Dinamani Nagapattinam - March 20, 2025

Dinamani Nagapattinam - March 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Nagapattinam along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Nagapattinam
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
March 20, 2025
பூமிக்குத் திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாள்கள் தங்கியிருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நாசா விண்வெளி வீரங்கனையான சுனிதா வில்லியம்ஸ் உள்பட 4 விண்வெளி வீரர்களும் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
1 min
சட்டத்தின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது
நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாரும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்தார்.
1 min
நாளை மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
திருவாரூரில், மின் நுகர்வோர் குறைதீர் முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) நடைபெற உள்ளது என மின்வாரிய செயற்பொறியாளர் எஸ். செந்தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
1 min
திருவாரூரில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருவாரூர் கோட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (மார்ச் 20) மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ளது.
1 min
மாணவர் சேர்க்கை விழிப்புணர்வுப் பேரணி
மன்னார்குடி அர்பன் வங்கி அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி, விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
1 min
கொலை முயற்சி வழக்கு: 5 ஆண்டுகள் சிறை
திருவாரூர் அருகே கொலை முயற்சி வழக்கில் தொடர்புடையவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குற்றவியல் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பு வழங்கியது.
1 min
குடவாசலில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்
திருவாரூர், மார்ச் 19 : குடவாசல் வட்டத்துக்குள்பட்ட பகுதியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், புதன்கிழமை முகாமிட்டு கள ஆய்வு மேற்கொண்டார்.
1 min
திருத்துறைப்பூண்டி நகர்மன்ற கூட்டம்
மின் கம்பம் அமைக்க வேண்டும், கோடைகாலத்தில் குடிநீர் தட்டுப்பாடின்றி விநியோகிக்க வேண்டும்.
1 min
கூட்டுறவுப் பணியாளர்களுக்கு குறைதீர் முகாம்
திருவாரூர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பணியாளர்களின் குறைதீர் முகாம் அண்மையில் நடைபெற்றது.
1 min
கடலில் மாயமான மீனவர் சடலம் மீட்பு
நாகை பகுதியில் கடலில் மீன்பிடித்தபோது மாயமான மீனவர் சடலம் புதன்கிழமை மீட்கப்பட்டது.
1 min
வேளாங்கண்ணி கிளை நூலகத்துக்கு கணினி பிரிண்டர்
வேளாங்கண்ணி கிளை நூலகத்துக்கு கோரக்கர் சித்தர் ஆலயம் சார்பாக கணினி பிரிண்டர் புதன்கிழமை வழங்கப்பட்டது.
1 min
சிவராமகிருஷ்ண சுவாமிகள் குருபூஜை
ரோட்டு சுவாமிகள் என்றழைக்கப்படும் ஸ்ரீ ஸ்ரீ சிவராமகிருஷ்ண சுவாமிகளின் 51-ஆவது குருபூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயிலில் தெப்ப உற்சவம்
திருக்கண்ணபுரம் செளரிராஜப் பெருமாள் கோயில் தெப்ப உற்சவம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
திட்டச்சேரியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்
திட்டச்சேரி பேரூராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் புதன் கிழமை நடைபெற்றது.
1 min
தரங்கம்பாடி பகுதியில் ஆட்சியர் ஆய்வு
தரங்கம்பாடி வட்டாரத்திற்குட்பட்ட தில்லையாடி, ஆக்கூர், எருக்கட்டாஞ்சேரி ஆகிய பகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
சங்கமம் நம்ம ஊர் திருவிழாவில் பங்கேற்க மார்ச் 22, 23-இல் கலைக் குழுக்கள் தேர்வு
நாகை மாவட்டத்தில் சங்கமம்-நம்ம ஊர் திருவிழாவுக்கான கலைக் குழுக்கள் தேர்வு மார்ச் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min
நீதிமன்ற நடவடிக்கைகளை பள்ளி மாணவர்கள் பார்வையிட்டனர்
நாகை நீதிமன்றத்தின் செயல்பாடுகளை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர்.
