Dinamani Thanjavur - March 05, 2025

Dinamani Thanjavur - March 05, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Thanjavur along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Thanjavur
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 05, 2025
சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 4 நிரந்தர நீதிபதிகள் நியமனம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகள் நால்வர் நிரந்தர நீதிபதிகளாக செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டனர்.
1 min
ரயில்வே தேர்வில் முறைகேடு 26 அதிகாரிகள் கைது
கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியான தேர்வு முறைகேடு தொடர்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப்புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக, தமிழக அரசின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (மார்ச் 5) நடைபெறுகிறது.
1 min
தனியார் மருத்துவமனை மருந்தகங்களில் அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை
தனியார் மருத்துவமனைகளுக்குள் அமைக்கப்பட்டிருக்கும் மருந்தகங்களில் வெளிச்சந்தையைவிட அதிக விலைக்கு மருந்துகள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க மாநில அரசுகள் கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.
1 min
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்: விசிகவினர் கைது
கும்பகோணத்தில் செவ்வாய்க்கிழமை அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 40 பேரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கட்டடப் பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கல் குவாரிகளின் பொருள்களான எம். சாண்ட், ஜல்லிக்கற்கள் போன்றவற்றின் விலை உயர்வைக் கண்டித்து புதுக்கோட்டையில் ஒருங்கிணைந்த கட்டடப் பொறியாளர் சங்கத்தினர் (புதுக்கோட்டை புறநகர்) செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டமளிப்பு
கந்தர்வக்கோட்டை ஒன்றியம், புதுப்பட்டி ஊராட்சியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
சாலையில் கழிவு நீர்: கண்டித்து மறியல்
தஞ்சாவூர் விளார் சாலையில் புதை சாக்கடை யிலிருந்து கழிவு நீர் அடிக்கடி வழிந்தோடுவதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை மாநகராட்சி அலுவலக வாகனத்தைச் சிறைப்பிடித்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
குடந்தையில் 2 நாள்களுக்கு குடிநீர் வராது
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரப் பகுதிகளில் நடைபெறும் பராமரிப்புப் பணியால் வரும் வியாழன், வெள்ளி ஆகிய இரு நாள்கள் குடிநீர் விநியோகம் இருக்காது.
1 min
அரசுப் பணியாளர்கள் மனிதச் சங்கிலி
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் சிவகங்கை பூங்கா அருகே தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
மாநில அளவிலான வில் வித்தை: குடந்தை மாணவர்கள் சிறப்பிடம்
சென்னையில் நடந்த மாநில அளவிலான வில்வித்தைப் போட்டியில் கும்பகோணம் மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
குடிநீர் கோரி பொதுமக்கள் மறியல்
குடிநீர் விநியோகிக்கப்படாததைக் கண்டித்து புதுக்கோட்டை மாநகராட்சி போஸ் நகரிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டுக்கு இன்று முதல் முன்பதிவு
தஞ்சாவூர் அருகே திருக்கானூர்பட்டி ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க புதன்கிழமை (மார்ச் 5) முதல் முன் பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
1 min
உடல் உழைப்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கக் கோரி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே ஏஐடியுசி உடலுழைப்புத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
சமுதாய வளைகாப்பு: 600 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை
தஞ்சாவூரில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஒருங்கிணைந்த குழந்தைவளர்ச்சிப்பணிகள் திட்டம் மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 600 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை வழங்கப்பட்டது.
1 min
பங்காரு காமாட்சியம்மன் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியார் வழிபாடு
தஞ்சாவூர் மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயிலில் காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செவ்வாய்க்கிழமை மாலை வழிபட்டார்.
1 min
'சாஸ்த்ரா'வில் தத்துவச் சொற்பொழிவு
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் கலை, அறிவியல், மானுடவியல் மற்றும் கல்வியியல் துறை சார்பில் தத்துவச் சொற்பொழிவு நிகழ்ச்சி திங்கள்கிழமை (மார்ச் 3) நடைபெற்றது.
1 min
தஞ்சாவூர் விரிவாக்கப் பகுதிகளுக்கு எட்டாத காவிரி குடிநீர்
தஞ்சாவூர் மாநகரில் இரண்டாவது குடிநீர் திட்டப் பணி தொடங்கப்பட்டு 2 ஆண்டுகளாகியும், இன்னும் விரிவாக்கப் பகுதிகளுக்கு காவிரி நீர் எட்டாத நிலையே தொடர்கிறது.
2 mins
நீதிமன்ற போராட்டம் மூலம் 'நீட்' தேர்வுக்கு விலக்கு
நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்தி தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெறுவோம் என்றார் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன்.
