Dinamani Madurai - April 19, 2025

Dinamani Madurai - April 19, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Madurai
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 19, 2025
தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை
மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
தன்கர் விமர்சனம்: காங்கிரஸ் நிராகரிப்பு
மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் குடியரசுத் தலைவருக்கு கெடு விதித்து உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை விமர்சித்த குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் கருத்தை காங்கிரஸ் நிராகரித்தது.
1 min
ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.வுக்கு பணப் பலன்களை வழங்க உத்தரவு
ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலருக்கு (வி.ஏ.ஓ.) பணப் பலன்களை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
மதுரை கீழச்சந்தைப்பேட்டை டாக்டர் டி. திருஞானம் தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அண்மையில் நடைபெற்றது.
1 min
இரு சக்கர வாகனத்தை இழுத்துச் சென்ற லாரி: இளைஞர் உயிரிழப்பு
மதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே வெள்ளிக்கிழமை இரு சக்கர வாகனம் மீது மோதிய லாரி, அந்த வாகனத்தை 2 கி.மீ. தொலைவு இழுத்துச் சென்றதால் இளைஞர் உடல் சிதைந்து உயிரிழந்தார்.
1 min
விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடிப் பயிற்சி
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அருகே போடி நாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு திருந்திய நெல் சாகுபடி குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
1 min
சரக்கு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்
மதுரையில் வெள்ளிக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வாகனம் அடுத்தடுத்து இரு சக்கர வாகனங்கள் மீது மோதியதில் நால்வர் பலத்த காயமடைந்தனர்.
1 min
சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்றக் கோரிக்கை
திருப்பரங்குன்றம், ஏப். 18: திருப்பரங்குன்றத்தை அடுத்த பசுமலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்பாடின்றி இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அகற்ற அந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min
விபத்தில் மூளைச் சாவடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்
சாலை விபத்தில் தலையில் காயம் மடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் மூளைச் சாவடைந்ததால், அவரது உடல் உறுப்புகள் வெள்ளிக்கிழமை தானம் செய்யப்பட்டன.
1 min
சித்திரைத் திருவிழா முன்னேற்பாடு பணிகள்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன் வியாழக்கிழமை ஆய்வு செய்தார்.
1 min
திருக்கல்யாணம்: கட்டண அனுமதிச் சீட்டு முறையை ரத்து செய்ய வலியுறுத்தல்
மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண கட்டண அனுமதிச்சீட்டு முன்பதிவை ரத்து செய்து அனைத்து பக்தர்களும் கட்டணமின்றி திருக்கல்யாணத்தை தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
1 min
புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை
புனித வெள்ளியை யொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை, பிரார்த்தனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
1 min
எஸ்.என். கல்லூரியில் சிறப்பு சொற்பொழிவு
மதுரை பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரியில் 'இந்திய அரசியலமைப்புச் சட்டம் 370-ம், காஷ்மீரும்' என்ற தலைப்பில் கல்லூரியின் விவாதக்கழகம் சார்பில், மாணவர்களுக்கான சிறப்பு சொற்பொழிவு வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை
மதுரை அருகே கைப்பேசி அதிகம் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால், ஒன்பதாம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம்
அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்குவதில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்தார்.
1 min
கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறை
திண்டுக்கல் அருகே காரில் கஞ்சா கடத்தியவருக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஏஐடியூசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சரக்கு வாகனங்களுக்கு போக்குவரத்து காவல் துறையினர் கட்டாய அபராதம் விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏஐடியூசி சங்கம் சார்பில் மதுரையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு
மதுரையில் நிலத் தகராறு தொடர்பாக கடத்தப்பட்ட தொழிலதிபர் சுந்தரை தனிப்படை போலீஸார் மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் மீட்டனர்.
1 min
இளைஞர் கொலை: நண்பர் கைது
திருமங்கலத்தில் மதுப்புட்டியால் தாக்கி இளைஞர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக அவரது நண்பரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
1 min
மதுரை சிறையில் விசாரணைக் கைதி உயிரிழப்பு
மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
கிக் பாக்ஸிங்: வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு
மதுரை மாவட்ட அளவில் அண்மையில் நடைபெற்ற கிக் பாக்ஸிங் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
1 min
மதுரையில் விஷம் குடித்து தாய், மகள் தற்கொலை
மகன் கவலைக்கிடம்
1 min
அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து, அதிமுகவின் புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் மதுரை யா. ஒத்தக்கடையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்
தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் பதிலளிக்க உத்தரவு
தனியார் நிதி நிறுவன மோசடி குறித்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸார் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min
வக்ஃப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு: மேலப்பாளையத்தில் கடையடைப்பு
வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருநெல்வேலி மேலப்பாளையத்தில் வெள்ளிக்கிழமை கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
தனித்துப் போட்டி: சீமான் உறுதி
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.
