Dinamani Nagapattinam - May 08, 2025Add to Favorites

Dinamani Nagapattinam - May 08, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Nagapattinam along with 9,500+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 2 Days
(OR)

Subscribe only to Dinamani Nagapattinam

1 Year$356.40 $23.99

14th Anniversary Sale - Save 93%
Hurry! Sale ends on June 22, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Nagapattinam

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

May 08, 2025

இந்தியா ஏவுகணைத் தாக்குதல்

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது.

1 min

இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்: விளக்கம் அளிக்கிறது மத்திய அரசு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' ராணுவ நடவடிக்கை குறித்து விளக்கமளிப்பதற்காக, தில்லியில் வியாழக்கிழமை அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

1 min

அதிதுல்லிய தாக்குதலில் இலக்குகள் அழிப்பு

ஆயுதப் படைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டு

1 min

எல்லையில் பாகிஸ்தான் தாக்குதல்: 13 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லை யோர கிராமங்களைக் குறிவைத்து அந்நாட்டுப் படையினர் சிறிய ரக பீரங்கிகள் மற்றும் மோட்டார் குண்டுகள் மூலம் அத்துமீறி தாக்குதலைத் தொடுத்தனர்.

1 min

கணவரின் காப்பீட்டுத் தொகை வழங்க மறுப்பு: மனைவிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

திருத்துறைப்பூண்டி அருகே கணவரின் இறப்புக்கு காப்பீட்டுத் தொகையை வழங்க மறுத்ததற்காக, மனைவிக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு காப்பீட்டு நிறுவனம் வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

1 min

பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை தேரோட்டம்

திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

1 min

ஓஆர்எஸ் பயன்படுத்துவதில் எச்சரிக்கை தேவை: ஆட்சியர்

வர்த்தக பெயரில் விற்பனை செய்யப்படும் உப்பு சர்க்கரை கரைசல் (ஓஆர்எஸ்) பானங்கள் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தும் என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

1 min

சட்டைநாதர் சுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீபிரமபுரீஸ்வரர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

1 min

திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் ஜமாபந்தியின் 2-ஆம் நாளாக புதன்கிழமையும் தொடர்ந்தது.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: தருமபுரம் ஆதீனம் முகநூல் பதிவு

ஆபரேஷன் சிந்தூர் குறித்து தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தனது முகநூலில் புதன்கிழமை இட்ட பதிவு:

1 min

திருக்கடையூர் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் கோயிலில் காலசம்ஹார விழா

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் காலசம்ஹார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min

திமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கி கொண்டாட்டம்

திமுக அரசின் 4 ஆண்டுகள் சாதனையை போற்றியும், திமுக அரசின் ஐந்தாம் ஆண்டு தொடக்கத்தையொட்டியும் நாகையில் மாவட்ட திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min

திருவீழிமிழலை கோயிலில் திருக்கல்யாண உற்சவம்

திருவாரூர் மாவட்டம், திருவீழிமிழலை சுந்தரகுஜாம்பிகை உடனுறை வீழிநாத சுவாமி திருக்கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

1 min

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min

குத்தாலத்தில் மே 21-ல் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' முகாம்

குத்தாலம் வட்டத்தில் மே 21-ஆம் தேதி உங்களைத் தேடி, உங்கள் ஊரில் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min

கீழ்வேளூர் அருகே குடிநீர் வழங்கக் கோரி சாலை மறியல்

கீழ்வேளூர் அருகே ஆழியூர் பகுதியில் குடிநீர் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min

மக்கள் தொடர்பு முகாமில் நலத்திட்ட உதவிகள்

சீர்காழி அருகே உள்ள பச்சைபெருமாநல்லூர் ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

ஊரகங்களில் மனைப்பிரிவு, கட்டட அனுமதிக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் மனைப் பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டட அனுமதிக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளார்.

