Dinamani Thanjavur - March 08, 2025

Dinamani Thanjavur - March 08, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 08, 2025
மேக்கேதாட்டு அணைத் திட்டம்: ஆயத்தப் பணிகள் நிறைவு
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக் கான ஆயத்தப் பணிகள் முழுவதும் முடிந்துள்ள நிலையில், உரிய அமைப்புகளிடமிருந்து அனுமதி கிடைத்ததும் திட்டம் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.
1 min
தமிழில் மருத்துவம், பொறியியல் படிப்புகள்: ஸ்டாலினுக்கு அமித் ஷா வலியுறுத்தல்
மருத்துவம், பொறியியல் படிப்புகளை தமிழில் தொடங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
1 min
அரசுக் கல்லூரியில் விளையாட்டு விழா
புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் விளையாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கந்தர்வகோட்டையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
கந்தர்வகோட்டை பேருந்து நிலையத்தில் மதுபானங்கள் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படக்கூடிய தீயவிளைவுகள் குறித்த விழிப்புணர்வு பேரணி, கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
தஞ்சை, குடந்தையில் வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
வங்கிகளில் பணி நியமனம் கோரி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளை முன் தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பினர் வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பாபநாசம் அருகே மனைவியை கொன்றவர் தற்கொலை முயற்சி
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே மனைவியைக் கொன்று தப்பிய கணவர் தற்கொலைக்கு முயன்று சிகிச்சை பெறுகிறார்.
1 min
பள்ளிக்கு வளர்ச்சி நிதியாக ரூ.3 லட்சம் முன்னாள் மாணவர் வழங்கினார்
புதுக்கோட்டை மாவட்டம், புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு கல்வி வளர்ச்சி நிதியாக ஆண்டுதோறும் ரூ.3 லட்சம் வழங்குவதாக அறிவித்த பள்ளியின் முன்னாள் மாணவரும், திரைப்படத் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான ஜி.சந்திரசேகர் நிகழாண்டுக்கான ரூ.3 லட்சத்தை வியாழக்கிழமை வழங்கினார்.
1 min
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியே இருமொழிக் கொள்கையில் பயின்றவர்தான்
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியே இரு மொழிக் கொள்கையில் படித்தவர்தான் என்றார் தயாநிதிமாறன் எம்.பி.
1 min
குருக்களையாப்பட்டிக்கு ரூ.10 லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்
குருக்களையாப்பட்டி கிராமத்தில் சுத்தமான குடிநீர் இல்லை என தனியார் தொலைக்காட்சியில் மாணவர் பேசியதை பார்த்த, நடிகர் ராகவா லாரன்ஸ், ரூ. 10 லட்சம் சொந்த செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
1 min
நாராயண தீர்த்த சுவாமிகள் ஆராதனை விழா
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திருப்பூந்துருத்தியில் ஜீவ சமாதியடைந்த கர்நாடக இசை மேதை மஹான் ஸ்ரீ நாராயண தீர்த்தர் சுவாமிகளின் 279-ஆவது ஆராதனை தரங்க இசை நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு எதிர்ப்பு
கர்நாடக முதல்வர் சித் தராமையா வெள்ளிக்கிழமை சட்டப்பேரவையில் பேசும்போது காவிரி நீரை தமிழகத்திற்கு தர மாட்டோம், மேகதாதுவில் அணை கட்டுவோம் எனக் கூறியதற்கு தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min
செங்கிப்பட்டி அருகே விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் பலி
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே விபத்தில் பலத்த காயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் ஒருவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
புதுகையில் மகளிர் தினம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உலக மகளிர் தின விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
1 min
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கடும் ஆர்ப்பாட்டம்
மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சிலையை திருடிய இருவருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை
தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில் பழமையான ஆஞ்சனேயர் சிலையைத் திருடி வெளிநாட்டில் விற்க முயன்ற இருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தைக் கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம்
விவசாயிகளுக்கு எதிரான பூம்கார்டு திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வெள்ளிக்கிழமை மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மணல் திட்டுகளால் வெண்ணாற்றில் தடைபடும் நீரோட்டம்
காவிரி டெல்டா மாவட்டங்களில் முதன்மையான ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் ஆங்காங்கே உருவாகியுள்ள மணல் திட்டுகளில் புதர்கள் மண்டி நீரோட்டத்துக்கும் பெரும் இடையூறாக மாறி வருகிறது.
