Dinamani Karur - May 20, 2025

Dinamani Karur - May 20, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 20, 2025
பருவமழை முன்னெச்சரிக்கை தயார் நிலை
மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு
1 min
ரூ.6,200 கோடி கடன் மோசடி: யூகோ வங்கி முன்னாள் தலைவர் கைது
பொதுத் துறை வங்கியான யூகோ வங்கியில் ரூ.6,200 கோடி கடன் மோசடி மற்றும் கருப்புப் பணப் பரிமாற்றக் குற்றச்சாட்டில் கொல்கத்தாவில் உள்ள யூகோ வங்கி முன்னாள் தலைவர் சுபோத் குமார் கோயலை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
1 min
பாகிஸ்தானுடனான சண்டையின்போது அணு ஆயுத அச்சுறுத்தல் எழவில்லை: மிஸ்ரி
'இந்தியா-பாகிஸ்தான் இடையேயான ராணுவ சண்டை வழக்கமான முறையிலேயே நடைபெற்றது; அணு ஆயுத அச்சுறுத்தல் எதுவும் எழவில்லை' என்று வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
1 min
அகதிகளை வரவேற்க இந்தியா தர்மசத்திரம் அல்ல
இலங்கைத் தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
1 min
குடும்பப் பிரச்னை: பெண் தூக்கிட்டுத் தற்கொலை
பெரம்பலூர் அருகே குடும்பப் பிரச்னை காரணமாக, பெண் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
1 min
ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலம் மீட்பு
மைலம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
1 min
தோகைமலை பகவதி அம்மன் கோயில் திருவிழா நிறைவு
கரூர் மாவட்டம், தோகைமலை பகவதி அம்மன் கோயில் திருவிழா திங்கள்கிழமை கிடாவெட்டுதலுடன் நிறைவடைந்தது.
1 min
பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்ட பயனாளிகள் முதிர்வுத் தொகை பெறலாம்
முதலமைச்சரின் 2 பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை ரசீது பெற்ற 18 வயது நிரம்பியவர்கள் முதிர்வுத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ்.
1 min
அரியலூரில் தேர்தல் தொடர்பான கண்காணிப்பு குழுக் கூட்டம்
அரியலூர் மாவட்டத்தில், தேர்தலை எளிதில் அணுகுவது தொடர்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
குற்றவாளிகள், ரவுடிகளின் வீடுகளில் போலீஸார் சோதனை
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குற்றவாளிகள் மற்றும் ரவுடிகளின் வீடுகளில் போலீஸார் திங்கள்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
1 min
கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை நாளை பயிற்சி முகாம்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் அருகே பண்டுதாரன் புதூரில் கால்நடை வளர்ப்பில் தீவன மேலாண்மை பற்றிய இலவச பயிற்சி முகாம் நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது.
1 min
நாட்டார்மங்கலத்தில் செல்லியம்மன் சுவாமி வீதியுலா
பெரம்பலூர் மாவட்டம், நாட்டார்மங்கலம் கிராமத்தில் செல்லியம்மன் சுவாமி வீதியுலா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
தூத்தூர் அருகே மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு
அரியலூர் மாவட்டம், தூத்தூர் அருகே அறுந்துக் கிடந்த மின்கம்பியை மிதித்து, ஒரு பெண் மற்றும் 3 பசுக்கள் உயிரிழந்திருப்பது ஞாயிற்றுக்கிழமை இரவு தெரியவந்தது.
1 min
குன்னம் வட்டத்தில் நாளை ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்திற்குள்பட்ட கிராமங்களில் உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை (மே 21) நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
தரைக்கடைகளை அகற்றக் கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் சாலை மறியல்
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் தற்காலிக வாரச் சந்தையில், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள தரைக்கடைகளை அகற்றக்கோரி டாக்டர் அம்பேத்கர் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
1 min
பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் காதொலி கருவிகள் வழங்கல்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் பயனாளிகளுக்கு காதொலி கருவிகளை வழங்கினார்.
