Go Unlimited with Magzter GOLD

Go Unlimited with Magzter GOLD

Get unlimited access to 9,500+ magazines, newspapers and Premium stories for just

$149.99
 
$74.99/Year

Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

சம்பூரில் மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதிக்கு சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் சென்ற குழு

மனித உரிமைகளுக்கும் அபிவிருத்திக் குமான மையத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி இரட்ணவேல் தலைமையில் சட்டத்தரணிகள் குழு ஒன்று நேற்று வியாழக்கிழமை சம்பூர் பகுதியில் மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு குறித்த பகுதியை பார்வையிட்டதோடு அக்கிராம மக்களுடனும் கலந்துரையாடியது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

கிளிநொச்சியில் புலிகளின் ஆயுதங்களை தேடிநடந்த அகழ்வுகள் இடைநிறுத்தம்!

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணியானது எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட்டது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

டயகம- தலவாக்கலை இடையே சிசு செரிய பஸ் சேவை ஆரம்பம்

நுவரெலியா மாவட்டத்தில் அதிக பின்தங்கிய பிரதேசமான டயகம மற்றும் அக்கரப்பத்தனை பிரதேசத்திலிருந்து சிசு செரிய பஸ் சேவைக்கான அனுமதி கிடைத்துள்ளது. இதனை மத்திய மாகாண தனியார் போக்குவரத்து சபை அனுமதி வழங்கியுள்ளது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைக்கும் முயற்சி தொடர்ந்தால் எதிராக நீதிமன்ற நடவடிக்கை

வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

வவுனியா மாநகரசபையில் சோலை வரி தொடர்பில் ஆளும் - எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் தர்க்கம்

வவுனியா மாநகர சபையில் சோலை வரி தொடர்பில் அமைதியின்மை ஏற்பட்டு ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

தொல்லியல்துறை திணைக்களம்.... முன் பக்கத் தொடர்ச்சி

இரு தரப்பினருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

வத்திராயன் கடற்கரையில் 103 கிலோ கஞ்சா மீட்பு

கடற்கரையில் இருந்து 103 கிலோ கேரள கஞ்சா விசேட அதிரடிப் படையினரினால் மீட்கப்பட்டு மருதங்கேணி பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

ரோஹிதவின் மகள் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன நேற்று வியாழக்கிழமை மத்துகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்; இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்து போன்ற அணிகள் பங்கேற்க முடியாத நிலை

2028 ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கிறது. இந்த ஒலிம்பிக்கில் ரி - 20 கிரிக்கெட் இடம் பெறுகிறது. 1900-க்குப் பிறகு முதன்முறையாக கிரிக்கெட் ஒலிம்பிக்கில் இடம் பிடித்துள்ளது. ஆண்கள் அணி, பெண்கள் அணி என மொத்தம் 12 அணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணியிலும் தலா 15 பேர் இடம் பிடிக்க முடியும்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர் காட்டு யானையின் தாக்குதலில் உயிரிழப்பு

அநுராதபுரம் கல்னேவ பகுதியில் காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளானதில் சிவில் பாதுகாப்பு படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளதாக கல்னேவ பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

16 ஆண்-பெண் சகோதர பாடசாலைகளைப் பழைய மாணவர்கள் பங்கேற்கும் ‘சி’ றக்பி

இலங்கையின் முன்னாள் றக்பி வீரர் மற்றும் முன்னாள் சர்வதேச மத்தியஸ்தர் டில்ரோய் பெர்னாண்டோ தலைமையிலான ஏ கோல் இன்டர் நேஷனல் எட்டாவது தடவையாக ஏற்பாடு செய்துள்ள அணிக்கு எழுவர் சிறப்பி திருவிழா சீ.ஆர். அண்ட் எவ்.சி. மைதானத்தில் இம் மாதம் 30 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பியோட்டம்

பொலிஸ் காவலில் இருந்த சந்தேக நபர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் இரத்தினபுரி பொலிஸ் தலைமையகத்தின் இரண்டு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 240 கிலோ கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்த சரக்கு வாகனத்தில் தக்காளி பெட்டிகளுக்கு பின்புறம் % மூட்டைகளில் பதுக்கி வைத்து கொண்டுவரப்பட்ட 240 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதோடு, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

கடந்த அரசாங்கங்களை விட இந்த அரசாங்கமே மோசம்

இந்த அரசாங்கமானது கடந்த கால அரசாங்கங்களை விட மோசமான அரசாங்கமாக உள்ளது. ஏனென்றால், இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் அரசியல்தீர்வு மற்றும் அதிகாரப் பகிர்வினைப் பற்றி பேசும் போது

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

இலங்கையில் தமிழ் மக்களிற்கு எதிராக போர்க்குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் இடம்பெற்றுள்ளது

இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்து சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என பிரான்சின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

மாகாணங்களும், அபிவிருத்தியும் நிர்வாகமும்

2024 அக்டோபரில், மக்களின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துமாறு ஆளுநர்களுக்கு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். மாகாண சபை பொறிமுறையை பகுத்தறிவுபடுத்தும் நோக்கில் புதிய யோசனையை தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அநு ரகுமார திஸாநாயக்க ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்தார். தற்போதைய அரசாங்கத்தின் நிலைமாறு காலத்தை கருத்தில் கொண்டு, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு இயன்ற சிறந்த சேவைகளை வழங்குவதில் மாகாண சபைகள் பாடுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

