Dinamani Madurai - May 06, 2025

Dinamani Madurai - May 06, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 06, 2025
போர்ப் பதற்றம்: நாளை பாதுகாப்பு ஒத்திகை
எந்தவொரு தாக்குதலுக்கும் தயாராக இருக்கும் வகையில் பாதுகாப்பு ஒத்திகைகளை அனைத்து மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 244 மாவட்டங்களிலும் புதன்கிழமை (மே 7) நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 mins
ராகுலின் இந்திய குடியுரிமைக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய குடியுரிமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னௌ அமர்வு திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
1 min
பொறியியல் சேர்க்கை: விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்
தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு புதன்கிழமை (மே 7) தொடங்குகிறது.
1 min
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தலைமை நீதிபதியிடம் அறிக்கை
நீதிபதி யஷ்வந்த் வர்மா (படம்) வீட்டில் கட்டுக்கட டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது விசாரணை அறிக்கையை மூன்று நீதிபதிகள் குழு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் திங்கள்கிழமை சமர்ப்பித்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்கள்: மே 15-இல் புதிய தலைமை நீதிபதி விசாரிக்கிறார்
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான மனுக்களை மே-15 ஆம் தேதி புதிய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விசாரிப்பார் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
லாரி கவிழ்ந்ததில் ஓட்டுநர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே நான்குவழிச் சாலையில் சென்ற லாரி கவிழ்ந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min
தீக்குளித்து பெண் தற்கொலை
மதுரை அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min
திருப்பரங்குன்றம் வட்ட வருவாய்த் தீர்வாயப் பணிகள் மே 14-இல் தொடக்கம்
திருப்பரங்குன்றம் வட்ட வருவாய்த் தீர்வாயப் பணிகள் வரும் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ. சங்கீதா தெரிவித்தார்.
1 min
சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: மேயர், மாவட்ட ஆட்சியர் ஆய்வு
மதுரை சித்திரைத் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து மேயர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் திங்கள்கிழமை ஆய்வு செய்தனர்.
1 min
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு பாதுகாப்பு கோரி மனு
முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்துக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி, அரசியல் கட்சிகள், மக்கள் நல இயக்கங்கள் சார்பில், மதுரை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
1 min
முன்னாள் டிஎஸ்பி மீதான சிலை கடத்தல் வழக்கு: குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கத் தடை
சிலை கடத்தல் வழக்கில், முன்னாள் காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) காதர்பாட்சா மீதான வழக்கை மதுரை குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
பொதுமக்களுக்கு இடையூறு: தலைவர்கள் மீது வழக்கு
மதுரைக்கு அண்மையில் வந்த தலைவர் விஜயை வரவேற்ற போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவரது கட்சியினர் மீது போலீஸார் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், கள்ளிக்குடி அருகே நான்கு வழிச் சாலையைக் கடக்க முயன்ற போது, அரசுப் பேருந்து மோதியதில் முடி திருத்தும் தொழிலாளி உயிரிழந்தார்.
1 min
மேம்பால கட்டுமானப் பணிகள்: தலைமைப் பொறியாளர் ஆய்வு
மதுரையில் நடைபெறும் மேம்பால கட்டுமானப் பணிகளை தமிழக நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளர் கே.ஜி. சத்தியபிரகாஷ் திங்கள்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
எலிப் பசையை உள்கொண்ட குழந்தை உயிரிழப்பு
மதுரை மாவட்டம், செக்கானூரணி அருகே பற்பசை என்று நினைத்து எலிப்பசையை உள்கொண்ட குழந்தை திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
சீரமைக்கப்பட்ட செயற்கையிழை தடகள மைதானம் திறப்பு
மதுரை டாக்டர் எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் மறு சீரமைக்கப்பட்ட செயற்கையிழை தடகள மைதானம் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைக்கப்பட்டது.
1 min
திமுக நிர்வாகியைக் கண்டித்து ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊராட்சி செயலர், பெண் தூய்மைப் பணியாளர்களைத் தாக்கிய திமுக செயலரைக் கைது செய்ய வலியுறுத்தி, திருப்பரங்குன்றத்தில் ஊராட்சி செயலர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
அருவி நீரில் மூழ்கிய சிறுவன் உயிரிழப்பு
ஆண்டிபட்டி வட்டாரம், சின்னச்சுருளி அருவி நீரில் மூழ்கியதில் சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
உயர்நீதிமன்றத்தில் இருவர் நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக இருந்த இருவர், திங்கள்கிழமை நிரந்தர நீதிபதிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
1 min
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கூறினார்.
