Dinamani Coimbatore - April 23, 2025

Dinamani Coimbatore - April 23, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 23, 2025
காஷ்மீரில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பெஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 2 வெளிநாட்டினர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
1 min
யுபிஎஸ்சி இறுதித் தேர்வு முடிவு வெளியீடு: உ.பி. மாணவி முதலிடம்
மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் நடத்தப்படும் 2024-ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வின் இறுதி நிலையான நேர்முகத் தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன.
1 min
உதகையில் ஏப். 25, 26-இல் துணைவேந்தர்கள் மாநாடு
ஆளுநர் அதிகாரபூர்வ அறிவிப்பு
1 min
தங்கம் விலை பவுன் ரூ.74,320
ஒரே நாளில் ரூ.2,200 அதிரடி உயர்வு
1 min
வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீர் சேகரிப்பு
கோவை மாநகராட்சி, வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் புதிதாக சீரமைக்கப்பட்ட குட்டையில் தண்ணீர் சேகரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
1 min
திருவனந்தபுரத்தில் இருந்து கோவைக்கு வந்தே பாரத் ரயில்
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு வழியாக கோவைக்கு புதிய வந்தே பாரத் சேவை தொடங்க வேண்டும் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
1 min
இளம்பெண் வெட்டிக் கொலை: கொலையாளி அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரண்
சூலூர் அருகே மாட்டுக்கொட்டகையை காலி செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளம்பெண்ணை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
1 min
கழிப்பிடச் சுவரில் எழுதப்பட்டிருந்த தலைவர்கள் பெயர்கள் அழிப்பு
கோவை தெற்கு மண்டலத்தில் கழிப்பிடச் சுவரில் எழுதப்பட்டிருந்த தலைவர்கள் பெயர்கள் செவ்வாய்க்கிழமை அழிக்கப்பட்டன.
1 min
கல்லாறு சோதனைச் சாவடியில் இ-பாஸ் தானியங்கி பூம் பேரியர் மாதிரி சோதனை தொடக்கம்
மேட்டுப்பாளையம் கல்லாறு சோதனைச் சாவடியில் தானியங்கி பூம் பேரியர் மூலம் இ-பாஸ்களின் மாதிரி சோதனையை வருவாய்த் துறையினர் தொடங்கியுள்ளனர்.
1 min
சிறுமுகை பகுதியில் நோய்வாய்ப்பட்ட காட்டு யானைக்கு சிகிச்சை
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பகுதியில் நோய்வாய்ப்பட்டு நடமாடி வரும் காட்டு யானைக்கு வனக் கால்நடை மருத்துவர்கள் பழங்களில் மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
1 min
மாநகரில் ஒரே நாளில் 215 கொடிக் கம்பங்கள் அகற்றம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை
நீதிமன்ற உத்தரவுப்படி, மாநகராட்சி 5 மண்டலங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 215 கொடிக்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன.
1 min
வால்பாறையில் ரூ.9 கோடியில் வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வேண்டும் நகராட்சி ஆணையரிடம் மனு
வால்பாறை புதுமார்க்கெட் பகுதியில் நகராட்சி சார்பில் ரூ.9 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய வணிக வளாக கட்டுமானப் பணியை கைவிட வலியுறுத்தி வியாபாரிகள் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
1 min
மரத்தை உலுக்கி மாங்காய் சாப்பிட்ட பாகுபலி யானை
மேட்டுப்பாளையம் வனப் பகுதியில் இருந்து திங்கள்கிழமை இரவு வெளியேறிய பாகுபலி யானை வனப் பகுதியை ஒட்டி உள்ள சமயபுரம், வெல்ஸ்புரம் உள்ளிட்ட குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தது.
1 min
பொள்ளாச்சி தேங்காய்க்கு புவிசார் குறியீடு பெற பயிலரங்கம்
உலக அளவில் பிரசித்தி பெற்ற பொள்ளாச்சி இளநீர் மற்றும் தேங்காய்க்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான வேளாண் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்ட பயிலரங்கம் பொள்ளாச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
காட்டு யானை தாக்கி பெண் அஞ்சல் ஊழியர் உயிரிழப்பு
கூடலூரை அடுத்ததுள்ள மசினகுடி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் பெண் அஞ்சல் ஊழியர் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தார்.
