يحاول ذهب - حر
தமிழரின் தொன்மையை மறைக்க முயற்சி!
June 25, 2025
|Dinamani Dharmapuri
புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கை அளித்துள்ளன.
கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், 'கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.
கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.
முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.
மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும்.
1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.
هذه القصة من طبعة June 25, 2025 من Dinamani Dharmapuri.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Dinamani Dharmapuri
Dinamani Dharmapuri
தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகளுக்கும் ‘இசிஐநெட்’ அறிமுகம்
வாக்காளர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான தேர்தல் ஆணையத்தின் அனைத்துச் சேவைகள் மற்றும் தகவல்களை வழங்கும் இசிஐநெட் எனும் புதிய ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளத்தை தில்லி ஐஐசிடிஇஎம் மாநாட்டில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வியாழக்கிழமை அறிமுகம் செய்தார்.
1 min
January 23, 2026
Dinamani Dharmapuri
வீட்டில் இருந்தபடியே பத்திரப் பதிவு உள்பட 18 சேவைகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 mins
January 23, 2026
Dinamani Dharmapuri
நடப்பு சாம்பியன்கள் சின்னர், கீஸ் வெற்றி
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியன்களான இத்தாலியின் யானிக் சின்னர், அமெரிக்காவின் மேடிசன் கீஸ் ஆகியோர் தங்களது பிரிவில் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.
1 min
January 23, 2026
Dinamani Dharmapuri
சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரம்: கேரள பேரவையில் காங்கிரஸ் அமளி
கேரள சட்டப்பேரவையில் சபரிமலை தங்கக் கவச முறைகேடு விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.
1 mins
January 23, 2026
Dinamani Dharmapuri
பாரதத்தை வழிநடத்தும் தலைவர்!
இந்தியா அதிகாரபூர்வமாக பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது 1947-இல்தான் என்றாலும், அதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே, அக்டோபர் 21, 1943 அன்று சிங்கப்பூரில் இடைக்கால சுதந்திர இந்திய அரசை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிறுவிவிட்டார் என்பது அதிகம் பேசப்படாத வரலாறு.
3 mins
January 23, 2026
Dinamani Dharmapuri
தங்கம் பவுனுக்கு ரூ. 1,720 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.
1 min
January 23, 2026
Dinamani Dharmapuri
சிக்கல் தீர்க்கும் சிரகிரி வேலவன்!
சிரகிரி, சிகரகிரி, மகுடகிரி, புட்பகிரி, சென்னியங்கிரி எனப் பல்வேறு பெயர்களாலும் அழைக்கப்படும் திருத்தலம் சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
2 mins
January 23, 2026
Dinamani Dharmapuri
WPL யுபியை வீழ்த்தியது குஜராத்
மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட்டின் 14-ஆவது ஆட்டத்தில் குஜராத் ஜயன்ட்ஸ் 45 ரன்கள் வித்தியாசத்தில் யுபி வாரியர்ஸை வியாழக்கிழமை வென்றது.
1 min
January 23, 2026
Dinamani Dharmapuri
மணிப்பூரில் மைதேயி சமூக நபர் சுட்டுக் கொலை
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தைச் சேர்ந்த நபரை குகி தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுவோர் கடத்திச் சென்று கொலை செய்தனர்.
1 min
January 23, 2026
Dinamani Dharmapuri
தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக
பியூஷ் கோயல்-டி.டி.வி.தினகரன் சந்திப்பில் உடன்பாடு
1 mins
January 22, 2026
Translate
Change font size

