Dinamani Thanjavur - March 14, 2025

Dinamani Thanjavur - March 14, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 14, 2025
சமூக நலத் திட்டங்களுக்கு முக்கியத்துவம்
தமிழ்நாடு பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
1 min
இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிப்பு
ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் விண்வெளியில் ஒருங்கிணைக்கப்பட்ட இரட்டை விண்கலன்கள் வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
1 min
டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு: அமலாக்கத் துறை
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
2 mins
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு
பொன்னமராவதி வட்டாரத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் செயல்படும் திறந்தவெளி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் மு. அருணா புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
மும்மொழி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற கோரிக்கை
ஹிந்தியை திணிக்கும் மும்மொழி கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
1 min
அக்னீசுவரர் கோயிலில் பௌர்ணமி கிரிவலம்
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி சௌந்தர்யநாயகி உடனமர் ஸ்ரீ அக்னீசுவரர் கோயிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு வியாழக்கிழமை பக்தர்கள் பேருந்து நிலைய செல்வ விநாயகர் கோயிலில் இருந்து தேவாரப்பாடலுடன் கிரிவலமாக ஆலயத்தைச் சுற்றி வந்தனர்.
1 min
சிறுமிக்கு பாலியல் தொல்லை 'போக்சோ'வில் இளைஞர் கைது
தஞ்சாவூர் அருகே மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
காரையூரில் குடும்பநல அறுவை சிகிச்சை முகாம்
பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
அரசுக் கல்லூரியில் மகளிர் தின விழா
ஆவுடையார் கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கிவரும் அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரியில், உலக மகளிர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
1 min
1,050 கிலோ ரேஷன் அரிசி பதுக்கியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே 1,050 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் பதுக்கி வைத்திருந்தவரை காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
தேசிய அளவிலான கருத்தரங்கம்
தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்லூரியில் கணிதத்துறை, இயற்பியல் துறை, கணினி அறிவியல் துறை ஆகியவை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கல்லூரி விரிவுரையாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கும்பகோணத்தில் அரசு கலைக்கல்லூரி விரிவுரையாளர் வீட்டில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் கல்லூரி மாணவர்கள் மீதான விசாரணையைக் கண்டித்து மாணவர்கள் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1 min
கும்பகோணத்தில் ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்
கும்பகோணத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 110 மெட்ரிக் டன் குப்பையை மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.
1 min
பன்னாட்டு அளவிலான பயிலரங்கம் தொடக்கம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் நில அறிவியல், கடல்சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை சார்பில் இரு நாள் பன்னாட்டு அளவிலான பயிலரங்கத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
250 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
பேராவூரணியில், தஞ்சாவூர் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
போராடும் உரிமைகளைத் தடை செய்யக்கூடாது
போராடும் உரிமைகளையும், கொடி ஏற்றுதல் உள்ளிட்ட சங்க நடவடிக்கைகளையும் தமிழக அரசு தடை செய்யக் கூடாது என ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.
1 min
புதுகையில் 14 புதிய அரசுப் பேருந்துகள் இயக்கம்
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் வாங்கப்பட்ட 14 புதிய பேருந்துகளின் சேவையை புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி வியாழக்கிழமை தொடக்கிவைத்தார்.
1 min
அரசுக் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டுப் பயிற்சி
புதுக்கோட்டை அருங்காட்சியகமும் மதுரை அருங்காட்சியகமும் இணைந்து, கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி முதுகலை வரலாறு மற்றும் ஆராய்ச்சித் துறையில் பயிலும் முதுகலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு மூன்று நாட்கள் கல்வெட்டுப் பயிற்சி செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.
1 min
போதைப் பொருள்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
பொன்னமராவதியில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கும் வட்டார அளவிலான விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
இருசக்கர வாகனம் - சுமை ஆட்டோ மோதல்: இளைஞர் உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே இருசக்கர வாகன விபத்தில் ஆம்னிப் பேருந்து ஊழியர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
திருக்கோடிக்காவல் மஞ்சனி ஐயனார் கோயிலில் பங்குனி விழா தொடக்கம்
திருவிடைமருதூர் அருகே உள்ள திருக்கோடிக்காவலில் ஸ்ரீ மஞ்சனி ஐயனார் திருக்கோயிலில் பங்குனித் திருவிழா வியாழக்கிழமை தொடங்கியது.
1 min
மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் பலி
பேராவூரணி அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் புதன்கிழமை உயிரிழந்தார்.
