Dinamani Karur - May 15, 2025

Dinamani Karur - May 15, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Karur along with 9,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99 $74.99
$6/month
Subscribe only to Dinamani Karur
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
May 15, 2025
கொடநாடு வழக்கிலும் நீதி கிடைக்கும்
பொள்ளாச்சி பாலியல் வழக்கைப்போல கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் நீதி கிடைத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
1 min
தமிழகத்தில் இன்று வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வியாழக்கிழமை (மே 15) அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min
இளைஞரை தாக்கிய 3 பேர் கைது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை மதுபானப் பாட்டிலால் தாக்கிய 3 பேர் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
1 min
கரூர் வள்ளுவர் கல்லூரியில் தமிழ், கணிதம், இயற்பியலை இலவசமாக பயில வாய்ப்பு
கரூர் வள்ளுவர் கல்லூரியில் இளங்கலை தமிழ், கணிதம், இயற்பியல் பட்டப்படிப்புகளை மாணவர்கள் இலவசமாகப் பயிலலாம் என கல்லூரியின் தலைவர் க. செங்குட்டுவன் தெரிவித்தார்.
1 min
பட்டா பெயர் மாற்றம் செய்ய இ- சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம்
பட்டாவில் உயிரிழந்த நில உடைமைதாரர்களின் பெயர்களை நீக்கி, அவர்களது வாரிசுதாரர்கள் அல்லது பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க, உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையங்கள் அல்லது சிட்டிசன் போர்டல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.
1 min
மாவட்டங்களில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
கரூரில் புதன்கிழமை காலை நடைபெற்ற பிளஸ்-2 மாணவர்களுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் வழிகாட்டி கையேடுகள் வழங்கப்பட்டன.
1 min
கரூரில் பலத்த மழை
கரூரில் புதன்கிழமை இரவு சுமார் அரைமணி நேரம் இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
1 min
அரியலூர் காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
அரியலூரிலுள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
முன்னாள் முப்படை வீரர்கள் ஆர்ப்பாட்டம்
ராணுவ வீரர்கள் குறித்து அவதூறாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே முன்னாள் முப்படை வீரர்கள் நலச்சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
பெரம்பலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம்
பெரம்பலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மனு விசாரணை சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
1 min
சிபிஎஸ்இ தேர்வில் கரூர் பரணி வித்யாலயா பள்ளி சிறப்பிடம்
சி.பி.எஸ்.இ (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வில் பரணி வித்யாலயா மாணவர்கள் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
அரியலூர் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களில் ரூ. 12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
1 min
பிரச்னைகளைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவிடக் கூடாது
பிரச்னைகளைத் தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளைப் போடக் கூடாது என புதன்கிழமை நடைபெற்ற வடகாடு மோதல் தொடர்பான சமாதானக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த குழந்தை உயிரிழப்பு: ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்திலிருந்து 9 மாதக் குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் ஓட்டுநர், நடத்துநர் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
1 min
திருச்சியில் 2 குழந்தைகளை கொன்று தம்பதி தற்கொலை
திருச்சியில் ஆடை யகம் நடத்தி வந்தவர் கடன் சுமையால் தனது 2 குழந்தைகளையும் கொன்று விட்டு மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது.
1 min
மதுபோதையில் அரசுப் பேருந்து இயக்கம்: ஓட்டுநர் மீது வழக்கு
பொள்ளாச்சியில் மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min
நெல்லையில் இரு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
திருநெல்வேலியில் புதன்கிழமை இரு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதுதொடர்பாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min
திருவிழாவில் இருதரப்பினரிடையே மோதல்: சாலை மறியல்
தஞ்சாவூர் அருகே சப்பரத் திருவிழாவில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கத்தியால் வெட்டப்பட்டதால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min
வரும் தேர்தலில் வெற்றி பெற்று பேரவையில் தேமுதிக இடம்பெறும்
வரும் தேர்தலில் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் தேமுதிக இடம் பெறும் என்றார் தேமுதிக இளைஞரணிச் செயலர் விஜய பிரபாகரன்.
1 min
சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரன் கைது
ஒரத்தநாடு அருகே சொத்துக்காக பாட்டியை வெட்டிக் கொன்ற பேரனை போலீஸார் புதன் கிழமை கைது செய்தனர்.
1 min
அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்ய உரிமை உள்ளது
அனைத்து சமுதாயத்தினரும் சுவாமி தரிசனம் செய்வதற்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை தெரிவித்தது.
1 min
படித்த இளைஞர்கள் பால் பண்ணை அமைக்க முன்வர வேண்டும்
படித்த இளைஞர்கள் பால் பண்ணை அமைக்க முன்வர வேண்டும் என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
1 min
எந்தக் கட்சியும் உரிமை கோர முடியாது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் உரிமை கோர முடியாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
திமுக அரசுக்கு என்ன பங்கு?
பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது அதிமுக அரசு. இந்த வழக்கின் தீர்ப்பில் திமுக அரசுக்கு என்ன பங்கு இருக்கிறது என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
1 min
திமுக காட்டிய உறுதிப்பாடுதான் தீர்ப்புக்கு காரணம்
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்புக்கு திமுக காட்டிய உறுதிப்பாடுதான் காரணம் என மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
1 min
முன்னாள் தலைமைச் செயலர் இறையன்பு தந்தை வெங்கடாசலம் (90) காலமானார்
தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பின் தந்தை அ.வெங்கடாசலம் (90) புதன்கிழமை காலமானார்.
1 min
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி
பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு சார்பில் தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை
படிப்புதான் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரே திருப்புமுனை என நிகழாண்டுக்கான 'கல்லூரிக் கனவு' திட்டத்தின் தொடக்க விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
1 min
அன்று இந்திரா; இன்று நரேந்திரா!
இடைக்காலமாக 'ஆபரேஷன் சிந்தூர்' நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றாலும், இரு தரப்பும் தங்களது ராணுவத்தை மோதலில் இருந்து விலக்கிக் கொண்டிருக்கின்றன. ஒட்டுமொத்த நாடுகளும், குறிப்பாக, தெற்காசியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. இந்தியா ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கிய 88 மணி நேரத்துக்குப் பிறகு, இரு தரப்பு சம்மதத்துடன் இடைக்கால மோதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
2 mins
இந்தியாவின் அணுகுமுறை மாற்றம்..!
இனி பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது பயங்கரவாதம் குறித்தும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்தும்தான் இருக்குமே தவிர, வேறு எந்த விஷயம் குறித்தும் அந்த நாட்டுடன் பேசப்படாது என்று சர்வதேச சமூகத்துக்கு பிரதமர் மோடி திட்டவட்டமாக எடுத்துரைத்தார்.
2 mins
அருணாசல பிரதேசத்திலுள்ள இடங்களுக்கு மறுபெயரிட்ட சீனா
அருணாசல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் பகுதியாகவே இருக்கும் என்றும், அந்த மாநிலத்தில் உள்ள சில இடங்களுக்கு சீனா மறுபெயரிடுவதால் உண்மை நிலை மாறாது என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min
மருத்துவக் கல்லூரிகளில் வருகைப் பதிவை இருமுறை மேற்கொள்ள உத்தரவு
தமிழகத்தில் 35 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் நாள்தோறும் பணிக்கு வரும்போதும், பணி முடிந்து செல்லும்போதும் இரு முறை பயோமெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதை கட்டாயமாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min
ஆபரேஷன் சிந்தூர்: காங்கிரஸ் கேள்வி; பாஜக பதில்
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை நிறுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் பல்வேறு கேள்விகளை புதன்கிழமை எழுப்பியது.
2 mins
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பதவியேற்பு
உச்சநீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் (64) புதன்கிழமை பதவியேற்றார்.
1 min
டாஸ்மாக் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோரி மனு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டள்ள வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள், சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
அம்பேத்கர் அயலக உயர் கல்வியால் அதிக மாணவர்கள் பலன் தமிழக அரசு பெருமிதம்
அம்பேத்கர் அயலக உயர்கல்வியால் அதிக மாணவர்கள் பயன்பெற்று வருவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
1 min
பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு: பிரிட்டன்
இந்தியா-பாகிஸ்தான் இடையே சண்டை நிறுத்தம் நிலைத்திருக்க இரு நாடுகளுடன் இணைந்து பணியாற்ற பிரிட்டன் தயாராக உள்ளது; பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் இருதரப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கப்படும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமி தெரிவித்தார்.
1 min
பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' மீது தடை
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 'தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்' குழுவை ஐ.நா.வின் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க இந்தியா தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
1 min
பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி எதிரொலி: துருக்கியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரத்து
துருக்கியின் இனோனு பல்கலைக்கழகத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
1 min
வர்த்தகத்தைப் பயன்படுத்தி இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசம்
வர்த்தகத்தைப் பயன்படுத்தி, இந்தியா-பாகிஸ்தான் இடையே சமரசத்தை ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
1 min
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் பாதுகாப்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது.
1 min
ராஜஸ்தான் எல்லையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாகிஸ்தான் சிம் கார்டுகளை பயன்படுத்தத் தடை
1 min
உள்நாட்டு ட்ரோன் பாதுகாப்பு அமைப்பு: இந்தியா வெற்றிகரமாக சோதனை
ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்களை) அழிக்கும் நோக்கத்துக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த விலை 'பார்கவாஸ்திரா' பாதுகாப்பு அமைப்பு ஒடிஸா மாநிலம், கோபால்பூரில் வெற்றிகரமாக ஏவி சோதிக்கப்பட்டது.