1 min
அரியலூரில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
76 இடங்களை கண்காணிக்க அலுவலர்கள் நியமனம்
கரூர் மாவட்டத்தில் பருவ மழை பாதிப்பை தடுக்க முன்னேற்பாடு
1 min
எடப்பாடி பழனிசாமியுடன் மு.தம்பிதுரை சந்திப்பு
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும், எம்.பி.யுமான மு.தம்பிதுரை திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
1 min
சிறுமிக்கு பாலியல் தொல்லை: வளர்ப்பு தந்தை கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வளர்ப்பு தந்தையை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் சேதம்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை பெய்த பலத்த மழையால், அரசலூர் நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் வைத்திருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
1 min
3 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
பெரம்பலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை போலீஸார் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனர்.
1 min
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டவாய்த்தலையில் இன்று சிறிது நேரம் நிறுத்தம்
பாலக்காடு-திருச்சி பயணிகள் ரயில் குளித்தலை, பேட்டவாய்த்தலையில் செவ்வாய்க்கிழமை (மே 20) சிறிது நேரம் நிறுத்தப்படும் என தெற்கு ரயில்வே சேலம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
இணையதளம் முடக்கத்தால் ஊராட்சிகளில் வரிவசூல் பணி பாதிப்பு
தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளில் இணையதளம் முடக்கம் காரணமாக சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்டவற்றை வசூலிக்கும் பணிகள் 45 நாள்களாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
1 min
தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 1,500 மாணவர்களுக்கு பணி உறுதி கடிதங்கள்
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் 1,500 மாணவர்களுக்கு பணி உறுதி கடிதங்கள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
கார் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் பைக் மீது கார் மோதியதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
1 min
மரத்தில் கார் மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு
திருவண்ணாமலை அருகே சாலையோர மரத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயமடைந்தனர்.
1 min
குப்பையில் கிடந்த 12.5 பவுன் நகையை எடுத்து போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்!
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் குப்பையில் கிடந்த 12.5 பவுன் தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை பலரும் பாராட்டினர்.
1 min
நீச்சல் குளத்தில் மூழ்கிய இளைஞர் உயிரிழப்பு
வலிப்பு ஏற்பட்டு உறவினர் உயிரிழப்பு
1 min
விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழப்பு
பல்லடம் அருகே சாய ஆலையில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்த 2 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி திங்கள்கிழமை உயிரிழந்தனர்.
1 min
மோட்டார் சைக்கிள்கள் மோதல்: இருவர் உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் அருகே இரு பைக்குகள் மோதியதில் கடையநல்லூரைச் சேர்ந்த தொழிலதிபர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர்.
1 min
பொறியியல் பணிகள்: ரயில் சேவைகளில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min
தென்காசியில் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொன்றதாக 5 சிறுவர்கள் கைது
தென்காசியில் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்ததாக 5 சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்; மேலும், மூவரைத் தேடி வருகின்றனர்.
1 min
சிவகிரி, பல்லடம் தம்பதிகள் உள்ளிட்ட ஐவர் கொலை வழக்கில் 4 பேர் கைது
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
2 mins
புதுக்கோட்டை திலகர் திடலில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். உடன் கட்சியினர்.
ஆதிதிராவிட மக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களில் ஆட்சியர்கள், காவல்துறையினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றார் விசிக தலைவர் தொல். திருமாவளவன்.
1 min
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை
தமிழகத்தில் கரோனா அச்சுறுத்தல் இல்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
1 min
ஆளுநருடன் எந்த பிரச்னையும் இல்லை: புதுவை முதல்வர் என்.ரங்கசாமி
புதுவை துணைநிலை ஆளுநருடன் தனக்கு எந்த பிரச்னையும் இல்லை என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்தார்.
1 min
அரசுப் பள்ளிகளில் அலுவலகப் பணியாளர்களின் வேலை நேரம் மாற்றம்
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணி நேரத்தை மாற்றியமைத்து பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் பி.சந்தரமோகன் உத்தரவிட்டுள்ளார்.