1 min
தவணைத் தொகை பெற அடையாள எண் அவசியம்
நாகை மாவட்ட விவசாயிகள் பி.எம். கிசான் திட்டத்தில் 20-ஆவது தவணைத் தொகையை தொடர்ந்து பெற வேளாண் அடுக்க அடையாள எண் அவசியம் என்று மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min
சீர்காழியில் வணிகர்கள் உண்ணாவிரதம்
சீர்காழி வட்டம் புத்தூரில் வணிகர்கள் கடைகளை அடைத்து புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
100 நாள் வேலை நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி முற்றுகை
கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
1 min
காரைக்காலில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
புதுச்சேரி அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்கும் முகாம் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) காரைக்காலில் நடைபெறுகிறது.
1 min
வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் 3-ஆவது நாளாக உள்ளிருப்புப் போராட்டம்
வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம் 3-ஆவது நாளாக நீடித்தது.
1 min
காலமானார் ஜி. இராமாமிர்தம்
நாகை மாவட்டம், திருக்குவளை பிரதான சாலை மீனம்பள்ளூர் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த வீ. கோவிந்தசாமி மனைவி ஜி. இராமாமிர்தம் (90) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (மார்ச் 18) காலமானார்.
1 min
அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
தேவூர் முத்தாள பரமேஸ்வரி பிடாரி அம்மன் கோயில் பங்குனி திருவிழா பூச்சொரிதல் நிகழ்ச்சியோடு புதன்கிழமை தொடங்கியது.
1 min
நுங்கு, இளநீர், நீர்மோர் விற்பனையகங்களில் குவியும் மக்கள்
கடும் கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், காரைக்காலில் பல்வேறு இடங்களில் நுங்கு, இளநீர், வெள்ளரி, தர்பூசணி விற்பனை தீவிரமாக நடைபெறுகிறது.
1 min
மார்ச் 23-இல் வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா
வலங்கைமான் மகாமாரியம்மன் கோயில் பாடைக் காவடி திருவிழா வரும் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
எரிவாயு மானியம் வங்கிக் கணக்கில் சேர்க்கப்படுகிறது
எரிவாயு மானியம் குடும்ப அட்டைதாரர் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருவதாக அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min
மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தல்
பள்ளிமாணவர்கள் இடைநிற்றலை தடுக்க சிறப்பு கவனம் செலுத்துமாறு கல்வித் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
1 min
செவிலியப் பணியை அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்: எஸ்எஸ்பி
செவிலியர் பணியை அர்ப்பணிப்புடன் செய்ய முன்வரவேண்டும் என செவிலிய மாணவிகளுக்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா அறிவுறுத்தினார்.
1 min
வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவர்களுக்கு பணி ஆணை
மயிலாடுதுறை, மார்ச் 19: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 723 மாணவர்கள் பணி ஆணை பெற்றனர்.
1 min
ஏப். 4-இல் சீதளாதேவி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
காரைக்கால் பகுதியில் உள்ள சீதளாதேவி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் ஏப். 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
1 min
திமுக கொடிக் கம்பங்களை அகற்ற கட்சியினருக்கு உத்தரவு
பொது இடங்களில் நடப்பட்டுள்ள திமுக கொடிக் கம்பங்களை நீதிமன்ற உத்தரவுப்படி 15 நாள்களில் அகற்ற வேண்டுமென அக்கட்சியின் பொதுச் செயலர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
பாடப் புத்தகங்கள் முறைகேடாக விற்பனை: 5 பேர் மீது நடவடிக்கை
தமிழக அரசின் பாடப் புத்தகங்களை முறைகேடாக விற்பனை செய்ததாக 4 மண்டல அதிகாரிகள் உள்பட 5 பேர் மீது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
1 min
நாய் கடித்ததில் பிளஸ் 2 மாணவி காயம்
சீர்காழி அருகே வெறி நாய் கடித்ததில் பலத்த காயமடைந்த பிளஸ் 2 மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1 min
ஓய்வு பெற்ற எஸ்ஐ கொலை வழக்கில் தேடப்பட்டவர் சுட்டுப்பிடிப்பு
திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தவரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
1 min
பொதுவழியில் வேலி: மக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை அருகே பொதுவழியில் சாலையின் குறுக்கே வேலி வைத்து அடைத்ததாக குற்றம்சாட்டி செவ்வாய்க்கிழமை இரவு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
டாஸ்மாக் விசாரணைக்கு தடை கோரி மனுக்கள் தாக்கல்
தமிழகத்தில் டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை மேற்கொண்டு விசாரணை நடத்த தடை விதிக்கக் கோரி டாஸ்மாக் நிறுவனத்தின் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
1 min
பவானி அருகே ரவுடி படுகொலை: குற்றவாளிகளை சுட்டுப்பிடித்த போலீஸார்
பவானி அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பட்டப்பகலில் ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை போலீஸார் சுட்டுப் பிடித்தனர்.
