Dinamani Madurai - March 07, 2025

Dinamani Madurai - March 07, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Madurai along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Madurai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
March 07, 2025
25 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை
டாஸ்மாக் மதுபானக் கொள்முதல் முறைகேடு புகார்
2 mins
பாம்பன் மீனவர்கள் 14 பேர் இலங்கை கடற்படையால் கைது
ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி துறைமுகத்திலிருந்து வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 14 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
1 min
சாலையோரங்களில் கொடிக் கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு செல்லும்
தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, சாலையோரங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு சரியே என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உறுதி செய்தது.
1 min
ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்
லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்
1 min
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் மும்மொழி பாடத் திட்ட கொள்கையை அமல்படுத்தக் கோரி தமிழகத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜி.எஸ். மணி உச்சநீதிமன்றத்தில் வியாழக்கிழமை பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
1 min
சட்டம்-ஒழுங்கு: மதுரையில் டிஜிபி ஆலோசனை
மதுரையில் காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவால் பங்கேற்ற சட்டம்-ஒழுங்கு ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
'தாட்கோ' மூலம் மருத்துவப் பயிற்சி: ஆதிதிராவிடர் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்பட உள்ள மருத்துவப் பயிற்சியில் சேர விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.
1 min
இலவச பல் மருத்துவ முகாம்
மதுரை நாகமலைப்புதுக்கோட்டை ச.வெள்ளைச்சாமி நாடார் கல்வியியல் கல்லூரி, வைகை பல் மருத்துவமனை ஆகியவை சார்பில், இலவச பல் மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கோடைப் பருவம்: மதுரை மாவட்டத்தில் வேளாண் பணிகள் மும்முரம்
கோடைப் பருவக் காலம் தொடங்கியதை அடுத்து, மதுரை மாவட்டத்தில் நெல் நாற்றுகளை நடவு செய்தல் உள்ளிட்ட வேளாண் பணிகள் மும்முரமாக நடைபெறுகின்றன.
1 min
ஆவினுக்கு பால் நிறுத்தப் போராட்டம்
பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அறிவிப்பு
1 min
சாலை விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழப்பு
மதுரை அருகே நாகமலைப்புதுக்கோட்டை நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை இரு சக்கர வாகன விபத்தில் தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
1 min
திருமங்கலத்தில் பத்திரப் பதிவு அலுவலக புதிய கட்டடம் திறப்பு
திருமங்கலத்தில் ரூ.1.50 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட பத்திரப் பதிவு அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் வியாழக்கிழமை திறந்துவைத்தார்.
1 min
வி.ஏ.ஓ.வுக்கு மிரட்டல்: பார்வர்டு பிளாக் நிர்வாகி மீது வழக்கு
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சான்றிதழ்கள் வழங்கக் கோரி, கிராம நிர்வாக அலுவலரை (வி.ஏ.ஓ.) தரக்குறைவாகப் பேசி மிரட்டல் விடுத்த பார்வர்டு பிளாக் மாவட்டச் செயலர் மீது போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
மன்னர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு
மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் ஆங்கிலத் துறை, ஆராய்ச்சி மையம் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
1 min
போலி பணி நியமன ஆணை வழங்கி பண மோசடி
போலி பணி நியமன ஆணை வழங்கி, ரூ.4.52 லட்சம் மோசடி செய்தவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
1 min
வைகை அணையை தூர்வார வலியுறுத்தல்
மதுரை உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் வேளாண், குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமான வைகை அணையைத் தூர்வார வேண்டும் என வைகை-திருமங்கலம் பிரதான பாசனக் கால்வாய் நீரைப் பயன்படுத்தும் விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
1 min
புதிய பள்ளிக் கட்டடத்துக்கு பூமிபூஜை
கீழையூரில் கிரானைட் தொழிலதிபர் கோபாலகிருஷ்ணன் தானமாக வழங்கிய 2 ஏக்கர் நிலத்தில் ரூ.2.11 கோடியில் வகுப்பறை கட்டடத்துக்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
மதுரையில் கால்வாயில் தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.
1 min
மார்ச் 21-இல் அஞ்சலக குறைதீர் கூட்டம்
மதுரை அஞ்சலகக் கோட்டம் சார்பில், வருகிற 21-ஆம் தேதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.
1 min
திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலை. நிர்வாகத்தில் உள்ள கல்லூரிகளைப் பிரித்து, திண்டுக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு புதிய பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழு அரசுக்குப் பரிந்துரைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.
