Dinamani Tenkasi - April 24, 2025

Dinamani Tenkasi - April 24, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Tenkasi along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Tenkasi
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 24, 2025
காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற 2 பயங்கரவாதிகள் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104 டிகிரி
தமிழகத்தில் புதன்கிழமை வேலூர், பரமத்திவேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்தது.
1 min
இந்தியா-பாகிஸ்தான் எல்லை மூடல்
தூதரக அதிகாரிகள் வெளியேற்றம்; மத்திய அரசு அதிரடி முடிவு
1 min
துணைவேந்தர்கள் மாநாடு: அரசுடன் மோதல் இல்லை
துணைவேந்தர்கள் மாநாடு விவகாரத்தில் தமிழக அரசுடன் மோதல் போக்கு இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
1 min
பதவி விலகாவிட்டால் ஜாமீன் ரத்து
செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்யாவிட்டால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை எச்சரிக்கை விடுத்தது.
2 mins
வீ.கே.புதூரிலிருந்து இலங்கை சென்றவர் மாயம்: உறவினர்கள் தவிப்பு
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரிலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு சென்றிருந்தவர் காணாமல் போனார். இதனால் அவரது குடும்பத்தினர் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
1 min
சங்கரன்கோவிலில் அருகே எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் அருகே எரிந்த நிலையில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
1 min
காப்பர் வயர் திருட்டு: இளைஞர் கைது
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே தோட்டத்தில் காப்பர் வயரை திருடியதாக இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
குடிநீர் கோரி பெண்கள் போராட்டம்
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் அருகேயுள்ள சங்குப்பட்டியில் குடிநீர் கோரி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகம் முன் காலிக்குடங்களுடன் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் (படம்).
1 min
நெல்லை-செங்கோட்டை ரயிலில் பயணிகளுடன் எம்.பி. சந்திப்பு
திருநெல்வேலி- செங்கோட்டை பயணிகள் ரயிலில் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினர் சி. ராபர்ட் புரூஸ் பயணம் மேற்கொண்டு பயணிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
1 min
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் கோரிக்கை மனு
தென்காசியில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் நகலை தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
1 min
களக்காட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம்
காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததற்கு, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் களக்காடு மணிக்கூண்டு திடலில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது (படம்).
1 min
ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதலான வாகனங்கள் 26இல் ஏலம்
தென்காசி மாவட்டத்தில் ரேஷன் பொருள்கள் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் சனிக்கிழமை (ஏப்.26) திறந்த முறை பொது ஏலத்தில் விடப்பட உள்ளது என ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.
1 min
26 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்
தென் காசி மாவட்டம், சிவகிரி அருகே 26 மூட்டை ரேஷன் அரிசியை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
1 min
கடையநல்லூர் அரசு கல்லூரி ஆண்டு விழா
கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 13ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.
1 min
நெட்டூர் ஸ்ரீ பூவரசு முத்துமாரியம்மன் கோயிலில் பூக்குழித் திருவிழா
ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூர் ஸ்ரீ பூவரசு முத்து மாரியம்மன் கோயில் சித் திரை திருவிழாவையொட்டி பூக்குழி இறங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
1 min
உணவுப் பொருளில் கலப்படமா? வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்
அம்பாசமுத்திரம், கோவில்குளத்தில் வேளாண் கல்லூரி மாணவிகள் விவசாயிகளிடையே உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறிதல் குறித்து செயல்முறை மூலம் விளக்கமளித்தனர்.
1 min
சங்கரன்கோவிலில் நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம்
உலக புத்தக தினத்தையொட்டி, சங்கரன்கோவிலில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் புத்தகக் கண்காட்சித் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.
1 min
சிவகிரி அரசு மருத்துவமனையில் எம்.பி. திடீர் ஆய்வு
தென்காசி மாவட்டம், சிவகிரி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை தென்காசி மக்களவை உறுப்பினர் ராணி ஸ்ரீ குமார் ஆய்வு மேற்கொண்டார்.
1 min
அம்பையில் திருக்குறள் அறக்கட்டளைக் கூட்டம்
அம்பாசமுத்திரம், திருக்குறள் அறக்கட்டளை ஏப்ரல் மாதக் கூட்டம் ஆழ்வார்குறிச்சி திருவள்ளுவர் கழகத்துடன் இணைந்து நடைபெற்றது.
