Dinamani Nagapattinam - April 26, 2025

Dinamani Nagapattinam - April 26, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Nagapattinam
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 26, 2025
அரசுப் பல்கலை. துணைவேந்தர்கள் புறக்கணிப்பு
உதகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெள்ளிக்கிழமை கூட்டிய துணைவேந்தர்கள் மாநாட்டை தமிழக அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் புறக்கணித்தனர்.
1 min
குளத்தில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு
திருவாரூர் அருகே குளத்தில் மூழ்கி பத்தாம் வகுப்பு மாணவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
1 min
உரத்துடன் இணைப்பொருளை வாங்க கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் யூரியா 10,077 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 2,020 மெட்ரிக் டன், பொட்டாஷ் 1,918 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,405 மெட்ரிக் டன் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 533 மெட்ரிக் டன் உரங்கள் அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு உள்ளன.
1 min
பள்ளி செல்லா குழந்தைகளைக் கண்டறியும் பணி
மே 31 வரை நடைபெறுகிறது
1 min
'நம்ம ஊரு நம்ம கதை' போட்டி: வென்ற மாணவர்களுக்கு சான்றிதழ்
கொரடாச்சேரி ஒன்றியம், செல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், இல்லம் தேடிக் கல்வித் திட்டம் சார்பில் 'நம்ம ஊரு நம்ம கதை' போட்டியில் வென்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
1 min
திருவாரூரில் ரயில்வே கோட்ட மேலாளர் ஆய்வு
திருவாரூர் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் எம்.எஸ். அன்பழகன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
1 min
மே 11-இல் குருபெயர்ச்சி: ஆலங்குடி கோயிலில் ஏற்பாடுகள் தீவிரம்
வலங்கைமான் வட்டம், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் குருபெயர்ச்சி விழா மே 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
நாகையில் வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டம்
நாகையில் வழக்குரைஞர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தாய், மகளை தாக்கி பாலியல் தொந்தரவு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நாகை அருகே வீடு புகுந்து, தாய் மற்றும் மகளைத் தாக்கி பாலியல் தொந்தரவு அளித்த இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
நிம்மேலியில் நெல் கொள்முதல் நிராகரிப்பு: காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்
ஆட்சியர்
1 min
சர் ஐசக் நியூட்டன் பள்ளி 4-ஆம் ஆண்டு விழா
நாகை சர் ஐசக் நியூட்டன் பள்ளியின் நான்காம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min
பஹல்காம் தாக்குதல்: உயிரிழந்தவர்களுக்கு ஞானபுரீசுவரர் கோயிலில் மோட்சதீபம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டி, தருமபுரம் ஆதீனத்தில் உள்ள ஞானபுரீசுவரர் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வெள்ளிக்கிழமை வழிபாடு நடைபெற்றது.
1 min
இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் தமிழக ஆளுநரைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
வருவாய்த் துறையினர் ஆர்ப்பாட்டம்
காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த் துறை சார்பில் திண்டுக்கல், நத்தத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
காக்கழனி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
கீழ்வேளூர் வட்டம், காக்கழனியில் அருள் பாலிக்கும் தாமோதர விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளி மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடப் புத்தகங்கள்
அமைச்சர் வழங்கினார்
1 min
போப் மறைவு; அமைதி ஊர்வலம்
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி, காரைக்காலில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
1 min
காவல் அதிகாரியை கொலை செய்ய முயன்றவருக்கு 3 ஆண்டுகள் சிறை
காவல் சிறப்பு உதவி ஆய்வாளரை கொலை செய்ய முயன்றவருக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
அம்பகரத்தூர் மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூர்த்தம்
அம்பகரத்தூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தீமிதி உற்சவ பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
காரைக்காலில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: அரசு செயலர் ஆய்வு
காரைக்காலில் துறை சார்ந்த வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி, ஆதிதிராவிடர் தொடர்பான குறைகளை அரசு செயலர் வெள்ளிக்கிழமை கேட்டறிந்தார்.
1 min
திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூர்த்தம்
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் பிரம்மோற்சவ பந்தல்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min
கீழையூரில் மார்க்சிஸ்ட் கம்யூ. போராட்டம்
கீழையூரில் 100 நாள் வேலைத் திட்ட பயனாளிகளுக்கு நிலுவை ஊதியம் வழங்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.
1 min
எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
1 min
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரிடம் காவல் உதவி ஆணையர் விசாரணை
விதிகளை மீறி, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தனியார் அமைப்பை தொடங்கிய புகாரில், பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஜெகந்நாதன் சூரமங்கலம் உதவி காவல் ஆணையர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானார்.
1 min
ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
1 min
பூத் கமிட்டி பணியை விரைந்து முடிக்க வேண்டும்
பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளர்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
1 min
ஓமலூர் அருகே கோயில் திருவிழாவின் போது பட்டாசு வெடித்து 3 பேர் உயிரிழப்பு
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் வெள்ளிக்கிழமை மூன்று பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
1 min
விளையாட்டல்ல வயது மோசடி!