1 min
பொள்ளாச்சியில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் பேரணி
பொள்ளாச்சியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோரிக்கை விளக்கப் பேரணியை செவ்வாய்க்கிழமை நடத்தினர்.
1 min
வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதி செய்வதாக ரூ.3.56 கோடி மோசடி: தம்பதி கைது
வெளிநாடுகளுக்கு மலர் ஏற்றுமதி செய்தால் கூடுதல் லாபம் ஈட்டலாம் எனக் கூறி, கோவை தொழிலதிபர் உள்ளிட்ட பலரிடம் ரூ.3.56 கோடி மோசடி செய்தது தொடர்பாக தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
வீட்டின் உரிமையாளரைத் தாக்கி நகைப் பறிக்க முயன்ற பெண் கைது
சூலூர் அருகே கருமத்தம்பட்டியில் வீட்டின் உரிமையாளரைத் தாக்கி நகைப் பறிக்க முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
1 min
திருமணம் செய்து கொள்வதாக ஐடி பெண் ஊழியரிடம் நகை, பணம் மோசடி: இளைஞர் கைது
இன்ஸ்டாகிராமில் பழகி ஐ.டி. பெண் ஊழியரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி நகை, பணம் மோசடி செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டம்: 2 பேர் கைது
ஐபிஎல் போட்டிகள் தொடர்பாக ஆன்லைனில் சூதாட்டம் நடத்திய 2 பேரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து பணம், கார் மற்றும் கைப்பேசிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
1 min
நல்ல சமுதாயம் உருவாக!
மக்களாட்சி என்பது மகாசக்தி கொண்ட ஆயுதம். அதைப் பயன்படுத்தத் தேவையான அறிவும், ஆற்றலும் பக்குவமும் இல்லை எனில், மக்களாட்சி தரக் கூடிய பயன்கள் எதையும் மக்கள் பெற இயலாது. சுதந்திரமான நாட்டில், மற்றொரு அடிமை வாழ்வை மக்கள் வாழ்வார்கள்.
3 mins
போப் மறைவுக்கு பேரவையில் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு, பேரவையில் செவ்வாய்க்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
1 min
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும் என்ற கேள்விக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்தார்.
1 min
நிகழாண்டு 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு: துணை முதல்வர் உறுதி
நிகழாண்டில் 25 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்தார்.
1 min
திறந்தவெளி நில ஒதுக்கீட்டை தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம்
அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளாட்சி அமைப்புகளின் பயன்பாட்டுக்காக அளிக்கப்பட்ட திறந்தவெளி நில ஒதுக்கீட்டை (ஓ.எஸ்.ஆர். நிலம்) தனியார் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு உறுதிப்படுத்தித் தெரிவித்தார்.
1 min
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு
டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார்.
1 min
மோதலுக்கு வழிவகுத்திருக்கிறது நீதித் துறையின் வரம்பு மீறல்!
ரி ன் மாவட்டங்களில் பாஜகவின் முகமாக அறியப்படும் தலைவர்களில் முக்கியமானவர் தமிழக பாஜக பொதுச் செயலர் பேராசிரியர் ராம. சீனிவாசன். தமிழகத்தில் உள்ள மிகச் சிறந்த தர்க்கவாதிகளில் ஒருவர். எந்த ஒரு பிரச்னையையும் வித்தியாசமான கோணத்தில் அணுகக்கூடியவர்.
3 mins
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினம்: தமிழ் வார விழாவாகக் கொண்டாடப்படும்
பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ் வார விழா கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min
தூத்துக்குடியில் புதிய அனல் மின்நிலையம்
தூத்துக்குடியில் புதிதாக அனல் மின் நிலையம் அமைக்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் மின் கட்டண உயர்வு அதிகம்?