1 min
வீடு புகுந்து நகை திருடிய பெண் உள்பட மூவர் கைது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் வீடு புகுந்து நகை, கைப்பேசிகளைத் திருடிய வழக்கில் மதுரையைச் சேர்ந்த பெண் உள்பட மூவரை போலீஸார் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
'தமிழக மக்கள் ஹிந்தி கற்பதை திமுக அரசு தடுக்கிறது'
மும்மொழிக் கொள்கை மூலம் தமிழக மக்கள் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ளவிடாமல் திமுக அரசு துரோகம் இழைத்து வருகிறது என்று பாஜக மாநில பொதுச் செயலர் ராம சீனிவாசன் தெரிவித்தார்.
1 min
பங்குனித் தேரோட்டம்: திருப்பரங்குன்றத்தில் முன்னேற்பாடுகள் மும்முரம்
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா தேரோட்டத்தையொட்டி, சுவாமியின் வாகனங்களைத் தூய்மைப்படுத்தும் பணியும், கிரிவலப் பாதையில் சீரமைப்புப் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
1 min
கண்மாய், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவு
சிவகங்கை மாவட்டம், காளையார் கோவில் ஊராட்சிக்குள்பட்ட செட்டியூரணி கண்மாய், வரத்துக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
1 min
கச்சத்தீவுக்கு ‘பைபர்’ படகில் செல்ல அனுமதி: தமிழக அரசு முடிவெடுக்க உத்தரவு
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழாவுக்கு கண்ணாடியிழைப் படகில் (பைபர் படகு) செல்ல அனுமதி கோரிய வழக்கில், தமிழக அரசு முடிவெடுக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
முகநூல் மூலம் முதியவரிடம் நகைகள், பணம் பறிப்பு: பெண் கைது
முகநூல் (ஃபேஸ்புக்) மூலம் முதியவரிடம் பழகி 83 பவுன் தங்க நகைகள், ரூ. 46 லட்சத்தை பறித்த இளம் பெண்ணை விருதுநகர் இணையவழி குற்றத் தடுப்புப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min
மதுரை உள்பட 8 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் ஈரோடு, பரமத்திவேலூர், மதுரை விமான நிலையம் உள்பட 8 இடங்களில் வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
இரு மொழி கொள்கையே சரியானது
தமிழகத்தில் பின்பற்றப்படும் இருமொழிக்கொள்கையே சரியானது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min
பொதுக் கூட்ட மேடையில் அதிமுக நிர்வாகியை தாக்கிய முன்னாள் அமைச்சர்
விருதுநகர் தேசபந்து மைதானத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாள் பொதுக் கூட்டம் அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமையில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
ஒரே நாளில் 2-ஆவது முறை தங்கம் விலையில் மாற்றம்: பவுன் ரூ.64,480
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை ஒரே நாளில் இருமுறை ஏறி, இறங்கி பவுன் ரூ. 64,480-க்கு விற்பனையானது.
1 min
ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணம்
ராமேசுவரம் - காசி இடையேயான முதல் கட்ட ஆன்மிக பயணத்தை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள்
பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க 39 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
1 min
4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்கள் ஜூன் மாதத்துக்குள் நிரப்பப்படும்
மார்ச் மாத இறுதிக்குள் 1,000 கௌரவ விரிவுரையாளர்களும், ஜூன் மாதத்துக்குள் 4 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
1 min
மத்திய அரசுப் பணிக்கு ஐஜி சுதாகர் மாற்றம்
தமிழக காவல் துறையில் ஐஜியாக பணிபுரியும் ஆர். சுதாகர், அயல் பணியாக மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டார்.
1 min
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 3,019 கோடி வங்கிக் கடன்
நாளை முதல்வர் வழங்குகிறார்
1 min
தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
1 min
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் முன்வர வேண்டும்
திமுக ஆட்சியில் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை காக்க முதல்வர் முன்வர வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 min
ஓவியம், சிற்பம் படைப்பாளிகளுக்கு கலைச் செம்மல் விருது
ஓவியம், சிற்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் படைப்பாளிகள் ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம்
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை தொடர்பாக முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு.
