்ளடக்கிய தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min

நமக்கு நாமே திட்ட நிதி ரூ.150 கோடியாக உயர்வு

நிகழாண்டில் நமக்கு நாமே திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிதி ரூ. 100 கோடியிலிருந்து ரூ. 150 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

1 min

எல்லைப் பகுதி, விமான நிலையங்கள் பாதுகாப்பு: அமித் ஷா ஆய்வு

இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், பாகிஸ்தானையொட்டிய இந்திய எல்லைப் பகுதிகள் மற்றும் விமான நிலையங்களின் பாதுகாப்பு நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min

பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

குடிமைப் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அவசரகால கொள்முதல் அதிகாரம் வழங்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியது.

1 min

உயர்கல்வி கட்டாயம்: பிளஸ் 2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு முதல்வர் செய்தி

பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களை கட்டாயம் உயர்கல்வியில் சேர்க்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

1 min

கம்பராமாயணத்தில் காலமாற்றத்துக்கேற்ற கருத்துகள்

தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வெ.ராமசுப்பிரமணியன்

1 min

முட்டை விலை 5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.20-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

1 min

24 இந்திய விமான நிலையங்கள் மூடல்: மே 15 வரை நீட்டிப்பு

பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்ட ஸ்ரீநகர், சண்டீகர் உள்பட நாட்டின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள 24 விமான நிலையங்கள் மே 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்' தலைப்புக்கு முண்டியடிக்கும் ஹிந்தி திரைத் துறை

தங்கள் திரைப்படங்களுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று தலைப்பிட ஹிந்தி திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள் கடும் போட்டி போட்டுவருகின்றனர்.

1 min

தங்கம் விலை பவுனுக்கு ரூ.920 சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.920 குறைந்து ரூ.72,120-க்கு விற்பனையானது.

1 min

தவறி விழுந்து காயம்: நல்லகண்ணுக்கு மருத்துவ சிகிச்சை

முதுபெரும் அரசியல் தலைவர் இரா. நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார்.

1 min

பாகிஸ்தானுக்கு கடன்; ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடர்பாக சர்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

1 min

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் வேரூன்றி இருக்கும் ஊழல்: அமலாக்கத் துறை

தமிழக அரசின் முக்கியத் துறைகளில் ஊழல் வேரூன்றியிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

1 min

கண்ணீர்விட்டு அழுத பாகிஸ்தான் எம்.பி.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி.தாஹிர் இக்பால் கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவியது.

1 min

மின் துண்டிப்பு, சைரன் ஒலி, குண்டுவெடிப்பு சப்தம்...

வீடுகளுக்குள் முடங்கிய எல்லையோர மக்கள்

1 min

இந்திய ஆயுதப் படைகளுக்கு அம்பானி, அதானி ஆதரவு

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு எதிராக தீரத்துடன் சண்டையிட்டு வரும் இந்திய ஆயுதப் படைகளுக்கு தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, கௌதம் அதானி ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.

1 min

பாதுகாப்புப் படை நடவடிக்கைகளை நேரலையாக ஒளிபரப்ப வேண்டாம்

ஊடகங்களுக்கு அமைச்சகம் அறிவுறுத்தல்

1 min

தில்லியின் முக்கிய இடங்களில் பலத்த பாதுகாப்பு

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தில்லியின் முக்கிய இடங்களில் வெள்ளிக்கிழமை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் போரில் தலையிட மாட்டோம்: அமெரிக்கா

\"இந்தியா - பாகிஸ்தானிடையே போரில் தலையிட மாட்டோம்\" என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

1 min

பாகிஸ்தான் குண்டுவீச்சில் இருவர் உயிரிழப்பு; ஐவர் காயம்

பாகிஸ்தான் குண்டுவீச்சில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா, பூஞ்ச் மாவட்டங்களில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.

1 min

ராணுவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் நாடு தழுவிய யாத்திரை

பாகிஸ்தான் மீதான நடவடிக்கையில் இந்திய பாதுகாப்பு படைகளுக்கு ஆதரவு தெரிவித்து, காங்கிரஸ் சார்பில் 'ஜெய் ஹிந்த்' என்ற பெயரில் வெள்ளிக்கிழமை நாடு தழுவிய யாத்திரை நடத்தப்பட்டது.