1 min
வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கோரி போராட்டம்
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தமிழகம் முடங்கும் வகையில் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
1 min
மாணவி வெளியே அமர்ந்து தேர்வு எழுதிய விவகாரம்: பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரண்
கிணத்துக்கடவு அருகே பூப்பெய்திய மாணவியை வெளியே அமர வைத்து தேர்வு எழுதவைக்கப்பட்ட விவகாரத்தில் தனியார் பள்ளி முதல்வர் உள்பட 3 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
1 min
டாஸ்மாக் துணைப் பொது மேலாளரிடம் அமலாக்கத் துறை தீவிர விசாரணை
டாஸ்மாக் கில் ரூ.1,000 கோடி முறைகேடு புகார் தொடர்பாக, அந்த நிறுவனத்தின் துணை பொது மேலாளரிடம் அமலாக்கத் துறையினர் திங்கள்கிழமை தீவிர விசாரணை செய்தனர்.
1 min
கோவை மத்திய சிறைச் சாலைக்கு ரூ.211 கோடியில் புதிய கட்டடங்கள்
கோவை மத்திய சிறைச் சாலைக்கு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் திங்கள்கிழமை நாட்டப்பட்டது.
1 min
வாக்குச் சாவடி முகவர்களுக்கு பயிற்சி தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை
வாக்குச் சாவடி முகவர்களுக்கு தில்லியில் நடைபெறவுள்ள பயிற்சி தொடர்பாக, தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தினார்.
1 min
அரக்கோணத்தில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்
இளம்பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் அரக்கோணத்தில் புதன்கிழமை (மே 21) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.
1 min
பெரியார் பல்கலை. துணைவேந்தர் பணி நிறைவு
பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ரா.ஜெகந்நாதன் திங்கள்கிழமை பணி நிறைவு பெற்றார்.
1 min
தொடரும் முதியோர் கொலை!
தமிழகத்தில் தனியே வசிக்கும் முதியோர் பல்வேறு காரணங்களுக்காக கொல்லப்படுவது அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
2 mins
ஒருமனதாக தீர்மானம் தேவை!
கிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலிருந்து செயல்படும் பயங்கரவாதிகளையும், அவர்களது பயிற்சி முகாம்களையும் முற்றிலும் அழித்தொழிக்கும் இலக்குடன் இந்தியா மேற்கொண்ட 'சிந்தூர்' ராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடியும், நமது முப்படைகளின் உயர் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
2 mins
நிழலின் அருமையும் வெயிலின் பெருமையும்!
மின்சாரம் வந்த பிறகு, பெளர்ணமி நிலவின் அழகும் அமாவாசை இருளின் செறிவும் அறியப்படாது போயின. சுழலும் மின் விசிறிகள் வந்த பிறகு, தென்னை, பனை ஓலை விசிறிகள் காணாமல் போய்விட்டன. கதிரொளி படாத சுனையின் குளிர் நீரை, பிரிட்ஜ் பெட்டிகள் தருகின்றன. குளிரக் குளிரக் காற்று தரும் ஏ.சி. கருவிகள் மலிந்துவிட்டன.
3 mins
'சாம்சங்' ஊழியர்களுக்கு ரூ.18,000 ஊதிய உயர்வு
முத்தரப்பு பேச்சில் உடன்பாடு
1 min
மாதம் ஒரு ராக்கெட் திட்டம்: இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்
இனி மாதம் ஒரு ராக்கெட் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்தார்.
1 min
அரசு ஊழியர்களுக்கு ஆயுள் - விபத்துக் காப்பீடு
முதல்வர் முன்னிலையில் வங்கிகளுடன் ஒப்பந்தம்
1 min
வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் மௌனம் கண்டிக்கத்தக்கது
அபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைகுறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தியா இழந்த விமானங்களின் எண்ணிக்கை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
1 min
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணியை மேற்கொள்ளும் விவகாரத்தில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை 3 வாரங்களில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கும் முழு ஓய்வூதியம்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கூடுதல் நீதிபதிகள் உள்பட அனைத்து உயர்நீதிமன்ற நீதிபதிகளும் முழு ஓய்வூதியம் பெற தகுதியானவர்கள் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புக்காக உளவு பார்த்த மேலும் 3 பேர் கைது
இந்தியாவில் பல்வேறு தகவல்களைச் சேகரித்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு விற்பனை செய்து வந்த 3 மேலும் பேர் கைது செய்யப்பட்டனர்.