1 min
தமிழகத்துக்கு இரு மொழி கொள்கையே சிறந்தது
தமிழகத்துக்கு இரு மொழி கொள்கையே சிறந்தது; ஹிந்தி மொழியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
1 min
அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min
பாளை. அருகே கொலை வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனை: 4 பேருக்கு ஆயுள் சிறை
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே நிகழ்ந்த கொலை தொடர்பான வழக்கில் ஒருவருக்கு மரண தண்டனையும், 4 பேருக்கு ஆயுள் சிறைதண்டனையும் விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல; நாட்டின் பெருமை
‘லண்டனில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை’ என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
1 min
வெப்பநிலை அதிகரிப்பு: களப் பணியாளர்களின் வேலை நேரத்தை மாற்றியமைக்க அறிவுறுத்தல்
தமிழகத்தில் அடுத்து வரும் வாரங்களில் பகல் வேளைகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் வெயிலில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
1 min
நக்கீரன் கோபால் - சுகிதாவுக்கு கலைஞர் எழுதுகோல் விருது
பத்திரிகையாளர்கள் நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜ் ஆகியோருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினார்.
1 min
பிற உயிர்கள் காப்போம்!
எந்த மருத்துவரும், தானிய உணவுகள், காய்கறி, பழங்கள், கீரை வகைகளை விட புலால் உணவு மனிதனுக்குச் சிறந்தது என்று மனமுவந்து பரிந்துரைப்பதில்லை. முடிந்தவரை புலால் உணவைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் அறிவுறுத்துகிறார்கள்.
2 mins
தேவை... பணியிட மாற்றத்தில் மாற்றம்!
தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்.) மற்றும் இந்திய காவல் பணி (ஐ.பி.எஸ்.) அதிகாரிகள் அடிக்கடி பணி யிட மாற்றம் செய்யப்படுவதால் நிர்வாகமும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
2 mins
மகாராஷ்டிரத்தில் வசிப்பவர்கள் மராத்தி கற்க வேண்டும்
'மகாராஷ்டிரத்தின் மொழி மராத்தி. எனவே, இங்கு வசிப்பவர்கள் மராத்தி கற்றுக் கொள்ளவும், பேசவும் வேண்டும் என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்தார்.
1 min
12 சார்-பதிவாளர் அலுவலக புதிய கட்டடங்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்தன: டிஜிபி அலுவலகம் தகவல்
தமிழகத்தில் கொலை, திருட்டுக் குற்றங்கள் குறைந்துள்ளன என்று டிஜிபி அலுவலகம் தெரிவித்துள்ளது.
1 min
சநாதன விவகாரம்: உதயநிதி மீது புதிதாக வழக்குப் பதிவு செய்யத் தடை
சநாதன தர்மம் தொடர்பான பேச்சுக்காக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக புதிதாக வழக்கு பதிவு செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகள் மீது பாரபட்சம் ஏன்?
ஹிந்தியை தவிர மற்ற இந்திய மொழிகளை மத்திய அரசு பாரபட்சமாக அணுகுவது ஏன் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
2 mins
தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறை: காங்கிரஸ் வலியுறுத்தல்
மக்களவைத் தொகுதி மறுசீரமைப்புக்கு புதிய நடைமுறையை வகுக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
1 min
இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் இலங்கை அரசு வேண்டுகோள்
இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடிப்பதை தடுக்க வேண்டும் என்று இந்தியாவுக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min
தீவிர வலதுசாரி குணாதிசயங்களை வெளிப்படுத்தும் டிரம்ப், மோடி
பிரகாஷ் காரத் குற்றச்சாட்டு
1 min
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியை உச்சநீதிமன்றத்துக்கு பதவி உயர்த்த பரிந்துரை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ஜய மால்ய பாக்சியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.
1 min
நாடு முழுவதும் எஸ்டிபிஐ அலுவலகங்களில் சோதனை
அமலாக்கத் துறை நடவடிக்கை
1 min
கர்நாடகம்: சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டில் அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த சோதனை
கர்நாடகத்தில் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துக்குவித்த வழக்கில், 8 அரசு அலுவலகங்களில் லோக் ஆயுக்த அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.
1 min
பிகாரில் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி
ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் வாக்குறுதி
1 min
கூட்டுறவுத் துறை - பிரதமர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
பிரதமர் மோடி தலைமையில் கூட்டுறவுத் துறை உயர்நிலைக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min
தெலங்கானா மேலவைத் தேர்தல்: 3-இல் 2 இடங்களில் பாஜக வெற்றி
தெலங்கானா மேலவையில் காலியாக இருந்த 3 இடங்களுக்கு கடந்த பிப்ரவரி 27-இல் நடைபெற்ற தேர்தலில் 2 இடங்களில் பாஜக வெற்றிபெற்றது.