விளையாட்டுப் போட்டிகளில் சூதாட்டம் அதிகரித்துவரும் நிலையில், மாநில, தேசிய, சர்வதேச அளவில் இளையோருக்கான போட்டிகளில் வயதைக் குறைத்து போலி ஆவணங்களைக் கொடுத்து பங்கேற்கும் போக்கு பல இளம் வீரர்களின் வாய்ப்பைத் தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது.
2 mins
ஊராட்சிகளின் சுதந்திரமான செயல்பாடு!
ஊராட்சிகள் சுதந்திரமாகச் செயல்படுகின்றனவா? ஊராட்சித் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுகிறார்களா? உண்மையில் மக்கள் பணி செய்ய முன்வந்த உள்ளாட்சி நிர்வாகிகள் நிலை என்ன? இவையெல்லாம் இப்போது ஆழ்ந்து சிந்திக்கக் கூடியவை ஆகிவிட்டன. மக்களுக்கு அருகிலேயே உள்ள ஆட்சி அமைப்புதான் ஊராட்சி. ஆனால், உண்மையில் மக்களின் கைகளில் அந்த அதிகாரம் உள்ளதா என யாரைக் கேட்டாலும் இல்லை என்றுதான் பதில் சொல்வார்கள். ஏன் இந்த நிலை?
2 mins
இனி முதலீடு... தங்கத்தில்!
துப்பாக்கியால் சுடும் போரை விட வரி விதிப்புப் போரையே விரும்புவதாக டிரம்ப் வெளிப்படையாக அறிவித்தார். அவை அனைத்தும் டிரம்ப்பின் உலகமயமாக்கல் மற்றும் தடை இல்லாத உலக வர்த்தகத்தின் மீதான அவரது நன்கு அறியப்பட்ட வெறுப்பையே பிரதிபலித்தன.
3 mins
14 வயதுக்குள்பட்ட மாணவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா?
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்
1 min
முதல்வருக்கு மே 3-இல் பாராட்டு விழா
பேரவையில் அமைச்சர் தகவல்
1 min
இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள்
அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு
1 min
சென்னையில் தொழில் பூங்கா - நாகையில் டைடல் பார்க்
20,600 பேருக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவிப்பு
1 min
சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு
தொழில் துறை அமைச்சர்
1 min
தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும்
வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஏற்ப பாடத் திட்டம் மற்றும் பாடநூல்கள் மாற்றியமைக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
1 min
துணைநிலை ஆளுநர், ராணுவ தலைமை தளபதி ஆலோசனை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம் குறித்து ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
பயங்கரவாதிகளை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவர்களை ஒழிக்க இந்தியாவுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும் என்று அமெரிக்கா மீண்டும் உறுதி கூறியுள்ளது.
1 min
பயங்கரவாதத்தை தோற்கடிக்க ஒற்றுமை அவசியம்: ராகுல்
நாட்டு மக்களை பிளவுபடுத்தவே பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் பயங்கரவாதத்தை தோற்கடிக்க இந்தியா ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
1 min
சோனியா, ராகுலுக்கு எதிராக நோட்டீஸ் பிறப்பிக்க நீதிமன்றம் மறுப்பு
நேஷனல் ஹெரால்ட் பண முறைகேடு புகார் வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு உடனடியாக நோட்டீஸ் பிறப்பிக்க தில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் அறிவிப்பு
பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்டள்ள இந்தியாவுக்கு துணை நிற்பதாக இலங்கை, பிரிட்டன் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை: பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகளின் கூட்டாளி சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய பிஎஸ்எஃப் வீரர்: ஒப்படைக்க பாகிஸ்தான் மறுப்பு
தவறுதலாக எல்லை தாண்டிய இந்திய எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரரை ஒப்படைக்க பாகிஸ்தான் எல்லை பாதுகாப்புப் படை மறுத்துள்ளது.
1 min
ரயில்வே உள்கட்டமைப்புகள், காஷ்மீர் பண்டிட்டுகளை தாக்கத் திட்டம்
உஷார்நிலையில் பாதுகாப்புப் படைகள்
1 min
திட்டமிட்டபடி அமர்நாத் யாத்திரை: ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் தகவல்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் அமர்நாத் யாத்திரையில் எந்த பாதிப்பும் இருக்காது; திட்டமிட்டபடியே யாத்திரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சௌதரி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
ரயில் மூலம் சென்னை திரும்பிய 48 தமிழர்கள்
ஜம்மு- காஷ்மீருக்கு சுற்றுலா சென்ற 48 தமிழர்கள் ரயில் மூலம் வெள்ளிக்கிழமை சென்னைக்கு திரும்பினர்.
1 min
போப் பிரான்சிஸுக்கு குடியரசுத் தலைவர் அஞ்சலி
மறைந்த போப் பிரான்சிஸின் (88) உடலுக்கு வாடிகனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.
1 min
ஸ்ரீநகரிலிருந்து தில்லி திரும்பிய 28 தமிழக சுற்றுலாப் பயணிகள்
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் இறந்த நிலையில், அங்கு சுற்றுலா சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 28 பேர் கொண்ட குழு ஸ்ரீநகரில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை விமானத்தில் வந்தடைந்தது.
