Dinamani Coimbatore - April 22, 2025

Dinamani Coimbatore - April 22, 2025

Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Coimbatore along with 9,000+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $14.99
1 Year$149.99
$12/month
Subscribe only to Dinamani Coimbatore
1 Year $33.99
Buy this issue $0.99
In this issue
April 22, 2025
பேரவையில் முதல்வர் - எதிர்க்கட்சித் தலைவர் கடும் விவாதம்
நீட் தேர்வு, தேசியக் கட்சிகளுடன் திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்திருப்பது ஆகியவை தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி இடையே திங்கள்கிழமை கடும் விவாதம் நடைபெற்றது.
2 mins
வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்
பிரதமர் மோடி- அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் வரவேற்பு
1 min
டாஸ்மாக் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கோவையில் டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min
வேன் மீது இருசக்கர வாகனம் மோதல்: இருவர் உயிரிழப்பு
கோவில் பாளையம் அருகே விளாங்குறிச்சியில் வேன் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.
1 min
அன்னூரில் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
அன்னூர் ஒன்றியம், பசூர் ஊராட்சியில் வடக்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min
வதம்பச்சேரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை
வதம்பச்சேரி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ.15.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், கூட்டுறவு சங்கத்தின் மேலாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
1 min
போப் பிரான்சிஸ் மறைவு: கிறிஸ்தவ மதத் தலைவர்கள் இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு கிறிஸ்தவ மதத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவர்கள் பெயர்: பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கண்டனம்
கோவை மாநகராட்சியில் பொதுக் கழிவறைகளுக்கு மூத்த அரசியல் தலைவர்களின் பெயர் வைக்கப்பட்டுள்ளதற்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
1 min
பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்காவிட்டால் அறவழியில் போராட்டம்
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்காவிட்டால் அறவழிப் போராட்டம் நடத்தப்படும் என்று வழக்குரைஞர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
1 min
ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை
கோவையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1 min
சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டிய பேக்கரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
பொள்ளாச்சி அருகே சாலையோரத்தில் குப்பைகளைக் கொட்டிய பேக்கரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
1 min
இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞர் கைது
அன்னூர் அருகே இருசக்கர வாகனத்தைத் திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
1 min
அமலாக்கத் துறை வழக்குகள் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை
அமலாக்கத் துறை வழக்குகளில் 98% ஆளுங்கட்சியின் அரசியல் எதிரிகளுக்கு எதிரானவை என்று காங்கிரஸ் அகில இந்திய நிர்வாகி அமிதாப் துபே தெரிவித்துள்ளார்.
1 min
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் அழைப்பாணை
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான் உள்ளிட்ட 2 பேருக்கு சிபிசிஐடி போலீஸார் அழைப்பாணை அனுப்பியுள்ளனர்.
1 min
இலவச கண் பரிசோதனை முகாம் தொடக்கம்: ஜூன் 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது
மதுக்கரையை அடுத்த பாலத்துறையில் நடைபெற்ற இலவச கண் பரிசோதனை முகாமை ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் தொடங்கிவைத்தார்.
1 min
'வந்தே பாரத்' ரயில் பாதுகாப்பானது: தெற்கு ரயில்வே விளக்கம்
'வந்தே பாரத்' ரயில் கவச் பாதுகாப்பு அம்சத்துடன் பாதுகாப்பான முறையில் இயக்கப்பட்டு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்தது.
1 min
தம்பதியை தாக்கி நகை பறித்த வழக்கு
தாய், மகன் உள்பட 3 பேர் கைது
1 min
போதைப் பொருள் கடத்தல் வழக்கு ஜாபர் சாதிக், சகோதரருக்கு ஜாமீன்
போதைப் பொருள் கடத்தலில் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீமுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
கணவரைக் கல்லால் தாக்கி கொலை செய்த மனைவி கைது
தாளவாடி அருகே கணவரை கல்லால் தாக்கி கொலை செய்த மனைவியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
மகாராஷ்டிரத்தில் கட்டாய மொழி விவகாரம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி
மகாராஷ்டிரத்தில் மராட்டிய மொழி மட்டுமே கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
1 min
விஏஓ வீட்டில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவர் கைது
தம்மம்பட்டி அருகே விஏஓ வீட்டில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min
அமராவதி ஆற்றில் மூழ்கி ஆயுதப் படை காவலர் உயிரிழப்பு
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அமராவதி ஆற்றில் மூழ்கி கோவையைச் சேர்ந்த ஆயுதப் படை காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
1 min
மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட இளைஞருக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு
தேங்கிய மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய சிறுவனை மீட்ட இளைஞரை அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி நேரில் வரவழைத்து பாராட்டினார்.
1 min
மின்னல் பாய்ந்து பிளஸ் 2 மாணவி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே திங்கள்கிழமை, மின்னல் பாய்ந்ததில் பிளஸ் 2 மாணவி உயிரிழந்தார்.