1 min
திருமணம் செய்வதாகக் கூறி பெண்ணின் நகையுடன் இளைஞர் தலைமறைவு
கும்பகோணத்தில் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பழகிவந்த பெண்ணின் தங்க நகைகளை திருடிச்சென்ற இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
சாலையைக் கடக்க முயன்ற முதியவர் லாரி மோதி சாவு
சாலையைக் கடக்க முயன்ற முதியவர், லாரி மோதி வியாழக்கிழமை உயிரிழந்தார்.
1 min
மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர உறுப்பினர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் நிரந்தர உறுப்பினர் பணிக்கு மார்ச் 17-க்குள் விண்ணப்பிக்கலாம்.
1 min
100 நாள் வேலைக்கான கூலி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு கூலி வழங்கக் கோரி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
சம்பாவை தொடர்ந்து உளுந்து, நிலக்கடலை பயிர்களும் பாதிப்பு
பருவம் தவறிய மழை
2 mins
பொதுமக்கள் உண்ணாவிரதம்; வணிகர்கள் கடையடைப்பு
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக் கோட்டை மகாராஜ சமுத்திரம் பகுதியில் நில உரிமை விவகாரத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வியாழக்கிழமை பட்டுக் கோட்டையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சமூக வலைதளத்தில் அவதூறு பரப்பியவர் கைது
மதக் கலவரத்தை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் விடியோ பதிவிட்ட நபரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
திமுக அரசுக்கு தொந்தரவு கொடுக்க நினைத்தால் எதிர்கொள்ளத் தயார் அமைச்சர் எஸ். ரகுபதி பேட்டி
திமுக அரசுக்கு எதிராக பழிசுமத்தி, ஆட்சிக்கு தொந்தரவு கொடுத்த பாஜக அரசு நினைத்தால் அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி.
1 min
சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தற்கொலை
கோவை வ.உ.சி.மைதானத்தில் உள்ள மரத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
1 min
சேலம் அரசு பொறியியல் கல்லூரிக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்
சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சலில் மிரட்டல் வந்த நிலையில், மாநகர காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தினர்.
1 min
மின் ஊழியர் உயிரிழப்புக்கு நீதி கேட்டு காத்திருப்புப் போராட்டம்
பணியின் போது உயிரிழந்த மின் ஊழியர் மரணத்துக்கு நீதி கேட்டு, பெரம்பலூர் கோட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் எதிரே வியாழக்கிழமை மாலை முதல் மின் ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
திருவாரூரில் 400 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் கைது
திருவாரூரில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயன்ற ஆந்திரத்தைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். 400 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
1 min
பாஜக கூட்டணியுடன் இணையவே அதிமுக தொண்டர்கள் விருப்பம்
பாஜக கூட்டணியுடன் இணைய வேண்டும் என்பதே அதிமுகவின் பெரும்பாலான தொண்டர்கள் விருப்பம் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min
ஆடு, கோழிகளால் தகராறு: வயதான தம்பதி வெட்டிக் கொலை
அவிநாசி அருகே ஆடு, கோழிகளால் ஏற்பட்ட தகராறில் வயதான தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை
ஓய்வு பெற்ற காவல் அதிகாரியான பொன் மாணிக்கவேலுக்கு எதிரான வழக்கை விசாரிக்க இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
கொதிக்கும் தார் உலையில் வீசி முன்னாள் ராணுவ வீரர் கொலை: இருவர் கைது
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கட்டையால் அடித்து கொதிக்கும் தார் உலையில் வீசி கொலை செய்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்கள் கனகசபையில் நின்று தரிசனம் செய்வதைத் தடுத்த தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
1 min
உணவுப் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்த நிதி: அரசாணை வெளியீடு
உணவுப் பாதுகாப்பு சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைச் செயல்படுத்துவதற்காக ரூ.11.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டது.
1 min
பேரவை கூட்டத் தொடர்: இன்று திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம்
திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min
தமிழகத்தில் நாளைமுதல் வெயில் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் சனிக்கிழமை (மார்ச் 15) முதல் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
சட்டம் ஒழுங்கை காத்து, தனி மனித பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
1 min
ஜாதி மோதல்: நீதிபதி சந்துருவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும்
ஜாதி மோதலைத் தடுக்க, நீதிபதி சந்துருவின் பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.
1 min
மனைவி, இரு மகன்களுடன் சென்னை மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னையில் கடன் தொல்லை காரணமாக மனைவி, இரு மகன்களுடன் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
1 min
சீமான் வீட்டின் பாதுகாவலர், பணியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் அழைப்பாணை ஒட்டியபோது போலீஸாருடன் பிரச்னை செய்ததாக கைதான சீமான் வீட்டின் பாதுகாவலர் மற்றும் பணியாளருக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
வடமாநிலங்களில் ஒற்றை மொழி கொள்கைதான் அமலில் உள்ளது
வடமாநிலங்களில் ஒற்றை மொழிக் கொள்கை தான் அமலில் உள்ளது என்றார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
1 min
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் சேர்க்கை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்தார்.
