Dinamani Pudukkottai - May 01, 2025Add to Favorites

Dinamani Pudukkottai - May 01, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Pudukkottai along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 3 Days
(OR)

Subscribe only to Dinamani Pudukkottai

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Pudukkottai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 01, 2025

கரூரைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புராபஜார் பகுதியில் தங்கும் அறைகளுடன் கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 14 பேர் உயிரிழந்தனர்; 13 பேர் காயமடைந்தனர்.

1 min

மக்கள்தொகையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு

\"நடைபெறவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் சேர்த்து நடத்தப்படும்\" என்ற முக்கிய அறிவிப்பை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.

1 min

சாலையில் சென்ற கார் தீப்பற்றி நாசம்

தஞ்சாவூர் அருகே புதன்கிழமை மாலை சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்தது.

1 min

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகள் பறிப்பு

தஞ்சாவூர் அருகே திங்கள்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரிடம் கைப்பேசிகளைப் பறித்து சென்ற 3 மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

1 min

இன்று தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா

புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் 2-ஆம் ஆண்டு சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை மாலை (மே 1) 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

1 min

இணையவழியில் ரூ.18.50 லட்சம் மோசடி

கும்பகோணத்தைச் சேர்ந்த இளைஞரிடம் இணையவழியில் ரூ. 18.50 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்களைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

1 min

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் ஆய்வரங்கம்

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழக அரசு மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில், பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் ஆய்வரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

பெரிய கோயில் தேரில் பந்தல்கால் நடும் நிகழ்ச்சி

மே 7-இல் தேரோட்டம்

1 min

'சாஸ்த்ரா' சீனிவாச ராமானுஜன் மையத்தில் ஆண்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழக சீனிவாச ராமானுஜன் மையத்தில் புதன்கிழமை 24-ஆவது ஆண்டு விழா நடைபெற்றது.

1 min

பாபநாசம் பகுதி கோயில்களில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சுவாமி தரிசனம்

பாபநாசத்திலுள்ள இரட்டைப் பிள்ளையார் கோயில், சீனிவாச பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.

1 min

கணவரால் தாக்கப்பட்ட பெண் உயிரிழப்பு ஆர்.டி.ஓ. விசாரணை

தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் அருகே தொண்டாம்பட்டியில் கணவரால் தாக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்த இளம்பெண் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (ஏப்.29) இரவு உயிரிழந்தார்.

1 min

அய்யம்பேட்டையில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிட். 132-ஆவது கிளை திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை சாலைத் தெருவில் கும்பகோணம் பரஸ்பர சகாய நிதி லிமிடெட் நிறுவனத்தின் 132-ஆவது கிளை அலுவலக திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோயிலில் அட்சய திருதியை பெருவிழா சிறப்பு பூஜைகள்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள விளங்குளத்திலுள்ள அட்சயபுரீஸ்வரர் கோயிலில் அட்சய திருதியை பெருவிழா சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

தஞ்சையில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜ சோழன் மணிமண்டபம் திறப்பு

தஞ்சாவூரில் ரூ. 3.66 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜ சோழன் மணிமண்டபம் புதன்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

1 min

கும்பகோணத்தில் கருணாநிதி பல்கலை. தற்காலிக கட்டடம்: அமைச்சர் ஆய்வு

கும்பகோணத்தில் அமையவுள்ள கருணாநிதி பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக இடத்தையும், கட்டடத்தையும் புதன்கிழமை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆய்வு செய்தார்.

1 min

செய்திக் கதம்பம் சட்டவிரோத கருக்கலைப்பு மாத்திரை விற்பனை

மருந்துக் கடைக்கு 'சீல்' வைப்பு

1 min

பணிகள் மேற்கொள்ள 621 பேருக்கு ஆணை வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 621 பயனாளிகளுக்கு ரூ. 20 கோடியே 63 லட்சத்து 82 ஆயிரத்து 400 மதிப்பில் கலைஞர் கனவு இல்லம் திட்ட வேலை தொடங்குவதற்கான ஆணையை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை வழங்கினார்.

1 min

பள்ளி ஆண்டு விழா

பொன்னமராவதி அருகே உள்ள கேசரபட்டி சிடி இண்டர்நேஷனல் சீனியர் செகண்டரி பள்ளியின் 4-ஆம் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

அட்சய திருதியை - நகைக் கடைகளில் கூட்டம்

அட்சய திருதியை நாளையொட்டி புதுக்கோட்டை நகரிலுள்ள முக்கிய நகைக்கடைகளில் புதன்கிழமை ஏராளமான வாடிக்கையாளர்கள் தங்கம் வாங்கிச் சென்றனர்.

