Dinamani Karur - March 13, 2025Add to Favorites

Dinamani Karur - March 13, 2025Add to Favorites

Go Unlimited with Magzter GOLD

Read Dinamani Karur along with 9,000+ other magazines & newspapers with just one subscription  View catalog

1 Month $14.99

1 Year$149.99 $74.99

$6/month

Save 50%
Hurry, Offer Ends in 1 Day
(OR)

Subscribe only to Dinamani Karur

1 Year$356.40 $23.99

International Workers Day - Save 93%
Hurry! Sale ends on May 3, 2025

Buy this issue $0.99

Gift Dinamani Karur

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digital Subscription
Instant Access

Verified Secure Payment

Verified Secure
Payment

In this issue

March 13, 2025

ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கை

நாடு முழுவதும் ஹிந்தியை வளர்க்கவே தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

1 min

இந்தியா-மோரீஷஸ் 8 ஒப்பந்தங்கள்

இரு பிரதமர்கள் முன்னிலையில் கையொப்பம்

1 min

300 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

அரியலூரில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

1 min

அரியலூரில் 2-ஆவது நாளாக மழை

அரியலூர் மாவட்டத்தில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் பரவலாக மழை பெய்தது.

1 min

அரியலூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என்றார் ஆட்சியர் பொ.ரத்தினசாமி.

1 min

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், மாவிலங்கை கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 225 பயனாளிகளுக்கு ரூ.1.68 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் வழங்கினார்.

1 min

பிரம்மபுரீசுவரர் கோயிலில் மாசி மகத் தேரோட்டம்

பெரம்பலூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீசுவரர் கோயில் மாசி மகத் தேரோட்டம் வெகு விமரிசையாக புதன்கிழமை நடைபெற்றது.

1 min

கரூர் மாவட்டத்தில் மார்ச் 15,16-இல் பறவைகள் கணக்கெடுப்பு

கரூர் மாவட்டத்தில் வரும் 15,16-ஆம் தேதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு முகாம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளார்.

1 min

ஊராட்சி செயலர்கள் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு ஊராட்சி செயலர்கள் சங்கத்தினர், ஒரு நாள் தற்செயல் விடுப்பெடுத்து புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min

அதிக வட்டி தருவதாகக் கூறி ரூ.50 லட்சம் மோசடி பெரம்பலூர் நிதிநிறுவன உரிமையாளர் கைது

கரூர், அரியலூரைச் சேர்ந்தவர்களிடம் அதிக வட்டித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி செய்த பெரம்பலூர் நிதி நிறுவன உரிமையாளரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

1 min

மார்ச் 22-இல் இந்திய கம்யூ. ஒன்றிய மாநாடு

திருமானூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

1 min

வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

பெரம்பலூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 13 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது புதன்கிழமை தெரியவந்தது.

1 min

கல் குவாரி வெடியால் வீடுகள் சேதமடைந்ததாக மக்கள் புகார்: கரூர் ஆட்சியர் விசாரணை

கல் குவாரியில் வைக்கப்படும் வெடியால் வீடுகள் சேதமடைந்ததாக கிராம மக்கள் அளித்த புகாரின்பேரில் குவாரி உரிமையாளர்கள் மற்றும் கிராம மக்களிடம் மாவட்ட ஆட்சியர் மீ. தங்கவேல் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

1 min

செய்திச் சுருள் மக்கள் தொடர்பு முகாமில் 149 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

அரியலூர் மாவட்டம், செந்துறையில், வருவாய்த் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், 149 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

1 min

செட்டிகுளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிகுளம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்

மாணவர்களுக்கிடையேயான ஜாதிய மோதல்களைத் தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு ஆணையத்தின் பரிந்துரைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்.

1 min

தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் தேரோட்டம்

கரூர் மாவட்டம், தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயில் மாசிமகத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 22 மாணவர்கள் காயம்

தனியார் பள்ளி வேன் கவிழ்ந்ததில் 22 மாணவர்கள் புதன்கிழமை காயமடைந்தனர்.