1 min

தர்பாரண்யேஸ்வரர் சார்பு கோயில்களில் உற்சவம் தொடக்கம்

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலின் சார்பு கோயில்கள் உற்சவம் அய்யனார் கோயில் கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

1 min

இலங்கைக்கு கடத்த முயன்ற 100 கிலோ கஞ்சா பறிமுதல் ஆந்திரத்தைச் சேர்ந்தவர் கைது

இலங்கைக்கு 100 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற இளைஞரை வேதாரண்யம் அருகே போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

காரைக்காலில் ‘ஆபரேஷன் அப்யாஸ்’ ஒத்திகை

ஆபரேஷன் அப்யாஸ் எனும் குடிமைப் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்வு காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

7 தேசிய விருதுகள்: காரைக்கால் வேளாண் கல்லூரிக்கு புதுவை முதல்வர் பாராட்டு

தேசிய விருதுகள் பெற்ற காரைக்கால் வேளாண் கல்லூரி நிர்வாகத்தினரை புதுவை முதல்வர் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தார்.

1 min

கோயிலில் அகற்றப்பட்ட கல்வெட்டுகளை மீண்டும் வைக்க அமைச்சரிடம் வலியுறுத்தல்

கைலாசநாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்த பழைய கல்வெட்டுகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதை மீண்டும் வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min

வடகாடு இருதரப்பு மோதல்: மேலும் 12 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வடகாட்டில் கோயில் தகராறில் இரு தரப்பினர் திங்கள்கிழமை மோதிக் கொண்டனர்.

1 min

கிணற்றில் மூழ்கி 2 மாணவர்கள் உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி புதன்கிழமை உயிரிழந்தனர்.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்': ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வரவேற்பு

பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

தங்கம் பவுனுக்கு ரூ.200 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ.72,600-க்கு விற்பனையானது.

1 min

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்தில் தேர்வில் அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min

உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயண பிரசாத் மறைவு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெ.சத்யநாராயண பிரசாத் (56) செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் திடீரென உயிரிழந்தார்.

1 min

நேரடி வெயிலில் பணியாற்றினால் தசை சிதைவு ஏற்பட வாய்ப்பு: மருத்துவர்கள் எச்சரிக்கை

நேரடி வெயிலில் நீண்ட நேரம் பணியாற்றினால் 'ரேப்டோ மயோலைசிஸ்' என்ற தசை சிதைவு நோய் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1 min

ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை

ஆவின் பொருள்களை கூடுதல் விலைக்கு விற்பவர்கள் மீது நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும், அவ்வாறு விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

1 min

எண்மவழி சேவை... அடிப்படை உரிமை!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 mins

அடர்த்தியின் அபாயம்!

இன்றைய உலகில் பூமண்டலத்தில் உயிர் வாழும் மனித இனத்தில் பாரதம் முதலிடத்தைப் பதிவு செய்துள்ளது.

3 mins

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கை: மே 27 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு இணையவழியில் மே 27-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

1 min

மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் விவரம்: கல்வித் துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளி வளாகங்களில் செயல்பட்டு வரும் மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் குறித்த விவரங்களை அனுப்புமாறு பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

சிபிஐ இயக்குநருக்கு ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.

1 min

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வு: மே 13 முதல் விண்ணப்பிக்கலாம்

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளில் காலியாக உள்ள 330 இடங்களை நிரப்ப தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

1 min

பி.இ. விண்ணப்பப் பதிவு தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டறியப்பட்டது உண்மை

நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்டது உண்மை என்று உச்சநீதிமன்றம் நியமித்த நீதிபதிகள் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

எங்களின் நம்பிக்கையை பிரதமர் காப்பாற்றியுள்ளார்

'பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களைத் தாக்கி, அழித்த 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை மூலம் அரசு மீது நாங்கள் வைத்திருந்த நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றியுள்ளார்' என்று பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

1 min

பஹல்காம் தாக்குதல் புகைப்படங்களை சமர்ப்பிக்க என்ஐஏ வேண்டுகோள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்தொடர்பான புகைப்படங்கள், காணொலிகள் இருந்தால் அதை தங்கள்டம் சமர்ப்பிக்கலாம் என சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் மக்களுக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) புதன்கிழமை தெரிவித்தது.

1 min

25 இந்திய விமான நிலையங்கள் தற்காலிக மூடல்

புது தில்லி, மே 7: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பிறகான வான்வெளி கட்டுப்பாடுகளால், ஸ்ரீநகர் உள்பட 25 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. புதன்கிழமை 300-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min

இந்திய பதிலடியில் மசூத் அஸாரின் குடும்பத்தினர் 10 பேர் உயிரிழப்பு

இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலில் குடும்பத்தினர் 10 பேரையும், கூட்டாளிகள் 4 பேரையும் இழந்துவிட்டேன் என்று ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அஸார் ஒப்புக் கொண்டுள்ளார்.