1 min

வாய்க்கால்களை மாநகராட்சியே தூர்வார வலியுறுத்தல்

கும்பகோணத்தில் உள்ள வாய்க்கால்களை மாநகராட்சியே தூர்வார வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

1 min

ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேயுள்ள கீழக்கரை ஏறு தழுவுதல் அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர் உயிரிழந்தார்.

1 min

நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

நாகை- இலங்கையின் காங்கேசன்துறை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து கட்டணத்தை குறைத்து கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.

1 min

சக்கரம் கழன்று ஓடியதால் நிறுத்தப்பட்ட பேருந்து

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே புதன்கிழமை அரசுப் பேருந்தின் முன் பக்கச் சக்கரம் திடீரென கழன்று ஓடியது. அப்போது, ஓட்டுநர் சாதுர்யமாக செயல்பட்டு பேருந்தை சாலையோரம் நிறுத்தியதால் பயணிகள் காயமின்றி தப்பினர்.

1 min

முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டில் நாட்டுவெடி வீச்சு

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே ரெங்கநாதபுரத்தில் முன்னாள் ஊராட்சித் தலைவர் வீட்டில் செவ்வாய்க்கிழமை (ஏப்.29) இரவு நாட்டுவெடி வீசப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min

ஹவுரா விரைவு ரயிலில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்

திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு புதன்கிழமை வந்த ஹவுரா விரைவு ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சாவை போலீஸார் கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

1 min

கருவின் பாலினம் கண்டறிந்து தெரிவித்த மருந்துக் கடை உரிமையாளர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே கருவின் பாலினத்தைக் கண்டறிந்து தெரிவித்த தனியார் மருந்துக் கடை உரிமையாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.

1 min

குரூப் 1 தேர்வு: திருநங்கை மனுவுக்கு வணிக வரித் துறை செயலர் பதிலளிக்க உத்தரவு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 1 தேர்வு எழுதுவதற்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்கக் கோரிய திருநங்கையின் மனுவுக்கு வணிக வரித் துறை செயலர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை

பணி நியமன முறைக்கேடு புகார் தொடர்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகந்நாதனிடம் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை விசாரணை நடத்தினர்.

1 min

தீக்குச்சி தயாரிப்புக் கிடங்கில் வெடி விபத்து: இருவர் கைது

சாத்தூர் அருகே கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்த தீக்குச்சி தயாரிப்புக் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் புதன்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியதில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் நாசமாகின.

1 min

நகைக்காக சித்தி மகளை கொன்றவருக்கு தூக்குத் தண்டனை

நகைக்காக சித்தி மகளை கத்தியால் குத்திக் கொன்றவருக்கு தூக்குத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் நியமனம்

தமிழ்நாடு காங்கிரஸ் சொத்து பாதுகாப்புக் குழுவுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

1 min

போப் விரும்பிய அமைதி உலகம் உருவாகட்டும்

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

தமிழகத்தில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு: விஜய் அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தில் விதிகளை மீறி செயல்படும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக, தலைமை மற்றும் மண்டல ஒழுங்கு நடவடிக்கை குழுக்களை நியமித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

1 min

2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி வெளியீடு

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2,134 புதிய பேருந்துகள் வாங்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது.

1 min

நடிகர் அஜித்குமாருக்கு மருத்துவப் பரிசோதனை

நடிகர் அஜித்குமார் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதியானார்.

1 min

'நீட்' தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு

இளநிலை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டை (ஹால் டிக்கெட்) தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெளியிட்டுள்ளது.

1 min

ஜாதிவாரி கணக்கெடுப்பு அரசியல் தலைவர்கள் வரவேற்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு அறிவித்திருப்பதை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

மத்திய விசாரணை அமைப்புகளைக் கண்டு கவலை இல்லை

முதல்வர் மு.க.ஸ்டாலின்

1 min

உழைப்பு...ஓய்வு...உறக்கம்!

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் காக்கப்பட வேண்டும்; நிலைநாட்டப்பட வேண்டும். சாதாரண தொழிற்சாலைகளில் மட்டுமல்ல, பெரு நிறுவனங்கள் (கார்ப்பரேட் நிறுவனங்கள்) பலவற்றிலும் மனிதாபிமான அணுகுமுறை அற்றுப்போய் கிடக்கிறது.