1 min
பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவர் மீது வழக்கு
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பசீர் வெள்ளிகோத் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
தில்லியின் புதிய மேயர் ராஜா இக்பால் சிங்
பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ராஜா இக்பால் சிங் தில்லியின் புதிய மேயராக வெள்ளிக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
57 டண் தங்கத்தை வாங்கிக் குவித்த ஆர்பிஐ: 7 ஆண்டுகளில் இல்லாத அளவு கொள்முதல்
2024-25 நிதியாண்டில் இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 57.5 டண் தங்கத்தை வாங்கி இருப்பு வைத்தது.
1 min
இந்தியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது
பாகிஸ்தான் 'செனட்' நிராகரிப்பு
1 min
மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை
பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தார்.
1 min
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு உரிய காரணமின்றி தடை விதிக்க முடியாது
நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்துக்கு அரசமைப்பு சட்ட செல்லத்தக்க தன்மை உண்டு என்ற நிலையில், அச் சட்டத்துக்கு உரிய காரணமின்றி முழுமையான தடையை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
2 mins
இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் மறைவு
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவரும், தேசிய கல்விக் கொள்கையின் தலைவருமான கே.கஸ்தூரி ரங்கன் (84) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
1 min
குடியரசுத் தலைவர், பிரதமர் இரங்கல்
கஸ்தூரிரங்கன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, 'பல துறைகளில் பங்காற்றியவர். இஸ்ரோ தலைவராக, நாட்டின் விண்வெளி திட்டத்தின் பரிணாமவளர்ச்சியில் முக்கியப் பங்காற்றினார். அடுத்த தலைமுறையை வடிவமைப்பதில் ஆக்கப்பூர்வ தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தேசிய கல்விக் கொள்கை வரைவு உருவாக்கத்திலும் பங்களிப்பை ஆற்றியுள்ளார்' என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
1 min
ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: 59 பேருடன் இந்திய அணி அறிவிப்பு
தென் கொரியாவில் நடைபெறவுள்ள ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்கான இந்திய அணி 59 பேருடன் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min
சுல்தான் ஷா கோப்பை ஹாக்கி: பாகிஸ்தானுக்கு அழைப்பு இல்லை
ஜோஹர் ஹாக்கி சங்கத்துக்கு பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம் கட்டண நிலுவை வைத்திருப்பதால், நடப்பாண்டு சுல்தான் அஸ்லான்ஷாகோப்பை போட்டிக்கு பாகிஸ்தானை மலேசிய ஹாக்கி சம்மேளனம் அழைக்கவில்லை.
1 min
எலாவுக்கு ஸ்வியாடெக் பதிலடி
ஸ்வெரெவ், ஃப்ரிட்ஸ் வெற்றி
1 min
IPL சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டி யின் 43-ஆவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை வெள்ளிக்கிழமை வென்றது.
1 min
விண்வெளி நிலையத்துக்குள் வெற்றிகரமாக சென்ற சீன வீர்கள்
சீனா அனுப்பிய மூன்று விண்வெளி வீரர்கள், அந்த நாட்டுக்குச் சொந்தமான தியான்காங் விண்வெளி நிலையத்துக்குள் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாகச் சென்றனர்.
1 min
ஈக்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
1 min
பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
மகாராஷ்டிர வங்கி வருவாய் ரூ.7,711 கோடியாக உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த மகாராஷ்டிர வங்கியின் மொத்த வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.7,711 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min
ரஷியா: மேலும் ஒரு முக்கிய ராணுவத் தளபதி படுகொலை
ரஷிய ராணுவத்தின் மேலும் ஒரு முக்கியத் தளபதி வெள்ளிக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
1 min
ஜிஆர்டி-யின் அட்சய திருதியை கொண்டாட்டம்
அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும்
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் பேசினார்.
1 min
நான்கு நாள்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: வானிலை மையம்
தமிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதி ஏப். 30-இல் நியமனம்
காஞ்சி சங்கராசாரியர் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கணேச சர்மாவுக்கு வரும் ஏப். 30-ஆம் தேதி அக்ஷய திருதியையன்று சந்நியாச தீட்சையளிக்கவிருக்கிறார்.
1 min
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு ஆதரவு: பாகிஸ்தான் பகிரங்க ஒப்புதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதக் குழுக்களுக்கு பயிற்சியையும், நிதி உதவியையும், ஆதரவையும் பாகிஸ்தான் அரசு அளித்து வருகிறது என்று அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டிருக்கிறார்.
1 min
புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டார்.
1 min
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ.10 கோடி போதைப் பொருள் பறிமுதல்
இலங்கையிலிருந்து கடத்திவரப்பட்ட ரூ. 10 கோடி மதிப்பிலான போதைப் பொருளை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
ஸ்ரீரங்கத்தில் தங்கக் குதிரை வாகனத்தில் வையாளி கண்டருளினார் நம்பெருமாள்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் வெள்ளிக்கிழமை இரவு தங்கக் குதிரை வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளி வையாளி கண்டருளினார். சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
1 min
Dinamani Nagapattinam Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only