Dinamani Madurai - May 07, 2025

Dinamani Madurai - May 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 07, 2025
இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
பிரதமர் மோடி அறிவிப்பு
1 min
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
1 min
தனியார் நூற்பாலையில் அமைச்சர் ஆர். காந்தி ஆய்வு
மதுரையில் உள்ள தனியார் நூற்பாலையில் மாநில கைத்தறி, துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
மகளிர் கல்லூரியில் கல்விக் கண்காட்சி
மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் கல்விக் கண்காட்சி - 2025 அண்மையில் நடைபெற்றது.
1 min
கோடைகால சிறப்பு பயிற்சி முகாம்
மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கோடைகால சிறப்பு பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.
1 min
செயற்கை நுண்ணறிவு பாதுகாப்பு ஏற்பாடுகள்
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் எதிர்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு, தேரோட்டம் ஆகியவற்றை முன்னிட்டு, மாநகரக் காவல் சார்பில் அதிநவீன செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
2 mins
ரூ.9 ஆயிரம் லஞ்சம்: மாநகராட்சி அலுவலர் கைது
திருப்பரங்குன்றம், மே 6: காலி இடத்துக்கு வரி விதிக்க ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி வரி வசூலிப்பாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
மரக்கன்றுகள் நடூம் விழா
மதுரை யானை மலை கிரீன் பவுண்டேசன் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
1 min
முதியோருக்கு நலத் திட்ட உதவிகள்
மதிமுக 32-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் முதியோருக்கு நலத் திட்ட உதவிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
1 min
ரூ. 9.85 லட்சம் மதிப்பில் தேங்காய்கள் விற்பனை
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.9.85 லட்சம் மதிப்பில் தேங்காய்கள், கொப்பரைகள் விற்பனையாகின.
1 min
திருமங்கலத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்களில் ஆய்வு
திருமங்கலம் மோட்டார் வாகன ஆய்வக அலுவலகத்தில் தனியார் பள்ளி, கல்லூரிகளின் வாகனங்களை காவல் துறையினர், மோட்டார் வாகனத் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
புதிய கழிப்பறைகள் மக்கள் பயன்பாட்டுக்கு திறப்பு
மதுரை மாநகராட்சி சமூக பொறுப்பு நிதியின் கீழ் புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறைகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
1 min
மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை
மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மாலை பரவலாக மழை பெய்தது.
1 min
கோயில் திருவிழாவில் இரு பிரிவினர் மோதல்: இருவர் பலத்த காயம்
மதுரை மாவட்டம், திருவாதவூர் அருகே கோயில் திருவிழாவில் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் பலத்த காயமடைந்தனர்.
1 min
மதுரை அமெரிக்கன் கல்லூரி விவகாரம்: கல்லூரிக் கல்வி இயக்குநர் பதிலளிக்க உத்தரவு
மதுரை அமெரிக்கன் கல்லூரிச் செயலரின் பதவிக் காலம் நீட்டிப்பு செய்யப்பட்ட நிலையில், அதை ஏற்க மறுத்த உயர்கல்வித் துறையின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், கல்லூரிக் கல்வி இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
பண முறைகேடு புகார் தொடர்பாக சென்னை, வேலூரில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் அமலாக்கத் துறையினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
1 min
நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) வெளியாகவுள்ள நிலையில், மாணவர்களுக்கு உளவியல் தாக்கம் ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மன நல ஆலோசனைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் டாக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்தார்.
1 min
அஞ்சல் துறை குறைகேட்பு முகாம்: மே 22-க்குள் குறைகளைத் தெரிவிக்கலாம்
தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை சார்பில் நடைபெறவுள்ள குறைகேட்பு முகாமை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை மே 22-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அஞ்சல் துறை உதவி இயக்குநர் சுந்தரேஸ்வரி அறிவித்தார்.
1 min
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, மதுரையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
போர் வேண்டாம்: வைகோ
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வேண்டாம் என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
1 min
கால்வாயில் விழுந்த மகன்: காப்பாற்ற முயன்ற தாய், சித்தி உயிரிழப்பு
சென்னை ஆவடி அருகே கிருஷ்ணா கால்வாயில் விழுந்த மகனை காப்பாற்ற முயன்ற தாய், சித்தி இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
1 min
பள்ளியில் ஆசிரியை தற்கொலை
கடலூர் முதுநகர் தனி யார் பள்ளியில் ஆசிரியை செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
பாறை மீது வேன் மோதியதில் பெண் உயிரிழப்பு
கொடைக்கானல் மலைச் சாலையில் பாறை மீது வேன் மோதியதில் காயமடைந்த பெண் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
1 min
லஞ்சம்: கூட்டுறவுச் சங்க சார் பதிவாளர், எழுத்தர் கைது
வீட்டுக் கடன் ரத்து பத்திரத்தைத் திரும்ப வழங்க முதியவரிடம் ரூ. 5,000 லஞ்சம் பெற்றதாக விருதுநகர் கூட்டுறவுச் சங்கங்களின் சார் பதிவாளர், எழுத்தரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
1 min
மாமல்லபுரம் மாநாடு: பாமகவினர் வாகனங்களுக்கு கட்டுப்பாடு
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் மே 11-இல் பாமக சார்பில் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநாட்டுக்கு வாகனங்களில் செல்லும் பாமகவினர் கடைப்பிடிக்க வேண்டிய நிபந்தனைகளை விழுப்புரம் மாவட்டக் காவல் துறை அறிவித்தது.
