Try GOLD - Free

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

Penmani

|

October 2025

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

- -திவ்யமீனா

பாசிகாட்: அருணாசல பிரதேசத்தின் நுழைவாயில் எனப்படும் இந்த அழகான சிறிய நகரம், சியாங் நதி பள்ளத்தாக்கு கள் ஆகியன இமய மலைகளில் அழகாக அமைந்துள்ளன. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் வருமிடம் பாசிகாட்.

தேசு: அருணாசல பிரதேசத்திலுள்ள லோஹித் மாவட்டத்தின் தலைமையகம் மற்றும் ஒரு பழமையான மலை நகரமாகிய தேசு, மலைகளால் சூழப்பட்டுள்ளது. சமவெளி நிலங்கள்; அடர்ந்த வனப் பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கும் பெயர் பெற்ற இடம். முக்கிய சுற்றுலாத் தலமாகிய இங்கே கோவில், மடாலயம், குருத்வாரா போன்ற பல மதங்களின் புனித இடங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன.

தேசு தாவரவியல் பூங்கா: தேசு நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கல்வி நிகழ்ச்சிகள், தாவரவியல் தோட்டங்கள் மற்றும் வனவிலங்கு கண்காட்சிகள் இப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன. பிக்னிக் செல்ல ஏற்ற இடம்.

பரசுராம் குண்ட்: புனித யாத்திரை இடமாகிய பரசுராம் குண்ட், லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்து புராணங்களில் பரசுராமருடன் தொடர்புடையது. சும்லாங் ரிசர்வ் வனப் பகுதிகளில் அமைந்துள்ள குண்ட், ருத்ராட்ச மரங்களால் சூழப்பட்டுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மகரசங்கராந்தி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடுகின்றனர்.

மெச்சுக்கா ஏரி: கடல்மட்டத்திலிருந்து ஆறாயிரம் அடி உயரத்தில் உள்ளது. ரோலிங் பச்சை புல்வெளிகள், மர வீடுகள் போன்ற அழகான காட்சிகளைக் காணலாம். அமைதியான, அருமையான இடம். மெச்சுக்கா பள்ளத்தாக்கில், மீன் பிடித்தல், மலையேற்றம், படகு சவாரி போன்ற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

மாலினிதன் கோவில்: தொல்பொருள் தளம் மற்றும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். சியாங் மலைகளின் அடிவாரத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இடிபாடுகளுடன் இருப்பினும், முக்கிய இந்து வழிபாட்டுத் தலமாக கருதப்படுவதால், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். புராண முக்கியத்துவம் வாய்ந்த மாலினிதன் கோவில், முழுக்க முழுக்க கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி சமயம், விலை மதிப்பற்ற வேதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதென கூறப்படுகிறது.

MORE STORIES FROM Penmani

Penmani

Penmani

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

time to read

7 mins

October 2025

Penmani

Penmani

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

ஆலங்காட்டு ரகசியம்!

சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.

time to read

1 min

October 2025

Penmani

நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்

ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.

time to read

3 mins

October 2025

Penmani

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!

தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.

time to read

4 mins

October 2025

Penmani

Penmani

இனிப்பு பிறந்த கதை

இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!

யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

தீபாவளி பூ!

இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.

time to read

1 min

October 2025

Penmani

மதுரையில் மஹா பெரியவர் கோயில்!

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!

time to read

1 min

October 2025

Translate

Share

-
+

Change font size