Versuchen GOLD - Frei
தமிழரின் தொன்மையை மறைக்க முயற்சி!
Dinamani Dharmapuri
|June 25, 2025
புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கை அளித்துள்ளன.
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், 'கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.
கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.
மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும்.
1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.
Diese Geschichte stammt aus der June 25, 2025-Ausgabe von Dinamani Dharmapuri.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
அயன்மேன் டிரையத்லான்: இந்திய அணியினர் சிறப்பிடம்
சென்னையில் முதன்முறையாக நடைபெற்ற ஒலிம்பிக் தூர டிரையத்லான் நிகழ்வான, 'அயன்மேன் 5150 டிரையத்லான் சென்னை' போட்டியில் இந்திய அணியினர் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
தாமதமாகும் 'ஜனநாயகன்' - பின்புலம் என்ன?
மிகுந்த எதிர்பார்ப்புடன் ஜனவரி 9-ஆம் தேதி வெளி வரவேண்டிய நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' தணிக்கைக் குழுவினரின் தாமதத்தால் வெளிவராமல் போனது பரவலான விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது.
3 mins
January 12, 2026
Dinamani Dharmapuri
எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...
இன்று பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டிஷாரை விரட்டியது 'வெள்ளையனே வெளியேறு' என்ற 'குயிட் இந்தியா' இயக்கம்.
2 mins
January 12, 2026
Dinamani Dharmapuri
கோலி அதிரடியில் இந்தியா வெற்றி
வதோதராவில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் நியூஸிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
தேசிய மோட்டார் சைக்கிள் பந்தயம்
எம்ஆர்எஃப் எம்எம்எஸ்சி எஃப்எம்எஸ்சிஐ தேசிய மோட்டார் சைக்கிள் கார் பந்தய சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெகதிஸ்ரீ குமரேசன், ரஹில், சூர்யா, ராஜ் குமார் சிறப்பிடம் பெற்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
சபலென்கா, மெத்வதேவ் சாம்பியன்
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் அரினா சபலென்காவும், ஆடவர் பிரிவில் டேனில் மெத்வதேவும் பட்டம் வென்றனர்.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
தேசிய கூடைப்பந்து: ரயில்வேக்கு இரட்டை பட்டம்
தேசிய சீனியர் ஆடவர், மகளிர் கூடைப்பந்து போட்டியில் இந்திய ரயில்வே இரட்டை சாம்பியன் பட்டம் வென்றது.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
ஸ்விட்டோலினா சாம்பியன்
ஆக்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலனா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டம் வென்றார்.
1 min
January 12, 2026
Dinamani Dharmapuri
இளைஞர்களின் துறவி!
ஸ்ரீ அரவிந்தர் விவேகானந்தரைத் தம் குரு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
3 mins
January 12, 2026
Dinamani Dharmapuri
சிரியாவில் அமெரிக்கா தாக்குதல்
சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் மேற்கொண்டது.
1 min
January 12, 2026
Translate
Change font size