1 min
இ-பாஸ்: நீலகிரியில் இன்றுமுதல் 5 இடங்களில் மட்டும் சோதனை
மாவட்ட ஆட்சியர்
1 min
சாலைப் பணிகளில் 'எரி எண்ணெய்' பயன்பாட்டால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து
தமிழகத்தில் நெடுஞ்சாலைப் பணிகளின் போது பெட்ரோலிய எரி எண்ணெயை (பெட்ரோ பர்ன் ஆயில்) பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
சிவாஜியின் வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவு ரத்து: உயர்நீதிமன்றம்
நடிகர் சிவாஜிகணேசனின் 'அன்னை இல்லம்' வீட்டை ஜப்தி செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா?
போலீஸாருக்கு வார விடுமுறை வழங்கும் நடைமுறை உள்ளதா எனக் கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இதுகுறித்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) பதிலளிக்க திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு: கிள்ளியூர் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதம் சிறை
அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் கிள்ளியூர் எம்எல்ஏ உள்பட 3 பேருக்கு தலா 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
1 min
பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்: திமுக தலைவர் விஜய்
பரந்தூர் மக்களே நம்பிக்கையோடு இருங்கள்' என திமுக தலைவர் விஜய் தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
1 min
தூத்துக்குடி கடற்கரையில் மீனவர் கொலை
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் படகில் தூங்கிய மீனவரைக் கொலை செய்தவர்களை போலீஸார் தேடிவருகின்றனர்.
1 min
கோவையில் ஏப்.26, 27-இல் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்
திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் கோவையில் ஏப்.26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min
100 நாள் வேலை பணி நாள்களை அதிகரிக்க ராமதாஸ் வலியுறுத்தல்
தமிழகத்துக்கு நிகழாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 100 நாள் ஊரக வேலைத் திட்டப்பணி நாட்களை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
1 min
போக்குவரத்துக் கழகங்களில் 52 பேர் பணி நியமனம்
போக்குவரத்துக் கழகங்களில் 52 பேருக்கான பணி நியமன ஆணைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சி வசங்கர் வழங்கினார்.
1 min
டாஸ்மாக் சோதனையை எதிர்த்த வழக்கில் நாளை தீர்ப்பு
டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை (ஏப்.23) தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.
1 min
திருச்சி அருகே சொத்துத் தகராறு: மகனை எரித்துக் கொன்ற தாய்
திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், தா.பேட்டை அருகே சொத்துத் தகராறில் மகனை கோடாரியால் வெட்டிக் கொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த தாயை தா.பேட்டை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
1 min
ஆபத்துக்கு அச்சாரம்!
இந்தியாவில் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறிய அணு உலைகளை அமைப்பதற்குத் தேவையான தொழில்நுட்பத்தை வழங்க அமெரிக்காவின் ஹோல்டெக் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு அந்த நாட்டு எரிசக்தி துறை அனுமதி அளித்துள்ளது.
2 mins
நாமும் இருக்கிறோம் பேருக்கு!
நாட்டின் மிக மிக முக்கியப் பிரச்னைகளின் மூலங்களை ஆய்ந்து, சார்பு நிலையின்றி நல்தீர்வுக்கான நடைமுறை சாத்தியங்களை பரிசீலித்து, நாடும் நாட்டு மக்களும் நலம் பெறும் வகையில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்.
4 mins
நினைவாற்றலை வளர்க்கும் எழுத்துப் பயிற்சி
நினைவாற்றல் என்பது, தான் அனுபவித்த, கற்றறிந்த விஷயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவுக்குக் கொண்டு வரும் ஒரு செயல்பாடாகும்.
2 mins
நீதிபதிகள் காலியிடங்களை நிரப்ப விரைவான நடவடிக்கை
மாவட்ட நீதிமன்றங்களில் காலியாகவுள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
1 min
மயானத்தில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்
முந்தைய அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக்குகள் மயானத்தில் அமைக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய திமுகவினர், தற்போது ஆரம்ப சுகாதார நிலையத்தை இடுகாட்டு பகுதியில் கட்டியிருப்பதாக அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ச்சுணன் தெரிவித்தார்.
1 min
யார் ஆட்சியில் மருத்துவக் கல்லூரிகள் - மருத்துவக் கட்டமைப்புகள் அதிகம்?
எதிர்க்கட்சித் தலைவர் - அமைச்சர்கள் பேரவையில் கடும் விவாதம்
3 mins
டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மருத்துவமனைகளில் ஊட்டச் சத்து உணவு
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு பால், முட்டை, சுண்டல், பிஸ்கட் வழங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
திருச்சியில் நடிகர் சிவாஜிக்கு சிலை: பேரவையில் அமைச்சர்கள் உறுதி
திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனுக்கு சிலை திறப்பது உறுதி என்று அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கே.என். நேரு ஆகியோர் தெரிவித்தனர்.