1 min

நாட்டின் இறையாண்மையை காக்க உறுதி: இந்திய ராணுவம்

நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைக் காக்க உறுதியுடன் உள்ளதாக இந்திய ராணுவம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

தீபிகா, சலுன்கே காலிறுதியில் வெற்றி

சீனாவில் நடைபெறும் உலகக் கோப்பை வில்வித்தை 2-ஆம் நிலை போட்டியில் ரீகர்வ் பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, பார்த் சலுன்கே ஆகியோர் தங்களது பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறினர்.

1 min

குகேஷ், பிரக்ஞானந்தா மீண்டும் 'டிரா'

ருமேனியாவில் நடைபெறும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியின் 2-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் டிரா செய்தனர்.

1 min

இந்தியாவின் பாதுகாப்பு அரண்...

பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதலை முறியடிக்க இந்தியாவின் பாதுகாப்பு அரணாக எஸ்-400 டிரையம்ப் வான் பாதுகாப்பு சாதனம், பராக்-8, ஆகாஷ் ஏவுகணைகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டதாக ராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1 min

அல்கராஸ், சபலென்கா முன்னேற்றம்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், பெலாரஸின் அரினா சபலென்கா ஆகியோர் 2-ஆவது சுற்றில் வெற்றி பெற்றனர்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்: தென்னாப்பிரிக்காவுக்கு ஆறுதல் வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 6-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வெள்ளிக்கிழமை வென்றது.

1 min

முதல் திருப்பலிக் கூட்டத்தில் போப் 14-ஆம் லியோ பங்கேற்பு

கத்தோலிக்க திருச்சபையின் 267-ஆவது தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போப் 14-ஆம் லியோ, வாடிகனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற திருப்பலிக் கூட்டத்தில் போப் என்ற முறையில் முதல்முறையாகப் பங்கேற்றார்.

1 min

சீனா மீதான வரிவிதிப்பைக் குறைக்க டிரம்ப் பரிசீலனை

சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது விதித்துள்ள 145 சதவீத கூடுதல் வரி விதிப்பை 80 சதவீதமாகக் குறைப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பரிசீலித்து வருகிறார்.

1 min

ஹசீனா கட்சிக்கு தடை விதிப்பது பற்றி விரைவில் முடிவு: வங்கதேச அரசு

வங்கதேசத்தில், ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்குத் தடை விதிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்று அந்த நாட்டு இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

1 min

ரகசிய உளவு: அமெரிக்கா மீது டென்மார்க் குற்றச்சாட்டு

தங்களது நாட்டின் தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் ரகசிய உளவு நடவடிக்கைகளை அமெரிக்கா அதிகரித்து வருவதாக டென்மார்க் குற்றஞ்சாட்டியது.

1 min

இலங்கை: ஹெலிகாப்டர் விபத்தில் 6 வீரர்கள் உயிரிழப்பு

இலங்கை விமானப் படை ஹெலிகாப்டர் நீர்த்தேக்கத்தில் வெள்ளிக்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானதில் 6 வீரர்கள் உயிரிழந்தனர்.

1 min

உணவுப் பொருள் பதுக்கல் கூடாது: மத்திய அரசு எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், 'அத்தியாவசிய உணவுப் பொருள்களை பதுக்கி வைக்கக் கூடாது' என்று மொத்த மற்றும் சில்லறை வணிகர்களை மத்திய அரசு வெள்ளிக்கிழமை எச்சரித்தது.

1 min

புதிய போப் லியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

புதிய போப் பாக தேர்வு செய்யப்பட்டுள்ள 14-ஆம் லியோவுக்கு இந்திய மக்கள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min

பெட்ரோல், டீசல் போதுமான அளவில் இருப்பு

பாகிஸ்தானுடன் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட எரிபொருள்களின் கையிருப்பு போதுமான அளவில் உள்ளது. எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்று இந்திய எண்ணெய் நிறுவனம் (ஐஓசி) தெரிவித்துள்ளது.

1 min

Read all stories from Dinamani Tiruppur

Dinamani Tiruppur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only