1 min

அமைச்சர் மீது சேறு வீசப்பட்ட வழக்கு: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே புயல் பாதிப்புகளை பார்வையிடச் சென்ற போது அமைச்சர் க.பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த பெண்ணை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

1 min

கும்பகோணத்தில் மார்ச் 23-இல் அந்தணர் ஆகம மாநாடு

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் வரும் 23-ஆம் தேதி அந்தணர் ஆகம மாநாடு நடைபெறும் என்றார் இந்து மக்கள் கட்சித் தலைவர் ஜூன்சம்பத்.

1 min

அக்னீசுவரர் கோயிலில் மாசி மகத் திருவிழா

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரர் கோயிலில் மாசிமகத்தை முன்னிட்டு சுவாமி நாகாச்சி கிராமத்திற்கு எழுந்தருளும் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை மார்ச் 24-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்த சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min

வேங்கைவயல்: குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் விசாரணை மார்ச் 20-க்கு ஒத்திவைப்பு

வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேருக்கும்குற்றப்பத்திரிகை நகல் புதன்கிழமை வழங்கப்பட்டது.

1 min

கோயில் சாலை ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

தஞ்சாவூர் அருகே திருபுவனம் பகுதியில் அமைந்துள்ள கம்பகரேசுவரர் கோயில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை 8 வாரங்களுக்குள் அகற்ற சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min

வீட்டில் தனியாக இருந்த முதியவர், மூதாட்டி கொலை வீட்டுக்குத் தீ வைத்துவிட்டு தப்பிய மர்ம நபர்கள்

ஒசூரில் வீட்டில் தனியாக இருந்த முதியவர்களை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min

திருச்சி 'பெல்' பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

திருச்சியில் பெல் நிறுவனப் பொது மேலாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது செவ்வாய்க்கிழமை இரவு தெரியவந்தது.

1 min

சமகல்வி என்பது நமது உரிமை

சமகல்வி என்பது நமது உரிமை என தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

1 min

சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை

சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

1 min

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை

தமிழகத்துக்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

1 min

வீரப்பன் தேடுதல் வேட்டை: அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 3 வாரங்களில் இழப்பீடு வழங்க உத்தரவு

சந்தன கடத்தல் வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைக் கிராமத்தினருக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை 3 வார காலத்துக்குள் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

மத்திய கல்வி அமைச்சர் பிரதான் பதவி விலக வேண்டும்

மக்களவையில் தமிழக எம்.பி.க்களை அலட்சியமாகப் பேசிய மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா. முத்தரசன் வலியுறுத்தினார்.

1 min

மும்மொழிக் கொள்கை தோல்வியடைந்த திட்டம்

மும்மொழிக் கொள்கை 1968-இல் அமல்படுத்தப்பட்டு, தோல்வியடைந்த திட்டம்; இந்தத் திட்டத்தை எந்தக் காலத்திலும் வெற்றி பெறச் செய்ய முடியாது என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

1 min

1–9 வகுப்புகளுக்கான இறுதித்தேர்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு இறுதித்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

1 min

விளையாட்டு பல்கலை. துணைவேந்தருக்கான தேடல் குழுவில் தலையிட ஆளுநருக்கு அதிகாரமில்லை

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரை தேர்வு செய்வதற்காக தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட தேடல் குழுவை ரத்து செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றார் சட்டப்பேரவை தலைவர் மு.அப்பாவு.

1 min

அரசியல் மேடை மத்திய அரசின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளேன்

மத்திய அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பிலான கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி விளக்கம் அளித்துள்ளார்.

1 min

விரிவுபடுத்த வேண்டும்!

விவசாயிகள் என்று சொன்னால் நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட பணப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகள்தான் அரசின் கவனத்தை ஈர்க்கிறார்கள்.

2 mins

வார்த்தைகள் உருவாக்கும் வாழ்க்கை!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் றைய இளைய தலைமுறை 'யாதும் ஊரே... யாவ ரும் கேளிர்' என்ற உயர்ந்த கருத்தை உல குக்கு அளித்தனர் நம் முன்னோர்கள்.

2 mins

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு- ஒரு பார்வை!