1 min
தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது
தருமை ஆதீனத்தின் சமயப் பணி மகத்தானது என மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
1 min
அரசு சார்பில் ஹஜ் பயணம் செய்வோரின் எண்ணிக்கை குறையவில்லை அகில இந்திய ஹஜ் சங்கத் தலைவர்
இந்தியாவிலிருந்து அரசு சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 463 பேர் என்பது நிகழாண்டும் குறையவில்லை என்றார் அகில இந்திய ஹஜ் சங்கத் தலைவர் அபூபக்கர்.
1 min
சிலை கடத்தல் விவகாரம் முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் பேட்டியளிக்கத் தடை
சிலை கடத்தல் வழக்கில் ஓய்வு பெற்ற ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், ஊடகங்களுக்கு அவர் பேட்டியளிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஏழை மாணவர்களின் மருத்துவர் கனவு 'நீட்' தேர்வால் சிதைக்கப்படுகிறது
ஏழை மாணவர்களின் மருத்துவராகும் கனவு, நீட் தேர்வால் முற்றிலுமாக சிதைக்கப்படுவதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டினார்.
1 min
மின் கொள்முதல் தமிழக மின் வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு
கடந்த 2023-2024-ஆம் நிதியாண்டில் உத்தேச அறிக்கையில் தெரிவித்திருந்ததைவிட கூடுதலாக 917 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியதால், தமிழக மின் வாரியத்துக்கு ரூ.13,179 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.
1 min
விஜய் கட்சித் தொண்டரை நோக்கி துப்பாக்கியை நீட்டிய பாதுகாவலர்
மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு
1 min
காவிரி ஆற்றில் மூழ்கி 2 வணிகர்கள் உயிரிழப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி இரண்டு வணிகர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ. 160 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 160 உயர்ந்து ரூ. 70,200-க்கு விற்பனையானது.
1 min
குளித்தலை பூச்சொரிதல் விழாவில் தகராறு: பிளஸ் 2 மாணவர் கொலை; 4 பேர் கைது
கரூர் மாவட்டம், குளித்தலை மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் ஏற்பட்ட தகராறில் பிளஸ்-2 மாணவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.
1 min
மே 5 வணிகர் தினம்: விரைவில் அரசாணை
மே 5-ஆம் தேதியை வணிகர் தினமாக அரசு அறிவிக்கும். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42-ஆவது மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
அதிமுக ஆட்சியில் வணிகர்களுக்கு முழு பாதுகாப்பு
எடப்பாடி பழனிசாமி உறுதி
1 min
ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் என்ன?
மத்திய அரசுக்கு க. கிருஷ்ணசாமி கேள்வி
1 min
பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்
நயினார் நாகேந்திரன்
1 min
மீனாட்சி அம்மனுக்கு இன்று பட்டாபிஷேகம்
மதுரை சித்திரைத் திருவிழா
1 min
பயங்கரவாதம்... தேவை அமைதியான வாழ்க்கை!
பயங்கரவாதத்தைக் கையில் எடுத்த எந்த நாடும் வெற்றி பெறவில்லை. பாகிஸ்தான் இந்தியாவிலிருந்து பிரிந்து சென்றதிலிருந்து தொடர்ந்து பயங்கரவாதத்தால் பெரிதும் உயிர்ச் சேதங்களையும், பொருள் சேதங்களையும் அனுபவித்து வந்துள்ளது. ஆனால், அந்த பயங்கரவாத இயக்கங்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானால் இயலவில்லை.
1 min
காவலருக்கும் ஓய்வு தேவை!
வலர்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பேணும் வகையில் அவர்களுக்கு வார விடுப்பு வழங்கி தமிழக அரசு 2021-இல் அரசாணை ஒன்றை பிறப்பித்தது.
2 mins
பிஎஸ் 4 ரக வாகனங்கள் பதிவில் மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவு
தமிழகத்தில் 2020-ஆம் ஆண்டுக்கு பிறகு பிஎஸ் 4 ரக வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
மத்திய அரசுக்கு ஆளுநர் அறிக்கை: மம்தா பதில்
வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதில் நிலைமை சீராகிவிட்டதாகக் கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 'வன்முறை குறித்து மத்திய உள்துறைக்கு ஆளுநர் அளித்த அறிக்கை பற்றி தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.