1 min
இடி-மின்னல்: அதிர்ச்சியில் பெண் பலி
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை மாலையில் இடி-மின்னல் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
நீதிமன்ற வழக்கு ஆவணங்களை திருடிய ஊழியருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு ஆவணங்களை திருடி விற்றதாக, நீதிமன்ற ஊழியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இரணியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
வரையாடுகள் கணக்கெடுப்புப் பணி திருக்குறுங்குடி வனப் பகுதிக்குச் செல்ல இன்றுமுதல் 5 நாள்கள் தடை
திருக்குறுங்குடி வனப்பகுதியில் வரையாடுகள் கணக்கெடுப்புப் பணியையொட்டி, வியாழன்முதல் (ஏப். 24) இம்மாதம் 28ஆம் தேதிவரை 5 நாள்களுக்கு பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்படுவதுடன், நம்பிகோயில் சோதனைச்சாவடி தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
1 min
கால்நடை தடுப்பூசி முகாம்
திருநெல்வேலி மாவட்டத்தில் கால்நடைகளுக்கு 2ஆவது சுற்று ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி பணி ஏப். 28ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
1 min
திருச்செந்தூர் கோயிலில் மே 3இல் சித்திரை வசந்த திருவிழா தொடக்கம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திரை வசந்த திருவிழா மே 3ஆம் தேதியும், வைகாசி வசந்த திருவிழா மே 31 ஆம் தேதியும் தொடங்குகிறது.
1 min
கேரளத்துக்கு கனிமவளம் கடத்த முயன்ற 3 லாரிகள் பறிமுதல்: 3 பேர் கைது
களியக்காவிளை அருகே முறையான அனுமதியின்றி கேரளத்துக்கு கனிமவளம் கடத்தச் செல்ல முயன்ற 3 லாரிகளை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனர்.
1 min
அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் கண்ணில் கருப்புத் துணி கட்டி போராட்டம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் 6ஆவது நாளாக ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனல் மின் நிலையம் முன்பு கண்ணில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் எதிரொலி தூத்துக்குடி, கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் புதன்கிழமை போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
1 min
அருமனை அருகே கொலை வழக்கு: தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே பூக்கடை பணியாளரை கொலை செய்த வழக்கில் தொழிலாளிக்கு குழித்துறை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
பருவ மழைக்கு முன் நீர்வழித் தடங்களை சீரமைக்க கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவ மழை தொடங்குவதற்கு முன் குளங்கள் உள்ளிட்ட நீர்வழித் தடங்களை தூர்வாரி அகலப்படுத்தி சீரமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹனீஷ் சாப்ரா அறிவுறுத்தினார்.
1 min
செங்கோட்டை-அம்பை- சென்னை தினசரி ரயில் இயக்கப்படுமா?
பயணிகள் எதிர்பார்ப்பு
1 min
வேங்கைவயல் வழக்கு மே 12-க்கு ஒத்திவைப்பு
வேங்கைவயல் பட்டியலினை குடியிருப்பு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை வரும் மே 12-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min
கமலுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திப்பு
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல ஹாசனுடன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தலைமையிலான நிர்வாகிகள் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
1 min
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம்
மின்னணு ஏற்றுமதியில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார்.
1 min
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும்
தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
1 min
தனியார் பால் விலையை நிர்ணயிக்க தனிக் கொள்கையா?
தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்யும் பாலுக்கு அரசே விலை நிர்ணயம் செய்ய தனி கொள்கை வகுக்கப்படுமா என்ற கேள்விக்கு பேரவையில் பதிலளிக்கப்பட்டது.
1 min
குமரி - மும்பை வாராந்திர சிறப்பு ரயில்
கோடைகாலத்தை முன்னிட்டு கன்னியாகுமரி - மும்பை இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
1 min
பதிவுத் துறை - வணிக வரிகள் மூலம் 4 ஆண்டுகளில் ரூ. 5.80 லட்சம் கோடி வருவாய்
தமிழ்நாட்டில் பத்திரப் பதிவு, வணிக வரித்துறைகள் மூலமாக கடந்த 4 ஆண்டுகளில் ரூ.5.80 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.
1 min
போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு எப்போது?
போக்குவரத்துப் பணியாளர்களின் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை எப்போது நடத்தப்படும் என்பதற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விளக்கம் அளித்தார்.
1 min
அமலாக்கத் துறை சோதனை சட்டவிரோதம் அல்ல
டாஸ்மாக் முறைகேடு புகார் தொடர்பாக அமலாக்கத் துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல என சென்னை உயர்நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
அவமதிப்பு பேச்சு: அமைச்சர் பொன்முடி மீதான வழக்கை விசாரிக்க பதிவுத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சைவ, வைணவ சமயங்களையும், பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுக்க நீதிமன்ற பதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
அமைச்சர் துரைமுருகன், குடும்பத்தினரை விடுவித்த உத்தரவு ரத்து
வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடி சொத்து சேர்த்த வழக்கில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
1 min
கற்க வேண்டிய முதல் பாடம்!