1 min
சிறுமி பலாத்காரம்: இருவர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் அருகே சிறுமியைப் பலாத்காரம் செய்த இருவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய அதிகளவிலான மீன்கள் ஒரே நாளில் ரூ.4 கோடிக்கு வர்த்தகம்
பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய ஏராளமான மீன்களை வெளிமாநில வியாபாரிகள் சுமார் ரூ. 4 கோடிக்கு வெள்ளிக்கிழமை வாங்கிச் சென்றனர்.
1 min
காவிரி ஆற்றில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு
திருச்சி அருகே காவிரி ஆற்றில் நண்பருடன் குளிக்கச் சென்ற கட்டடத் தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min
பள்ளியின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 7 மாணவர்கள் காயம்
திண்டுக்கல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.
1 min
யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்: வனக்காப்பாளர் உள்பட இருவர் பணியிடை நீக்கம்
ஏரியூர் அருகே யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில், பென்னாகரம் வனத்துறையைச் சேர்ந்த வனக்காப்பாளர் உள்பட இரண்டு அலுவலர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் உத்தரவிட்டார்.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 17 பேர் விடுதலை
28 பேருக்கு காவல் நீட்டிப்பு
1 min
தமிழுக்காக மத்திய அரசு ஒதுக்கியது ரூ.24 கோடி மட்டுமே
தமிழுக்காக மத்திய அரசு ரூ. 24 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
1 min
ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அலுவலர்களுக்கு அழைப்பாணை
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் இரண்டு பேருக்கு சிபிசிஐடி போலீஸார் வெள்ளிக்கிழமை அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
1 min
உணவு தயாரிப்பு பெட்டியில் புகை: வைகை அதிவிரைவு ரயில் நிறுத்தம்
மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவிரைவு ரயிலின் உணவு தயாரிப்பு பெட்டியில் வெள்ளிக்கிழமை காலை ஏற்பட்ட அதிக புகை காரணமாக, தீ பாதுகாப்பு அமைப்பின் எச்சரிக்கையால் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
1 min
மகளிர் தினம்: தலைவர்கள் வாழ்த்து
மகளிர் தினத்தை யொட்டி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
1 min
பாம்பன் மீனவர்கள் 14 பேருக்கு மார்ச் 14 வரை நீதிமன்றக் காவல்
இலங்கைக் கடற்படையினரால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 14 பேரையும் வருகிற 14-ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
இப்தார் நோன்பு திறப்பு: விஜய் பங்கேற்பு
தவெக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வெள்ளை வேட்டி, சட்டை, குல்லாவுடன் பங்கேற்ற விஜய், தரையில் அமர்ந்து துஆ ஓதும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
1 min
வேளாண் பொருள்கள் விலை நிர்ணய ஆணையம்: அன்புமணி வலியுறுத்தல்
வேளாண் பொருள்களுக்கு நியாயமான விலை கிடைப்பதற்காக வேளாண் விளைபொருள் விலை நிர்ணய ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு: அதிமுகவிலிருந்து முன்னாள் எம்எல்ஏ நீக்கம்
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக கையொப்பமிட்டதற்காக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமாரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கம் செய்து, பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
1 min
தமிழகத்தின் எதிர்ப்புகளை திசைதிருப்பவே அமலாக்கத் துறை சோதனை
மும்மொழிக்கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட விவகாரங்களில் தமிழகத்தின் எதிர்ப்பை திசைதிருப்பவே, மத்திய அரசு அமலாக்கத் துறையை பயன்படுத்தி சோதனைகளை நடத்துவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
கொள்ளை போகும் கனிம வளங்கள்!
செயற்கை மணலான எம்-சாண்ட் மற்றும் ஜல்லிக் கற்களின் திடீர் விலை உயர்வால் ரூ.5,000 கோடி மதிப்பிலான கட்டுமானப் பணிகள் பாதிக்கும் என்றும், விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் அரசு ஒப்பந்ததாரர்கள் அறிவித்துள்ளனர்.
2 mins
மகளிரின் போராட்டமும் உரிமைகளும்...
இன்றைய நவீன பெண் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் என அனைவரும் பணியிடத்தில் தங்களுக்கான பாதுகாப்பின்மை, ஆண்-பெண் பாலியல் பாகுபாடு, உழைப்புக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர பணி நேரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து போராட வேண்டும்.
3 mins
அன்பைத் தடுக்கும் கைப்பேசி!
