Try GOLD - Free

Newspaper

Thinakkural Daily

யுத்தத்தில் அங்கவீனமான படையினரை நேரில் சென்று நலன் விசாரித்த ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று திங்கட்கிழமை காலை அத்திடியவில் உள்ள மிஹிந்து செத் மெதுர சுகாதார விடுதிக்குச் சென்று அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

பேசாலை 50 வீட்டு திட்ட கடற்கரையோர பகுதியில் கனிய மணல் அகழ்வுக்கு நில அளவை செய்ய முயற்சி

மன்னார் பேசாலை 50 வீட்டு திட்ட கடற் கரையோர பகுதியில் தனியாருக்குச் சொந் தமான காணியில், நேற்று திங்கட்கிழமை மதியம் கனிய மணல் அகழ்வுக்கான நில அளவை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன் றியத்தின் தலையீட்டினால் குறித்த நடவ டிக்கை கைவிடப்பட்ட நிலையில், நில அளவைக்கு என கொழும்பு தலைமையகத் தில் இருந்து வருகை தந்தவர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

320 கிலோ இஞ்சி,150 கிலோ ஏலக்காய் கற்பிட்டி கடற்பகுதியில் பிடிபட்டது

கற்பிட்டி கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர்ந்த இஞ்சி மற்றும் ஏலக்காய் தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

பாகிஸ்தானுக்கு நிதி வழங்க ஐஎம்எவ் 11 நிபந்தனைகள்

சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எவ்) பாகிஸ்தானுக்கு நிதி உதவி வழங்குவது தொடர்பாக 11 நிபந்தனைகளை புதிதாக விதித்துள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

வெல்லாவெளி விவேகானந்தன் எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா

பேராதனைப் பல்கலைக்கழக 1977/1978 கலைப்பீட நண்பர்கள் அணியின் அனுசரணையில் ஓய்வுநிலை அதிபரும் இலக்கிய வியலாளருமான வெல்லாவெளி விவேகானந்தன் எழுதிய ஒற்றைப்பனை(சிறுகதைத் தொகுதி), மகாவலி கங்கைக் கரையினிலே (நாவல்) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வெல்லாவெளி கலைமகள் மகாவித்தியாலய கலையரங்கில் மட்டக்களப்பு தமிழ்ச்சங்க தலைவர் சைவப் புரவலர் வி.றஞ்சிதமூர்த்தி தலைமையில் நடைபெறவுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

இலங்கை இரசாயனவியல் கல்லூரியின் புத்தாண்டு விழா

இரசாயன நிறுவனத்தில்அமைந்துள்ள கல்லூரியின்(Institute of Chemistry Ceylon) வருடாந்தசிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 30 அன்று ராஜகிரியா வில்FIM மைதானத்தில் கொண்டாடப் பட்டது. இந்நிகழ்ச்சியில் இரசாயன தலைவி பேராசிரியைசாந்தனி பெரே ரா,முன்னாள் தலைவர்கள், கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள் பங்கேற்றனர்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

அக்கரைப்பற்று சபைகளுக்கு மூவரை அனுப்ப மக்கள் காங்கிரஸ் தீர்மானம்

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு 3 ஆசனங்கள் கிடைத்தது. ஒவ்வொரு கட்சியிலும் பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குதல் என்ற வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ள இவ்வேளையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக யாருடைய பெயர் முன்மொழியப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

8 கோடி ரூபா குஷ் போதைப் பொருளுடன் தாய்லாந்து இளைஞன் விமான நிலையத்தில் கைது

7 கோடியே 90 இலட்சம் ரூபா பெறுமதியான குஷ் போதைப் பொருளுடன் தாய்லாந்து இளைஞன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை அதிகாலை சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவினர் விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

Nvidia RTX 5000பலத்துடன் இயக்கப்படும் Next-GenROG Strix மற்றும் Zephyrus உடன் உலகின் மிக இலகுவான Copilot+ PC ஐ ASUS அறிமுகப்படுத்துகிறது

ASUS மற்றும் Republic of Gamers (ROG) இலங்கையில் அல்ட்ரா-போர்ட்டபிலிட்டி, AI மற்றும் அடுத்த தலைமுறை கேமிங் அனுபவங்களுக்கு ஒரு புதிய அளவுகோலை அமைத்து, இலங்கையில் தங்கள் சமீபத்திய கணினி கண்டுபிடிப்புகளின் வரிசையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

இஸிபத்தன கல்லூரி கடைசி நேரத்தில் போராடி டயலொக் ஜனாதிபதிக் கிண்ணத்தை சுவீகரித்தது

கொழும்பு றோயல் கல்லூரி விளையாட்டுத் தொகுதி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இறுதிப் போட்டியின் கடைசி கட்டத்தில் திரித்துவ கல்லூரியை 12 (2 ட்ரைகள், ஒரு கொன்வேர்ஷன்) - 9 (2 பெனல்டிகள், ஒரு ட்ரொப் கோல்) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் இஸிபத்தன கல்லூரி வெற்றி கொண்டு டயலொக் ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்தது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

இந்தியாவின் தேசிய நலனுக்குள்ளால் இந்திய - பாகிஸ்தான் போரை நோக்க முடியுமா?

இந்தியா - பாகிஸ்தான் நெருக்கடி நிலைக்கு மத்தியில் போர் நிறுத்தம் ஒன்றின் தேவைப்பாடு இருதரப்பிலும் ஆரோக்கியமானது. என்றாலும் அத்தகைய நிலைப்பாட்டினை அடைந்துகொள்வதில் இரு தரப்பிலான தனித்துவமான உரையாடல்களின் சாத்தியப்பாடுகள் வறிதானதாகவே தென்பட்டது.பஹல்காம் தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச சமூகத்தின் கருத்துக்கள் இந்தியாவிற்கு சாதகமான தோற்றத்தை வெளிப்படுத்தியிருந்தது.