1 min
தவிர்த்திருக்க முடியும்!
றத்தாழ 20 நாள்களுக்கும் மேலாக தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியிருக்கும் தொழிலாளிகள் இன்னும்கூட மீட்கப்படாமல் இருப்பது மிகப்பெரிய சோகம்.
2 mins
வேலைக்குச் செல்கின்றனர்... ஆனால்?
கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கும் அதே வேளையில், தொடர்ந்து வேலைக்குச் செல்கின்றனரா? நிர்வாகரீதியிலான உயர் பதவிக்குச் செல்கின்றனரா? என்பது கேள்விக்குறியாக இருந்து வருகிறது.
2 mins
தீர்வுகளைத் தேடுவோம்!
சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்,
3 mins
தமிழக பட்ஜெட் இன்று தாக்கல்
முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு
1 min
செயற்கை நுண்ணறிவு பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை
தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஏற்படுத்தும் பாதிப்புகளைக் கணிக்க முடியவில்லை என்று திட்டக் குழு செயல் துணைத் தலைவர் ஜெ.ஜெயரஞ்சன் தெரிவித்தார்.
1 min
எங்கள் நாடு குறித்த இந்தியாவின் கருத்து தேவையற்றது
எங்கள் நாடு குறித்து அண்மையில் இந்தியா தெரிவித்த கருத்து தேவையற்றது; இது மற்றொரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
1 min
நடிகை ரன்யா ராவ் தொடர்பான சிஐடி விசாரணை: உத்தரவை திரும்பப் பெற்றது கர்நாடக அரசு
தங்கக் கடத்தல் விவகாரத்தில் நடிகை ரன்யா ராவ் குறித்து சிஐடி விசாரணை நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த உத்தரவை மாநில அரசு வியாழக்கிழமை திரும்பப் பெற்றது.
1 min
தமிழக பட்ஜெட் ஆவணத்தில் தமிழில் 'ரூபாய்' இலச்சினை
தமிழக பட்ஜெட் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், 2025-26 நிதிநிலை அறிக்கை ஆவணத்தில் இருந்து ரூபாயின் அதிகாரபூர்வ சின்னத்தை தமிழக அரசு 'ரூ' என்ற தமிழ் எழுத்தால் மாற்றியுள்ளது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: தெலங்கானா முதல்வருக்கு திமுக அழைப்பு
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் கொண்ட குழு தில்லியில் வியாழக்கிழமை சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
ஹோலி பண்டிகை: ஹிந்தி தேர்வு எழுத முடியாதவர்களுக்கு மறுவாய்ப்பு
ஹோலி பண்டிகையையொட்டி சனிக்கிழமை (மார்ச் 15) நடைபெறும் ஹிந்தி தேர்வை எழுத முடியாத 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை தெரிவித்தது.
1 min
திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா
லட்சக்கணக்கான பெண்கள் வழிபாடு
1 min
மேற்கு வங்கப் பேரவையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு எதிராக தீர்மானம்
மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரிக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் இந்தியா: பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பயங்கரவாத செயல்களை இந்தியா ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் வியாழக்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
ம.பி.: நிறுவிய இரு நாள்களில் அம்பேத்கர் சிலை மாயம்
மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் நிறுவப்பட்ட அம்பேத்கர் சிலை இரு நாள்களில் மாயமானது. அதனை எடுத்துச் சென்றது யார் என்பது தெரியாத நிலையில், காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
1 min
கேரளத்தில் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு போராட்டம்
கேரளத்தில் ஆர்எஸ்எஸ்ஸுக்கு எதிராக தெரிவித்த கருத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தியின் காரை முற்றுகையிட்டு பாஜக-ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 min
வினாத்தாள் கசிவால் 85 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
1 min
ஹைதராபாத்: மின்தூக்கியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு
ஹைதராபாத்தில் மின்தூக்கியில் சிக்கி நான்கரை வயது சிறுவன் உயிரிழந்தான்.
1 min
இலங்கைக்கு அவசர சிகிச்சை மருந்துகளை வழங்கியது இந்தியா
இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்று அந்நாட்டுக்கு அவசர சிகிச்சைக்கு தேவையான மருந்துகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
1 min
ம.பி.: வாகனங்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் 7 பேர் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தில் கார் மற்றும் ஜீப் மீது எரிவாயு டேங்கர் லாரி மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்; 3 பேர் காயமடைந்தனர்.