முன்னோர் அன்பும், அறனும் நிறைந்த நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால் தற்போது நாம் அன்பையும் மறந்து அறவழிப்பாதையையும் துறந்து வெற்று மானுடர்களாக வாழ்கிறோம். நம்மில் பலர் வெற்று மானுடர்களாக வாழ்வதால்தான் வெற்றியும் பெற இயலவில்லை.
2 mins
20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
இளநிலை நீட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வெள்ளிக்கிழமையுடன் (மார்ச் 7) நிறைவு பெற்றது.
1 min
ஒரே எண்ணில் பலருக்கு வாக்காளர் அட்டை: அடுத்த 3 மாதங்களில் தீர்வு-தேர்தல் ஆணையம்
வெவ்வேறு மாநிலங்களில் உள்ள பலருக்கு ஒரே மாதிரியான வாக்காளர் அடையாள எண் வழங்கப்பட்டிருப்பது தொடர்பான பல ஆண்டு பிரச்னைக்கு, அடுத்த 3 மாதங்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் ஆணையம் உறுதி தெரிவித்துள்ளது.
1 min
ஆட்சேபணை இல்லாத இடங்களில் வசிப்போருக்கு பட்டா: குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயம்
ஆட்சேபணை இல்லாத புறம்போக்கு இடங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்க பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1 min
தமிழக அரசின் மேல் முறையீட்டு மனு ரூ.5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி
தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை ரூ. 5 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
வாடகை வாகனங்களில் பயணிப்போருக்கு பிரத்யேக வசதி
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min
உள்ளாட்சிகளுக்கு தனி அலுவலர் நியமனம் உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்
உள்ளாட்சிகளை தனி அலுவலர்கள் நிர்வகிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதா உள்பட 2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், அதுகுறித்த தகவல் அரசிதழில் வெளியிடப்பட்டது.
1 min
இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிக்க வேண்டும்
இந்தியாவும், சீனாவும் ஒருவருக்கொருவர் வெற்றிக்குப் பங்களிப்பதே இருதரப்புக்கும் பலனளிக்கும் சரியான தேர்வாக இருக்கும்' என்று சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.
1 min
அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் இந்தியா
அமெரிக்க பொருள்களுக்கு மிக அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்று அந்நாட்டு அதிபர் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
பெண்களின் நிலையை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கைகள்
பெண்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்த மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
சுரங்கத்தில் குண்டு வைத்த நக்ஸல் தீவிரவாதிகள்: தொழிலாளி உயிரிழப்பு
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரும்புத் தாது சுரங்கத்தில் நக்ஸல் தீவிரவாதிகள் மறைத்து வைத்த குண்டு வெடித்ததில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அமெரிக்க பொருள்களுக்கு 100% வரி
சில அமெரிக்க பொருள்களுக்கு இந்தியா 100 சதவீத வரி விதிப்பதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் விமர்சித்த நிலையில், இந்தியாவின் வளர்ச்சிக்காகவே அந்த அளவுக்கு வரி விதிக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min
பிகார் தேர்தலுக்குப் பிறகும் நிதீஷ் முதல்வராக தொடர பாஜக ஆதரவளிக்கும்
துணை முதல்வர் உறுதி
1 min
அமெரிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் தஹாவூர் ராணா புதிய மனு
இந்தியாவுக்கு தன்னை நாடு கடத்தக் கூடாது என்று கோரி அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் பயங்கரவாதி தஹாவூர் ராணா (64) தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், தனது கோரிக்கையை பரிசீலிக்குமாறு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸிடம் புதிய மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.
1 min
வர்த்தக உறவை வலுப்படுத்த கூட்டு பொருளாதார ஆணையம்: இந்தியா-அயர்லாந்து ஒப்புதல்
இருதரப்பு வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் கூட்டு பொருளாதார ஆணையத்தை அமைக்க இந்தியாவும் அயர்லாந்தும் ஒப்புக்கொண்டுள்ளன என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
1 min
மணிப்பூர்: 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் ஒப்படைப்பு
மணிப்பூரில் பாதுகாப்புப் படையினரிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற சட்டவிரோத ஆயுதங்களை தாமாக ஒப்படைக்க பொது மக்களுக்கு அளிக்கப்பட்ட இரண்டு வார காலத்தில் 1,000-க்கும் மேற்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
1 min
பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை உ.பி. அரசு கின்னஸ் சாதனை முயற்சி
உத்தர பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் 2,000 கைம்பெண்கள் பங்கேற்கும் ஹோலி பண்டிகை நிகழ்ச்சிக்கு அந்த மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு: தென் மாநிலங்களை பழிவாங்கும் பாஜக
தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையின் மூலம் தென் மாநிலங்களுக்கு எதிராக பழிவாங்கும் அரசியலை முன்னெடுக்கிறது பாஜக என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்தார்.