புதுச்சேரி வில்லியனூரில் கணவர் பிரியாணி வாங்கி வர தாமதமானதால் கோபித்துக் கொண்ட மனைவி அவர் வருவதற்குள் தனது வீட்டிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது ஒரு செய்தி.
2 mins
'நான் முதல்வன்' திட்டத்தால் குடிமைப் பணி தேர்வில் தமிழர்கள் அதிகம் தேர்ச்சி
துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்
1 min
மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம்?
மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு யார் காரணம் என்பது குறித்து பேரவையில் விவாதம் நடைபெற்றது.
2 mins
ஆனைமலையாறு - நல்லாறு திட்டம்: கேரள அரசு மெத்தனம்
ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தின் கீழ் நீர் எடுக்கும் விஷயத்தில், கேரள அரசு மெத்தனமாக இருப்பதாக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
1 min
பெரிய குறுவட்டங்கள் விரைவில் பிரிப்பு அமைச்சர் ராமச்சந்திரன் உறுதி
தமிழகம் முழுவதும் உள்ள பெரிய குறு வட்டங்கள் பிரிக்கப்பட்டு அதற்கான உத்தரவுகள் விரைவில் பிறப்பிக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே. எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.
1 min
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்
பயங்கரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று காஷ்மீர் சம்பவத்தைச் சுட்டிக் காட்டி சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
1 min
பிரதமர் மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் ஆலோசனை
துணை நிற்பதாக உறுதி
1 min
பயங்கரவாதத் தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் முழு அடைப்பு
கடந்த 35 ஆண்டுகளில் முதல்முறை
1 min
காஷ்மீர் சுற்றுலா முன்பதிவுகள் 90% ரத்து
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து அங்கு சுற்றுலாப் பயணம் செல்ல மேற்கொள்ளப்பட்ட முன்பதிவுகளில் 90 சதவீதம் ரத்தாகிவிட்டதாக தில்லியில் உள்ள சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
1 min
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்: உலகத் தலைவர்கள் கண்டனம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
1 min
பயங்கரவாதிகள் தப்ப முடியாது
மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
1 min
குடியரசுத் தலைவர் நிகழ்ச்சி ஒத்திவைப்பு; பிரதமரின் பயணம் ரத்து
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக குடியரசுத் தலைவரின் அஸ்ஸாம் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் கான்பூர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min
எலான் மஸ்க் அறக்கட்டளை நிதியளித்த போட்டி: இந்திய நிறுவனத்துக்கு ரூ.426 கோடி பரிசு
தொழிலதிபர் எலான் மஸ்கின் அறக்கட்டளை நிதியளித்த போட்டியில், இந்திய நிறுவனத்துக்கு 50 மில்லியன் டாலர் (சுமார் ரூ.426 கோடி) பரிசு வழங்கப்பட்டது.
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல்: உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு உச்சநீதிமன்றம் தனது ஆழ்ந்த வேதனையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
1 min
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: விமான கட்டணம் உயர்த்தக் கூடாது என உத்தரவு
காஷ்மீர் மாநிலம், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன்னிட்டு ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானக் கட்டணங்கள் உயர்த்தப்படாமல் இருக்க மத்திய சிவில் விமானப்போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
ராபர்ட் வதேரா கருத்தால் சர்ச்சை
முஸ்லிம்கள் நமது நாட்டில் அரசால் முறையாக நடத்தப்படவில்லை என்பதால்தான் பயங்கரவாதிகள் இந்தகைய தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி. பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 min
தாஜ்மஹாலில் அமெரிக்க துணை அதிபர்
உத்தர பிரதேச மாநிலம், ஆக்ராவில் உள்ள தாஜ் மஹாலை அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை பார்வையிட்டார்.
1 min
பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
உலகளாவிய எண்ணெய் சந்தை ஸ்திரத்தன்மைக்கு சவூதி அரேபியாவுடன் இணைந்து செயல்படுவோம்
கூட்டறிக்கையில் இந்தியா தகவல்
1 min
காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத் துறை தோல்வியே காரணம்
காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி கருத்து தெரிவித்துள்ளார்.
1 min
முத்தரப்பு ஒருநாள் தொடர்: இலங்கை மகளிர் அணி அறிவிப்பு
இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுடனான மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடரில் மோதவுள்ள இலங்கை மகளிர் அணி 17 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
IPL 5-ஆவது வெற்றியுடன் மும்பை முன்னேற்றம்
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 41-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதன் சொந்த மண்ணில் புதன்கிழமை வீழ்த்தியது.