1 min
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை
மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்
1 min
தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமை
தமிழ் எழுத்தாளர்கள் 5 பேரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவற்றுக்கான உரிமைத் தொகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வழங்கினார்.
1 min
அனைத்துத் துறைச் செயலர்களுடன் தலைமைச் செயலர் ஆலோசனை
அனைத்துத் துறைகளின் செயலர்களுடன் தலைமைச் செயலர் நா.முருகானந்தம் ஆலோசனை நடத்தினார்.
1 min
தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம்
சம்ஸ்கிருதத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கை தமிழகத்துக்கு வேண்டாம் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
1 min
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? மதுரை மாவட்ட சிறப்பு நீதிமன்றம் கேள்வி
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி உ. சகாயத்துக்கு போலீஸ் பாதுகாப்பு ஏன் வழங்கவில்லை? போலீஸ் பாதுகாப்பு மறுக்கப்பட்டால் அவருக்கு துணை ராணுவத்தினரை பாதுகாப்பு அளிக்க உத்தரவிட நேரிடும் என மதுரை மாவட்ட கனிமவளம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
நீட் தேர்வு: பல்வேறு மாநிலங்களில் முறைகேட்டில் ஈடுபட்ட 7 பேர் கைது
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (மே 4) நடைபெற்ற நிலையில், அதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
1 min
இந்தியாவுடன் பதற்றத்தை தணிக்க உதவ வேண்டும்
ரஷியாவிடம் பாகிஸ்தான் துணைப் பிரதமர் கோரிக்கை
1 min
எல்லையில் 8 இடங்களில் பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு
ஜம்மு-காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டையொட்டிய 8 இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஞாயிற்றுக்கிழமை இரவு அத்துமீறி துப்பாக்கியால் சுட்டனர்.
1 min
ராஜ்நாத் சிங் - ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு ஆதரவு
1 min
இணையத் தாக்குதல் சம்பவங்கள்: பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை
ராணுவ நல கல்விச் சங்கத்தின் வலைத்தளம் உள்பட பல்வேறு வலைதளங்கள் மீது இணையத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, இணைய பாதுகாப்பை வலுப்படுத்த ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
1 min
ஹரியாணாவுக்கு தண்ணீர் கிடையாது: பஞ்சாப் பேரவையில் ஒருமனதாகத் தீர்மானம்
ஹரியாணாவுக்கு ஒரு சொட்டு நீர்கூட வழங்க முடியாது என பஞ்சாப் சட்டப்பேரவையில் திங்கள்கிழமை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1 min
பதற்றத்தை தணிக்க இந்தியா- பாகிஸ்தானுக்கு ஐ.நா. அறிவுறுத்தல்
இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை தணிக்க ஐ.நா. பொதுச்செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் திங்கள்கிழமை அறிவுறுத்தினார்.
1 min
இந்தியா பாதுகாப்பாக இருக்கும், பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர்ப் பதற்றத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக மூடிஸ் நிதி சேவைகள் நிறுவனம் தெரிவித்தது.
1 min
ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகள்: அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
ஆதாரபூர்வமற்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்துவதை அமலாக்கத் துறை வழக்கமாகக் கொண்டுள்ளதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்தது.
1 min
பயங்கரவாத எதிர்ப்பில் இந்தியாவுக்கு ரஷியா முழு ஆதரவு
'பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவை ரஷியா முழுமையாக ஆதரிக்கும்' என்று பிரதமர் மோடியுடனான தொலைபேசி உரையாடலில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் திங்கள்கழமை உறுதியளித்தார்.
1 min
புதிய சிபிஐ இயக்குநர் நியமனம்: பிரதமர் மோடி-ராகுல் காந்தி ஆலோசனை
மத்திய புலனாய்வு அமைப்பின் (சிபிஐ) புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min
வெளியுறவு அமைச்சகம் தலையிட பவன் கல்யாண் வலியுறுத்தல்
இலங்கைக் கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திங்கள்கிழமை வலியுறுத்தினார்.
