Prøve GULL - Gratis
சம்யுக்கையின் வேம்புலி.!
Penmani
|August 2025
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.

காற்றில் இன்னும் மழையின் தாக்கம் இருந்தது. தரை 'ஜிலீரெ'ன்று பாதத்தை பதம் பார்க்க வெளியே பார்த்தவளின் விழிகளில் அந்த வித்தியாசம் விழுந்தது. கண்கள் தெறித்து விடும்போல பெரிதாகின. எதிர் வீடு பக்கத்து வீட்டு மனிதர்களோடு அப்பாவும் நிற்க,
'அப்பா'
'சம்யுக்தா! ஒன்னுமில்லே! ஒன்னுமில்லே கீழே தண்ணீயா கெடக்கு பாத்து வா' அப்பா இரண்டெட்டில் நகர்ந்து கையை பிடித்துக் கொண்டார். மகளின் மனசு புரிந்தது. நினைவு தெரிந்த நாளாகவே மகளின் தோழியல்லவா இந்த வேம்புலி?
'எப்...எப்படிப்பா? '
'ப்ச்! ராத்திரியெல்லாம் மழையடிச்சு ஊத்துச்சேம்மா. புயல்காத்துல...'
அருகில் போய் அதைத் தொட்டாள். மழைத்தண்ணீரில் ஊறிப்போய் சிலிரென்றிருந்தது.
'நான் சொன்னது உன்னைத் தாக்கிடுச்சா? நான் ஒரு வார்த்தை உன்னை சொல்லக் கூடாதா? எப்படி மனசு வந்துச்சு என்னை விட்டுப் போக' சம்யுக்தா மௌனமாகக் கேட்டாள்.
வேம்புலி வீதிக்கு குறுக்கே கிளைகளைப் பரப்பிக் கொண்டு காம்பவுண்டு சுவரை பிளந்து தள்ளிக் கொண்டு பிரம்மாண்ட ராட்சசனைப் போல் விழுந்திருந்தது. சின்ன வயதில் தாத்தாவின் கைப்பிடித்துக் கொண்டு இதனுடைய நிழலில் பேசிய நாட்கள். காற்றில் கலந்து நாசியிலேறும் வேப்பம் பூ வாசம். கசந்தாலும் உடலுக்கு நல்லது என ருசிபார்க்க பழகிய வேப்பம் பழம். மடியில் சேகரிக்கும் வேப்ப முத்துக்கள் சொப்பு வைத்து விளையாடிய போதுகள். பக்கத்து வீட்டு ப்ருத்வியோடு விவரம் புரியாத வயதில் அப்பா அம்மா விளையாட்டு விளையாடிய நேரங்கள்...சமையல் செய்வது போல இவள் பாவனை செய்ய அவன் கடைக்கு போவது பேப்பர் படிப்பது சாப்பிடுவது சண்டை போடுவது போலெல்லாம் நடித்து சிரித்த நாட்கள்..
அவளின் விரல் மரத்தில் கோணல் மாணலாய் செதுக்கியிருந்த 'ப்ருத்' எனும் எழுத்துக்களை தடவியது.
ப்ருத்வி காம்பஸால் தன் பெயரை அதில் செதுக்கும் போதே வந்தவள் கோபத்தோடு பிடுங்கியெறிந்தாள் பேரை முடிக்கு முன்னரே. அவன் கோபமாய்க் கத்த இவள் அழுது கொண்டே
'ச்சீ! போடா! உன்னைக் குத்தினால் வலிக்கிறாப் போலத்தானே இதுக்கும் வலிக்கும். உன் பேரெழுத இதான் கிடைச்சுதா. போயி அந்த செவுத்துலே எழுது’ என்று மூக்கு விடைக்க பேசினாள்.

Denne historien er fra August 2025-utgaven av Penmani.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Penmani

Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025

Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025

Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025

Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025

Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025

Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025

Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size