3 min  |

May 20, 2025

Thinakkural Daily

நாரஹேன்பிட்டியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பில் தீவிர விசாரணை!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் வாகனம் மீது நேற்று இரவு (17) நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் சி.சி.டி.வி காட்சிகளை ஆராய்ந்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

யாழில் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்த இளைஞன்

ஐஸ் போதைப் பொருளுக்கு அடிமையான இளைஞர் ஒருவர் மது போதையில் சேற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

புத்தளம் மாநகர புதிய ஆணையாளரை சந்தித்த ஜம்இய்யத்துல் உலமாக்கள்

புத்தளம் மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள நந்தன மஹிபாலவை, அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகர கிளை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

ஓமான் சென்ற பெண்ணைத் தேடும் குடும்பத்தினர்

வெளிநாடு சென்ற இலங்கை பெண்ணிடம் இருந்து எதுவித தொடர்பும் இல்லை என்று குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை இறையடி சேர்ந்தார்

மட்டக்களப்பு மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயர் யோசப் பொன்னையா ஆண்டகை நேற்று இறையடி சேர்ந்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

இலங்கை மாணவர்களுக்கு வெளிநாட்டுக் கல்வியை இலகுவாக்கும் வகையில் கொமர்ஷல் வங்கி ACH உடன் பங்குடைமை

கொமர்ஷல் வங்கிக்கும் அவுஸ்திரேலிய உயர் கல்வி நிலையத்திற்கும் (ACH) இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக, வெளிநாடுகளில் கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் தற்போது கிடைக்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றுத் தேவையான நிதியை எளிதாகத் திரட்டக்கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ் டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

இலங்கையின் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் OTTO Bathware நிறுவனம் இலங்கையின் தரக்கட்டளைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் Sri Lanka Standards (SLS) தரச் சான்றிதழை வென்றுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

DIMO Agritech புதியதொழில்நுட்பதீர்வுகள்அறிமுகம்!

கடந்த தசாப்தத்தில் எமது நாட்டில் கணிசமானஅளவில்பாதுகாப் பான விவசாய பசுமைஇல்லங்கள்நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், சரியான தொழில்நுட்ப அறிவின்றியகட்டுமானங்கள் மற்றும் தவ றான பராமரிப்பு நடைமுறைகளால் எதிர்பார்த்த இலக்குகளை இலங்கையினால் பெறமுடியாமல் போயுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

வட பகுதியில் விகாரைகளை கட்டுகின்றீர்கள் கொழும்பில் நினைவேந்தல் நடத்தினால் குற்றமா?

நாட்டில் 30 வருட போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மூகமாக இம்முறை நினைவேந்தல் செய்வ தற்கு எமது மக்கள் கொழும்பு - வெள்ளவத் தையில் ஏற்பாடு செய்திருந்த போது, அந்த நினைவேந்தலை குழப்பும் வகையில் சி ங்கள இனவெறி பிடித்தவர்களின் கைக்கூ லிகள் செயற்பட்டிருந்தமை மிகவும் வேத னைக்குரிய விடயம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப் பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிர மணியம் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

தேசிய மக்கள் சக்தி அரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்கட்சிகள் ரணிலைச் சூழ்வது நகைப்பானது

சிறப்பாக செயற்பட்டு வருகின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்கட்சிகள் மக்களால் விரட் டியடிக்கப்பட்ட ரணில் விக்கிரமசி ங்கவைச் சூழ்வது நகைப்புக்குரிய விட யம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்கும ரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி

டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

யாழில் 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைப்பு

நகைக்கடை உரிமையாளருக்கு பலரும் பாராட்டு

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

ஆரோக்கியம், கலாசாரம் மற்றும் உணர்வுபூர்வமான தங்குமிட கொண்டாட்டத்தை வழங்கும் Sun Siyam பாசிகுடா

Sun Siyam பா சிகுடா தனது முத லாவது Island Soul நிகழ்வை முன்னெ டுத்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஆரோக்கியம் மற் றும் கலாசார அம்சங்க ளைக் கொண்டதாக அமைந்திருந்ததுடன், இலங்கையின் இரம் மியமான கிழக்கு கரையோரத்தில் உணர்வுபூர்வமான தங்குமிடத்துடன், உணவு தயாரிப்பினூ டாக கதை கூரலையும் கொண்டிருந்தது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

ஆசிய குத்துச் சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை 11ஆனது

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியா வில் உள்ள ஒக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

நடந்தது இன அழிப்புத்தான் என்பதில் தமிழரசு எந்த இடத்திலும் மறுப்புத் தெரிவிக்கவில்லை

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தருவோம் என்று சொல்லி வந்தவர்கள் இன்று மாறுபட்ட கருத்துடன் இருக்கின்றார்கள். மக்களுக்கான நீதி என்கின்ற விடயத்தில் நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

தோட்டப் புற மக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவோம்

பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதற்கு உரிய முறையில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவும் மற்றும் பொது மக்களுக்கு விரைவாக சேவையை வழங்குவதற்காகவும் இரத்தினபுரி மாவட்டத்தில் கொடக்கவெல நகரில் பொது மக்கள் சந்திப்பு ஒருங்கிணைப்பு காரியாலயம் திறக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுவீகரிக்கப்படவுள்ள கனிகள் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கும் வரை, குறித்த வரைபடப் பகுதிகளில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

2 min  |

May 20, 2025