1 min
கேரளத்தில் வெறிநாய் கடித்து 7 வயது சிறுமி உயிரிழப்பு
கேரள மாநிலத்தில் வெறிநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 வயது சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாடத் தடை
ஹிந்தி பாடகர் சோனு நிகம் கன்னட திரைப்படங்களில் பாட கர்நாடக திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
1 min
நீதிபதிகள் சொத்து விவரம்; உச்சநீதிமன்ற வலைதளத்தில் பதிவேற்றம்
நீதிபதிகளின் சொத்து விவரங்களை வலைதளத்தில் பதிவேற்றம் செய்ததாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு சூஃபி இஸ்லாமிய வாரியம் ஆதரவு
உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு
1 min
ஐஎம்எஃப் வாரியத்தில் இந்தியா சார்பாக பரமேஸ்வரன் ஐயர் நியமனம்
சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) இயக்குநர்கள் வாரியத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக, உலக வங்கியின் செயல் இயக்குநர் பரமேஸ்வரன் ஐயருக்கு தற்காலிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
1 min
ஆஸ்கர் பியாஸ்ட்ரிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 6-ஆவது ரேஸான மியாமி கிராண்ட் பிரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கர் பியாஸ்ட்ரி திங்கள்கிழமை வெற்றி பெற்றார்.
1 min
கர்நாடகத்தில் உள் ஒதுக்கீட்டுக்காக பட்டியலின ஜாதிகள் கணக்கெடுப்பு
கர்நாடகத்தில் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்காக பட்டியலினத்தோர் (எஸ்.சி.) பட்டியலில் உள்ள ஜாதிகள் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது; இப்பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
1 min
இந்தியன் வங்கி நிகர லாபம் 32% உயர்வு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த மார்ச் காலாண்டில் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸானின் சிறப்பு சலுகைகள்
கோடை கால சிறப்பு விற்பனையை முன்னிட்டு தனது வணிக வாடிக்கையாளர்களுக்கு அமேஸான் பிசினஸ் பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது.
1 min
காளை ஆதிக்கம்: சென்செக்ஸ், நிஃப்டி மேலும் முன்னேற்றம்
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் காளையின் ஆதிக்கம் தொடர்ந்ததால் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
காஸா முழுவதையும் கைப்பற்ற இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
காஸாவின் அனைத்து பகுதிகளையும் கைப்பற்றுவதற்கான திட்டத்துக்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முக்கிய உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மின் நுகர்வு 14,748 கோடி யூனிட்டுகளாக அதிகரிப்பு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஏப்ரல் மாதத்தில் 14,748 கோடி யூனிட்டுகளாக உயர்ந்தது.
1 min
பெரு: 13 சுரங்கத் தொழிலாளர்கள் கடத்திக் கொலை
தென் அமெரிக்க நாடான பெருவில் தங்கச் சுரங்கத்தில் இருந்து 13 தொழிலாளர்கள் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1 min
வெளிநாட்டு திரைப்படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அறிவிப்பு
வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களுக்கு 100 சதவீத வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
1 min
உக்ரைன் போர்: "ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழப்பு"
உக்ரைனில் சுமார் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.
1 min
தமிழகத்தில் 10 மாதங்களில் 40 சிறு விளையாட்டு அரங்குகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி
1 min
‘நீட்’ விலக்கு பெறுவதற்கு மத்திய அரசு முட்டுக்கட்டை
‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழக முதல்வர் முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை போடுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
கட்டுமானப் பணியின் போது கிடைத்த நடராஜர் சிலை
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது நடராஜர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
1 min
கன்னிமாரா நுழைவாயிலில் கார்ல் மார்க்ஸ் சிலை: முதல்வர்
பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய கார்ல் மார்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை!
கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்தது.
1 min
தமிழ் வார விழா: கால்நடை மருத்துவ மாணவர்களுக்கு போட்டிகள்
தமிழ் வார விழாவையொட்டி, கால்நடை மருத்துவ மாணவர்களிடையே தமிழ் மொழி பயன்பாட்டை மேம்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
1 min
மருத்துவ இதழியல் படிப்பு: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் (எபிடமாலஜி) துறையின் கீழ் பயிற்றுவிக்கப்படும் முதுநிலை மருத்துவ இதழியல் பட்டயப் படிப்புகளுக்கு வரும் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
பொருநை அருங்காட்சியகம் ஆகஸ்டில் திறப்பு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் கட்டப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் முதல்வரால் திறந்து வைக்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வே.வேலு கூறினார்.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only