1 min
உச்சநீதிமன்றத் தீர்ப்பு: தன்கரின் விமர்சனம் நெறிமுறையற்றது
உச்சநீதிமன்றத் தீர்ப்பு குறித்த, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரின் விமர்சனம் நெறிமுறையற்றது என்று திமுக துணைப் பொதுச் செயலர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்தார்.
1 min
சித்திரை முழுநிலவு மாநாடு: பாமகவினருக்கு ராமதாஸ் வேண்டுகோள்
மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு மாநாடு முன்பைவிட சிறப்பாக நடைபெற பாமகவினர் உழைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்தார்.
1 min
தொலைக்காட்சிப் பெட்டி பழுதை நீக்க மறுப்பு: ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
திருவாரூரில், தொலைக்காட்சிப்பெட்டியின் பழுதை நீக்க மறுத்ததற்காக ரூ. ஒரு லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என தனியார் நிறுவனத்துக்கு நுகர்வோர் குறைதீர் ஆணையம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
1 min
தூத்துக்குடி அனல் மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள் வேலைநிறுத்தம்
தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினர்.
1 min
தமிழகத்தில் எம்பி தொகுதியை குறைக்க முயற்சி
இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
1 min
குலசேகரன்பட்டினத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் ராக்கெட் ஏவப்படும்
தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் ஏவுதளத்திலிருந்து இன்னும் 2 ஆண்டுகளில் விண்ணில் ராக்கெட் செலுத்தப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறினார்.
1 min
இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்
சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் அவர்களது நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
ஆளுநர் ரவியை பதவி நீக்கக் கோரி ஏப்.25-இல் சாஸ்திரி பவன் முற்றுகை
மத்திய அரசைக் கண்டித்தும், தமிழக ஆளுநரை பதவி நீக்கம் செய்யக் கோரியும் சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் வரும் 25-ஆம் தேதி நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிவித்தார்.
1 min
கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு
கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிர்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக் கூடாது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணைப்பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் தெரிவித்தனர்.
1 min
வேடசந்தூர் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர்.
1 min
தூண்டப்பட்ட கலவரம்!
மேற்கு வங்கத்தில் ஓரளவுக்கு அமைதி திரும்பி இருக்கிறது என்கிற அளவில் சற்று ஆறுதல். ஆனாலும், நீறுபூத்த நெருப்பாக பிரச்னை இன்னும் தொடர்கிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
2 mins
தரமான கல்வி... வளமான வாழ்வு!
பள்ளிக் கல்விதான் ஒரு மாணவரின் ஆளுமையை நிர்ணயிக்கும். தற்போதைய நினைவாற்றல் அடிப்படையில் கற்பித்தல் முறையானது, மாணவனது சிந்திக்கும் திறனை வளர்க்காது. சுய சிந்தனையோடு ஒரு பொருண்மையை அலசி ஆராயும் அறிவாற்றல் கொண்டிருப்பது இன்றைய நவீன உலகத்தில் வெற்றி பெற இன்றியமையாததாகும்.
3 mins
குழந்தைத் திருமணம்... தேவை விழிப்புணர்வு!
இந்தியா விடுதலை அடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னும் குழந்தைத் திருமணங்கள் பரவலாக நடக்கின்றன என்பது நம் சமுதாயம் எந்த அளவுக்கு மாற்றங்களை ஏற்றுக்கொள்வதில் பின்தங்கிய நிலையில் இருக்கிறது என்பதையே தெரியப்படுத்துகிறது.