1 min
லா லிகா கால்பந்து: மல்லோர்காவை வீழ்த்தியது பார்சிலோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை புதன்கிழமை வென்றது.
1 min
இந்தியா மீட்டில் கோனெரு ஹம்பி வெற்றி
மகாராஷ்டிர மாநிலத்தில் நடைபெற்ற ஃபிடே மகளிர் கிராண்ட் ப்ரீ 2024-25 செஸ் போட்டியின், இந்தியா மீட்டில் இந்தியாவின் கோனெரு ஹம்பி புதன்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
டெஸ்ட்: வங்கதேசத்தை வென்றது ஜிம்பாப்வே
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.
1 min
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
துருக்கியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
ஹெச்சிஎல் நிகர லாபம் 8 சதவீதம் உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்களில் ஒன்றான ஹெச்சிஎல் டெக்னாலஜிஸின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
சிங்கப்பூர் தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டி
சிங்கப்பூர் நாடாளுமன்றத்துக்கு அடுத்த மாதம் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் 211 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.
1 min
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் மிருது டவல் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி
ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் புதிய தயாரிப்பான மிருது டவல்களின் விளம்பரத் தூதராக நடிகை மீனாட்சி சௌத்ரி அறிவிக்கப்பட்டுள்ளார்.
1 min
காஸா பள்ளியில் தாக்குதல்: 23 பேர் உயிரிழப்பு
போரால் புலம்பெயர்ந்த அகதிகள் தங்கியிருந்த காஸா சிட்டி பள்ளிக் கட்டடத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர்.
1 min
2057-க்குள் கரியமில வாயு சமநிலை: பரோடா வங்கி இலக்கு
தங்களின் செயல்பாடுகள் மூலம் காற்றில் கலக்கும் கரியமில வாயுவின் அளவையும் காற்றில் இருந்து சுத்திகரிக்கப்படும் கரியமில வாயுவின் அளவையும் சமமாக்கும் நிலையை (கரியமில சமநிலை - நெட் ஜீரோ) வரும் 2057-ஆம் ஆண்டுக்குள் எட்ட, பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கி இலக்கு நிர்ணயித்துள்ளது.
1 min
சமரசம் பேசுவோம்; சரணடைய மாட்டோம்
ரஷியாவுடன் சமரசப் பேச்சுவார்த்தை மேற்கொள்ள தங்கள் தயாராக இருந்தாலும், அந்த நாட்டிடம் ஒருபோதும் சரணடையப் போவதில்லை என்று உக்ரைன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
2 mins
ஜம்மு - காஷ்மீரிலிருந்து தில்லி திரும்பிய தமிழக சுற்றுலாப் பயணிகள்
ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த தமிழக பயணிகள் சுமார் 35 பேர் தங்களது பயணத் திட்டத்தை மாற்றிக்கொண்டு ஜம்முவிலிருந்து புதன்கிழமை பாதுகாப்பாக தில்லி திரும்பினர். அதன் பின்னர், அவர்கள் தமிழகத்துக்கு புறப்பட்டுச் சென்றனர்.
1 min
யுபிஎஸ்சி தேர்வில் 617 - ஆவது இடம் பிடித்த விவசாயி மகள்!
யுபிஎஸ்சி தேர்வில் திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த விவசாயியின் மகள் இந்திய அளவில் 617-ஆவது இடம் பிடித்துள்ளார். தேர்வில் வெற்றி பெற தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டம் மிகவும் பயனளித்ததாக அவர் தெரிவித்தார்.
1 min
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம்
உலகத்தையே புத்தகமாகப் படிப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min
தமிழகம் முழுவதும் போலீஸார் உஷார் நிலை
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் முழு உஷார் நிலையில் ஈடுபட்டுள்ளனர்.
1 min
மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை: தருமபுரம் ஆதீனம் வரவேற்பு
மருதமலையில் உலகின் மிகப் பெரிய முருகன் சிலை அமையவுள்ளதை தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் வரவேற்றுள்ளார்.
1 min
கோடை விடுமுறை முடிந்து ஜூன் 2-இல் மீண்டும் பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறை நிறைவு பெற்று ஜூன் 2-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
1 min
போலீஸாருக்கு வார விடுமுறை அளிப்பு உயர்நீதிமன்றத்தில் டிஜிபி அறிக்கை
தமிழகத்தில் அரசாணையின்படி போலீஸாருக்கு வார விடுமுறை அளிக்கப்படுவதாக மாநில காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
1 min
பெரிய கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரைத் திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
Dinamani Tenkasi Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only