Dinamani Tirunelveli - March 03, 2025

Dinamani Tirunelveli - March 03, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tirunelveli along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tirunelveli
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 03, 2025
பிளஸ் 2 பொதுத் தேர்வு இன்று தொடக்கம்
தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தேர்வு திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
1 min
அம்பையில் மகா வித்யா வேள்வி பூஜை
அம்பாசமுத்திரம் காசிநாதர் கோயிலில் வஜ்ரசேனா அமைப்பு சார்பில் மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மேம்பட 18ஆம் ஆண்டு மகா வித்யா வேள்வி சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
முக்கூடல் காய்கனி கடையில் திருட்டு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் காய்கனி கடையின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல தடை நீக்கம்
தேசிய புலிகள் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததால், பாபநாசம் அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோயிலுக்கு திங்கள்கிழமை (மார்ச் 3) முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என வனத்துறை அறிவித்துள்ளது.
1 min
களக்காடு கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு நிறைவு
களக்காடு வனக் கோட்டத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் சனிக்கிழமை நிறைவடைந்தன.
1 min
கடையம் வனச்சரகப் பகுதியில் யானைகளை விரட்டும் பணியில் வனத் துறை
கடையம் வனச்சரகப் பகுதியில் வனப்பகுதியிலிருந்து வெளியேறும் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
நெல்லை அருங்காட்சியகத்தில் போட்டிகள்
பாளையங்கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஓவியப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நெல்லை அரசு மருத்துவமனையில் பிறந்த 12 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 1 ஆம் தேதி பிறந்த 12 குழந்தைகளுக்கு திமுக சார்பில் தங்கமோதிரங்கள் ஞாயிற்றுக்கிழமை அணிவிக்கப்பட்டது.
1 min
ராதாபுரம் தொகுதியில் அனுமதியில்லாத கல் குவாரிகளை மூட வலியுறுத்தல்
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் அனுமதியின்றி இயங்கும் கல் குவாரிகளை மூட வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
1 min
மானூர் அருகே ஆடுகள் திருட்டு: இருவர் கைது
திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகே ஆடுகளை திருடிய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
1 min
குண்டர் தடுப்பு சட்டத்தில் இளைஞர் கைது
திருநெல்வேலி மாநகரத்தில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
1 min
பாளை. மேட்டுத்திடலில் அதிமுகவினர் உணவு வழங்கல்
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நோயாளிகளுக்கு அதிமுக சார்பில் சனிக்கிழமை உணவு வழங்கப்பட்டது.
1 min
நெல்லை நகரத்தில் சாலையை சீரமைக்க மக்கள் கோரிக்கை
திருநெல்வேலி நகரத்தில் உள்ள வடக்கு மவுண்ட் சாலையில் தற்காலிக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min
பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக பாளை. கோயிலில் சிறப்பு வழிபாடு
பாளையங்கோட்டை அருள்மிகு அழகியமன்னார் ராஜகோபால சுவாமி கோயிலில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
நெல்லை அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சையால் உயிர் பிழைத்த பெண்
சிறுநீரகம் செயலிழந்த பெண்ணுக்கு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட உயர் சிகிச்சையால் அவர் உயிர் பிழைத்தார்.
1 min
கள்ளச் சந்தையில் மது விற்பவரிடம் லஞ்சப் பேரம்: எஸ்.ஐ. பணியிடை நீக்கம்
மதுப் புட்டிகளைப் பதுக்கி கள்ளச் சந்தையில் விற்பவரிடம் லஞ்சப் பேரம் நடத்திய வீரகனூர் காவல் உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min
மேல்மருவத்தூர் அடிகளாரின் பாதுகைகளுக்கு பூஜை
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடத்தில் பங்காரு அடிகளாரின் 85-ஆவது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அடிகளாரின் பாதுகைகளுக்கு பக்தர்கள் பாதபூஜை செய்து வழிபாடு செய்தனர்.
1 min
'ஆங்கிலம் படித்ததால்தான் அந்நியச் செலாவணி வருகிறது'
ஆங்கிலம் படித்ததால்தான் அந்நியச் செலாவணி வருகிறது' என்றார் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு.
1 min
கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும்
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவிமணியன் வலியுறுத்தினார்.
1 min
தனியார் சிகிச்சை மையத்தில் கருவின் பாலினம் கண்டுபிடிப்பு; உரிமையாளர் கைது
ராயக்கோட்டை அருகே கர்ப்பிணிகளுக்கு கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்து வந்த தனியார் சிகிச்சை மைய உரிமையாளரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மேட்டூர் அனல் நிலைய ஊழியர்களுக்கு பணி நிரந்தரம்
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
சீமான் மீதான நடவடிக்கைகளில் திமுகவின் பின்புலம் ஏதுமில்லை
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான காவல்துறையின் நடவடிக்கையில் திமுகவின் பின்புலம் ஏதுமில்லை என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
1 min
திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி கவசம் பாராயணம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கலையரங்கில் 1008 மாணவ, மாணவியர் பங்கேற்ற கந்த சஷ்டி கவசம் பாராயணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்
தமிழகத்தில் உயர் கல்வியில் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர் என்று வனம் மற்றும் கதர் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார்.