2 mins
ஜேஇஇ முதல்நிலை 2-ஆம் கட்ட தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வின் (ஜேஇஇ) இரண்டாம் கட்ட முதல்நிலை (மெயின்) தேர்வு முடிவுகள் சனிக்கிழமை (ஏப்.19) வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞர் கைவினைத் திட்டம்
இன்று முதல்வர் தொடங்கிவைக்கிறார்
1 min
குரூப் 1 தேர்வு: விண்ணப்பிக்க ஏப்.30 கடைசி
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப். 30-ஆம் தேதி கடைசி என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min
சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகள் வெளியீடு
உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு முடிவுகளை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
1 min
நியோமேக்ஸ் மோசடி: ரூ.600 கோடி சொத்துகள் முடக்கம்
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை
சட்டத்துக்கு அப்பாற்பட்டு யாருமில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழு
கல்லூரி மாணவர்களின் மோதலைத் தடுக்க சிறப்புக் குழுவை அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
1 min
நியாய விலைக் கடைகளில் அச்சிடப்பட்ட ரசீதுகள் வழங்க தமிழக அரசு உத்தரவு
நியாயவிலைக் கடைகளில் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அச்சிடப்பட்ட ரசீதுகளை வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
1 min
மேற்கு வங்க வன்முறை குறித்த வங்கதேச கருத்து: இந்தியா நிராகரிப்பு
மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நிகழ்ந்த வக்ஃப் திருத்தச் சட்ட வன்முறை தொடர்பான வங்கதேசத்தின் கருத்தை மத்திய அரசு வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
1 min
பெற்றோர் விவாகரத்து: குழந்தைக்கு துபை நீதிமன்றம் பயணத் தடை
'கணவன்-மனைவி இடையேயான பிரச்னைக்காக குழந்தைக்கு பயணத் தடை விதித்த துபை நீதிமன்றத்தின் உத்தரவு மனித உரிமைகளை மீறும் செயல் என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
1 min
எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு
அமெரிக்க அரசில் வலுவான ஆளுமை கொண்ட வரும் 'டெஸ்லா' கார் நிறுவனம், எக்ஸ் சமூக ஊடகம், 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனருமான எலான் மஸ்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக ஆலோசனை மேற்கொண்டார்.
1 min
ஆயுத ஏற்றுமதி ரூ.24,000 கோடி அளவுக்கு உயர்வு: ராஜ்நாத் சிங்
'2014-ஆம் ஆண்டில் ரூ. 600 கோடியாக இருந்த ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ தளவாட ஏற்றுமதி தற்போது ரூ. 24,000 கோடியாக உயர்ந்துள்ளது' என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்தார்.
1 min
இறந்ததாகக் கருதப்பட்ட சிறுவன் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி
பிகார் மாநிலம், தர்பங்கா மாவட்டத்தில் இறந்ததாக கருதப்பட்டு உடல்தகனம் செய்யப்பட்ட 17 வயது சிறுவன் உயிருடன் திரும்பியதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
1 min
ரூ.2,000-க்கு கூடுதலான யுபிஐ பரிவர்த்தனைக்கு ஜிஎஸ்டி?
மத்திய நிதியமைச்சகம் விளக்கம்
1 min
பாதுகாப்பு காரணங்களுக்காக எஃகு, அலுமினியம் மீது வரி விதிப்பு
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் எஃகு, அலுமினியம் மீது அந்த நாட்டின் பாதுகாப்பு கருதி வரி விதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக இந்தியாவுக்கு அமெரிக்கா பதில் அளித்தது.
1 min
12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் படித்தவர்களும் விமானியாக வாய்ப்பு
இந்தியாவில் 12-ஆம் வகுப்பில் கலை, வணிகவியல் பாடப் பிரிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பயணிகள் விமானியாக அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
1 min
கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' சட்டம்: கர்நாடக முதல்வருக்கு ராகுல் கடிதம்
கர்நாடகத்தில் கல்வி நிலையங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுக்க 'ரோஹித் வேமுலா' என்ற பெயரில் சட்டமியற்றக் கோரி, மாநில முதல்வர் சித்தராமையாவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதினார்.
1 min
உலக அளவில் அங்கீகரிக்கப்படும் இந்திய மின்னணு சாதனங்கள்
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்னணு சாதனங்கள் மற்றும் பொருள்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் ஏற்றுமதி கடந்த 10 ஆண்டுகளில் 6 மடங்காக அதிகரித்திருக்கிறது என்று மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
1 min
மேற்கு வங்கம்: வன்முறையால் பாதித்த மக்களைச் சந்தித்த என்ஹெச்ஆர்சி குழு
மேற்கு வங்க மாநிலத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பாதிக்கப்பட்ட மால்டா நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை தேசிய மனித உரிமைகள் ஆணைய (என்ஹெச்ஆர்சி) குழு வெள்ளிக்கிழமை சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தது.
1 min
3.40 லட்சம் டன் துவரம்பருப்பு கொள்முதல்: மத்திய அரசு நடவடிக்கை
விலை ஆதரவுத் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு இதுவரை 3.40 லட்சம் டன் துவரம் பருப்பை மத்திய அரசு கொள்முதல் செய்துள்ளது.
1 min
வணிகர்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
வணிகர்கள் விண்ணப்பித்த 7 நாள்களுக்குள் சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) பதிவை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (சிபிஐசி) அறிவுறுத்தியுள்ளது.
1 min
பஞ்சாபில் பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடைய இந்தியர் அமெரிக்காவில் கைது
பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக இந்தியாவால் தேடப்பட்டுவரும் சீக்கியரை அமெரிக்காவில் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது.