1 min
50 சுகாதார நிலையங்கள், 208 நலவாழ்வு மையங்கள் ஒரு மாதத்துக்குள் தொடங்கத் திட்டம்
தமிழகம் முழுவதும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அடுத்த ஒரு மாதத்துக்குள் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min
நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு தொடர எங்கள் அனுமதி தேவையில்லை: உச்சநீதிமன்றம்
'பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தங்களின் அனுமதி தேவையில்லை' என மனுதாரரிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min
மம்தாவுக்கு ஹிந்துக்கள் மீது வெறுப்பு: பாஜக குற்றச்சாட்டு
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹிந்துக்களை வெறுப்பவர்; எனவேதான் மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாதுக்கு இதுவரை அவர் செல்லவில்லை என்று பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min
வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி
வக்ஃப் திருத்தச் சட்டத்தைப் பயன்படுத்தி நாட்டில் மதவாத நோயைப் பரப்பவும், வன்முறையைத் தூண்டவும் சதி நடக்கிறது என்ற முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான முக்தார் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
1 min
இந்தியாவில் ஆண்டுக்கு 80 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்
தலைமைப் பொருளாதார ஆலோசகர்
1 min
இருநாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும்: இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்
புவிஉத்தி சார்ந்த விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒன்றாகப் பணியாற்றி இரு நாட்டு உறவை இந்தியா வலுப்படுத்த வேண்டும் என்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் வலியுறுத்தினார்.
1 min
போதிய ஆதாரங்களின்றி தாக்கல் செய்த மனு: வழக்குரைஞரைச் சாடிய உச்சநீதிமன்றம்
மேற்கு வங்க மாநிலத்தில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணை கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறாத நிலையில், மனுதாரரான வழக்குரைஞரை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கடுமையாகச் சாடியது.
1 min
இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்: அக்டோபரில் கையொப்பமாக வாய்ப்பு
'அமெரிக்கா-இந்தியா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. செப்டம்பர்-அக்டோபரில் முதல்கட்ட ஒப்பந்தம் கையொப்பமாக வாய்ப்புள்ளது' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min
ராகுல் காந்தி இரட்டைக் குடியுரிமை: பிரிட்டனிடம் விவரங்களைக் கோரியுள்ளோம்
அலாகாபாத் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு
1 min
மேற்கு வங்க ஆளுநர் மருத்துவமனையில் அனுமதி
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
1 min
16 பெட்டிகளுடன் ‘நமோ பாரத்’ ரயில் சேவை: ஏப்.24-இல் பிரதமர் தொடங்கி வைக்கிறார்
மொத்தம் 16 பெட்டிகளைக் கொண்ட முதல் நமோ பாரத் விரைவு ரயிலின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஏப்.24இல் தொடங்கி வைக்கிறார்.
1 min
ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு தேச வளர்ச்சிக்கு வித்திட்டது
கொள்கைகளை வகுப்பதில் ஆட்சிப் பணி அதிகாரிகளின் பங்களிப்பானது குடிமக்களின் நலவாழ்வுக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் வித்திட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.
1 min
போப் பிரான்சிஸ் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
போப் பிரான்சிஸ் மறைவுக்கு நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது: அமெரிக்காவில் ராகுல் குற்றச்சாட்டு
இந்திய தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினார்.
1 min
அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான கொள்கைகளை அரசு வகுக்கிறது
குடிமைப் பணிகள் தினத்தில் பிரதமர் மோடி
1 min
கர்நாடக முன்னாள் டிஜிபி கொலை: மனைவி கைது
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கொலை வழக்கில் அவரது மனைவி பல்லவியை போலீஸார் கைது செய்தனர்.
1 min
கனடாவில் ஹிந்து கோயில் சூறையாடல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டூழியம்
கனடாவில் ஹிந்து கோயிலைச் சூறையாடிய காலிஸ்தான் ஆதரவாளர்கள், நுழைவு வாயிலில் உள்ள தூண்களில் காலிஸ்தான் ஆதரவு வாசகங்களையும் எழுதிவிட்டுச் சென்றனர்.
1 min
ஜார்க்கண்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
'ஏ+' பிரிவில் ரோஹித், கோலி; ஐயர், கிஷணுக்கு மீண்டும் இடம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) ஆண்டு ஊதிய ஒப்பந்தப் பட்டியலில், மூத்த நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உச்சபட்ச ஊதியம் கொண்ட 'ஏ+' பிரிவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
1 min
கில் அற்புதம்; குஜராத்துக்கு 6-ஆவது வெற்றி
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 39-ஆவது ஆட்டத்தில், குஜராத் டைட்டன்ஸ் 39 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை வென்றது.
