Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 10,000+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

தமிழரின் தொன்மையை மறைக்க முயற்சி!

Dinamani Dharmapuri

|

June 25, 2025

புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கை அளித்துள்ளன.

- கட்டுரையாளர்: தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், 'கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.

கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.

முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.

மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும்.

1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.

MORE STORIES FROM Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தகுதியான வாக்காளர்கள் பெயர் நீக்கப்படாது

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உறுதி

time to read

1 mins

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழக உரிமைகளை அடகு வைக்கவா கூட்டணி?

எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் கேள்வி

time to read

1 min

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இரு பேருந்துகள் மோதல்: 7 பேர் உயிரிழப்பு

தென்காசி அருகே இடைகால் துரைச்சாமியாபுரத்தில் இரு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், தம்பதி உள்பட 7 பேர் உயிரிழந்தனர்; 76 பேர் காயமடைந்தனர்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் பதவியேற்பு

புது தில்லி, நவ.24: உச்சநீதிமன்றத்தின் 53-ஆவது தலைமை நீதிபதியாக சூர்ய காந்த் திங்கள்கிழமை பதவியேற்றார். தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, 'கடவுளின் பெயரில்' என ஹிந்தியில் அவர் உறுதிமொழி ஏற்றார்.

time to read

2 mins

November 25, 2025

Dinamani Dharmapuri

பாகிஸ்தானின் கபட நாடகம்!

புதுதில்லியில் நெரிசல் மிக்க செங்கோட்டை பகுதியிலிருந்து சுமார் 150 மீட்டர் தொலைவிலுள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே, கடந்த 10.11.2025 அன்று காரை வெடிக்கச் செய்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்; முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

time to read

3 mins

November 25, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அயோத்தி கோயில் 161 அடி உயர கோபுரத்தில் காவிக் கொடி: பிரதமர் மோடி இன்று ஏற்றுகிறார்!

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் கட்டுமானம் நிறைவடைந்ததையடுத்து, அதன் 161 அடி உயரமுள்ள பிரதான கோபுரத்தின் உச்சியில் பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (நவ. 25) காவிக்கொடியை ஏற்றவுள்ளார்.

time to read

1 min

November 25, 2025

Dinamani Dharmapuri

பெண்கள் பாதுகாப்பில் முன்னுரிமை

கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலியல் குற்ற நிகழ்வுகள் உலகளவில் மூன்று பெண்களில் ஒருவருக்கு அவரது வாழ்நாளில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இவ்வாறான குற்றங்களில் பலவும் பதிவு செய்யப்படுவதில்லை.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அதிகாரமே குறிக்கோள்!

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

time to read

2 mins

November 24, 2025

Dinamani Dharmapuri

தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடர்: இந்திய கேப்டன் கே.எல்.ராகுல்

புது தில்லி, நவ. 23: தென்னாப் பிரிக்காவுடனான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோத வுள்ள இந்திய அணி 15 பேரு டன் ஞாயிற்றுக்கிழமை அறிவிக் கப்பட்டது.

time to read

1 min

November 24, 2025

Dinamani Dharmapuri

காயத்தான்-வாகனத்தான்-அழியான்

தமிழின் இன்சுவை, இம்மொழியில் பாடப்பட்ட கவிதைகளின் அருமையான சொற்பிரயோகங்களில் இருந்து விரிந்து தெரியும். சிற்றிலக்கியங்களில் இவற்றைப் படித்து இன்புறலாம். பலவிதமான கவிதை வடிவங்களைக் கொண்டு இயற்றப்படுவன சிற்றிலக்கியங்கள்.

time to read

1 min

November 23, 2025

Translate

Share

-
+

Change font size