1 min
புற ஊதா கதிர்வீச்சு அதிகரிப்பு: பாலக்காட்டில் 'ரெட் அலர்ட்'
கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் சூரிய ஒளியில் புற ஊதா கதிர்வீச்சு அதிகரித்து காணப்பட்டதால் வியாழக்கிழமை சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுக்கப்பட்டது.
1 min
மகாராஷ்டிரம்: பீட் மாவட்ட காவல் துறையினர் பெயரிலிருந்து ஜாதி நீக்கம்
மகாராஷ்டிரத்தின் பீட் மாவட்டத்தில் காவல் துறையினர் மேல் சட்டையில் அணியும் பெயர் பட்டையில் அவர்களின் ஜாதிப் பெயர் நீக்கப்பட்டது. காவல் துறையில் ஜாதியரீதியான பாகுபாட்டை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
1 min
பிருந்தாவனம் கோயிலில் மூலவருக்கு முஸ்லிம்கள் செய்த ஆடைகளை பயன்படுத்த தடை கோரிக்கை
உத்தர பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள பிருந்தாவனம் பாங்கே பிஹாரி கோயிலில் மூலவர் கிருஷ்ணருக்கு முஸ்லிம்களால் உருவாக்கப்பட்ட ஆடைகளைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை கோயில் அர்ச்சகர்கள் நிராகரித்தனர்.
1 min
தேஜஸ் போர் விமானத்திலிருந்து அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அஸ்திரா ஏவுகணை, மற்றொரு உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் இலகு ரக போர் விமானத்திலிருந்து வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
1 min
பெண்களுக்கான நிதி அதிகாரமளித்தல் வெற்றியின் அனுபவத்தை பகிரத் தயார்
'பெண்களுக்கும் நிதி அதிகாரமளிக்கவும் வகையில், எண்ம பொது உள்கட்டமைப்பு மூலமாக பாலின இடைவெளியை வெற்றிகரமாக குறைத்த அனுபவத்தை உலக நாடுகளுக்குப் பகிரத் தயார்' என்று ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா உறுதி தெரிவித்தது.
1 min
அல்கராஸ் முன்னேற்றம்; கௌஃப், பாலினிக்கு அதிர்ச்சி
அமெரிக்காவில் நடைபெறும் டியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் காலிறுதிச்சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினார். முன்னாள் சாம்பியனான அமெரிக்காவின் டெய்லர் ஃப்ரிட்ஸ் வெளியேற்றப்பட்டார்.
2 mins
அசத்தல் வெற்றியுடன் காலிறுதியில் லக்ஷயா சென்
ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப் பாட்மிண்டனில், இந்தியாவின் பிரதான வீரரான லக்ஷயா சென் காலிறுதிச் சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினார்.
1 min
பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் பதக்கம் குவித்த இந்தியர்கள்
தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் இந்தியர்கள் தொடர்ந்து பதக்கம் குவித்து வருகின்றனர்.
1 min
இந்தியாவில் 20% ‘ப்ளூ காலர்’ பணிகளை வகிக்கும் பெண்கள்!
‘ஊதிய ஏற்றத் தாழ்வுகள் முதல் மோசமான சுகாதாரம் வரை கடுமையான பணியிடச் சூழல்களைக் கொண்ட இந்தியாவின் அமைப்புசாரா (ப்ளூ காலர்) பணிகளில் பெண்கள் 20 சதவீதம் மட்டுமே பங்கு வகிக்கின்றனர் என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
1 min
வெளியேறியது லிவர்பூல்; காலிறுதியில் பிஎஸ்ஜி, ஆர்செனல்
ஐரோப்பிய கண்டத்தில் நடைபெறும் பிரதான கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக்கில், பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன் (பிஎஸ்ஜி), ஆர்செனல் உள்ளிட்ட அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. லிவர்பூல் போட்டியிலிருந்து வெளியேறியது.
1 min
இறுதிக்கு முன்னேறியது மும்பை
எலிமினேட்டரில் குஜராத்தை வெளியேற்றியது
1 min
5-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்புவதில் மீண்டும் தாமதம்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத் திரும்புவது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயார்
ஐ.நா.வின் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாக பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடேர்தே கூறியுள்ளார்.
1 min
காகிதம், அட்டை இறக்குமதி 10% அதிகரிப்பு
கடந்த ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் இந்தியாவின் காகிதம் மற்றும் அட்டை இறக்குமதி 20 அதிகரித்துள்ளது.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only