குழந்தைகள் பெறும் விகிதம் குறைவதால், மக்கள் தொகை குறைந்திருக்கும் நிலையில் தொகுதி மறுசீரமைப்பு மக்கள் தொகை அடிப்படையில் செய்யப்படுவது, தென்னிந்திய மாநில மக்களைத் தண்டிக்கக் கூடிய வகையில், மக்கள்தொகையில் நீதியை நிலைநாட்டி முன்னேற்றப் பாதையில் சென்ற தென்மாநிலங்களுக்கு அநீதியை இழைக்கின்ற செயலாகும்.

3 mins

'பெல்' நிறுவனத்துடன் ரூ.2,906 கோடியில் ஒப்பந்தம்

பாதுகாப்பு அமைச்சகம் கையொப்பம்

1 min

ஹரியாணா உள்ளாட்சி தேர்தல்: 9 மாநகராட்சிகளை கைப்பற்றிய பாஜக

ஹரியாணா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 10 மாநகராட்சிகளில் 9 இல் பாஜக வென்றுள்ளது.

1 min

அய்யா வைகுண்டரும் வாக்கு வங்கி அரசியலும்!

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், இப்போதே அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது.

2 mins

அங்கீகரிக்கப்பட்ட 12 கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி மார்ச் 18-இல் ஆலோசனை

தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளார்.

1 min

இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இம் மாத இறுதியில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

1 min

ரயில்வே திட்டங்களுக்கான நிலம் விரைந்து கையகப்படுத்தப்படுகிறது

ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

1 min

சத்துணவு மைய ஊழியர்களிடம் தணிக்கைகள் மூலம் பிடித்தம் செய்ய வேண்டிய ரூ.257 கோடி தள்ளுபடி

தமிழக அரசு உத்தரவு

2 mins

தொகுதி மறுசீரமைப்பு கூட்டுக் குழு: சித்தராமையாவுக்கு அழைப்பு

தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் க.பொன்முடி அழைப்பு விடுத்தார்.

1 min

தேர்வுகளில் முறைகேடுகள் தடுக்கப்படும்

மத்திய கல்வித் துறை இணையமைச்சர்

1 min

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்ட நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்குரிய ஊதிய நிலுவைத் தொகையை உடனடியாக மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று மக்களவையில் கரூர் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் செ.ஜோதிமணி வலியுறுத்தினார்.

1 min

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அதானி குழும மின்னுற்பத்தி திட்டம்

மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

1 min

சிறுபான்மையினர் மேம்பாட்டுக்கு 3 ஆண்டுகளில் ரூ.2,347 கோடி விடுவிப்பு

சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த 5.50 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், சலுகை கடனாக கடந்த மூன்று ஆண்டுகளில் ரூ.2,347 கோடியை தேசிய சிறுபான்மையினர் மேம்பாடு மற்றும் நிதி கழகம் (என்எம்டிஎஃப்சி) விடுவித்ததாக மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

1 min

காட்டுப் பன்றிகளை கொல்ல சட்ட கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும்

காட்டுப் பன்றி களின் கட்டுக்கடங்காத இனப்பெருக்கத்தால் பாதிக்கப்படும் தமிழக விளைநிலங்களைக் காக்க ஏதுவாக அவற்றைக் கொல்லும் வகையில் சட்டத்தில் நிலவும் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

1 min

எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி. மாணவர்களின் கல்வி உதவித் தொகை: ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும்

எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. மாணவர்களுக்கான மெட்ரிக் படிப்புக்கு முந்தைய மற்றும் பிந்தைய கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு குடும்ப வருமான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மக்களவையில் தூத்துக்குடி தொகுதி திமுக உறுப்பினரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி வலியுறுத்தினார்.

1 min

ஒவ்வொன்றுக்கும் மத்திய அரசிடம் கையேந்தும் நிலை மாற வேண்டும்

ஒவ்வொரு முறை நிதியுதவி பெறவும் மத்திய அரசிடம் மாநிலங்கள் கையேந்தும் நிலை மாற வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூர் தொகுதி திமுக உறுப்பினர் அருண் நேரு வலியுறுத்தினார்.

