Essayer OR - Gratuit
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
Penmani
|October 2025
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
பாசிகாட்: அருணாசல பிரதேசத்தின் நுழைவாயில் எனப்படும் இந்த அழகான சிறிய நகரம், சியாங் நதி பள்ளத்தாக்கு கள் ஆகியன இமய மலைகளில் அழகாக அமைந்துள்ளன. புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அதிகம் வருமிடம் பாசிகாட்.
தேசு: அருணாசல பிரதேசத்திலுள்ள லோஹித் மாவட்டத்தின் தலைமையகம் மற்றும் ஒரு பழமையான மலை நகரமாகிய தேசு, மலைகளால் சூழப்பட்டுள்ளது. சமவெளி நிலங்கள்; அடர்ந்த வனப் பகுதிகள் மற்றும் ஆறுகளுக்கும் பெயர் பெற்ற இடம். முக்கிய சுற்றுலாத் தலமாகிய இங்கே கோவில், மடாலயம், குருத்வாரா போன்ற பல மதங்களின் புனித இடங்கள் ஒரே வளாகத்தில் உள்ளன.
தேசு தாவரவியல் பூங்கா: தேசு நகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கல்வி நிகழ்ச்சிகள், தாவரவியல் தோட்டங்கள் மற்றும் வனவிலங்கு கண்காட்சிகள் இப்பூங்காவில் இடம்பெற்றுள்ளன. பிக்னிக் செல்ல ஏற்ற இடம்.
பரசுராம் குண்ட்: புனித யாத்திரை இடமாகிய பரசுராம் குண்ட், லோஹித் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்து புராணங்களில் பரசுராமருடன் தொடர்புடையது. சும்லாங் ரிசர்வ் வனப் பகுதிகளில் அமைந்துள்ள குண்ட், ருத்ராட்ச மரங்களால் சூழப்பட்டுள்ளது. பிரபலமான சுற்றுலாத் தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மகரசங்கராந்தி தினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கே கூடுகின்றனர்.
மெச்சுக்கா ஏரி: கடல்மட்டத்திலிருந்து ஆறாயிரம் அடி உயரத்தில் உள்ளது. ரோலிங் பச்சை புல்வெளிகள், மர வீடுகள் போன்ற அழகான காட்சிகளைக் காணலாம். அமைதியான, அருமையான இடம். மெச்சுக்கா பள்ளத்தாக்கில், மீன் பிடித்தல், மலையேற்றம், படகு சவாரி போன்ற சாகச நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.
மாலினிதன் கோவில்: தொல்பொருள் தளம் மற்றும் பழமையான கோவில்களில் ஒன்றாகும். சியாங் மலைகளின் அடிவாரத்தில், பிரம்மபுத்திரா ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. இடிபாடுகளுடன் இருப்பினும், முக்கிய இந்து வழிபாட்டுத் தலமாக கருதப்படுவதால், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். புராண முக்கியத்துவம் வாய்ந்த மாலினிதன் கோவில், முழுக்க முழுக்க கிரானைட் கற்களால் செதுக்கப்பட்டுள்ளது. அகழ்வாராய்ச்சி சமயம், விலை மதிப்பற்ற வேதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதென கூறப்படுகிறது.
Cette histoire est tirée de l'édition October 2025 de Penmani.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Penmani
Penmani
கால்பந்து விளையாட்டு உருவான நாடு!
கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.
1 min
April 2026
Penmani
காலம் கடந்தும் நிற்கும் நீதி!
ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.
1 mins
April 2026
Penmani
அளவிற்கு மிஞ்சினால்..
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.
2 mins
April 2026
Penmani
அருமருந்து அத்தி!
அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.
1 mins
April 2026
Penmani
விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...
கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.
4 mins
April 2026
Penmani
ஜென் தத்துவம். நீ நீயாகவே!
'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.
3 mins
April 2026
Penmani
புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.
4 mins
April 2026
Penmani
எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.
2 mins
April 2026
Penmani
பூக்கூடை
பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.
1 mins
April 2026
Penmani
பழனி மலை பயணம்!
மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.
4 mins
April 2026
Translate
Change font size