1 min
ராமேசுவரம் மீனவர்களின் தீக்குளிப்புப் போராட்டம் ஒத்திவைப்பு
இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, தங்கச்சிமடத்தில் ராமேசுவரம் மீனவர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) நடத்தவிருந்த தீக்குளிப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
1 min
சிதம்பரம் ரயில் நிலையத்தில் 8 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
சிதம்பரம் வந்த ரயிலில் கேட்பாரற்று கிடந்த 8 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
பலூனை விழுங்கிய குழந்தை உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே ஊரணிபுரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை பலூனை விழுங்கியதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
1 min
தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் காயம்
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 10 குழந்தைகள் செவ்வாய்க்கிழமை படுகாயமடைந்தனர்.
1 min
அதிமுக பிரமுகர் கொலை வழக்கு: இளைஞருக்கு ஆயுள் தண்டனை
சேந்தமங்கலம் அருகே அதிமுக பிரமுகர் கொலை வழக்கில், இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை சார்பில் திருச்சியில் 28-ஆம் ஆண்டு திருக்குறள் திருவிழா
முன்பதிவு செய்ய மாணவர்களுக்கு அழைப்பு
1 min
அரசுப் பள்ளி வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம்
வாணியம்பாடி அடுத்த சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி வகுப்பறை கட்டடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் 3 மாணவர்கள் காயம் அடைந்தனர்.
1 min
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்ததால் தற்கொலை முடிவு? தாய், 2 குழந்தைகளின் சடலங்கள் மீட்பு கணவரை தேடும் போலீஸார்
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 50 லட்சத்தை இழந்து விட்டதால், மனைவி, இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்வதாக கணவர் கடிதம் எழுதி வைத்திருந்த நிலையில், இறந்த 2 குழந்தைகளுடன் பெண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், அவரது கணவர் மாயமாகியிருப்பது போலீஸாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
1 min
வேளாண் நிதிநிலை அறிக்கை: கருத்துகளைக் கேட்கும் அரசு
வேளாண் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொது மக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
1 min
மகளிர் மேம்பாட்டுக் கழகத்துக்கு புதிய மேலாண்மை இயக்குநர்
தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் செயல் இயக்குநராக இருந்த ஸ்ரேயா பி.சிங், அந்தக் கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
2026-இல் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்கு அனுமதி
தமிழகத்தில் 2026-இல் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என மாநில பாஜக தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
தயாளு அம்மாளுக்கு தொடர் சிகிச்சை: மருத்துவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்
உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினின் தாயார் தயாளு அம்மாளுக்கு (92) தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min
எடப்பாடி பழனிசாமி பேட்டி: தேமுதிக கருத்து பதிவிட்டு நீக்கம்
தேமுதிகவுக்கு மாநிலங்களவை இடம் கொடுப்பதாக நாங்கள் ஏதாவது கூறினோமா என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியதைத் தொடர்ந்து, ஒரு கருத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தேமுதிக, பின்னர் அதை நீக்கியது.
1 min
சட்டப் பல்கலை.யில் உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம் விண்ணப்பப் பதிவு தொடக்கம்
சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் அம்பேத் கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், பி.ஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்புக்கு மேலாக, எல்.எல்.டி. என்ற மிக உயரிய ஆராய்ச்சிப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
1 min
காலமானார் எழுத்தாளர் நந்தலாலா (69)
திருச்சியைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவருமான சி. நெடுஞ்செழியன் (எ) நந்தலாலா (69) உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1 min
திருவண்ணாமலை, ராஜபாளையம் பகுதிகளில் நிலத்துக்கு அடியில் தங்கம் இருக்கலாம்
இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் விஜயகுமார்
1 min
தேவை விழிப்புணர்வு...!
இணையவழி மோசடிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு சவாலாக உருவெடுத்து வருகின்றன.
2 mins
ஏரியா சபை... ஏமாற்றத்தில் முடிந்தது!
குறைந்தபட்சம் மக்கள் இந்த ஏரியா சபை நிகழ்வுகளில் கூடும்போது தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய, தங்கள் கருத்துகளை எடுத்து வைப்பார்கள். அங்கு மக்கள் பிரச்னைகளைக் காது கொடுத்துக் கேட்க ஒருவர் இருக்கிறார் என்ற உணர்வை சாதாரண மக்களுக்கு ஏற்படுத்த முடியும்.
1 min
தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்
தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி. நட்டாவை தமிழக மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min
பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி
பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
ஔரங்கசீப்பை புகழ்ந்த சமாஜவாதி எம்எல்ஏ: மகாராஷ்டிர பேரவையில் கடும் அமளி
முகலாய அரசர் ஒளரங்கசீப்பை சமாஜவாதி எம்எல்ஏ அபு அசீம் ஆஸ்மி புகழ்ந்து பேசியதற்கு ஆளும் பாஜக-சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுதி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
1 min
இந்திய மத உணர்வுடன் விளையாட வேண்டாம்
சமாஜவாதி கட்சி இந்திய மத உணர்வுடன் விளையாடி வருகிறது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை விடுத்தார்.
