Dinamani Thanjavur - April 22, 2025

Dinamani Thanjavur - April 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 22, 2025
அரியாணிப்பட்டியில் கபடி போட்டி
கந்தர்வக்கோட்டை அருகே அரியாணிப்பட்டி கிராமத்தில் கபடி போட்டி விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
6-ஆவது மாடியிலிருந்து விழுந்து இளைஞர் தற்கொலை
தஞ்சாவூரில் தங்கும் விடுதியில் ஆறாவது மாடியிலிருந்து திங்கள்கிழமை மாலை இளைஞர் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min
மணலூர் மகாமாரியம்மன் கோயிலில் திருத்தேரோட்ட விழா
பாபநாசம் வட்டம், மணலூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் திருத்தேரோட்ட விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
திருக்கோடீஸ்வரர் கோயிலில் சித்திரை பிரம்மோற்ஸவத்துக்கு பந்தல்கால் நடவு
ஆடுதுறை அருகே திருக்கோடிக்காவலில் உள்ள திரிபுரசுந்தரி சமேத திருக்கோடீஸ்வரர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்ஸவ விழாவுக்கான பந்தல்கால் ஞாயிற்றுக்கிழமை நாட்டப்பட்டது.
1 min
கல்குவாரிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்க வேண்டும்
கல்குவாரிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அரசு கண்காணிக்க வேண்டும் என தமிழர் கழகம் அமைப்பின் செயலர் சீ.அ. மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min
எம்எம்ஏ பள்ளி ஆண்டுவிழா
ஒரத்தநாடு வட்டம், பாப்பாநாடு எம்.எம்.ஏ மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
செய்திக் கதம்பம் அமெரிக்க துணை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு: விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சுதந்திர வர்த்தகம், தடையற்ற இறக்குமதி, வரி விதிப்பு கொள்கைகளுக்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸின் படத்தை தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) திங்கள்கிழமை மாலை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
இளைஞர் தற்கொலை: உறவினர்கள் மறியல்
இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது திங்கள்கிழமை அதிகாலை தெரியவந்தது. சடலத்தை வாங்க மறுத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
மண்டலாபிஷேக விழா
பொன்னமராவதியில் உள்ள சொக்கநாதபட்டி செல்வவிநாயகர் மற்றும் ஞானபாலமுருகன் கோயில் மண்டலாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
ஏப். 24-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
தஞ்சாவூர் கோட்டாட்சியரகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் ஏப்ரல் 24-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
மக்கள் தொடர்பு முகாமுக்கு இன்று முதல் மனு அளிக்கலாம்
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குன்றாண்டார்கோவில் வட்டத்தைச் சேர்ந்த அண்டக்குளத்தில் வரும் மே 14-ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்ட ஆட்சியர் மு. அருணா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது.
1 min
அரசிடமே குத்தகையை செலுத்துவதற்கு வழிவகை செய்ய விவசாயிகள் கோரிக்கை
சாகுபடி செய்யும் நிலங்களுக்கு அரசிடமே நேரடியாக குத்தகை செலுத்த வழிவகை செய்ய வேண்டும் என குத்தகை சாகுபடி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
1 min
பொன்முடிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
ஹிந்துக்களை அவமானப்படுத்தும் விதத்தில் பேசிய அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பு சார்பில் புதுக்கோட்டையில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத ராஜராஜ சோழீஸ்வரர் கோயிலில் திங்கள்கிழமை தேய்பிறை அஷ்டமி நாளை யொட்டி காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம் தொடக்கம்
தஞ்சாவூரில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் ஊதியத்தை முழுமையாக வழங்கக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கைக் கால்கள் வழங்கல்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் 5 பேருக்கு செயற்கைக் கால்கள் வழங்கப்பட்டன.
1 min
நில உரிமை விவகாரம் சாலை மறியலில் ஈடுபட்ட 61 பேர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த 61 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
பேராவூரணி அருகே பெண் சத்துணவு அமைப்பாளர் மர்மமான முறையில் உயிரிழப்பு; உறவினர்கள் மறியல்
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெண் சத்துணவு அமைப்பாளர் மர்மமான முறையில் உயிரிழந்தார். சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
திருச்சி அருகே சொத்துத் தகராறு: மகனை எரித்துக் கொன்ற தாய்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா.பேட்டை அருகே சொத்துத் தகராறில் மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாயை தா.பேட்டை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
பராமரிப்புப் பணிகள் காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி - காரைக்கால் டெமு ரயில் பகுதி ரத்து செய்யப்படுகிறது.
1 min
இருசக்கர வாகனம் மீது கார் மோதல் அதிமுக பிரமுகர் உள்பட மூவர் உயிரிழப்பு
கடலூர் அருகே திங்கள்கிழமை பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்தனர்.