1 min
ஊழல் வழக்கு: எடியூரப்பா மனு மீதான விவகாரத்தை கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரைத்தது உச்சநீதிமன்றம்
பாஜக மூத்தத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவின் மனுவிலிருந்து எழுந்த சட்ட சிக்கல்கள், நீதிமன்ற விசாரணை உத்தரவுக்குப் பிறகு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முன் அனுமதி தேவையா என்பன உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விசாரிக்க கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை பரிந்துரை செய்தது.
1 min
சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீ: ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி
ஃபார்முலா 1 கார் பந்தயத்தின் நடப்பு சீசனில், 5-ஆவது ரேஸான சவூதி அரேபிய கிராண்ட் ப்ரீயில் ஆஸ்திரேலிய வீரரும், மெக்லாரென் டிரைவருமான ஆஸ்கார் பியஸ்ட்ரி வெற்றி பெற்றார்.
1 min
ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் கூகுள் சமரசம்: ரூ.20.24 கோடி செலுத்தியது
ஆண்ட்ராய்ட் தொலைக்காட்சி வழக்கில் இந்திய தொழில் போட்டி ஆணையத்துடன் (சிசிஐ) கூகுள் நிறுவனத்துக்கு சமரசம் ஏற்பட்டது. அத்துடன் சமரசத் தொகையாக ரூ.20.24 கோடியையும் அந்த நிறுவனம் செலுத்தியது.
1 min
கோனெரு ஹம்பி முன்னிலை
மகளிர் கிராண்ட் பிரீ செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் வென்ற இந்தியாவின் கோனெரு ஹம்பி, போட்டியில் முன்னிலை பெற்றார்.
1 min
வெள்ளி வென்றது ருத்ராங்க்ஷ் - ஆர்யா இணை
பெருவில் நடைபெறும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவின் ருத்ராங்க்ஷ் பாட்டீல் - ஆர்யா போர்ஸே கூட்டணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
1 min
ஆஸ்டபென்கோ சாம்பியன்
இறுதியில் சபலென்காவை சாய்த்தார்
1 min
அடுத்த போப் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?
போப் பிரான்சிஸின் மறைவையடுத்து, அவரின் உடலை நல்லடக்கம் செய்யும் பணிகள் முதலில் நடத்தி முடிக்கப்படும். பின்னர், சில நாட்களில் புதிய போப் ஆண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து 135 கார்டினல்கள் (சிவப்பு நிற தொப்பியணிந்த கிறிஸ்தவ மத குருமார்கள்) வாடிகனுக்கு வரவழைக்கப்படுவர்.
1 min
எளிமையான - சீர்திருத்த தலைவர்!
போப் பிரான்சிஸுக்கான அதிகாரபூர்வ மாளிகையில் தங்குவதையும் அவர் தவிர்த்துவிட்டார்.
1 min
கால்பந்து ரசிகர்
கிறிஸ்தவ மதச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடுவதற்கு முன்னதாக 'டேங்கோ' நடனமாடுவது போப் பிரான்சிஸுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு.
1 min
கடைசியாக சந்தித்த தலைவர் ஜே.டி.வான்ஸ்
போப் பிரான்சிஸை கடைசியாக சந்தித்த உலகத் தலைவர் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆவார்.
1 min
சென்செக்ஸ் நல்ல லாபத்தில் முடிவு
மூன்று நாள் தொடர் விடுமுறையை அடுத்து திங்கள்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் தொடர்ந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக்குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக்குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் நல்ல லாபத்துடன் முடிவடைந்தன.
1 min
பரோடா வங்கியில் எல்ஐசி பங்கு முதலீடு அதிகரிப்பு
இந்தியாவின் மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, அரசுக்குச் சொந்தமான பரோடா வங்கியில் தனது பங்கு முதலீட்டை சுமார் 2 சதவீதம் அதிகரித்துள்ளது.
1 min
பவுன் ரூ.72 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 72,120-க்கு விற்பனையானது.
1 min
ஹெச்ஐவி குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை
தமிழகத்தில் ஹெச்ஐவி பாதித்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.
1 min
தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்
தமிழகத்தில் பரமத்திவேலூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட 10 இடங்களில் வெப்பம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக பதிவானது.
1 min
திருச்சியில் 4 பேர் உயிரிழந்தது ஏன்? அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
திருச்சியில் நான்கு பேர் உயிரிழந்தது ஏன் என்பதற்கு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்.
1 min
துணைவேந்தர்கள் மாநாட்டுப் பணியில் ஆளுநர் மாளிகை: சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை
தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்த நிலையில், பல்கலைக்கழகங்களின் நிர்வாக நடவடிக்கைகளில் ஆளுநருக்கே அதிக அதிகாரங்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min
போப் பிரான்சிஸ் மறைவுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்
கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
1 min
Dinamani Coimbatore Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Cancel Anytime [ No Commitments ]
Digital Only