2 mins
ரயில்வே தேர்வு வாரிய தேர்வு திடீர் ரத்து
தென் தமிழக மாணவர்கள் ஹைதராபாதில் அவதி
1 min
மக்கள்தொகைப் பெருக்கமும், அணுக்கமும்...
டு முழுவதும் எதிர்பார்க்கப்படும் மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாட்டில் பலத்த எதிர்ப்பும், அதுகுறித்த விவாதமும் சூடுபிடித்திருக்கிறது.
2 mins
வார்த்தை வன்முறை!
வாய்தவறி விழும் பேச்சுகள், கைதவறி விழும் கண்ணாடியைவிடக் கூர்மையானவை. ஒருவரிடம் நாம் பேசும்போது நாம் என்ன அர்த்தத்தில் பேசுகிறோம் என்பதைவிட, நாம் கூறுவதைக் கேட்பவர் எந்த அர்த்தத்தில் புரிந்துகொள்வார் என்பதைக் கவனித்துப் பேச வேண்டும்.
2 mins
அரசு மீதான பாஜகவின் அவதூறு எடுபடாது
சோதனை என்கிற பெயரில் அரசின் மீதான பாஜகவின் அவதூறு மக்களிடம் ஒரு போதும் எடுபடாது என்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
1 min
வேலைநிறுத்தம் செய்தால் ஊதியம் கிடையாது
அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலர் எச்சரிக்கை
1 min
வீடுகளுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம்: அண்டை மாநிலங்களில் அதிகாரிகள் ஆய்வு
பேரவையில் தகவல்
1 min
நீதிமன்ற வழிகாட்டுதல்படி 6 புதிய கல்லூரிகள்
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அறிவிப்பு
1 min
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை
விவசாய நிலங்களைப் பிரித்து மனையிடங்களாக விற்க அனுமதியில்லை என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்தார்.
1 min
வருவாய் பற்றாக்குறை: திமுக - அதிமுக கடும் விவாதம்
வருவாய் பற்றாக்குறை தொடர்பாக திமுக, அதிமுக உறுப்பினர்களிடையே பேரவையில் புதன்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
1 min
தெருநாய் கடித்து உயிரிழக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு
பேரிடர் நிவாரண நிதியின் கீழ் வழங்கப்படும் என அறிவிப்பு
1 min
திடக்கழிவிலிருந்து நுண்ணூட்டச் சத்துள்ள உரங்கள் அமைச்சர் கே.என்.நேரு உறுதி
திடக்கழிவில் இருந்து தயாரிக்கப்படும் உரங்கள் நுண்ணூட்டச் சத்து கொண்டதாக மாற்றித் தரப்படும் என்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்தார்.