1 min
குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமர்ப்பிக்குமாறு இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
இந்தியா-பெல்ஜியம் இருதரப்பு பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு உறுதி
பிரதமர் மோடி-பெல்ஜியம் இளவரசி சந்திப்பில் முடிவு
1 min
மும்பை சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் 4 வார கால தடை
பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல் புகாரில் இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் (செபி) முன்னாள் தலைவர் மாதபி புரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யுமாறு மும்பை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் 4 வார கால தடை விதித்துள்ளது.
1 min
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் முறைகேடு: சிறையிலிருந்து வெளிவரும் பிரிட்டன் இடைத்தரகர்
அமலாக்கத் துறை வழக்கிலும் உயர்நீதிமன்றம் ஜாமீன்
1 min
போக்ஸோ வழக்குகளை விசாரிக்க போதிய நீதிபதிகள் இல்லை
பாலியல் குற்றங்களில் இருந்து சிறார்களைப் பாதுகாக்கும் (போக்ஸோ) வழக்குகளை விசாரிக்க விசாரணை நீதிமன்றங்களில் போதிய நீதிபதிகள் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
1 min
சத்தீஸ்கர்: ஊராட்சி பெண் பிரதிநிதிகளுக்கு பதிலாக கணவர்கள் பதவியேற்பு
சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் கிராம ஊராட்சி ஒன்றில் புதிதாக தேர்வான 6 பெண் பிரதிநிதிகளுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள் பதவியேற்றுள்ளனர்.
1 min
தவறை மூடி மறைக்கும் தேர்தல் ஆணையம்: திரிணமூல் காங்கிரஸ்
வெவ்வேறு மாநிலங்களில் ஒரே வாக்காளர் அடையாள எண் உடையவர்கள் போலி வாக்காளர்கள் அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் விளக்கமளித்த நிலையில், 'தனது தவறை மூடி மறைக்க தேர்தல் ஆணையம் முயற்சிக்கிறது' என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது.
1 min
நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் மோதல்: இருவர் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்ஸல் தீவிரவாதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
தேர்தல் விவகாரங்களுக்கு தீர்வு காண அனைத்துக் கட்சிக் கூட்டம்
தேர்தல் சார்ந்த எந்தவொரு விவகாரத்துக்கும் தீர்வுகாண எல்லா சட்டபூர்வ நிலைகளிலும் அனைத்துக் கட்சிக் கூட்டங்களை மாநில, யூனியன் பிரதேச தேர்தல் துறை அதிகாரிகள் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவுறுத்தியுள்ளார்.
1 min
எஸ்டிபிஐ தேசியத் தலைவர் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
இந்திய சமூக ஜனநாயகக் கட்சியின் (எஸ்டிபிஐ) தேசியத் தலைவர் எம்.கே. ஃபைஸியை அமலாக்கத் துறையினர் கைது செய்துள்ளனர்.
1 min
மேற்கு வங்கம்: கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி 2-ஆவது நாளாக போராட்டம்
மேற்கு வங்க மாநில கல்வி அமைச்சர் பிரத்யா பாஸு பதவி விலகக் கோரி தொடர்ந்து இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பணி உயர்வில் பாரபட்சம் அதிகரிப்பு: ரயில்வே அமைச்சருக்கு ஊழியர்கள் சங்கம் கடிதம்
பணி உயர்வு என்பது கட்டாய இடமாற்றத்துடன் வருகிறது என்றும் மேலும் அதில் பாரபட்சம் அதிகரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டி, துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு இந்திய ரயில்வே சிக்னல் மற்றும் டெலிகாம் பராமரிப்பு ஊழியர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
1 min
மகாராஷ்டிர அமைச்சர் தனஞ்ஜெய் முண்டே பதவி விலகல்
கொலை வழக்கில் உதவியாளருக்கு தொடர்பு எதிரொலி
1 min
4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தியது
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் அரையிறுதியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.
2 mins
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: உத்தரகண்ட், சத்தீஸ்கர் வெற்றி
தேசிய மகளிர் சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் உத்தரகண்ட், சத்தீஸ்கர் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்கா இன்று மோதல்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் புதன்கிழமை நியூஸிலாந்து-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.
1 min
விலங்குகளிடம் பரிவு காட்டுங்கள்: மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
குஜராத்தில் வன விலங்குகள்-பறவைகள் மீட்பு மையமான ‘வனதாரா’க்கு பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர் மோடி, விலங்குகளிடம் பரிவு காட்டுமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் 50-ஆவது வளர் தொழில் கிளை
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், வளர் தொழில் பிரிவில் தனது 50-ஆவது கிளையை தமிழகத்தில் திறந்துள்ளது.