அதிமுக ஆட்சியில்தான் மின்சாரக் கட்டணம் அதிகம் உயர்த்தப்பட்டதாக பேரவையில் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி விளக்கம் தெரிவித்தார்.
1 min
ஜூலையில் உடன்குடி மின் நிலைய முதல் அலகு தொடக்கம்
உடன்குடி யில் அமைக்கப்பட்டு வரும் அனல்மின் நிலையத்தின் முதல் அலகு வரும் ஜூலை மாதத்தில் தொடங்கப்படும் என்று மின் சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
1 min
மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச அனுமதி மறுப்பு
மானியக் கோரிக்கை விவாதத்தில் குறுக்கிட்டுப் பேச எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.
1 min
ஜம்முவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவ முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிட, தில்லியில் உள்ள மாநில அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
1 min
ஏப்.25-இல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) நடைபெறவுள்ளது.
1 min
பச்சிளம் குழந்தை விற்பனை: மூதாட்டி கைது
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பிறந்து 5 நாள்களேயான பச்சிளம் பெண் குழந்தையை ரூ.1.50 லட்சத்துக்கு விற்றதாக மூதாட்டியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கோவை - சென்னை இன்டர்சிட்டி ரயில் இன்று வழக்கம்போல் இயக்கம்
கோவை - சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி விரைவு ரயில் ஏப். 23, 25 ஆகிய தேதிகளில் வழக்கம்போல் இயக்கப்படும்.
1 min
இரட்டைக் கொலை வழக்கு: ஒருவருக்கு 3 ஆயுள், மற்றொருவருக்கு 2 ஆயுள் தண்டனை
சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் இருவரை கொன்றுவிட்டு, தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வடமாநில கொள்ளையர்கள் இருவரில் ஒருவருக்கு 3 ஆயுள், மற்றொருவருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு ஜாமீன்: உயர்நீதிமன்றம்
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
பொறியியல் சேர்க்கை விண்ணப்பப் பதிவு: மே முதல் வாரம் தொடங்க வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பப் பதிவு மே மாதம் முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
1 min
அமைச்சர் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தமிழக அமைச்சர் க. பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
1 min
சொல்லாற்றல் பலவீனமாக ஆகிவிடக் கூடாது
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் சொல்லாற்றல் அவருக்குப் பலமாக இருக்க வேண்டுமே தவிர, பலவீனமாக ஆகிவிடக் கூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறினார்.
1 min
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம்
தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
1 min
தலைமைச் செயலகம் முற்றுகை போராட்டம்: 1,871 மாற்றுத் திறனாளிகள் கைது
ஆந்திர மாநிலத்தில் வழங்குவதைப்போல, தமிழகத்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும், தகுதியான அனைவருக்கும் உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் விண்ணப்பித்த அனைவருக்கும் 100 நாள்கள் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் தலைமைச் செயலகம் நோக்கி முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
1 min
ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி
ரயில் ஓட்டுநர்களுக்கு என்ஜின்களில் கழிப்பறை, ஏசி வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
1 min
இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2%-ஆக இருக்கும்: ஐஎம்எஃப் கணிப்பு
நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்தது.
1 min
பிகாருக்கு ஆற்றல்மிக்க தலைவர் தேவை
லோக் ஜனசக்தி கருத்தால் பரபரப்பு
1 min
5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கைலாஷ் மானசரோவர் யாத்திரை
கைலாஷ்-மானசரோவர் யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூன் 30-ஆம் தேதி மீண்டும் தொடங்குகிறது.
1 min
சர்வதேச ஐ.டி. நிறுவனங்களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு
இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ளவும், தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை அதிகரிக்கவும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.
1 min
பாஜக எம்.பி.யின் சர்ச்சை கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்
உச்சநீதிமன்றம் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா குறித்து பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே அண்மையில் வெளியிட்ட சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து சமூக ஊடங்களில் பரவி வரும் அவதூறு காணொலிகளை (விடியோ) நீக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒப்புக்கொண்டது.