1 min
தேர்வை நம்பிக்கையுடன் அணுகுங்கள்; மாணவர்களுக்கு ஆளுநர் வாழ்த்து
பிளஸ் 2 பொதுத் தேர்வை நம்பிக்கையுடன் அணுக வேண்டும் என்று மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min
தமாகா பங்கேற்காது
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமாகா பங்கேற்காது என்று அக் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
1 min
நாகையில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
நாகையில் திங்கள்கிழமை (மார்ச் 3) நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
1 min
தேமுதிக பங்கேற்கும்
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தேமுதிக பங்கேற்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
1 min
ஒசூரில் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை: 5 சிறுவர்கள் கைது
ஒசூரில் அக்கா, தங்கைக்கு பாலியல் தொல்லை அளித்த 5 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.
1 min
தென்மாவட்ட பேருந்துகள் நாளைமுதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்
தென்மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் தாம்பரம் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், அந்தப் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) முதல் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் பணியே
விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் பணியாகக் கருதப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்
அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
உண்மையும், அன்பும் காந்திய நாணயத்தின் இரு பக்கங்கள்
காந்திய நாணயத்தின் இரு பக்கங்களான உண்மை, அன்பு ஆகிய பண்புகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.
1 min
தில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சரை மீனவர்களுடன் சென்று சந்திக்க உள்ளோம்
இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை தொடராமல் இருக்க வரும் 10-ஆம் தேதிக்குப் பிறகு தமிழக மீனவர்களை நாங்கள் தில்லிக்கு அழைத்துச் சென்று, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கரைச் சந்திக்க உள்ளோம் என பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
பாதை மாறும் மாணவர்கள்!
சமீபத்தில் திருநெல்வேலியில் உள்ள ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஆயுதங்களுடன் வந்ததனால் இடைநீக்கம் செய்யப்பட்டதாகச் செய்தி வெளிவந்தது.
2 mins
ஆதரித்தால் போதும் அடியேனை...
இடம்பெயரும் தொழிலாளர்கள் தமது சொந்த மாநிலங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்தால் மற்ற மாநிலங்களுக்கு வேலை தேடி செல்ல வேண்டிய அவசியமில்லை. அந்நிலையில் முன்னேறிய மாநிலங்களில் நபர் பற்றாக்குறை ஏற்படும், வளர்ச்சிப் பணிகள், அத்தியாவசியப் பணிகள் முடங்கும்.
3 mins
தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும்
கனிமொழி வலியுறுத்தல்
1 min
ஆளுநர் அவதூறு: அமைச்சர் ரகுபதி
கச்சத்தீவு விவகாரத்தில் திமுக அரசு மீது ஆளுநர் ஆர்.என்.ரவி அவதூறு பரப்புவதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
1 min
காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை
தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
1 min
‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியது.
1 min
திமுகவுக்கும் சமமான பொறுப்பு: ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு 1974-இல் ஏற்படுத்தப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தமே காரணம் எனவும், அப்போதைய மத்திய அரசின் கூட்டணிக் கட்சியாக இருந்த திமுகவுக்கும் இந்தத் தவறில் சமமான பொறுப்பு உண்டு எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை: நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மார்ச் 14) வெளியிடப்படவுள்ளது.
1 min
நீட் தேர்வு விண்ணப்பப் பதிவு: தேர்வர்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு ஒருவர் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தெரிவித்தது.
1 min
மணிப்பூர்: மேலும் 42 ஆயுதங்கள் ஒப்படைப்பு
5 பதுங்குமிடங்கள் அழிப்பு
1 min
தெலங்கானா: சுரங்கத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடம் இன்னும் கண்டறியப்படவில்லை
தெலங்கானா சுரங்க விபத்தில் தொழிலாளர்கள் சிக்கியுள்ள இடத்தை இன்னும் கண்டறியவில்லை என்றும் மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாகவும் மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
போதைப் பொருளுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுகிறது
மத்திய அமைச்சர் அமித் ஷா
1 min
ஜோர்டான் எல்லையில் கேரளத்தைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை
இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவும் முயற்சியின்போது ஜோர்டான் ராணுவம் சுட்டதில் கேரளத்தைச் சேர்ந்த ஆனி தாமஸ் கேப்ரியல் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
1 min
முற்போக்குவாதிகளால் ஹிந்துக்களுக்கு அச்சுறுத்தல்
அஸ்ஸாம் முதல்வர்
1 min
உத்தரகண்ட் பனிச்சரிவு: மேலும் 4 பேரின் உடல்கள் மீட்பு
மீட்புப் பணி நிறைவு
1 min
குஜராத்: கிர் சோம்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு
குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்த மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கிர் சோம்நாத்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டார்.