3 mins

மேய்ச்சல் நிலங்களை மீட்டெடுப்போம்!

பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்

2 mins

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை வெளியேற்ற அரசு ஆலோசனை

தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாக மாநில அரசு புதன்கிழமை ஆலோசனை நடத்தியது.

1 min

யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்த ரயில்வே அறிவுரை

முன்பதிவில்லா பயணச்சீட்டு பெறும் யுடிஎஸ் செயலியை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம் அபராதம் விதிப்பது தவிர்க்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

1 min

4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை விரைவில் வழங்க தமிழக அரசு நடவடிக்கை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை விரைவில் வழங்கப்பட உள்ளது.

1 min

குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நிறைவு

குரூப் 1 தேர்வு எழுத விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் புதன்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைந்தது. சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர்.

1 min

சிஐஎஸ்சிஇ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு

சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

1 min

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு மீதான தடை தொடரும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது தூத்துக்குடியில் 2018-ஆம் ஆண்டு நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்துமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.

1 min

கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு

வரும் அக்டோபர் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதரவு விலையை குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயர்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்தது.

1 min

தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமனம்

தேமுதிக இளைஞரணிச் செயலராக விஜயபிரபாகரன் நியமிக்கப்படுவதாக தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச் செயலர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்தார்.

1 min

மின்னணு உதிரிப்பாகங்கள் உற்பத்திக்கு சிறப்புத் திட்டம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

1 min

பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி: நேரத்தை வீணடிக்க வேண்டாம்

பிரதமர் மோடிக்கு ராகுல் வலியுறுத்தல்

1 min

28% பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

நாட்டின் 28 சதவீத பெண் எம்.பி., எம்எல்ஏக்கள் குற்றவியல் வழக்குகளை எதிர்கொள்வது தெரிய வந்தது.

1 min

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவர் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு அந்த மாநில எம்எல்ஏக்கள் 21 பேர் கடிதம் எழுதினர்.

1 min

ஆக்கிரமிப்பு காஷ்மீர் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன.

1 min

தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைப்பு: மத்திய அரசு நடவடிக்கை

பிரதமர் தலைமையிலான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்துக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய தேசிய பாதுகாப்பு ஆலோசனை வாரியம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

1 min

இறுதிக்கட்டத்தில் இந்தியா-பிரிட்டன் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்பட 3 ஒப்பந்தங்களுக்காக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

மே மாதத்தில் வெப்பம் இயல்பைவிட அதிகமாக இருக்கும்

இந்திய வானிலை ஆய்வு மையம்

1 min

நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை லோக்பால் ஏற்கலாமா?: தலைமை நீதிபதியே முடிவு செய்வார்

\"உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகார்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வார்\" என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

1 min

கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்கள் நடை திறப்பு

உத்தரகண்டில் நிகழாண்டு சார்தாம் யாத்திரையின் தொடக்கமாக கங்கோத்ரி, யமுனோத்ரி கோயில்களின் நடை புதன்கிழமை திறக்கப்பட்டது.

1 min

ரஷிய வெற்றி தின கொண்டாட்டம்: ராஜ்நாத் சிங் பங்கேற்கிறார்

ரஷியாவின் வெற்றி தினக் கொண்டாட்டத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குப் பதிலாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க இருக்கிறார்.

1 min

தமிழகத்தில் ரூ.5,832 கோடி கனிமச் சுரங்க ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழகத்தில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.5,832 கோடி மதிப்பிலான கடற்கரை கனிமச் சுரங்க ஊழல் குறித்து மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிப். 17-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை இடைக்காலமாக நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min

இந்தியாவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம்

இந்தியாவுடனான இரு தரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை சிறப்பான முன்னேற்றத்தை கண்டு வருகிறது. எனவே, இந்த வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்பட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் தளபதி உதவி

என்ஐஏ விசாரணையில் தகவல்

1 min

ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு: மத்திய அமைச்சரவை ஆய்வு

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடிக்கு இந்தியா தயாராகி வரும் சூழலில், ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஆய்வு செய்தது.