1 min
தனுஷ்கோடியில் கரை ஒதுங்கிய 314 கிலோ பீடி இலைகள்
தனுஷ்கோடி கடற்கரையில் கரை ஒதுங்கிய 314 கிலோ பீடி இலை மூட்டைகளை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் திங்கள்கிழமை கைப்பற்றினர்.
1 min
சாலைப் பணிகளில் 'எரி எண்ணெய்' பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து உயர்நீதிமன்றம்
தமிழகத்தில் நெடுஞ்சாலைப் பணிகளின் போது பெட்ரோலிய எரி எண்ணெயை (பெட்ரோ பர்ன் ஆயில்) பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
ரூ.2 ஆயிரம் லஞ்சம்: மின்வாரிய பொறியாளர் கைது
கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பில் சூரிய ஒளி மின் இணைப்பு பெற ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக இளநிலை மின் பொறியாளர் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
1 min
போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா?: டிஜிபி பதிலளிக்க உத்தரவு
போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இது குறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) பதிலளிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
விதிகளை மீறி கட்டடங்களுக்கு அனுமதி: அரசுச் செயலர் பதிலளிக்க உத்தரவு
தமிழ்நாடு நகர் ஊரமைப்பு இயக்கக ஒருங்கிணைந்த கட்டட விதிகளைப் பின்பற்றாமல், மதுரை ஆனையூரில் செயல்படும் உள்ளூர் திட்ட குழுமத்தினர் கட்டட வரைபட அனுமதி வழங்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், மாநில வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறைச் செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை
அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளார்.
1 min
திருப்பூரில் வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞர் கைது
திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
1 min
தூத்துக்குடி கடற்கரையில் மீனவர் கொலை
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிய மீனவரைக் கொலை செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
1 min
மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.
1 min
தேசிய குடிமைப் பணிகள்
தினம்: முதல்வர் வாழ்த்து
1 min
போக்குவரத்துக் கழகங்களில் 52 பேர் பணி நியமனம்
போக்குவரத்துக் கழகங்களில் 52 பேருக்கான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சி வசங்கர் வழங்கினார்.
1 min
கோவையில் ஏப்.26, 27-இல் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவையில் ஏப்.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்
பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்' என தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டார்.
1 min
கிள்ளியூர் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை
அரசு அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூர் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
1 min
திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
1 min
நாமும் இருக்கிறோம் பேருக்கு!
நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
4 mins
நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி
நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.
2 mins
நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை
மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
1 min
மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?
எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்
3 mins
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி
திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.
1 min
50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்
தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்
'பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை' என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
வெறுப்பு அரசியலை முன்னெடுக்க சிலருக்கு மதம் தேவை: நிஷிகாந்த் துபே கருத்துக்கு குரேஷி பதிலடி
\"இந்திய நாட்டில் ஒரு தனிநபரின் பங்களிப்புகள் மூலமே அவருக்கான அங்கீகாரம் கிடைக்கும் என்ற கருத்தின் மீது ஆழமான நம்பிக்கை கொள்கிறேன். ஆனால், சிலருக்கு வெறுப்பு அரசியலை முன்னெடுத்துச் செல்ல மத அடையாளங்கள் தேவைப்படுகின்றன\"
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி
வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
1 min
நாடாளுமன்றச் செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்: உச்சநீதிமன்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பான வழக்கு விசாரணையின்போது, 'நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்' என்று நீதிபதி பி.ஆர். கவாய் சுட்டிக்காட்டினார்.
1 min
இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்
புவிஉத்தி சார்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இரு நாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தினார்.
1 min
இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
தலைமைப் பொருளாதார ஆலோசகர்
1 min
ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு
1 min
16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.
1 min
மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது
கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது
குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி
1 min
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.
1 min
ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்
பாஜக மூத்தத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.
1 min
சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.
1 min
கோனெரு ஹம்பி முன்னிலை
மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.
1 min
கில், சுதர்சன், பட்லர் அதிரடி; குஜராத் - 198/3
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது.
1 min
ஆஸ்டபென்கோ சாம்பியன்
இறுதியில் சபலென்காவை சாய்த்தார்
1 min
சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு
மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
1 min
போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்
போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.
1 min
பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.
1 min
திருச்சி உள்பட 10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில்திருச்சி உள்பட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.
1 min
வேளாங்கண்ணி பேராலயத்தில் 9 நாள்கள் துக்கம் அனுசரிப்பு
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் திங்கள்கிழமை 88 மணிகள் ஒலிக்கப்பட்டன.
1 min
சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்
நடிகர் சிவாஜிகணேசனின் 'அன்னை இல்லம்' வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
தமிழக ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர். என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் போனஸ் மதிப்பெண்
பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் 4-ஆவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே 1 மதிப்பெண் வழங்கப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
1 min
மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only