1 min
வேலைவாய்ப்பு அதிகரித்தாலும் ஊதியம் உயரவில்லை: நீதி ஆயோக் உறுப்பினர்
நாட்டில் வேலை வாய்ப்பு உயர்ந்து வருகிறது; ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக பணவீக்கத்துக்கேற்ப ஊதியம் உயரவில்லை என நீதி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.
1 min
திரைப்படத்தை பார்த்து 6 வயது சிறுமி கொலை
13 வயது சிறுவன் கைது
1 min
மாதபி புரி புச், 5 பேருக்கு எதிராக வழக்கு: பங்குச்சந்தை மோசடி புகாரில் நீதிமன்றம் உத்தரவு
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச், மும்பை பங்குச் சந்தை (பிஎஸ்இ) நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்பட 6 பேருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யுமாறு ஊழல் தடுப்புப் பிரிவுக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் உள்ளனர்; சசி தரூர் விவகாரத்தை தொடர்ந்து ராகுல் உறுதி
கேரள காங்கிரஸார் ஒற்றுமையுடன் இருப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞர் மீது வழக்கு
ஐக்கிய அரபு அமீரகத்தில் பணியாற்றி வருபவர் கேரளத்தில் உள்ள தனது மனைவிக்கு வாட்ஸ்ஆப்பில் முத்தலாக் கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்ததையடுத்து, அவர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மத்திய அமைச்சர் மகளைப் பின்தொடர்ந்து சீண்டல்: 7 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் மத்திய அமைச்சர் ரக்ஷா கட்ஸேயின் மகளையும் அவரது நண்பர்களையும் பின்தொடர்ந்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 7 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 min
அயோத்தி மாநகராட்சிக்கு காலணிகளால் பிரச்னை!
லாரிகள் மூலம் அகற்றம்
1 min
சகோதரர் மகனை கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கினார் மாயாவதி
'அரசியல் வாரிசு யாரும் கிடையாது'
1 min
சென்னை-நார்த் ஈஸ்ட் யுனைடெட் இன்று மோதல்
ஐஎஸ்எல்கால் பந்து தொடரின் ஒருபகுதியாக பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையு ம் முனைப்பில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி திங்கள்கி ழமை சென்னையின் எஃப்சி அணியுடன் மோதுகிறது.
1 min
தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி: தெலங்கானா, தில்லி வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் தெலங்கானா, தில்லி அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
ரமலான் மாதம் தொடக்கம் பிரதமர் மோடி வாழ்த்து
புனிதமான ரமலான் மாதம் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 2) தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
1 min
விதர்பா மூன்றாவது முறையாக சாம்பியன்
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பில் கேரளத்துக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலையில் அடிப்படையில பட்டம் வென்றது விதர்பா அணி. இது அந்த அணிக்கு 3-ஆவது பட்டமாகும்.
1 min
அமெரிக்காவின் அதிகாரபூர்வ மொழி ஆங்கிலம்
நிர்வாக உத்தரவில் அதிபர் டிரம்ப் கையொப்பம்
1 min
'புளூ கோஸ்ட்': நிலவில் தரையிறங்கிய தனியார் நிறுவனத்தின் 2-ஆவது விண்கலம்
நிலவில் 'புளூ கோஸ்ட்' விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியுள்ளது.
1 min
பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீட்க சர்வதேச உதவி: இம்ரான் கான் கோரிக்கை
பாகிஸ்தானின் ஜனநாயகம், மனித உரிமைகள், பிராந்திய ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மீட்க சர்வதேச நாடுகள், முக்கியமாக அமெரிக்கா உதவ வேண்டும் என்று அந்நாட்டு முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
டெஸ்லா விற்பனையகங்களை முற்றுகையிட்டுப் போராட்டம்
அமெரிக்க அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) எதிர்ப்பாளர்கள், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
காஸாவுக்கு நிவாரணப் பொருள்கள்: இஸ்ரேல் தடுத்து நிறுத்தம்
தற்காலிக போர் நிறுத்த நீட்டிப்பு பரிந்துரையை ஏற்காததால் நடவடிக்கை
2 mins
இளையராஜாவுக்கு முதல்வர் நேரில் வாழ்த்து
லண்டனில் மார்ச் 8-இல் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், அவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி, நினைவுப் பரிசு வழங்கினார்.
1 min
மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா கொடியேற்றம்
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் மாசிக் கொடை விழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் மாசித் திருவிழா கொடிப்பட்ட வீதியுலா இன்று கொடியேற்றம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித் திருவிழா திங்கள்கிழமை (மார்ச் 3) தொடங்குகிறது.
1 min
பெண்களின் வளர்ச்சிதான் இந்தியாவை உலகின் குருவாக மாற்றும்
பெண்களின் வளர்ச்சி ஒன்றே இந்தியாவை உலகின் குருவாக மாற்றும்' என்றார் மாதா அமிர்தானந்த மயி.
2 mins
Dinamani Tirunelveli Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only