1 min
சவுதி அரேபியாவில் பிரதமர் மோடி: 21 குண்டுகள் முழங்க வரவேற்பு
நடுவானில் சிறப்பு கௌரவம்
1 min
இந்திய-அமெரிக்க ஒத்துழைப்பு 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலம்
இந்தியா-அமெரிக்கா இடையிலான வலுவான ஒத்துழைப்புதான், 21-ஆம் நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கப் போகிறது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தார்.
1 min
நாடாளுமன்றத்தைவிட மேலான அமைப்பு கிடையாது
நாடாளுமன்றத்தைவிட மேலானதாக எந்த அமைப்பையும் அரசமைப்புச் சட்டம் கருதவில்லை என்று குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவரான ஜகதீப் தன்கர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min
கோட்டா: 'நீட்' பயிற்சி மாணவர் தற்கொலை
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வுக்கு தயாராகிவந்த 18 வயது மாணவர் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
1 min
தமிழக ஆளுநருக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு கேரளத்துக்கும் பொருந்துமா?
ஆராய உச்சநீதிமன்றம் முடிவு
1 min
ஆர்பிஐ துணை ஆளுநருக்கு மேலும் ஓராண்டு பதவி நீட்டிப்பு
ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) துணை ஆளுநர் டி.ரவிசங்கரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
வங்கிகளின் இணையதள முகவரி: ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
வங்கிகளின் இணையதள முகவரி களத்தின் (டொமெய்ன்) பெயரை சீர்படுத்தி வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் மாற்றம் செய்து கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
1 min
அரசமைப்புச் சட்டப் பிரிவு 142-ஐ உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த முடியாது
அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவு வழங்கும் சிறப்பு அதிகாரத்தை உயர்நீதிமன்றங்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தது.
1 min
கர்நாடக ஜாதிவாரி கணக்கெடுப்பு சமுதாயப் பிளவை ஏற்படுத்தும்!
தற்போதைய தரவுகளின்படி, ஜாதிவாரி கணக்கெடுப்பை அமல்படுத்துவது சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதுடன், அரசியல் ரீதியாக ஆபத்தானதுமாகும். என்று முன்னாள் மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்தார்.
2 mins
ராகுலின் தவறான தகவல் சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம்
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தவறான தகவல் தெரிவிப்பது, சட்டத்தை அவமதிப்பதன் அடையாளம் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
சிறந்த மீண்டு வந்த போட்டியாளர்: ரெபெக்கா ஆண்ட்ரேட்
பிரேஸிலை சேர்ந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை ஆண்ட்ரேட், தொடர் காயங்களால் பல முறை பின்னடைவை சந்தித்தார்.
1 min
சிறந்த ஆக்ஷன் போட்டியாளர்: டாம் பிட்காக்
பிரிட்டன் மௌன்டைன் பைக் கிங் வீரரான இவர், முதல் பரிந்துரையில் இந்த விருதை வென்றிருக்கிறார்.
1 min
சிறந்த அணி: ரியல் மாட்ரிட்
லாரியஸ் உலக விளையாட்டு விருதுகளில் நடப்பாண்டு, சிறந்த வீரருக்கான விருதை ஸ்வீடனை சேர்ந்த பிரபல தடகள வீரர் மாண்டோ டியுபிளான்டிஸும், சிறந்த வீராங்கனைக்கான விருதை அமெரிக்க ஜிம்னாஸ்டிக் நட்சத்திரம் சிமோன் பைல்ஸும் வென்றனர்.
1 min
சூப்பர் கோப்பை கால்பந்து: சென்னை-மும்பை சிட்டி இன்று மோதல்
கலிங்கா சூப்பர் கோப்பை போட்டி முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி-மும்பை சிட்டி எஃப்சி அணிகள் புதன்கிழமை மோதுகின்றன.
