Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

தமிழரின் தொன்மையை மறைக்க முயற்சி!

Dinamani Dharmapuri

|

June 25, 2025

புணே, புதுச்சேரி ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் தரம் வாய்ந்த ஆய்வு மையங்களும், அமெரிக்காவில் உள்ள ஆய்வு மையமும் கீழடியில் கிடைத்த பழம்பொருள்களை ஆராய்ந்து கி.மு. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை எனத் தெளிவான அறிக்கை அளித்துள்ளன.

- கட்டுரையாளர்: தலைவர், உலகத் தமிழர் பேரமைப்பு.

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க அறிவியல் ரீதியான தரவுகள் தேவை என்று மத்திய அரசின் கலாசார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியுள்ளார். மேலும், 'கீழடி அகழாய்வு குறித்து அளிக்கப்பட்டுள்ள அறிக்கைகள் அறிவியல்பூர்வமானவை அல்ல; அவற்றுக்கு அங்கீகாரம் வழங்குவதற்கு முன்பு மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும். கூடுதல் தகவல்கள், சான்றுகள், கூடுதல் அறிவியல்பூர்வமான ஆய்வுகள் தேவைப்படுகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.

கீழடியில் 2014-2015 மற்றும் 2015-2016 ஆகிய ஆண்டுகளில் இந்தியத் தொல்லியல் துறை அதிகாரியான முனைவர் அமர்நாத் இராமகிருட்டிணன் தலைமையில் வைகையாற்றின் தோற்றுவாயிலிருந்து அது கடலில் கலக்கும் இடம்வரை இரு கரைகள் நெடுகிலும் ஆய்வு நடத்தப்பட்டு 293 தொல்லியல் ஆய்வு சுவடுகள் கண்டறியப்பட்டன. இவற்றில் மதுரை அருகே கீழடி என்ற இடத்தைத் தேர்ந்தெடுத்து முதலில் தொல்லியல் ஆய்வு நடத்தப்பட்டது. இதன்மூலம் 5,800-க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன.

முதன்முதலாக செங்கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் சுவடுகள் கண்டறியப்பட்டன. ஓடுகள், உறைக்கிணறுகள், கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் அடங்கிய ஏராளமான பானை ஓடுகளும் கண்டறியப்பட்டன. அதில் ஒரு பானை ஓட்டில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. பாண்டியரின் சின்னமான மீன் சின்னம் கிடைத்ததால் இது பண்டைய மதுரையாக இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது.

மேலும், அங்கு கண்டறியப்பட்ட பழம்பொருள்களின் மூலம் கீழடி நாகரிகம் ஒரு நகர்ப்புற நாகரிகமே என்பது நிறுவப்பட்டது. இதன் காலம் கி.மு. 6-ஆம் நூற்றாண்டு என்பதும் தமிழகத்தின் தொல்லியல் ஆய்வு வரலாற்றில் இது ஒரு மாபெரும் கண்டுபிடிப்பாகும் என்பதும் வரலாற்றுப்பூர்வமான உண்மைகளாகும்.

1926-ஆம் ஆண்டில் ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தின்போது சிந்து மாநிலத்தில் சர் ஜான் மார்ஷல் என்ற தொல்லியல் அதிகாரி நடத்திய அகழாய்வில் சிந்துவெளி நாகரிகம் கண்டறியப்பட்டது. இந்திய வரலாற்றில் ஆரியர் இந்தியாவில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பே மிகத் தொன்மையான நாகரிகம் இது என்பதை உலகம் உணர்ந்தது. இயற்கை காரணங்களினால் சிந்துவெளி நாகரிகம் அழிந்து 1,000 ஆண்டுகளுக்குப் பின்னரே ஆரியர்கள் இந்தியாவுக்குள் அடியெடுத்து வைத்தனர் என்பதையும் உலகம் உணர்ந்தது.

MEER VERHALEN VAN Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Dharmapuri

இலங்கையில் சிக்கிய இந்தியப் பயணிகள் அனைவரும் மீட்பு

டித்வா புயலால் இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவித்த இந்தியப் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப் பட்டுள்ளனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

தொழில்துறை எரிசக்தி திறனில் தமிழகம் முதலிடம்

தொழில்துறை எரிசக்தி செயல்திறனில், தமிழகம் 55.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

எண்ம கைது மோசடி வழக்குகள்: சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

புது தில்லி, டிச.1: நாடு முழுவதுமான எண்ம கைது (டிஜிட்டல் அரெஸ்ட்) மோசடி வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) விசாரிக்க சிபிஐ திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Dharmapuri

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Translate

Share

-
+

Change font size