1 min

பஹல்காம் தாக்குதலுக்கு பாரதத்தின் பதிலடி

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழிப்பதற்கு நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் அதிதுல்லியத்தாக்குதல், பஹல்காமில் நமது அப்பாவி சகோதரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பாரதத்தின் பதிலடி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

1 min

இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவை பாராட்டு

பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது வெற்றிகரமாக தாக்குதலை நடத்திய இந்திய ராணுவத்துக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

1 min

‘ஆபரேஷன் சிந்தூர்’: தகர்க்கப்பட்ட 9 பயங்கரவாதக் கட்டமைப்புகள்

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் உள்ள 4 பயங்கரவாத நிலைகள் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5 பயங்கரவாத நிலைகளை விரிவான உளவுத் தகவல்களின் அடிப்படையில் துல்லியமாக தேர்வு செய்து இந்தியா தாக்குதலை நடத்தியதாக ராணுவ அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.

2 mins

ராணுவ ரயில் விவரங்களைச் சேகரிக்க முயற்சிக்கும் பாகிஸ்தான் உளவுத் துறை

ராணுவ சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ரயில்களின் போக்குவரத்து தொடர்பான விவரங்களைச் சேகரிக்க பாகிஸ்தான் உளவுத் துறை முயற்சித்து வருவதால் ஊழியர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று இந்திய ரயில்வே வலியுறுத்தியது.

1 min

ஊடகங்களுக்கு விளக்கிய பெண் ராணுவ அதிகாரிகள்!

பாகிஸ்தான் மற்றும் ஆக் கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்தியா நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' அதிதுல்லிய தாக்குதல் விவரத்தை ஊடகங்களிடம் தெரிவிக்க இந்திய வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரியுடன் ராணுவ கர்னல் மற்றும் விமானப் படை விங் கமாண்டர் நிலையிலான இரண்டு பெண் அதிகாரிகளை மத்திய அரசு தேர்வு செய்திருந்தது.

1 min

‘ஆபரேஷன் சங்கல்ப்’: சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

சத்தீஸ்கர்-தெலங்கானா எல்லையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ‘ஆபரேஷன் சங்கல்ப்’ நடவடிக்கையின்போது, பிஜாபூரில் புதன்கிழமை 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1 min

போர்ப் பதற்றம்: உலக நாடுகளின் தலைவர்கள் கவலை

இந்தியா, பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் குறித்து உலக நாடுகளின் தலைவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரு நாடுகளுக்கு இடையிலான பகை விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

1 min

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் ‘பொறுப்பான தாக்குதல்’

‘பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாதி கள் அமைப்புகள் மூலம் நாட்டுக்கு எதிராக அடுத்தடுத்த தாக்குதல் கள் வரவிருப்பது அறியப்பட்டது. அந்த உள்கட்டமைப்பை அகற்றுவதற்காக இந்திய ராணுவம் ‘ஒரு பொறுப்பான’ தாக்குதலை முன்கூட்டியே நடத்தியது என வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.

1 min

பாகிஸ்தான் பதற்றத்தை அதிகரித்தால் பதிலடி தீவிரமாகும்

எல்லையில் போர்ப் பதற்றத்தை பாகிஸ்தான் மேலும் அதிகரித்தால் பதிலடி மிகத் தீவிரமாக கொடுக்கப்படும் என்று இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் எச்சரித்துள்ளார்.

1 min

நிலவில் இந்திய விண்வெளி வீரர்கள் தடம் பதிப்பர்: பிரதமர் நம்பிக்கை

\"விண்வெளி ஆய்வுத் துறையில் இந்தியா புதிய நம்பிக்கையுடன் பீடு நடை போடுகிறது; 2040-ஆம் ஆண்டுக்குள் நிலவில் இந்திய விஞ்ஞானிகள் கால்தடம் பதிப்பர்\" என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min

டெஸ்ட் கிரிக்கெட்: ஓய்வுபெற்றார் ரோஹித் சர்மா

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக, இந்திய வீரர் ரோஹித் சர்மா (38) புதன்கிழமை அறிவித்தார்.