உலக வங்கி பிரதிநிதிகளுடன் கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

இலங்கை மற்றும் மாலைத்தீவின் உலக வங்கி வதிவிடப் பிரதிநிதி ஜெவோர்க் சார்க்ஸ் யன் மற்றும் உலக வங்கித் தூதுக் குழுவினர் தலைமை யில், நேற்றுமுன்தினம் புதன்கிழமை மட்டக் களப்பு மாவட்ட செய லாளர் அலுவலகத்தில் கலந்துரை யாடல் ஒன்று நடைபெற்றது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

கண்டி நகரில் நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகள் மீது நடவடிக்கை

கண்டி நகரில் குறைந் தளவான மக்களே வீதி யைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதைகளை பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை பயன்ப டுத்தாமல் இருப்ப தற்கு நிலத்தடி சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகளும் காரணமாக அமைந் துள்ளதை அவதானிக்க முடிகிறது.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களை விட வீதி விபத்துக்களால் இங்கு அதிகளவு இழப்புக்கள்

போர்க் காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புக்களையும், அங் கவீனங்களையும் விடத் தற் போது வீதி விபத்துக்களால் அதிகளவு இழப்புக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கின் றோம். வீதி விபத்துக்கள் தொடர்பான செய்திகள் இல் லாத நாள் ஒன்று இல்லை என்ற நிலைமையே தற்போது இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் வேதனை தெரிவித்துள்ளார்.

1 min  |

August 01, 2025

Thinakkural Daily

வீதியில் சென்றவர் லொறி மோதியதில் உயிரிழப்பு

குருநாகல் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யன்தம்பலாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சொந்தமான காணியை உரிமைகோரும் 267 குடும்பங்கள்

கண்டி தேசிய வைத்திய சாலைக்குச் சொந்தமான காணியில் 267 குடும்பங்கள் சட்டவிரோதமாக உரிமை கொண்டாடுவதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் திருமதி இரேஷா பெர்ணான்டோ தெரிவித்தார்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

லெஜெண்ட்ஸ் கிரிக்கெட்: அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டி நடக்குமா?

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக 'சாம்பியன்ஸ் ஒப் லெஜெண்ட்ஸ்' 20 ஓவர் லீக் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதஉள்ள நிலையில் இந்தப் போட்டி நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

கல்லுமனை வடக்கு உப பிரதேச செயலக வழக்கு அடுத்த வருடம் ஜனவரிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த கோரி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நேற்று புதன்கிழமை (30) மேன்முறையீட்டு நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

பிளாஸ்டிக் இல்லாத உலகம் வேண்டும் திருகோணமலையில் சிறுவர் கண்காட்சி

திருகோணமலை Blossoming Future முன்பள்ளியின் சிறுவர் கண்காட்சி செவ்வாய்க்கிழமை (29) பாடசாலையில் இடம்பெற்றது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்தவின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை ஓகஸ்ட் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பொல்கஹவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

8.8 ரிக்டர் சக்தியாய்ந்த நிலநடுக்கத்தால் ரஷியா, ஜப்பானைத் தாக்கிய சுனாமி

சரிந்த கட்டிடங்கள், மலைகளுக்கு ஓடிய மக்கள்; 30 சென்டிமீட்டர் உயரம் வரை எழுந்த அலைகள், கரையொதுங்கிய திமிங்கிலங்கள்

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

ஆடி அமாவாசைத் தினத்தில் கீரிமலைக் கடற்கரையில் காயங்களுக்குள்ளான மக்கள் கூடல் நடடிக்கை எடுக்காது யாழ்.மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்

ஆடி அமாவாசை தினத்தில் யாழ்ப்பாணம், வடமாராட்சி, தீவகம், வேலணை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் கீரிமலை கடற்கரைக்குத் தரிசனம் செய்ய வந்தனர். ஆனால், அந்த நாளில் கடலுக்குள் உள்ள கூரிய கற்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை காரணமாகப் பலர் தங்களது பாதங்களில், முழங்கால்களில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் யாழ். மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளதுடன் இதுதொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

போர் நிறுத்த ஒப்பந்தத்தை கம்போடியா மீறுவதாக தாய்லாந்து இராணுவம் குற்றச்சாட்டு

கம்போடியா போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக தாய்லாந்து சாட்டியுள்ளது. முன்னதாக, இரு நாடுகளும் நிபந்தனையற்ற போர் நிறுத்தத்துக்கு செவ்வாய்க்கிழமை ஒப்புக் கொண்டன.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

இனவழிப்புக்கு சர்வதேச பொறிமுறை ஊடாக விசாரணை நடைபெற வேண்டும்

இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை இனமான தமிழ் இனம் மீது இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசுகள் 2009 வரை மேற்கொண்டது ஒரு இனவழிப்பு நடவடிக்கையே எனவும், அதன் உச்சக்கட்டமாக 2009 இறுதி யுத்தகாலத்தில் மிகக் கொடூரமான இனவழிப்பு யுத்தத்தில் பல ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

1 min  |

July 31, 2025

Thinakkural Daily

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராய்வு

உத்தேச கல்வி மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் கல்வி, ஊழியப் படை மற்றும் மனித மூலதனம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் ஆராயப்பட்டது.

1 min  |

July 31, 2025