1 min
பாபா ராம்தேவின் 'சர்பத் ஜிகாத்' கருத்து மனசாட்சியை உலுக்குகிறது
தில்லி உயர்நீதிமன்றம்
1 min
சிம்ரன்பிரீத்துக்கு வெள்ளிப் பதக்கம்; 3-ஆம் இடத்துடன் இந்தியா நிறைவு
பெருவில் நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கௌர் பிரார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
1 min
ராகுல், பொரெல் அசத்தல்; டெல்லிக்கு 6-ஆவது வெற்றி
ஐபிஎல் போட்டியின் 40-ஆவது ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.
1 min
இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை
தமிழ்நாடு விளையாட்டு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் இளம் சாம்பியன்களுக்கு ரூ.10 லட்சம் உதவித் தொகை வழங்கப்பட்டது.
1 min
ரூ.1,70,551 கோடியைக் கடந்தது காதி விற்பனை
காதி மற்றும் கிராமத் தொழில் பொருள்களின் விற்பனை கடந்த நிதியாண்டில் ரூ.1,70,551 கோடியைக் கடந்தது.
1 min
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி மந்தம்
கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி 3.8 சதவீதமாக மந்தமடைந்துள்ளது.
1 min
பாகிஸ்தான்: சாலை விபத்தில் 16 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் பள்ளத்துக் குள் வேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர்.
1 min
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தல்
ஆஸ்திரேலியாவில் பொதுத் தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப் பதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min
புதிய காஸா போர் நிறுத்த திட்டம் முன்வைப்பு: ஹமாஸ்
காஸாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கான புதிய செயல்திட்டத்தை கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் முன்வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
1 min
சென்னை அருகே ரெனால்ட்டின் வடிவமைப்பு மையம்
பிரான்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், சென்னையில் புதிய வடிவமைப்பு மையத்தை செவ்வாய்க்கிழமை திறந்துள்ளது.
1 min
போப் பிரான்சிஸுக்கு ஏப். 26-ல் இறுதிச் சடங்கு
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸுக்கான இறுதிச் சடங்கு வரும் சனிக்கிழமை (ஏப். 26) நடைபெறவுள்ளது.
1 min
வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு
இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை தள்ளாட்டத்தில் இருந்தாலும் இறுதியில் நேர்மறையாக முடிந்தது.
1 min
உக்ரைனுடன் நேரடி பேச்சுக்கு புதின் தயார்
உக்ரைனில் போர் நிறுத்தம் மேற்கொள்வது குறித்து அந்த நாட்டுடன் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட ரஷிய அதிபர் தயாராக இருப்பதாக அவரின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார்.
1 min
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வு: தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் சா.மு. நாசர், சட்டப் பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
1 min
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்
4 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்
1 min
திருச்செந்தூர் கோயிலில் கட்டுமானப் பணிகள்: அரசு துறைச் செயலர்கள் பதிலளிக்க உத்தரவு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில், மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறைச் செயலர்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
1 min
குரூப் 1: நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற நேர்முகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
1 min
முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கான விரிவான மறுவாழ்வுத் திட்டத்தைச் செயல்படுத்த உத்தரவிடக் கோரிய முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்றது.
1 min
மின் நிலைய குடியிருப்பு வளாகத்தில் தூங்கிய காட்டு யானை
முதுமலை புலிகள் காப்பக எல்லைக்கு உள்பட்ட சிங்காரா மின் வாரிய குடியிருப்பு வளாகத்துக்குள் திங்கள்கிழமை இரவு நுழைந்த காட்டு யானை, அங்குள்ள புல்வெளியில் படுத்து தூங்கியது.
1 min
கீழப்பெரும்பள்ளத்தில் ஏப். 26-இல் கேது பெயர்ச்சி விழா
பூம்புகார் அருகே உள்ள கீழப்பெரும்பள்ளம் நாகநாதசுவாமி கோயிலில் வரும் 26-ஆம் தேதி கேது பெயர்ச்சி விழா நடைபெறுகிறது.
1 min
கல்லிடைக்குறிச்சி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம்
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி நெசவாளர் காலனி பகுதியில் மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதையடுத்து, பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only