1 min

பார்சிலோனாவை வெளியேற்றியது இன்டர் மிலன்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் பார்சிலோனாவை வீழ்த்தி வெளியேற்றிய இன்டர் மிலன், இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது.

1 min

சென்னை வெற்றி; கொல்கத்தாவுக்கு நெருக்கடி

ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி முன்னேற்றம்

சீன தைபேவில் நடைபெறும் தைபே ஓபன் பாட்மின்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்தியாவின் கே.ஸ்ரீகாந்த், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் புதன்கிழமை வெற்றி பெற்றனர்.

1 min

மகளிர் முத்தரப்பு ஒருநாள் தொடர்; இந்தியாவுக்கு 3-ஆவது வெற்றி

மகளிருக்கான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டத்தில் இந்தியா 23 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்காவை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min

ஆர்எஸ்எஃப் படைக்கு ஆதரவு: ஐக்கிய அரபு அமீரகத்துடன் உறவை முறித்தது சூடான்

தங்கள் நாட்டு ராணுவத்துடன் சண்டையிட்டுவரும் ஆர்எஸ்எஃப் துணை ராணுவப்படைக்கு உதவுவதாகக் கூறி, ஐக்கிய அரபு அமீரகத்துடனான தூதரக உறவை சூடான் முறித்துக் கொண்டது.

1 min

நிறுவன வாடிக்கையாளர்களுக்கு பாரதி ஏர்டெல் புதிய வசதி

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் நிறுவனச் சேவைப் பிரிவான ஏர்டெல் பிஸினஸ், கைப்பேசி அழைப்புகளின் போது வாடிக்கையாளர் நிறுவனங்களின் பெயர்களை எதிர்முனையில் இருப்பவர்களின் திரைகளில் காட்டும் புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min

இலங்கை உள்ளாட்சித் தேர்தல்: தொடரும் ஆளுங்கட்சியின் வெற்றி

இலங்கையில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி கட்சி பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து வெற்றியடைந்து வருகிறது.

1 min

புதிய போப் ஆண்டவர் தேர்வு தொடக்கம்

புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்கான கார்டினல்களின் கூட்டம் புதன்கிழமை தொடங்கியது.

1 min

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்த நிலையில், இறுதியில் நேர் மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் முடிவடைந்தன.

1 min

பிஎன்பி நிகர லாபம் 52% அதிகரிப்பு

பொதுத்துறையைச் சேர்ந்த பஞ்சாப் நேஷனல் வங்கியின் (பிஎன்பி) நிகர லாபம் கடந்த ஜனவரி - மார்ச் காலாண்டில் 52 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min

ஹூதிக்களுடன் சமாதானம்: டிரம்ப் அறிவிப்பு

செங்கடல் வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒப்புக்கொண்டதால் அவர்களைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

1 min

மதுரை மீனாட்சி அம்மன் திக்கு விஜயம்: இன்று திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ஆம் நாளான புதன்கிழமை அஷ்ட திக்கு பாலகர்களை எதிர்த்து வெற்றி பெற்ற திக்கு விஜய லீலை நடைபெற்றது.

1 min

214 புதிய பேருந்துகள் சேவை: முதல்வர் தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்து, 5-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 214 புதிய பேருந்துகளின் சேவை தொடக்க விழா சென்னை தீவுத் திடலில் நடைபெற்றது.

1 min

'ஆபரேஷன் சிந்தூர்': ரஜினி ஆதரவு

இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட திரை பிரபலங்கள் வரவேற்றுள்ளனர்.

1 min

6 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் புதன்கிழமை ஈரோடு, பரமத்தி வேலூர் உள்பட 6 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட் டுக்கும் அதிகமாக பதிவானது.

1 min

முகூர்த்த நாள்-வாரவிடுமுறை: 2,829 சிறப்புப் பேருந்துகள்

முகூர்த்தம், வாரவிடுமுறை நாள்களை முன்னிட்டு 2,829 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

1 min

பல்வேறு மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை

நாட்டின் எல்லை யோர மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையிலான பாதுகாப்பு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.

1 min

Read all stories from Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only