1 min
2026-இல் அதிமுக ஆட்சி மலரும்
வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சி மலரும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
தமிழக காவல் துறையில் 15 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 15 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் (டிஎஸ்பிக்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
1 min
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழப்பு
திருவள்ளூர் வீரராகவர் கோயில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
1 min
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் படுகொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினார்.
1 min
மே 13-இல் அந்தமானில் தொடங்குகிறது தென்மேற்குப் பருவமழை
நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை அந்தமானில் மே 13-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
1 min
61 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் தகவல்
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனை யகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 61 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது.
1 min
உரிமை கோரப்படாத உடல்கள்; கண்ணியமாக அடக்கம் செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை
தமிழகத்தில் உரிமை கோரப்படாத உடல்களை கண்ணியமான முறையில் அடக்கம் செய்வது தொடர்பாக சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்தது.
1 min
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும்
திமுகவை வீழ்த்த நினைப்போரின் கணக்கு தவறாகவே முடியும் என்று அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min
நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி மீது மே 23-இல் குற்றச்சாட்டுப் பதிவு
நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது மனைவி காஞ்சனா ஆகியோர் மே 23-ஆம் தேதி குற்றச்சாட்டுப் பதிவுக்காக கட்டாயம் நேரில் ஆஜராக வேண்டும்.
1 min
அதிர்ஷ்டத்தில் தொடங்கி... தற்காலிக நிறுத்தம்!
துப்பாக்கிச் சூடு போரில் ஈடுபடுவதைவிட கூடுதல் வரிப் போரை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் விரும்பினார். எனினும், உலக நாடுகளின் பதிலடியைத் தொடர்ந்து, \"கூடுதல் வரிப் போர்\" நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்தார்.
3 mins
மத்திய அரசு ஒப்புதல் தராமல் நிலுவையில் வைத்துள்ள 29 பெயர்கள்
உயர்நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் பரிந்துரை
1 min
பண்டிகைகால முன்பணத் தொகை உயர்வு: அரசாணை வெளியீடு
பண்டிகை கால முன்பணத் தொகை உயர்வு அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையிலான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
1 min
முல்லைப் பெரியாறு: மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்பார்வைக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியது.
1 min
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் ரூ.55.75 லட்சம் நிரந்தர வைப்புத் தொகை
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் நிரந்தர வைப்புத் தொகையாக சுமார் ரூ.55.75 லட்சம் உள்ளது.
1 min
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள விபத்து இலவச சிகிச்சை திட்டம்
3 ஆண்டுகளில் 3.57 லட்சம் பேர் பயன்
2 mins
சாதனைத் திட்டங்கள், சவால்களுடன் 5-ஆம் ஆண்டில் திமுக அரசு
சாதனைத் திட்டங்களை முன்வைத்து, சவால்களை எதிர்கொண்டு ஐந்தாவது ஆண்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அடியெடுத்து வைக்கிறது.
2 mins
இந்திய எல்லை நிலைகளைக் குறிவைத்து பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
12-ஆவது நாளாக அத்துமீறல்
1 min
உளவுத் துறை அறிக்கையைத் தொடர்ந்து மோடி காஷ்மீர் பயணத்தை ரத்து செய்தார்
மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
1 min
பாதுகாப்பு ஒத்திகையில் பங்கேற்க நாட்டு மக்களுக்கு பாஜக அழைப்பு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடன் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றத்தின் எதிரொலியாக புதன்கிழமை நடைபெறும் நாடு தழுவிய பாதுகாப்பு ஒத்திகையில் நாட்டு மக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
பாகிஸ்தானை கேள்விகளால் துளைத்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
'பஹல்காம் தாக்குதலில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குத் தொடர்புள்ளதா?, அணு ஆயுத மிரட்டல் விடுப்பது மோதலை மேலும் தீவிரப்படுத்தாதா? உள்ளிட்ட கடுமையான கேள்விகளை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் பாகிஸ்தானிடம் எழுப்பியுள்ளது.
2 mins
ஐஎஸ்ஐ தலைமையகத்தில் பாகிஸ்தான் பிரதமர் ஆலோசனை
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் தலைமையகத்தை அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டார்.
1 min
ஆஸ்திரேலிய பிரதமருடன் மோடி தொலைபேசியில் ஆலோசனை
தேர்தல் வெற்றிக்கும் வாழ்த்து
1 min
ஜம்மு-காஷ்மீர்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
ஜம்மு-காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் ராணுவ வீரர் உள்பட 4 பயணிகள் உயிரிழந்தனர். 44 பேர் காயமடைந்தனர்.