1 min
21 நாள்களுக்குப் பின் இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான்
பஞ்சாபில் சர்வதேச எல்லையை தவறுதலாக கடந்து சென்றதால் பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்புப்படை (பிஎஸ்எஃப்) வீரரை 21 நாள்களுக்குப்பின் இந்தியாவிடம் அந்தநாடு புதன்கிழமை ஒப்படைத்தது.
1 min
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் எல்லையில் பள்ளிகள் மீண்டும் திறப்பு
ஜம்மு-காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் புதன்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
1 min
யுபிஎஸ்சி புதிய தலைவர் அஜய் குமார்
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) புதிய தலைவராக பாதுகாப்புத் துறை முன்னாள் செயலரும் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான அஜய் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
பாகிஸ்தானுக்கு ரூ.8,700 கோடி கடன்: சர்வதேச நிதியம் விடுவிப்பு
சர்வதேச நிதியம் அளிக்க உள்ள கடன் தொகையில் 2-ஆவது தவணையாக 1.023 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.8,700 கோடி) பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுள்ளது.
1 min
பஞ்சாப் கள்ளச் சாராய உயிரிழப்பு: 23-ஆக அதிகரிப்பு
பஞ்சாபில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர். இதனால், கள்ளச் சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
1 min
உ.பி.யில் ரூ.3,706 கோடியில் மின்னணு சிப் உற்பத்தி ஆலை
மத்திய அமைச்சரவை ஒப்புதல்
1 min
மாளவிகா, ஆகர்ஷி, உன்னாட்டி முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் மாளவிகா பன்சோத், ஆகர்ஷி காஷ்யப், உன்னாட்டி ஹூடா ஆகியோர் தங்களது பிரிவில் 2-ஆவது சுற்றுக்கு புதன்கிழமை முன்னேறினர்.
1 min
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி: பாகிஸ்தான் பங்கேற்பது சந்தேகம்?
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது சந்தேகத்துக்கு இடமாகியுள்ளது.
1 min
பணவீக்கம் தரவால் உற்சாகம் சென்செக்ஸ் லாபத்துடன் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சிறிதளவு லாபத்துடன் நிறைவடைந்தன.
1 min
தாக்குதலில் மேலும் 60 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமை நடத்திய தாக்குதலில் 22 சிறுவர்கள் உள்பட 60 பேர் உயிரிழந்ததாக அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்தது.
1 min
ஏர்டெல் நிகர லாபம் ஐந்து மடங்காக அதிகரிப்பு
இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் ஒருங்கிணைந்த நிகர லாபம் கடந்த மார்ச் 2025 காலாண்டில் ஐந்து மடங்காக உயர்ந்துள்ளது.
1 min
கனடா புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியினருக்கு இடம்
வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த்
1 min
புதின்-ஸெலென்ஸ்கி பேச்சு: நீடிக்கும் இழுபறி
அதிபர் விளாதிமீர் புதினுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கி விடுத்துள்ள அழைப்புக்கு மூன்றாவது நாளாக ரஷியா பதில் அளிக்காததால் இந்த விவகாரத்தில் இழுபறி நீடித்துவருகிறது.
1 min
ஆயுதக் குழுக்களைக் கைவிட்டால்தான் அணுசக்தி ஒப்பந்தம்!
ஈரானுக்கு அமெரிக்கா நிபந்தனை
1 min
தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ. 400 குறைந்து ரூ. 70,440-க்கு விற்பனையானது.
1 min
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம்: உச்சநீதிமன்றம்
ஆகமம் அல்லாத கோயில்களில் அர்ச்சகர்களை நியமிக்கலாம் என உச்சநீதிமன்றம் புதன்கிழமை கூறியது.
1 min
மதுரையில் சுந்தரராஜப் பெருமாள் தசாவதாரம்
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழா வையொட்டி, ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்வு செவ்வாய்க்கிழமை இரவு முழுவதும் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய சுவாமி தரிசனம் செய்தனர்.
1 min
பூண்டிமாதா பேராலயத்தில் ஆண்டுப் பெருவிழா தேர்பவனி
தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டிமாதா பேராலய ஆண்டுப் பெருவிழாவில் சிறப்பு நிகழ்ச்சியான பூண்டி அன்னையின் ஆடம்பர தேர்பவனி புதன்கிழமை இரவு நடைபெற்றது.
1 min
உபரி ஆசிரியர்கள் பணி நிரவல்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் (2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
1 min
தஞ்சை பெரிய கோயிலில் மூவர்ணத்தில் மின் விளக்குகள்
தஞ்சாவூர் பெரிய கோயில் ராஜராஜன் வாயிலில், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரிய விடப்பட்டுள்ளன.
1 min
மருந்து அட்டைகளில் க்யூ ஆர் கோடு அச்சிட அரசு அறிவுறுத்தல்
தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் அட்டையில் அதன் நம்பகத்தன்மையை அறிந்து கொள்வதற்காக க்யூ-ஆர் கோடு அல்லது பார் கோடு அச்சிட வேண்டும் என்று மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
1 min
Dinamani Karur Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only