1 min
தில்லி ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் மன்மோகனுக்கு நினைவிடம்
தில்லியில் உள்ள ராஷ்ட்ரீய ஸ்மிருதி ஸ்தலத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவிடம் அமைக்க அவரின் குடும்பத்தினர் ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
ரஷியாவிடம் இருந்து ரூ.2,156 கோடிக்கு டி-72 பீரங்கி என்ஜின்கள்
பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
1 min
ஜெய்சங்கர் காரை காலிஸ்தான் ஆதரவாளர் வழிமறித்த சம்பவம்
பிரிட்டன் நடவடிக்கை எடுக்க இந்தியா வலியுறுத்தல்
1 min
தென் கொரியா: இயோலை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு
தென் கொரியாவில் ராணுவ அவசரநிலையை அறிவித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அந்த நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை (படம்) சிறையில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
1 min
மீண்டும் உற்சாகம் குறைந்த பங்குச் சந்தை
சர்வதேச வர்த்தகப் போர் பதற்றம் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல் காரணமாக, இந்தியப் பங்குச் சந்தைகளில் கடந்த சில இரு நாள்களாக நிலவிய உற்சாகம் வெள்ளிக்கிழமை குறைந்தது.
1 min
சிரியா: பாதுகாப்புப் படை - அஸாத் ஆதரவுக் குழு மோதலில் 70 பேர் உயிரிழப்பு
சிரியாவில் முன்னாள் அதிபர் அல்-அஸாத் ஆதரவுப் படையினருக்கும் ஆட்சியை புதிதாகக் கைப்பற்றியிருக்கும் அரசின் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதலில் சுமார் 70 பேர் உயிரிழந்தனர்.
1 min
ரூ.1.23 லட்சம் கோடி திரட்ட எல்ஐசி ஹெச்எஃப்எல்லுக்கு அனுமதி
பல்வேறு வழிமுறைகளில் ரூ.1,22,500 கோடி மூலதனம் திரட்ட எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு (எல்ஐசி ஹெச்எஃப்எல்) அதன் இயக்குநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
1 min
மீண்டும் வெடித்துச் சிதறிய ஸ்பேஸ்-எக்ஸ் ராக்கெட்
தொழிலதிபர் எலான் மஸ்குக்குச் சொந்தமான அமெரிக்காவின் தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ்-எக்ஸ் ஏவிய ஸ்டார்ஷிப் ராக்கெட் மீண்டும் வெடித்துச் சிதறியது.
1 min
உடனடி தேவை வான்வழி போர்நிறுத்தம்
தங்கள் நாட்டில் நடைபெறும் போரை முழுமையாக முடிவுக்குக் கொண்டுவர, தங்களுக்கும் ரஷியாவுக்கும் இடையே வான், கடல்வழி மோதலை நிறுத்துவதற்கான ஒப்பந்தத்தை உடனடியாக ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினார்.
1 min
கனடா, மெக்ஸிகோவுக்கு கூடுதல் வரி: தற்காலிகமாக நிறுத்திவைத்தார் டிரம்ப்
கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளின் சில பொருள்களுக்கு அறிவித்திருந்த கூடுதல் இறக்குமதி வரிவிதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிறுத்திவைத்துள்ளார்.
2 mins
ஆராய்ச்சி- மேம்பாட்டுக்காக பிரத்யேக மையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
1 min
மொழிபெயர்ப்பு நூல்களுக்கு சாகித்திய அகாதெமி பரிசு அறிவிப்பு
மலையாள மொழி சுயசரிதை புத்தகத்தை ப.விமலா தமிழில் செய்த மொழிபெயர்ப்பு உள்பட 21 மொழிபெயர்ப்பு நூல்களுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு அறிவிக்கப்பட்டது.
1 min
வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் காட்சி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவின் 6-ஆம் நாளான வெள்ளிக்கிழமை இரவு வெள்ளி யானை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி உள்திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only