1 min
கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டி: கேரள எம்எல்ஏ ஏ.ராஜாவுக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து
கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ஏ.ராஜா, கிறிஸ்தவராக தனித் தொகுதியில் போட்டியிட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், தேர்தலில் அவர் பெற்ற வெற்றி செல்லாது என்று மாநில உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ரத்து செய்தது.
1 min
சுரங்க வழக்கு: கர்நாடக முன்னாள் அமைச்சருக்கு 7 ஆண்டுகள் சிறை
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
1 min
கோத்ரா தீர்ப்பு: மேல்முறையீட்டு மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை தொடக்கம்
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கின் தீர்ப்பு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை, உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது என்ற வாதம் செவ்வாய்க்கிழமை நிராகரிக்கப்பட்டு, வழக்கின் இறுதி விசாரணை தொடங்கப்பட்டது.
1 min
ஆளுநருக்கு எதிரான மனுவை கேரளம் திரும்பப் பெற மத்திய அரசு எதிர்ப்பு
மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க தாமதிப்பதாக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை கேரள அரசு திரும்ப பெறுவதற்கு மத்திய அரசு தரப்பில் செவ்வாய்க்கிழமை எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
1 min
நமக்கு சொந்தமான நீரை தற்போது முழுமையாகப் பயன்படுத்தலாம்
நமது நாட்டுக்குச் சொந்தமான நீரை நமது தேவைகளுக்காக முழுமையாகப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
மல்லோர்காவை சாய்த்த ஜிரோனா
ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் ஜிரோனா 1-0 கோல் கணக்கில் மல்லோர்காவை செவ்வாய்க்கிழமை சாய்த்தது.
1 min
சென்னையுடன் இன்று மோதும் கொல்கத்தா
சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
ரோஹித், கோலி திறம்பட செயல்படும்வரை இந்திய அணியில் இருக்கலாம்
மூத்த கிரிக்கெட் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் திறம்பட செயல்படும் வரை இந்திய அணியில் விளையாடலாம் என அணியின் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் தெரிவித்தார்.
1 min
சூப்பர்பெட் கிளாசிக் செஸ்: குகேஷ், பிரக்ஞானந்தா பங்கேற்பு
ருமேனியாவில் புதன்கிழமை தொடங்கும் சூப்பர்பெட் கிளாசிக் செஸ் போட்டியில் இந்தியாவின் டி.குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா ஆகியோர் பங்கேற்கின்றனர். முதல் சுற்றிலேயே அவர்கள் நேருக்கு நேர் சந்திக்கின்றனர்.
1 min
மழை பாதித்த ஆட்டத்தில் குஜராத் 'த்ரில்' வெற்றி
ஐபிஎல் போட்டியின் 56-ஆவது ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் மும்பை இண்டியன்ஸை செவ்வாய்க்கிழமை வென்றது.
1 min
ஐ.நா. மனித வளர்ச்சிக் குறியீட்டில் இந்தியா முன்னேற்றம்
ஐ.நா. வளர்ச்சித் திட்டத்தின் (யுஎன்டிபி) மூலம் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, நடப்பு ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசைப் பட்டியலில் இந்தியா 130-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிகர லாபம் 26% உயர்வு
கடந்த ஜனவரி மார்ச் காலாண்டில் சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 26 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
வேதாந்தா வருவாய் 118% உயர்வு
கடந்த 2024-25-ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் பன்னாட்டு சுரங்க நிறுவனமான வேதாந்தாவின் வருவாய் 118 சதவீதம் உயர்ந்தது.
1 min
பரோடா வங்கி வருவாய் ரூ.35,852 கோடியாக அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் வருவாய் கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் ரூ.35,852 கோடியாக அதிகரித்துள்ளது.
1 min
கனிம உற்பத்தியில் தொழில் துறை தேவை பூர்த்தி
மத்திய சுரங்கங்கள் துறை அமைச்சகம் தகவல்
1 min
ஜெர்மனி பிரதமராக ஃப்ரீட்ரிக் மேர்ஸ் தேர்வு
ஜெர்மனியின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கூட்டணியின் தலைவர் ஃப்ரீட்ரிக் மேர்ஸ் செவ்வாய்க்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1 min
இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சிக்கு முதல் வெற்றி
இலங்கையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட தேர்தல் முடிவுகளில் அதிபர் அநுர குமார திசாநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
யேமன் விமான நிலையம் முழு செயலிழப்பு: இஸ்ரேல்
யேமன் தலைநகர் சனாவில் தாங்கள் நடத்திய வான்வழித் தாக்குதல் காரணமாக அந்த நகரிலுள்ள நாட்டின் முக்கிய விமான நிலையத்தின் செயல்பாடு முழுமையாக செயலிழக்கச் செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் செவ்வாய்க்கிழமை கூறியது.
1 min
வங்கிப் பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை கரடி ஆதிக்கம் கொண்டதால் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
இஸ்ரேலுடன் பேச்சு அர்த்தமற்றது: ஹமாஸ்
காஸா மீது இஸ்ரேல் 'பட்டினித் தாக்குதல்' நடத்துவதை தொடரும் சூழலில், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only