1 min
பால்வளத் திட்டங்களுக்கு ரூ.6,190 கோடி நிதி
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
சட்டவிரோத தகவல்களை சமூக ஊடகங்கள் நீக்க வேண்டும்
மத்திய இணையமைச்சர் ஜிதின் பிரசாதா
1 min
ரயில்களின் வசதிக்கேற்ப கட்டணம் நிர்ணயம்
ரயில்களில் வழங்கப்படும் சேவைகள், அவற்றில் உள்ள பல்வேறு நவீன வசதிகளுக்கேற்ப அனைத்துத் தரப்பு பயணிகளும் பயன்பெறும் வகையில் ரயில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
விரைவில் புதிய சுங்க கட்டணக் கொள்கை: மத்திய அரசு
தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டண வசூல் தொடர்பாக புதிய கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிவிக்கும்; அதில், நுகர்வோருக்கு நியாயமான சலுகை வழங்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
1 min
மாநிலங்கள் மீது எந்த மொழியும் திணிக்கப்படாது: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு உறுதி
'தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை நடைமுறையின் கீழ் எந்தவொரு மாநிலத்தின் மீதும் எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது என்று மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை உறுதி தெரிவிக்கப்பட்டது.
1 min
ஜிடிபி-யில் சுகாதாரச் செலவினம் 1.84% இருந்து 2.5%-ஆக உயரும்
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுகாதாரத்துக்கான செலவினம் தற்போது 1.84 சதவீதமாக உள்ளது; விரைவில் இது 2.5 சதவீதமாக உயரும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா புதன்கிழமை தெரிவித்தார்.
1 min
அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை உயர்த்தும் திட்டமில்லை: மத்திய அரசு
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை (60) உயர்த்தும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என்று மத்திய பணியாளர் நலத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
1 min
பிரதமர் மோடியுடன் பில் கேட்ஸ் சந்திப்பு
பிரதமர் மோடியை மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனரும் தொழிலதிபருமான பில் கேட்ஸ் புதன்கிழமை சந்தித்தார்.
1 min
காஸா நிலவரம்: இந்தியா கவலை; பாதிக்கப்பட்டோருக்கு உதவ அழைப்பு
காஸா நிலவரம் குறித்து கவலை தெரிவித்த இந்தியா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகளை தொடர்ந்து வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தியது.
1 min
மணிப்பூர்: பழங்குடியினர் இடையே மீண்டும் மோதல்
மணிப்பூரின் சுராசந்த்பூர் மாவட்டத்தில் ஜோமி மற்றும் ஹமர் பழங்குடியினர் இடையே மீண்டும் ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர்.
1 min
விவசாய சங்கத் தலைவர்களுடன் மே 4-இல் மீண்டும் பேச்சுவார்த்தை
விவசாய சங்கத் தலைவர்களுடனான 7-ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தை புதன்கிழமை நிறைவடைந்தது. அடுத்த பேச்சுவார்த்தை மே 4-இல் நடைபெறும் என மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தார்.
1 min
வன்முறை பாதித்த நாகபுரியில் ஊரடங்கு நீடிப்பு: 2,000 போலீஸார் குவிப்பு
மகாராஷ்டிரத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப் பின் கல்லறையை இடிக்கக் கோரி வலதுசாரி அமைப்புகள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்ட நாகபுரியில் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக காவல் துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.
1 min
தெலங்கானா பட்ஜெட் தாக்கல்: 6 தேர்தல் வாக்குறுதிகளுக்கு ரூ.56,000 கோடி
காங்கிரஸ் ஆளும் தெலங்கானா மாநிலத்தின் 2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் ரூ.3.05 லட்சம் கோடி மதிப்பீட்டில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.
1 min
அமலாக்கத் துறை அலுவலகத்தில் லாலு ஆஜர்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்கு
1 min
மாலத்தீவுகளை வென்றது இந்தியா
சர்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டத்தில் இந்தியா 3-0 கோல் கணக்கில் மாலத்தீவுகளை புதன்கிழமை வென்றது.
1 min
மும்பை கேப்டன் சூர்யகுமார் யாதவ்
மும்பை, மார்ச் 19: ஐபிஎல் போட்டியின் இந்த சீசனில் மும்பை இண்டியன்ஸின் முதல் ஆட்டத்தில் அந்த அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக செயல்படவிருக்கிறார்.
1 min
ஏப்ரல் 6 ஆட்டம் தேதி மாற்றம்?