1 min

எல்லையில் 6-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு

இந்திய ராணுவம் பதிலடி

1 min

அட்டாரி-வாகா எல்லை வழியாக வெளியேறிய 786 பாகிஸ்தானியர்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, கடந்த 6 நாள்களில் 55 தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் துணை ஊழியர்கள் உள்பட 786 பாகிஸ்தானியர்கள் அட்டாரி-வாகா எல்லை வழியாக இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

1 min

ராணுவத் தாக்குதலுக்கு தயாராகிவிட்டது இந்தியா

தங்கள் நாடு மீது ராணுவ நடவடிக்கைக்கு இந்தியா தயாராகிவிட்டது; அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் என்று உளவுத் தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது.

1 min

வங்கதேசத்துக்கு இன்னிங்ஸ் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசம், இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் புதன்கிழமை வெற்றி பெற்றது.

1 min

பிரக்ஞானந்தாவுக்கு 3-ஆம் இடம்

போலந்தில் நடைபெற்ற சூப்பர்பெட் ரேப்பிட் & பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா 3-ஆம் இடம் பிடித்தார். மற்றொரு இந்தியரான அரவிந்த் சிதம்பரத்துக்கு 8-ஆம் இடம் கிடைத்தது.

1 min

இந்தியா-பாகிஸ்தான் மோதல் போக்கு வேண்டாம்: அமெரிக்கா வலியுறுத்தல்

பாகிஸ்தான் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்துவரும் சூழலில், மோதல் போக்கை கைவிடுமாறு இரு நாடுகளையும் அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

2 mins

சாம் கரன் விளாசல்: சென்னை 190 ரன்கள் சேர்ப்பு

இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 49-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 9.2 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் சேர்த்தது.

1 min

19 சதவீதம் உயர்ந்த வாகன ஏற்றுமதி

கடந்த 2024-25-ஆம் நிதியாண்டில் இந்தியாவின் வாகன ஏற்றுமதி 19 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

சரிவைக் கண்டது அமெரிக்க பொருளாதாரம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதற்குப் பிந்தைய முதல் காலாண்டில் அந்த நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி சரிவைக் கண்டுள்ளது.

1 min

பந்தன் வங்கி நிகர லாபம் 6 மடங்காக அதிகரிப்பு

தனியார் துறையைச் சேர்ந்த பந்தன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் ஆறு மடங்காக அதிகரித்துள்ளது.

1 min

2 நாள் ஏற்றத்துக்குப் பிறகு சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு

இந்த மாதத்தின் கடைசி வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு நஷ்டத்துடன் முடிவடைந்தன.

1 min

விரைவில் அமெரிக்காவுடன் கனிம ஒப்பந்தம்

தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கவும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் ஒப்பந்தம் இன்னும் 24 மணி நேரத்துக்குள் கையொப்பமாகவிருப்பதாக உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிகால் (படம்) புதன்கிழமை கூறினார்.

1 min

யேமன் தாக்குதல்: இணைந்தது பிரிட்டன்

யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தப்படும் வான்வழித் தாக்குதலில் அமெரிக்காவுடன் பிரிட்டனும் இணைந்தது.

1 min

3 சீன விண்வெளி வீரர்கள் பூமி திரும்பினர்

சீனாவுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்தில் கடந்த ஆறு மாதங்களாகப் பணியாற்றி வந்த ஒரு பெண் உள்பட மூன்று வீரர்கள் பூமிக்கு பாதுகாப்பாக புதன்கிழமை திரும்பினர்.

1 min

திருச்சி உள்பட 9 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் திருச்சி உள்பட 9 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

1 min

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதி பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக தேர்வு செய்யப்பட்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீசுப்பிரமணிய கணேச சர்மா திராவிட்டுக்கு சங்கராசாரியர் ஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் புதன்கிழமை சன்யாச ஆசிரம தீட்சை வழங்கினார்.

1 min

கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா என்பதுதான் உண்மையான தேசபக்தி

மாநில உரிமைகளுடன் கூடிய கூட்டுறவு கூட்டாட்சிமிக்க இந்தியா என்பதே உண்மையான தேசபக்தி என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

1 min

பாம்பன் ரயில் பாலத்தை கடந்து சென்றது சரக்கு கப்பல்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாம்பன் புதிய, பழைய ரயில் பாலங்கள் புதன்கிழமை திறக்கப்பட்டதால், சரக்கு கப்பல், விசைப் படகுகள் அவற்றைக் கடந்து சென்றன.

1 min

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 95-ஆவது ஆண்டு நினைவு தினத்தை யொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only