1 min
செர்பியா நாடாளுமன்றத்தில் புகை குண்டு தாக்குதல்
பால்கன் தீபகற்பத்தைச் சேர்ந்த செர்பியாவின் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை புகை குண்டுகள் வீசப்பட்டதில் 3 எம்.பி.க்கள் காயமடைந்தனர்.
1 min
ஸ்ரீ அன்னபூர்ணா ‘ஃபுட்ஸுடன் ‘ஜெமினி எடிபில்ஸ்’ கரம் கோர்ப்பு
கோவையைச் சேர்ந்த மசாலா தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா ஃபுட்ஸின் 70 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ள சூரிய காந்தி எண்ணெய் நிறுவனமான ஜெமினி எடிபில்ஸ் & ஃபேட்ஸ் இந்தியா, ஜெஃப் ஃபுட்ஸ் இந்தியா (பி) லிமிடெட் என்ற புதிய கூட்டு நிறுவனத்தை உருவாக்கியுள்ளது.
1 min
காங்கோ: 130 நோயாளிகள் கடத்தல்
மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் கிழக்குப் பகுதியில் ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளர்ச்சிப் படையினர் மருத்துவமனைகளில் இருந்து சுமார் 130 நோயாளிகளைக் கடத்திச் சென்றனர்.
1 min
பஜாஜ் விற்பனை 2% உயர்வு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ் ஆட்டோவின் மொத்த விற்பனை பிப்ரவரி மாதத்தில் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
111 புதிய கிளைகளை திறந்த பிஓஐ
நாடு முழுவதும் 111 புதிய கிளைகளைத் திறந்துள்ளதன் மூலம் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ) தன்னை குறிப்பிடத்தக்க விரிவாக்கம் செய்து கொண்டுள்ளது.
1 min
சூடான்: 221 சிறுவர்களுக்கு பாலியல் வன்கொடுமை
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரில் 221 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டிருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.
1 min
காஸாவில் இருந்து ஹமாஸ் படை நீக்கம்: இஸ்ரேல் நிபந்தனை
காஸாவில் போர் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிக்க வேண்டுமென்றால் அந்தப் பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு படைவிலக்கல் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நிபந்தனை விதித்துள்ளது.
1 min
அமலுக்கு வந்தது அமெரிக்காவின் கூடுதல் வரிவிதிப்பு
கனடா, மெக்ஸிகோ, சீனா ஆகிய நாடுகளின் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த கூடுதல் இறக்குமதி வரி செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
2 mins
திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு திருச்சி - திருவனந்தபுரம் ரயில் இரணியலில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு மார்ச் 12-இல் மகாபிஷேகம்
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் வீற்றுள்ள ஸ்ரீசிவ காமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு மாசி மாத மகாபிஷேகம் வருகிற 12-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது.
1 min
தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தம்
சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-ஆவது ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெறவுள்ளதால் தென் மாவட்டங்களில் இருந்து வரும் ரயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
1 min
எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் 60 வயது பெண் யானை உயிரிழப்பு
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்திலிருந்த ஜெய்னி என்ற பெண் யானை உடல் நலக்குறைவால் திங்கள்கிழமை உயிரிழந்தது.
1 min
சாமிதோப்புக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலம்
அய்யா வைகுண்டர் 193-ஆவது அவதார தினத்தை முன்னிட்டு, நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்பு தலைமைப்பதிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
1 min
ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு: 69 பேர் காயம்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி 69 பேர் காயமடைந்தனர்.
1 min
ஸ்ரீரங்கம் கோயில் தெப்பத் திருவிழா: கற்பக விருட்ச வாகனத்தில் நம்பெருமாள் காட்சி
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் தெப்பத் திருவிழாவின் 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை கற்பக விருட்ச வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
1 min
‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சி: கூகுள் இந்திய நிறுவனம் பதிலளிக்க உத்தரவு
சிறுவர், சிறுமி களை ஆபாசமாக சித்திரிக்கும் ‘பேட் கேர்ள்’ திரைப்பட முன்னோட்டக் காட்சிகளை (டீசர்) இணையதளத்திலிருந்து நீக்கக் கோரிய வழக்கில், கூகுள் இந்திய நிறுவனம், மத்திய அரசு, தமிழக காவல் துறை அதிகாரி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
நிகழாண்டில் புதிதாக 25 சிறு விளையாட்டு அரங்கங்கள்
நிகழாண்டில் 25 மினி விளையாட்டு அரங்கங்களை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட உள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
Dinamani Thanjavur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only