Prøve GULL - Gratis
பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!
Penmani
|August 2024
காஞ்சி மாநகரம் என்று பெருமையுடன் காஞ்சிபுரம், பஞ்சபூத அழைக்கப்படும் திருத்தலங்களில் ஒன்று.புராதன சிறப்பு வாய்ந்த நகரம் ; நம் கலாசாரத்தையும் பாரம்பரியப் பெருமையையும் பறை சாற்றும் நகரம்; அவற்றை இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நகரம்; சோழ, பல்லவ மன்னர்களால் சிறப்புடன் ஆட்சி செய்யப்பட்ட நகரம்; கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் மேன்மையுற்ற நகரம்; உலகமே பாராட்டும் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்யும் நகரம்;கண்கவரும் காஞ்சிபுரப் பட்டுப் புடவைகளை விரும்பாத கன்னியரும் உண்டோ!

இப்படி பல விதங்களில் தலை நிமிர்ந்து நிற்கும் காஞ்சி மாநகரைக் காணும் ஆவலில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு பயணம் மேற்கொண்டோம்.சென்னையில் ஒரு கல்யாணம். அது முடிந்து எங்களுக்குக் கிடைத்த இரண்டே நாட்களில் காஞ்சிபுரம் முழுவதும் பார்க்க ஆசை! ஆனால் அது பேராசை என்று கூறிவிட்டார் எங்களைக் கூட்டிக் கொண்டு போக வந்த நண்பர்! காஞ்சிபுரத் திலுள்ள கோவில்கள் அனைத்தையும் காண ஒரு மாதம் வேண்டும் என்றாரே பார்க்கலாம்! ஆகவே பிரசித்தி பெற்ற கோவில்கள் மட்டும் போக முடிவு செய்தோம். முதலில் நின்றது புகழ் வாய்ந்த ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவில்!.
நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க.. என்று போற்றப்படும் தெய்வம்; எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருந்து அருள் பாலிக்கும் ஈசனின் பிரம்மாண்டமான உறைவிடம் ! பஞ்ச பூதங்களில் மண் வடிவமாக ஈசன் அமர்ந்து அருள் புரியும் புண்ணிய திருத்தலம்! இந்த மண்ணில் பிறக்கின்றோம்; இதனுடன் இணைந்து வாழ்கிறோம்; இறுதியில் நம்மை தாங்குவதும் இதே மண் தான்! மண் எனும் இம்மூலாதாரக் கருத்தை எடுத்துரைப்பது பிருத்வி லிங்கம் எனப்படும் ஸ்ரீஏகாம்பரேஸ்வர நாதர்!
நான்கு கம்பீரமான நுழை வாசல்கள்; அதற்கேற்றாற் போல் கம்பீரமான கோபுரங்கள்....பிரமிக்க வைக்கும் ராஜகோபுரம். கிருஷ்ண தேவராய மன்னனால் கட்டப்பட்டது என்கிறது குறிப்பு! உள்ளே நுழைந்தவுடன், அம்பாள் சிவபெருமானைத் தழுவிக் கொண்டிருக்கும் ஓவியம் நம்மை ஈர்க்கின்றது! அதுதான் இக்கோவிலின் வரலாறு!
ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தியதால், உலகம் இருளில் மூழ்க, கோபமுற்ற ஈசன் தேவியை பூலோகத்தில், காஞ்சியில் தவமிருக்கச் செய்தார். பார்வதியும் காஞ்சியில் உள்ள கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார்.தேவியின் தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக் காட்ட, தன் சிரசின் மேல் அமர்ந்திருந்த கங்கையை வெள்ளமாகப் பாயச் செய்தார். உடனே பார்வதி தேவி மணல் லிங்கத்தை மார்புறத் தழுவிக் காத்தார்! இதைத்தான் அபிராமி பட்டர்,
செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி... என்று பக்தியுடன் குறிப்பிடுகின்றார்! அந்தக்குறி இன்றும் காணலாம்!தேவியின் மணலால் இச்செயலால் மனமகிழ்ந்த ஈசன்,அவருக்கு காட்சியளித்து, அவரைத் திருமணம் புரிந்து கொள்கிறார்!
Denne historien er fra August 2024-utgaven av Penmani.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Penmani

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size