1 min
தேர்தல் ஆணையம் பதிலளிக்க மேலும் 3 வாரங்கள் அவகாசம்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் திருத்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் மேலும் 3 வாரங்கள் அவகாசம் வழங்கியது.
1 min
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக்க மம்தா பானர்ஜி முயற்சி
மேற்கு வங்கத்தை வங்கதேசமாக மாற்றும் வகையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசி வருகிறார் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 min
முதலிடத்தைக் கைப்பற்ற குஜராத்-டெல்லி இன்று மோதல்
மற்றொரு ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்-முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.
1 min
அரையிறுதியில் ஷெல்டன், செருண்டோலோ
மியுனிக் ஓபன் ஏடிபி டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு அமெரிக்க வீரர் பென் ஷெல்டன், ஆர்ஜென்டீனா வீரர் பிரான்ஸிஸ்கோ செருண்டோலா தகுதி பெற்றனர்.
1 min
'யுனெஸ்கோ' உலக நினைவுப் பதிவேட்டில் பகவத் கீதை, நாட்டிய சாஸ்திரம்
பிரதமர் மோடி பெருமிதம்
1 min
காலிறுதியில் கௌஃப், பெகுலா, அலெக்சாண்ட்ரோவா
ஸ்டட்கர்ட் டபிள்யுடிஏ 500 பார்ஷே டென்னிஸ் போட்டியில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னணி வீராங்கனைகள் கோகோ கௌஃப், ஜெஸிக்கா பெகுலா, அலெக்சாண்ட்ரோவா ஆகியோர் முன்னேறியுள்ளனர்.
1 min
சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸின் புதிய கிளை
முன்னணி வங்கியல்லா நிதி நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கர்நாடகத்தில் மேலும் ஒரு புதிய கிளையைத் திறந்தது.
1 min
வங்கதேசம்: ஹிந்து சமூக ஆர்வலர் கடத்திக் கொலை
வங்கதேசத்தின் தினாஜ்பூர் மாவட்டத்தில் ஹிந்து சமூக ஆர்வலர் ஒருவர் வீட்டில் இருந்து கடத்தப்பட்டு அடித்துக் கொலை செய்யப்பட்டதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
1 min
இன்ஃபோசிஸ் வருவாய் ரூ.40,925 கோடியாக உயர்வு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸின் வருவாய் கடந்த மார்ச் காலாண்டில் ரூ.40,925 கோடியாக உயர்ந்தது.
1 min
வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிவு
கடந்த ஜனவரி-மார்ச் காலாண்டில் இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை 19 சதவீதம் சரிந்தது.
1 min
மியான்மர்: முக்கிய நகரிலிருந்து பின்வாங்கியது கிளர்ச்சிப் படை
மியான்மரின் வடக்கே அமைந்துள்ள ஷான் மாகாணத்தின் மிகப் பெரிய நகரான லாஷியோவில் இருந்து அந்த நாட்டின் முக்கிய கிளர்ச்சிப் படையான மியான்மர் தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை வெள்ளிக்கிழமை பின்வாங்கியது.
1 min
சீன கப்பல்களுக்கு துறைமுகக் கட்டணம்
சீன சரக்குக் கப்பல்களுக்கு சிறப்பு துறைமுகக் கட்டணம் விதிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
1 min
யேமனில் அமெரிக்கா தாக்குதல்: 74 பேர் உயிரிழப்பு
யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதலில் 74 பேர் உயிரிழந்தனர்.
1 min
உக்ரைன் அமைதி முயற்சியைக் கைவிடுவோம்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுடனும் உக்ரைனுடனும் தாங்கள் நடத்திவரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் அந்த முயற்சியை முழுமையாகக் கைவிட்டுவிடுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரித்துள்ளார்.
1 min
மதுரை உள்பட 5 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது.
1 min
தில்லியில் தொடரும் விமானங்களின் தாமதம்
தில்லி விமான நிலையத்தின் மூன்று முனையங்களிலும் விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகை சேவைகளில் ஏற்படும் தாமதம் தொடர்பாக விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
1 min
மருத்துவக் கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ
நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.
1 min
இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம்
'தக் லைஃப்' திரைப்படப் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் கமல் ஹாசன், இந்தியாவின் தொடர்பு மொழி ஆங்கிலம் என்றார்.
1 min
2 கி.மீ. நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர்
பொன்னேரியில் இருந்து விழா மேடை வரை 2 கி.மீ. தொலைவு முதல்வர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று பொதுமக்களைச் சந்தித்து கை குலுக்கி மகிழ்ந்தார்.
1 min
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் சித்திரைத் தேர் திருவிழா தொடக்கம்
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only