1 min

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலைப் பாலங்களுக்கு ஒப்புதல்

தமிழகத்தில் ரூ.4,769 கோடி மதிப்பீட்டில் ரயில்வே சாலை மேம்பாலங்கள், சுரங்க பாலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று மக்களவையில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min

எண்ணெய் வயல்கள் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்

மாநில உரிமைகள் பறிபோகாது என அரசு உறுதி

1 min

ஹோலி பண்டிகை அயோத்தி மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நேரம் மாற்றம்

ஹோலி பண்டிகையை முன்னிட்டு அயோத்தியில் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு நடைபெறும் என்று அந்த நகரின் இஸ்லாமிய தலைமை மதகுரு முகமது ஹனீப் தெரிவித்தார்.

1 min

ஹோலி, ரமலான் பண்டிகை: உ.பி.யில் இலவச எரிவாயு சிலிண்டர்

ஹோலி, ரமலான் பண்டிகை இந்த மாதம் கொண்டாடப்படும் நிலையில், உஜ்வலா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பெண்களுக்கு இந்த மாதம் இலவசமாக ஒரு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

1 min

பாஜகவின் போலி ஹிந்துத்துவம்

மம்தா விமர்சனம்

1 min

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கேரள முதல்வர் பினராயி விஜயன் சந்திப்பு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தில்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.

1 min

மியான்மரில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கிய 549 இந்தியர்கள் மீட்பு

தாய்லாந்து-மியான்மர் எல்லையில் இணையவழி மோசடி கும்பலிடம் சிக்கி தவித்த 549 இந்தியர்கள் மீட்டு, தாயகம் அழைத்து வரப்பட்டதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

1 min

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100% வரி: அதிபர் மாளிகை

அமெரிக்க வேளாண் பொருள்களுக்கு இந்தியா 100 சதவீதம் வரி விதிப்பதாக அந்த நாட்டு அதிபர் மாளிகையின் ஊடகச் செய்தித் தொடர்பாளர் கரோலைன் லெவிட் தெரிவித்தார்.

1 min

பிகார் மேலவையில் நிதீஷ் - ராப்ரி தேவி கடும் வாக்குவாதம்

முதல்வரை 'கஞ்சா அடிமை' என குற்றஞ்சாட்டியதால் பரபரப்பு

1 min

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு; ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு

கேரள உயர் கல்வி அமைச்சர் ஆர்.பிந்து

1 min

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: 33 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

பாகிஸ்தானில் பயணிகள் ரயில் கடத்தப்பட்ட சம்பவத்தில் 33 பயங்கரவாதிகளை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

1 min

இந்தியா இல்லாமல் வருவாய் இழக்கும் லார்ட்ஸ் மைதானம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்துக்கு இந்தியா தகுதிபெறத் தவறிய நிலையில், அந்த ஆட்டத்துக்கான லார்ட்ஸ் மைதானத்தின் வருவாயில் சுமார் ரூ.45 கோடி இழப்பு ஏற்படும் என கணக்கிடப்பட்டுள்ளது.

1 min

உலக பாரா தடகளம்: இந்தியா அசத்தல்

தில்லியில் நடைபெறும் உலக பாரா தடகள கிராண்ட் பிரீ-யில் வட்டு எறிதலில் இந்தியர்கள் 3 பதக்கங்களையும் வென்று அசத்தினர்.

1 min

உலகப் பல்கலைக்கழகங்கள் -- சென்னை ஐஐடி 31-ஆவது இடம்

குவாக்கரெலி சிமண்ட்ஸ் பகுப்பாய்வு நிறுவனத்தின் உலகப் பல்கலைக்கழக பாட வாரி தரவரிசையில் சென்னை ஐஐடி கல்வி நிறுவனம் 31-ஆவது இடம்பிடித்துள்ளது.

1 min

காலிறுதியில் மெத்வதெவ்; வெளியேறினார் சிட்சிபாஸ்

ஆண்டின் முதல் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியான இண்டியன் வெல்ஸ் ஓபனில், முன்னணி வீரரான ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

1 min

முதல் சுற்றிலேயே சிந்து தோல்வி

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து முதல் சுற்றிலேயே புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டார்.

