कोशिश गोल्ड - मुक्त
சம்யுக்கையின் வேம்புலி.!
Penmani
|August 2025
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.

காற்றில் இன்னும் மழையின் தாக்கம் இருந்தது. தரை 'ஜிலீரெ'ன்று பாதத்தை பதம் பார்க்க வெளியே பார்த்தவளின் விழிகளில் அந்த வித்தியாசம் விழுந்தது. கண்கள் தெறித்து விடும்போல பெரிதாகின. எதிர் வீடு பக்கத்து வீட்டு மனிதர்களோடு அப்பாவும் நிற்க,
'அப்பா'
'சம்யுக்தா! ஒன்னுமில்லே! ஒன்னுமில்லே கீழே தண்ணீயா கெடக்கு பாத்து வா' அப்பா இரண்டெட்டில் நகர்ந்து கையை பிடித்துக் கொண்டார். மகளின் மனசு புரிந்தது. நினைவு தெரிந்த நாளாகவே மகளின் தோழியல்லவா இந்த வேம்புலி?
'எப்...எப்படிப்பா? '
'ப்ச்! ராத்திரியெல்லாம் மழையடிச்சு ஊத்துச்சேம்மா. புயல்காத்துல...'
அருகில் போய் அதைத் தொட்டாள். மழைத்தண்ணீரில் ஊறிப்போய் சிலிரென்றிருந்தது.
'நான் சொன்னது உன்னைத் தாக்கிடுச்சா? நான் ஒரு வார்த்தை உன்னை சொல்லக் கூடாதா? எப்படி மனசு வந்துச்சு என்னை விட்டுப் போக' சம்யுக்தா மௌனமாகக் கேட்டாள்.
வேம்புலி வீதிக்கு குறுக்கே கிளைகளைப் பரப்பிக் கொண்டு காம்பவுண்டு சுவரை பிளந்து தள்ளிக் கொண்டு பிரம்மாண்ட ராட்சசனைப் போல் விழுந்திருந்தது. சின்ன வயதில் தாத்தாவின் கைப்பிடித்துக் கொண்டு இதனுடைய நிழலில் பேசிய நாட்கள். காற்றில் கலந்து நாசியிலேறும் வேப்பம் பூ வாசம். கசந்தாலும் உடலுக்கு நல்லது என ருசிபார்க்க பழகிய வேப்பம் பழம். மடியில் சேகரிக்கும் வேப்ப முத்துக்கள் சொப்பு வைத்து விளையாடிய போதுகள். பக்கத்து வீட்டு ப்ருத்வியோடு விவரம் புரியாத வயதில் அப்பா அம்மா விளையாட்டு விளையாடிய நேரங்கள்...சமையல் செய்வது போல இவள் பாவனை செய்ய அவன் கடைக்கு போவது பேப்பர் படிப்பது சாப்பிடுவது சண்டை போடுவது போலெல்லாம் நடித்து சிரித்த நாட்கள்..
அவளின் விரல் மரத்தில் கோணல் மாணலாய் செதுக்கியிருந்த 'ப்ருத்' எனும் எழுத்துக்களை தடவியது.
ப்ருத்வி காம்பஸால் தன் பெயரை அதில் செதுக்கும் போதே வந்தவள் கோபத்தோடு பிடுங்கியெறிந்தாள் பேரை முடிக்கு முன்னரே. அவன் கோபமாய்க் கத்த இவள் அழுது கொண்டே
'ச்சீ! போடா! உன்னைக் குத்தினால் வலிக்கிறாப் போலத்தானே இதுக்கும் வலிக்கும். உன் பேரெழுத இதான் கிடைச்சுதா. போயி அந்த செவுத்துலே எழுது’ என்று மூக்கு விடைக்க பேசினாள்.

यह कहानी Penmani के August 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 9,500 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Penmani से और कहानियाँ

Penmani
ஆதி காலம் முதல் நவீன காலம் வரை பூட்டு சாவிகளுக்கான கண்காட்சி!
பாதுகாப்பு தொடர்பான எண்ணம் மனிதனின் மனதில் தோன்றிய நாளிலிருந்து பூட்டுக்கான தேவையும் தொடங்கிவிட்டது.
1 min
August 2025

Penmani
விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!
ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.
4 mins
August 2025
Penmani
வாழ்வை சீர்படுத்துவது எண்ணங்களே!
பிறந்ததன் பயனை வாழ்வு சொல்ல வேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள் தான்.
1 min
August 2025

Penmani
எங்கள் வீட்டில் ஒருவராக வாழும் இசை!
சங்கீதத்தை மூச்சாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்தவரும், பிரபல நடனக்கலைஞர்களுடன் இணைந்து செயல்பட்டுக்கொண்டிருப்பவரும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி வருபவரும், Finance Management- ல் மேற்படிப்பு படித்தவரும், சங்கீதத்துடன் வயலினையும் கற்று, இரண்டையும் திறமையாக கையாண்டு வருபவருமாகிய இசைக் கலைஞர் திருமதி அம்ரிதா முரளி பெண்மணிக்காக அளித்த பேட்டி:
4 mins
August 2025

Penmani
அரபிக் கடலின் ராணி கொச்சி!
கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிற கேரள நாட்டிற்கு எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் போய் வரலாம் என்று நினைக்கிற எத்தனையோ ஆயிரம் பேர்களில் ஒருத்தி நான். இன்னும் கூட இவர்கள் சாதிகளை தங்கள் பெயருக்கு பின்னால் சுமந்து கொண்டிருக்கிறார்கள் தான் என்றாலும் இயற்கை அள்ளிக் கொடுத்திருக்கிற பேரழகை இன்னும் கட்டி காத்து வருகிறார்கள் என்பதால் அந்த வகையில் பாராட்டுக்குரியவர்கள் தான்.
3 mins
August 2025

Penmani
குழந்தைகளின் எதிர்காலம் பெற்றோரின் கையில்...
மனித வாழ்வின் மிக ஆரோக்கியமான வயதான பதின் பருவத்தில் இருப்பவர்கள் பல காரணங்களால் விபரீதமான முடிவுகளை நாடுகிறார்கள். சிறிய தோல்வியும் அவர்களை நிலைகுலைய வைக்கிறது.
1 mins
August 2025

Penmani
கருணை நிறைந்த கிழங்கு!
கருணை கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் பி, மாங்கனிஸ், பொட்டாசியம், இரும்புச் சத்து, ரைபோபிளவின் போன்ற சத்துகள் உள்ளன.
1 mins
August 2025

Penmani
சம்யுக்கையின் வேம்புலி.!
கூந்தலை கொண்டையாய் போட்டுக் கொண்டே 'அம்மா காபி' என்று குரல் கொடுத்த சம்யுக்தாவின் கவனம் வாசற்புறச் சந்தடியில் சென்றது.
4 mins
August 2025

Penmani
தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான எழுத்தாளர் நகுலன்!
தமிழ் இலக்கியப் பெருங்கடலில் நீந்தி இன்பம் தோய்க்க விரும்புவோர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய எழுத்தாளர் நகுலன்.
2 mins
August 2025

Penmani
விநாயகருக்கான லட்டு ரூ. 30 லட்சத்துக்கு ஏலம்!
தெலங்கானா மாநிலத்தின் தலைநகரம் ஐதராபாதில் ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யும் உற்சவம் பதினோரு நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது.
2 mins
August 2025
Translate
Change font size