Try GOLD - Free

DINACHEITHI - DHARMAPURI - July 10, 2025

filled-star
DINACHEITHI - DHARMAPURI
From Choose Date
To Choose Date

DINACHEITHI - DHARMAPURI Description:

Dinacheithi is one of a leading daily Tamil newspaper.One of the top selling Tamil-language newspapers The group publishes across Tamil Nadu.

In this issue

July 10, 2025

பரமக்குடியில் பொது வேலைநிறுத்தம்: ஏ.ஐ.டி.யு.சி-சி.ஐ.டி.யு.வினர் மறியல்: 33 பெண்கள் உள்பட 79 பேர் கைது

ஒன்றிய அரசின் மக்கள் விரோதப் போக்கினை கண்டித்தும், போராடி பெற்ற தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்துவதை கைவிடக் கோரியும், வரலாறு காணாத விலைவாசி உயர்வினை கட்டுப்படுத்த வேண்டும்,குறைந்தபட்ச ஊதியம் 25 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும், மாதந்தோறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆறாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்பட 17 அம்ச கோரிக்கைகளை முன்னிட்டு நாடு முழுவதும் கம்யூ கட்சிகளின் தொழிற்சங்கங்கள் நேற்று பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.

1 mins

ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...

இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.

2 mins

தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்த அழைப்பு: ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின- போலீசார் கண்காணிப்பு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சிஐடியு, ஏ ஐ டியூசி, தொழுச உள்பட 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், போக்குவரத்து, மின்சார, தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்திருந்தன.

1 mins

ராதாபுரம் கால்வாயில் தண்ணீர் கொண்டுவரும் பாசன திட்டத்தில் விடுபட்ட 15 குளங்களை சேர்க்கவேண்டும்

முதல்வா மு.க. ஸ்டாலினுக்கு, தமிழக சட்டப் பேரவைத் தலைவா மு. அப்பாவு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் மழை மறைவு பிரதேசம் ஆகும். இந்த வட பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டம், பேச்சிப்பாறை அணையிலிருந்து 150 கன அடி தண்ணீர் கொண்டு வருவதற்காக தோவாளை கால்வாய் வழியாக நிலப்பாறை என்ற இடத்திலிருந்து 1970 ஆம் ஆண்டு ராதாபுரம் கால்வாய் வெட்டப்பட்டு 15 ஆயிரத்து 987 ஏக்கா நிலம் நேரடி பாசனம் முறையிலும், 1.013 ஏக்கா நிலம் 52 குளங்கள்மூலம் பாசனம் பெறும் வகையிலும் வடிவமைத்து கட்டப்பட்டது.

1 mins

Recent issues

Related Titles

Popular Categories