1 min

லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் 1-1 கோல் கணக்கில் டிரா வில் முடிந்தது. இந்த ஆட்டத்துடன் நடப்பு சீசனின் லீக் ஆட்டங்கள் நிறைவடைந்தன.

1 min

WPL இன்று மும்பை - குஜராத் மோதல்

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் எலிமினேட்டர் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் மும்பை இண்டியன்ஸ் - குஜராத் ஜயன்ட்ஸ் அணிகள் வியாழக்கிழமை (மார்ச் 13) மோதுகின்றன.

1 min

இந்தியாவில் 'ஸ்டார்லிங்க்' இணைய சேவை: ஏர்டெல்லை தொடர்ந்து ஜியோவும் ஒப்பந்தம்

அமெரிக்காவின் முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்குக்கு சொந்தமான 'ஸ்பேஸ்-எக்ஸ்' நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்க்' செயற்கைக்கோள் இணையசேவையை இந்தியாவில் அறிமுகப்படுத்த, ஏர்டெல் நிறுவனத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோவும் ஒப்பந்தமிட்டுள்ளது.

1 min

அமலுக்கு வந்தது டிரம்ப்பின் இரும்பு, அலுமினிய வரி விதிப்பு

உலகின் அனைத்து நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மற்றும் அலுமினியத்துக்கு அமெரிக்க அதிபர் விதித்துள்ள 25 சதவீதம் கூடுதல் வரி புதன்கிழமை அமலுக்கு வந்தது.

1 min

30 நாள் போர் நிறுத்தத்துக்குத் தயார்

ரஷியாவுடன் உடனடியாக 30 நாள்களுக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

1 min

கிரீன்லாந்து: எதிர்பாராத வெற்றி பெற்ற எதிர்க்கட்சி

டென்மார்க்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தில் நடைபெற்ற தேர்தலில் எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

1 min

பிப்ரவரியில் குறைந்த சில்லறை பணவீக்கம்

கடந்த பிப்ரவரியில் நாட்டின் சில்லறை விலை அடிப்படையிலான பணவீக்கம் முந்தைய ஏழு மாதங்கள் காணாத அளவுக்கு குறைந்துள்ளது.

1 min

தண்டவாளத்தில் பாறைகள் விழுந்ததால் உதகை மலைரயில் ரத்து

கனமழை காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலை ரயில் பாதையில் பாறைகள் விழுந்து தண்டவாளம் சேதமடைந்ததால் மலை ரயில் சேவை புதன்கிழமை ரத்து செய்யப்பட்டது.

1 min

தியாகதுருகத்தில் 160 மி.மீ. மழை பதிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் புதன்கிழமை காலை வரை 160 மி.மீ. மழை பதிவானது.

1 min

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை

கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசிக்கொடை விழாவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.

1 min

அரசுப் பள்ளிகளில் 12 நாள்களில் 41,931 மாணவர்கள் சேர்க்கை

தமிழக அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக் கான மாணவர் சேர்க்கை கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கியுள்ள நிலையில், தற்போது வரை 41,931 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min

திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்

லட்சக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்தனர்

1 min

வத்தலகுண்டு அருகே சுங்கச் சாவடியை சூறையாடிய மக்கள்

வத்தலகுண்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சுங்கச் சாவடியை பொதுமக்கள் புதன்கிழமை உடைத்து சேதப்படுத்தினர்.

1 min

கும்பகோணம் மகாமக குளத்தில் மாசிமக தீர்த்தவாரி

ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடல்

1 min

ரூ.13,600 கோடியில் புதுவை பட்ஜெட்: மகளிர் உதவித்தொகை ரூ.2,500

புதுவையில் ஏழைக் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் ரூ.1,000 மாதாந்திர உதவித்தொகை ரூ.2,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்; கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 ஊக்குவிப்புத் தொகையாக வழங்கப்படும் என்று அந்த மாநில நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

1 min

Read all stories from Dinamani Karur

Dinamani Karur Newspaper Description:

PublisherExpress Network Private Limited

CategoryNewspaper

LanguageTamil

FrequencyDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeCancel Anytime [ No Commitments ]
  • digital onlyDigital Only