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் மோதும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஆட்டம் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு தேதிக்கு மாற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
1 min
சோஃபியா, ஒசாகா முன்னேற்றம்
மியாமி கார்டன்ஸ், மார்ச் 19: ஆடவர் மற்றும் மகளிருக்கான 1000 புள்ளிகள் கொண்ட மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி, அமெரிக்காவில் புதன்கிழமை தொடங்கியது. முதல் சுற்றில் உள்நாட்டு வீராங்கனை சோஃபியா கெனின், ஜப்பானின் நவோமி ஒசாகா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
1 min
சாதனை வீராங்கனை சந்திக்க இருக்கும் சவால்கள்!
விண்வெளியில் ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்கள் மிதப்பதை பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும் என்றபோதும், பூமிக்குத் திரும்பும்போது உடல் ரீதியில் நீண்ட காலத்துக்கு பல்வேறு பிரச்னைகளை அவர்கள் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.
1 min
டி20 தரவரிசை: 2-ஆம் இடத்தில் அபிஷேக், வருண்
ஐசிசி-இன் சர்வதேச டி20 தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா பேட்டர்கள் பிரிவிலும், வருண் சக்கரவர்த்தி பௌலர்கள் பிரிவிலும் 2-ஆம் இடத்தில் நிலைக்கின்றனர்.
1 min
சென்செக்ஸ், நிஃப்டி மூன்றாவது நாளாக நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் தாடர்ந்தது.
1 min
இத்தாலி: படகு கவிழ்ந்து 40 அகதிகள் மாயம்
இத்தாலி அருகே மத்தியதரைக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 40 பேர் மாயமாகினர்; விபத்துப் பகுதியில் இருந்து 6 அகதிகளின் உடல்கள் மீட்கப்பட்டன.
1 min
நவரத்தின, ஆபரண ஏற்றுமதி ரூ.21,085 கோடியாகச் சரிவு
இந்தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் ரூ.21,085 கோடியாக சரிந்துள்ளது.
1 min
5ஜி-யை அறிமுகப்படுத்திய வோடஃபோன் ஐடியா
இந்தியாவில் 5ஜி தொழில்நுட்ப சேவைகளை முன்னணி தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியா அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
இஸ்தான்புல் மேயர் கைது
ஊழல் குற்றச்சாட்டின் பேரில் துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல்லின் மேயரும் முக்கிய எதிர்க்கட்சித் தலைவருமான எக்ரீம் இமாமோக்லுவை (படம்) போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
1 min
கென்னடி படுகொலை: ரகசிய ஆவணங்கள் வெளியீடு
இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எஃப். கென்னடி படுகொலை தொடர்பான ஆயிரக்கணக்கான பக்க ஆவணங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
1 min
வாக்குறுதியை மீறுகிறார் புதின்: ஸெலென்ஸ்கி குற்றச்சாட்டு
தங்களது எரிசக்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதை நிறுத்திவைப்பதாக ரஷிய அதிபர் அளித்த வாக்குறுதியை அவர் மீறுவதாக உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
நாகூர் தர்காவில் இஃப்தார் நோன்பு துறப்பு
நாகூர் தர்காவில் புதன்கிழமை நடைபெற்ற இஃப்தார் நோன்பு துறக்கும் நிகழ்வில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி ஹிந்துக்கள், கிறிஸ்தவர்களும் பங்கேற்றனர்.
1 min
தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.66,320-க்கு விற்பனையானது.
1 min
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேர் விடுதலை
ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், படகு ஓட்டுநர்கள் இருவருக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனையுடன் தலா ரூ. 40 லட்சம் (இலங்கைப் பணம்) அபராதம் விதித்தும் இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
திருப்பரங்குன்றத்தில் பங்குனிப் பெருவிழா தேரோட்டம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
1 min
தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: பஞ்சாப் முதல்வருக்கு திமுக அழைப்பு
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைகள் குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு பஞ்சாப் மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் பகவந்த் மானுக்கு தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் அடங்கிய குழு தில்லியில் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது.
1 min
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை
சிந்துவெளி நாகரிகத்தை வெளிப்படுத்திய சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
1 min
Dinamani Nagapattinam Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only