1 min
இந்தியாவுக்கு நாடு கடத்த தஹாவூர் ராணா எதிர்ப்பு
அமெரிக்க உயர்நீதிமன்றத்தில் மனு
1 min
ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடர்புடைய காலிஸ்தான் பயங்கரவாதி கைது
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டிய காலிஸ்தான் பயங்கரவாதியை கௌசாம்பி மாவட்டத்தில் காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
1 min
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி: ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் வெற்றி
தேசிய சீனியர் மகளிர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டியில் ஜார்க்கண்ட், தெலங்கானா, பெங்கால் அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி பெற்றன.
1 min
ஒஸாகா, குவிட்டோவா அதிர்ச்சித் தோல்வி
இண்டியன்வெல்ஸ் பிஎன்பி பரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகள் நவோமி ஒஸாகா, பெட்ரா குவிட்டோவா ஆகியோர் முதல் சுற்றிலேயே அதிர்ச்சித் தோல்வியடைந்து வெளியேறினர்.
1 min
சென்னையில் ஏப். 12-இல் மோட்டார் சாகச நிகழ்ச்சி
சென்னையில் வரும் ஏப். 12-ஆம் தேதி ரெட்புல் மோட்டோ ஜாம் (மோட்டார் சாகச நிகழ்ச்சி) நடைபெறவுள்ளது.
1 min
WPL அமெலியா, ஹெய்லியால் மும்பை அபார வெற்றி
யுபி 150/9, மும்பை 153/4
1 min
ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்
சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்
1 min
வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்கள் எண்ணிக்கை சிறு நகரங்களில் அதிகரிப்பு: ஆய்வறிக்கையில் தகவல்
நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் வேலைக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந்திருப்பதாக தனியார் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.
1 min
சொந்த நாட்டில் குண்டு வீசிய தென் கொரிய போர் விமானம்
அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு ராணுவப் பயிற்சியின்போது தென் கொரியாவைச் சேர்ந்த போர் விமானம் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் குண்டுகளை வீசியதில் 8 பேர் காயமடைந்தனர்.
1 min
ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை 17% சரிவு
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் மொத்த விற்பனை கடந்த பிப்ரவரியில் 17 சதவீதம் சரிந்துள்ளது.
1 min
4 ஐஎம்எல் நட்சத்திரங்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி: பிஒபி நடத்தியது
இன்டர்நேஷனல் மாஸ்டர் லீக் (ஐஎம்எல்) கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் நான்கு நட்சத்திர வீரர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியை, முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான பரோடா வங்கி (பிஒபி) நடத்தியது.
1 min
அமெரிக்காவுக்கு பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18% உயர்வு
கடந்த ஜனவரியில் அமெரிக்காவிற்கான இந்தியாவின் பொறியியல் பொருள்கள் ஏற்றுமதி 18 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
1 min
மீண்டும் 74,000-ஐ கடந்தது சென்செக்ஸ்
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் உயர்ந்து மீண்டும் 74,000 புள்ளிகளைக் கடந்து நிலைபெற்றது. நிஃப்டியும் 22,500 புள்ளிகளுக்கு மேல் சென்று நிறைவடைந்தது.
1 min
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
1 min
ஹமாஸுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கை
தங்களிடம் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கவில்லையென்றால், ஹமாஸ் படையினர் அழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'இறுதி' எச்சரிக்கை விடுத்தார்.
1 min
உக்ரைனுக்கு ராணுவ உளவு தகவல்கள்: பிரான்ஸ் அறிவிப்பு
ரஷ்யாவுடன் நடக்கும் போரில் உக்ரைனுக்கு ராணுவ உளவுத் தகவல்களை தாங்கள் அளிப்பதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
1 min
குறைகள் தீர...
வந்த நடுத்தர உயரம், தலையில் குல்லா, அரையாடை, அருள் தரும் முகம், கருணை விழிகள், மந்திரங்களை உச்சரிக்கும் உதடுகள், சைகை மொழி பார்வை.. என்ற சிறப்புகளைக் கொண்ட அவர் சின்னபாபுசமுத்திரத்தில் உள்ள மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார்.
1 min
பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ் பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர்.
1 min
வெற்றிகள் கிடைக்க...
தாமிரவருணி கரையில் சிறப்புமிக்கத் தலங்களில் வெள்ளூர் நடுக்குரங்களில் ஒன்றாகும். ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள வெள்ளூர் கிராமத்தின் பழம்பெருமையை பறைசாற்றும் வகையில், பெருமாள் கோயிலும், சிவன் கோயிலும் அமைந்துள்ளன.
1 min
Dinamani Madurai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only