1 min
போர்ச்சுகல் இந்திய தூதரகத்தை முற்றுகையிட்ட பாகிஸ்தானியர்கள்
போர்ச்சுகல் நாட்டின் தலைநகர் லிஸ்பனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு பாகிஸ்தானியர்கள் சிலர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
1 min
மாயாவதி கட்சியில் மருமகனுக்கு மீண்டும் உயர் பதவி
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைமை தேசிய ஒருங்கிணைப்பாளராக தனது சகோதரின் மகன் ஆகாஷ் ஆனந்தை அக்கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.
1 min
பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிக்கு ஜிஹாத் கவுன்சில் இரங்கல்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட முக்கிய பயங்கரவாதி ரஸாவுல்லா நிஜாமனி காலித்துக்கு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஐக்கிய ஜிஹாத் கவுன்சில் (யுஜேசி) என்ற பயங்கரவாத கூட்டமைப்பு இரங்கல் தெரிவித்தது.
1 min
நெதர்லாந்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
3 நாடுகள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் திங்கள்கிழமை நெதர்லாந்து வந்தடைந்தார்.
1 min
இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் முழுமைபெற ஆக்கபூர்வமான பங்களிப்பு
இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தம் முழுமையாக அமலுக்கு வர ஆக்கபூர்வமான பங்களிப்பை சீனா மேற்கொள்ளும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
அமிருதசரஸ் பொற்கோயிலைத் தாக்க முயன்ற பாகிஸ்தான்
நடுவானில் ஏவுகணையை அழித்தது இந்திய ராணுவம்
1 min
பயங்கரவாத எதிர்ப்புக் குழுவுக்கான பிரதிநிதிகள் பரிந்துரை
ரிஜிஜு கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
1 min
ஆந்திரம்: காருக்குள் சிக்கிய 4 சிறார்கள் மூச்சுத் திணறி உயிரிழப்பு
ஆந்திரத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் காருக்குள் சிக்கிய 4 சிறார்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
1 min
சம்பல் மசூதி ஆய்வுக்கு எதிரான மனு: அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி
உத்தர பிரதேச மாநிலம் சம்பலில் உள்ள ஷாஹி ஈத்கா மசூதியின் ஆய்வுக்கு எதிராக மசூதி நிர்வாக குழு தாக்கல் செய்த மனுவை அலாகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
1 min
ரயில் நிலையத்தில் எச்சில் உமிழ்ந்தவர்களிடம் 3 மாதத்தில் ரூ.32 லட்சம் அபராதம் வசூல்
கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கிழக்கு ரயில்வேயில் கடந்த 3 மாதங்களில் ரயில் நிலைய வளாகத்தில் எச்சில் உமிழ்ந்தவர்களிடம் இருந்து ரூ.32 லட்சத்துக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
1 min
தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உச்சநீதிமன்றம் முன்னெடுப்பு
உச்சநீதிமன்ற நீதிபதி எஸ்.ஓகா
1 min
நடைமுறை நெறிகளை பின்பற்றுவது அவசியம்: ஜகதீப் தன்கர்
நடைமுறை நெறிகளைப் பின்பற்றி நடப்பது அவசியமானது என குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு
அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
1 min
தனியார் பங்கேற்பை அனுமதிக்க அணுசக்தி சட்டத்தில் திருத்தம்: மத்திய அரசு திட்டம்
வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் 100 ஜிகா வாட் அணு மின் உற்பத்தி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இத்துறையில் தனியாரை அனுமதிக்கும் வகையில் துறை சார்ந்த ஒழுங்காற்று ஆணையம் உள்பட அணுசக்தி துறை சார்ந்த நடைமுறைச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
1 min
மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பெங்களூரு: பெண் உயிரிழப்பு
பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் பெய்த பலத்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்தது. மழையின்போது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து ம.பி. அமைச்சர் சர்ச்சை கருத்து எஸ்ஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
கர்னல் சோஃபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக 3 பேர் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைத்து விசாரணை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
வாகை சூடினார் அல்கராஸ்
இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் சாம்பியன் கோப்பை வென்றார்.
