Dinamani Tiruchy - March 07, 2025

Dinamani Tiruchy - March 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tiruchy along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Tiruchy
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 07, 2025
25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் மதுபான கொள்முதல் முறை கேடு புகார் தொடர்பாக தமிழகத்தில் 25 இடங்களில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை (மார்ச் 6) சோதனை மேற்கொண்டனர்.
2 mins
மக்காச்சோளத்துக்கான 1% சந்தைக் கட்டணம் ரத்து
தமிழகத்தில் மக்காச்சோள விற்பனைக்காக வசூலிக்கப்பட்டு வந்த ஒரு சதவீத சந்தைக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min
சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்
லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்
1 min
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மும்மொழி பாடத் திட்ட கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
1 min
நாளை ரேஷன் சிறப்பு குறைதீர் முகாம்கள்
திருச்சி மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் மாற்றம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்ய சனிக்கிழமை 11 வட்டங்களிலும் பொதுவிநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
1 min
மணப்பாறை அருகே மூடப்பட்ட தேவாலயம் 21 ஆண்டுகளுக்குப் பிறகு திறப்பு
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் புறத்தாக்குடியிலுள்ள புனித வனத்து அந்தோணியார் தேவாலயம், நீதிமன்ற உத்தரவின்படி 21 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
1 min
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை முதல்வர் அனுமதிக்க மாட்டார்
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் விடமாட்டார் என்றார் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு.
1 min
பொன்னர் - சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழாவில் வேடபரி
மணப்பாறை, மார்ச் 6: வீரப்பூரில் அண் ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் - சங்கர் மாமன்னர்களின் மாசி பெருந்திருவிழாவில் வியாழக்கிழமை வேடபரி நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
குடும்பத் தகராறில் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை
திருச்சியில் குடும்பத் தகராறில் இளைஞர் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
தேசிய கல்லூரியில் சைபர் பாதுகாப்பு கருத்தரங்கம்
திருச்சி தேசிய கல்லூரியில், சைபர் பாதுகாப்பு தொழில் நுட்பங்களின் முன்னேற்றங்கள் குறித்த கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
திருச்சியிலிருந்து மார்ச் 30 முதல் மும்பை, யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை
திருச்சியிலிருந்து மார்ச் 30 முதல் மும்பை, யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.
1 min
ஹிந்தி திணிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகள் திணிக்கப்படுவதை கண்டித்து, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் சார்பில், திருச்சியில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
குழுமாயி அம்மன் கோயில் குட்டிக்குடி திருவிழா
திருச்சி புத்தூரில் உள்ள குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி திருவிழா வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான ஆடுகள் பலியிடப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது.
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
தமிழகத்தில் திருச்சி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் திருச்சி, ஈரோடு, பரமத்திவேலூர், மதுரை விமான நிலையம் உள்பட 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: தாய், லாரி ஓட்டுநர் போக்ஸோவில் கைது
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த லாரி ஓட்டுநர், மாணவியின் தாய் ஆகிய இருவரையும் போலீஸார் வியாழக்கிழமை போக்ஸோவில் கைது செய்தனர்.
1 min
மொழி விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் இனி எடுபடாது
இருமொழிக் கொள்கை என்ற பெயரால் திமுக நடத்தி வரும் இரட்டை வேடம் இனி மக்களிடம் எடுபடாது என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
1 min
ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி மோசடி: நகைக் கடை பங்குதாரர் கைது
நகை விற்பனையில் ரூ.6.53 கோடி ஜிஎஸ்டி மோசடி செய்தது தொடர்பாக நகைக் கடையின் பங்குதாரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் முன்வர வேண்டும்
திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வர் முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை; 4 பேருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறை தண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கடன் பிரச்னை: தம்பதி தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே கடன் பிரச்னையால் விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்துகொண்டனர்.
1 min
மேடையில் அதிமுக நிர்வாகியை தாக்கினார் முன்னாள் அமைச்சர்
விருதுநகரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்ட மேடையில் அதிமுக நிர்வாகி ஒருவரை, முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தாக்கினார்.
1 min
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தேயிலை தோட்ட மேலாளரிடம் விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தேயிலை தோட்ட மேலாளர் நடராஜன் சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு வியாழக்கிழமை ஆஜரானார்.
1 min
கோயிலை புனரமைக்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய செயல் அலுவலர் கைது
பெரம்பலூர் அருகே கோயில் புனரமைப்பு பணிக்கு அனுமதி வழங்க ரூ. 3 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக, மதன கோபால சுவாமி திருக்கோயில் செயல் அலுவலரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
1 min
திருநங்கையாக மாற அறுவை சிகிச்சை ஒருவர் உயிரிழப்பு; 2 பேர் கைது
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு மருத்துவ கருவிகளின்றி அறுவை சிகிச்சை செய்துகொண்ட நபர் உயிரிழந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனர்.