1 min
மாலத்தீவில் ரூ.55 கோடியில் இந்தியாவின் 13 நலத் திட்டங்கள்
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பம்
1 min
இத்தாலி கிராண்ட் ப்ரீ: வெர்ஸ்டாபென் வெற்றி
ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் நடப்பு சீசனில் 7-ஆவது ரேஸான இத்தாலி கிராண்ட் ப்ரீயில் நெதர்லாந்து வீரரும், ரெட் புல் டிரைவருமான மேக்ஸ் வெர்ஸ்டாபென் வெற்றி பெற்றார்.
1 min
எஸ்ஆர்எம்-ஃபிடே சர்வதேச ரேட்டிங் செஸ்: சைலேஷுக்கு தங்கம்
சென்னையில் நடைபெற்ற எஸ்ஆர்எம்-ஃபிடே சர்வதேச ரேட்டிங் ஓபன் செஸ் போட்டியில் ஆர். சைலேஷ் தங்கம் வென்றார்.
1 min
யு19 தெற்காசிய கால்பந்து: கோப்பையை தக்கவைத்தது இந்தியா
பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு19) தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப்பில், இந்தியா 2-ஆவது முறையாக கோப்பை வென்றது.
1 min
காஸா முழுவதையும் இஸ்ரேல் கட்டுப்படுத்தும்
காஸாவின் அனைத்துப் பகுதிகளையும் இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று அந்த நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார்.
1 min
ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: பங்குச்சந்தை 2-ஆவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது.
1 min
சென்னையில் டெய்கின் இந்தியாவின் புதிய அலுவலகம்
ஜப்பானைச் சேர்ந்த டெய்கின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி ஏர் கண்டிஷனிங் நிறுவனங்களில் ஒன்றுமான டெய்கின் ஏர்-கண்டிஷனிங் இந்தியா பிரைவேட் லிமிடெட், சென்னையில் புதிய பிராந்திய அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்தது.
1 min
தொலைபேசியில் டிரம்ப்-புதின் பேச்சு
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொலைபேசியில் திங்கள்கிழமை பேச்சுவார்த்தை நடத்தினார்.
1 min
ருமேனியா அதிபர் தேர்தலில் மிதவாதத் தலைவர் வெற்றி
ருமேனியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஐரோப்பிய யூனியனுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட மிதவாதியான நிக்யூசர் டான் 53.60 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 min
ஜோ பைடனுக்கு புற்றுநோய்
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு (82) புராஸ்டேட் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
1 min
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,233 கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து திங்கள்கிழமை காலை விநாடிக்கு 6,233 கனஅடியாக அதிகரித்தது.
1 min
மீண்டும் ரூ. 70 ஆயிரத்தை கடந்தது தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 280 உயர்ந்து ரூ. 70,040-க்கு விற்பனையானது.
1 min
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தேர்வு: மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது.
1 min
டிஐசிசிஐ தரப்பு வாதத்தையும் கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
தூய்மைப் பணியாளர்களை தொழில்முனைவர்களாக மாற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டத்தில் (ஏஏபிசிஎஸ்) முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்புடைய வழக்கில் தலித் இந்திய வர்த்தக, தொழில் சபையின் (டிஐசிசிஐ) தரப்பு வாதத்தையும் கேட்குமாறு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியுள்ளது.
1 min
பழனி அருகே 18-ஆம் நூற்றாண்டு ஓலைச் சுவடி கண்டெடுப்பு
பழனி அருகேயுள்ள நெய்க்காரப்பட்டியில் கி.பி. 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த உலக நீதி நன்னெறி நூலின் மாறுபட்ட பிரதி ஓலைச் சுவடியாக கண்டறியப்பட்டது.
1 min
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கரடிசித்தூரில் மணிமுக்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் தற்காலிக தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
1 min
தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசம்
தருமபுரம் ஆதீனத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிவிகையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
1 min
பள்ளிக் கல்வி இணை இயக்குநர்கள் 6 பேர் இடமாற்றம்
தமிழக பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்கள் ஆறு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only