1 min
மத்திய அரசுப் பணிக்கு ஐஜி சுதாகர் மாற்றம்
தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆர். சுதாகர், அயல் பணியாக மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
1 min
விகடன் இணையதள முடக்கத்தை நீக்க மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
விகடன் இணையதள முடக்கத்தை நீக்குமாறு மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
ஓவியம் உள்ளிட்ட துறை படைப்பாளிகளுக்கு கலைச் செம்மல் விருது: முதல்வர் வழங்கினார்
ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் படைப்பாளிகள் ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min
சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; நாட்டின் பெருமை
‘லண்டனில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை’ என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
1 min
அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
தேவை... பணியிட மாற்றத்தில் மாற்றம்!
தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்படுவதால் நிர்வாகமும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
2 mins
மகாராஷ்டிரத்தில் வசிப்பவர்கள் மராத்தி கற்க வேண்டும்
'மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவர்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min
சநாதன விவகாரம்: உதயநிதி மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யத் தடை
சநாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிதாக வழக்கு பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகள் மீது பாரபட்சம் ஏன்?
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகளை மத்திய அரசு பாரபட்சமாக அணுகுவது ஏன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 mins
12 சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழகத்தில் 12 சார்-பதிவாளர் அலுவலகங்களுக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை தலைமைச் செயலகத்தில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
1 min
தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறை: காங்கிரஸ் வலியுறுத்தல்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் இலங்கை அரசு வேண்டுகோள்
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
ரஷியாவிடம் இருந்து ரூ.10.5 லட்சம் கோடிக்கு இந்தியா எண்ணெய் இறக்குமதி
உக்ரைன் போர் தொடங்கிய பிறகு ரஷியாவிடம் இருந்து 112 பில்லியன் யூரோ (சுமார் ரூ.10.5 லட்சம் கோடி) மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக ஐரோப்பாவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min
இந்தியாவில் சிறுபான்மையினர் அதிருஷ்டசாலிகள்
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு
1 min
மரபணு மாற்றப்பட்ட கடுகு பயிர்கள் அனுமதிக்கு எதிரான மனு: ஏப்.15-க்கு விசாரணை ஒத்திவைப்பு
மரபணு மாற்றப்பட்ட கடுகின் களப் பரிசோதனைக்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு எதிரான மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வரும் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
1 min
பிரதமர் மோடிக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய விருது
கரோனா பெருந்தொற்று காலத்தில் பிரதமர் மோடியின் வியூக தலைமைத்துவம் மற்றும் மதிப்புமிக்க உதவியை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பார்படாஸ் நாட்டின் உயரிய தேசிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
1 min
காஷ்மீர் பிரச்னை: ‘திருடிய’ பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே தீர்வு
தங்களின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள ‘திருடப்பட்ட’ காஷ்மீர் பகுதிகளை பாகிஸ்தான் திருப்பி ஒப்படைத்த பிறகே இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார்.
1 min
அரசியல் கட்சிகளால் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நக்ஸல் தீவிரவாதம்
வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகர்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.
1 min
உத்தரகண்டில் குளிர்கால சுற்றுலாவுக்கு பிரதமர் மோடி அழைப்பு
உத்தரகண்ட் மாநிலத்துக்கு குளிர்காலத்தில் சுற்றுலா வந்தால், அதன் உண்மையான அழகைக் காண முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min
தெலங்கானா மேலவைத் தேர்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி
தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.
1 min
நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை
கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
1 min
இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு
அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு
1 min
ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
அரவிந்த் சிதம்பரம் அதிரடி வெற்றி
பிராக் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் இந்திய ஜிஎம் அரவிந்த் சிதம்பரம் 7-ஆவது சுற்றில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை அபாரமாக ஆடி வீழ்த்தினார்.
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
ஒஸாகா, குவிட்டோவா அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, பெட்ரா குவிட்டோவா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
1 min
சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி
சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.
1 min
WPL அமெலியா, ஹெய்லியால் மும்பை அபார வெற்றி
யுபி 150/9, மும்பை 153/4
1 min
ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்
சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்
1 min
வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்
நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 17% சரிவு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 17 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போர் விமானம்
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சேர்ந்த போர் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 பேர் காயமடைந்தனர்.
1 min
4 ஐஎம்எல் நட்சத்திரங்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி: பிஒபி நடத்தியது
இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நான்கு நட்சத்திர வீரர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை, முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஒபி) நடத்தியது.
1 min
அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயர்வு
கடந்த ஜனவரியில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
மீண்டும் 74,000-ஐ கடந்தது சென்செக்ஸ்
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்ந்து மீண்டும் 74,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது. நிஃப்டியும் 22,500 புள்ளிகளுக்கு மேல் சென்று நிறைவடைந்தது.
1 min
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால் ஹமாஸ் படையினர் அழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1 min
உக்ரைனுக்கு ராணுவ உளவு தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு
ரஷ்யாவுடன் நடக்கும் போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
1 min
பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ் பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர்.
1 min
Dinamani Tiruchy Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only