Versuchen GOLD - Frei

பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!

Penmani

|

August 2024

காஞ்சி மாநகரம் என்று பெருமையுடன் காஞ்சிபுரம், பஞ்சபூத அழைக்கப்படும் திருத்தலங்களில் ஒன்று.புராதன சிறப்பு வாய்ந்த நகரம் ; நம் கலாசாரத்தையும் பாரம்பரியப் பெருமையையும் பறை சாற்றும் நகரம்; அவற்றை இன்றும் பாதுகாத்துக் கொண்டிருக்கும் நகரம்; சோழ, பல்லவ மன்னர்களால் சிறப்புடன் ஆட்சி செய்யப்பட்ட நகரம்; கட்டிடக்கலையிலும், சிற்பக்கலையிலும் மேன்மையுற்ற நகரம்; உலகமே பாராட்டும் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்யும் நகரம்;கண்கவரும் காஞ்சிபுரப் பட்டுப் புடவைகளை விரும்பாத கன்னியரும் உண்டோ!

- மாலதி சுந்தரராஜன்

பக்தி மணம் கமழும் காஞ்சி மாநகரம்...!

இப்படி பல விதங்களில் தலை நிமிர்ந்து நிற்கும் காஞ்சி மாநகரைக் காணும் ஆவலில் இந்த வருடம் ஜனவரி மாதம் ஒரு பயணம் மேற்கொண்டோம்.சென்னையில் ஒரு கல்யாணம். அது முடிந்து எங்களுக்குக் கிடைத்த இரண்டே நாட்களில் காஞ்சிபுரம் முழுவதும் பார்க்க ஆசை! ஆனால் அது பேராசை என்று கூறிவிட்டார் எங்களைக் கூட்டிக் கொண்டு போக வந்த நண்பர்! காஞ்சிபுரத் திலுள்ள கோவில்கள் அனைத்தையும் காண ஒரு மாதம் வேண்டும் என்றாரே பார்க்கலாம்! ஆகவே பிரசித்தி பெற்ற கோவில்கள் மட்டும் போக முடிவு செய்தோம். முதலில் நின்றது புகழ் வாய்ந்த ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோவில்!.

நமசிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க.. என்று போற்றப்படும் தெய்வம்; எந்நாட்டவர்க்கும் இறைவனாக இருந்து அருள் பாலிக்கும் ஈசனின் பிரம்மாண்டமான உறைவிடம் ! பஞ்ச பூதங்களில் மண் வடிவமாக ஈசன் அமர்ந்து அருள் புரியும் புண்ணிய திருத்தலம்! இந்த மண்ணில் பிறக்கின்றோம்; இதனுடன் இணைந்து வாழ்கிறோம்; இறுதியில் நம்மை தாங்குவதும் இதே மண் தான்! மண் எனும் இம்மூலாதாரக் கருத்தை எடுத்துரைப்பது பிருத்வி லிங்கம் எனப்படும் ஸ்ரீஏகாம்பரேஸ்வர நாதர்!

நான்கு கம்பீரமான நுழை வாசல்கள்; அதற்கேற்றாற் போல் கம்பீரமான கோபுரங்கள்....பிரமிக்க வைக்கும் ராஜகோபுரம். கிருஷ்ண தேவராய மன்னனால் கட்டப்பட்டது என்கிறது குறிப்பு! உள்ளே நுழைந்தவுடன், அம்பாள் சிவபெருமானைத் தழுவிக் கொண்டிருக்கும் ஓவியம் நம்மை ஈர்க்கின்றது! அதுதான் இக்கோவிலின் வரலாறு!

ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானின் கண்களை விளையாட்டாக பொத்தியதால், உலகம் இருளில் மூழ்க, கோபமுற்ற ஈசன் தேவியை பூலோகத்தில், காஞ்சியில் தவமிருக்கச் செய்தார். பார்வதியும் காஞ்சியில் உள்ள கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார்.தேவியின் தவத்தின் மகிமையை உலகுக்கு எடுத்துக் காட்ட, தன் சிரசின் மேல் அமர்ந்திருந்த கங்கையை வெள்ளமாகப் பாயச் செய்தார். உடனே பார்வதி தேவி மணல் லிங்கத்தை மார்புறத் தழுவிக் காத்தார்! இதைத்தான் அபிராமி பட்டர்,

செஞ்சேவகன் மெய்யடையக் கொங்கைக் குரும்பைக் குறியிட்ட நாயகி... என்று பக்தியுடன் குறிப்பிடுகின்றார்! அந்தக்குறி இன்றும் காணலாம்!தேவியின் மணலால் இச்செயலால் மனமகிழ்ந்த ஈசன்,அவருக்கு காட்சியளித்து, அவரைத் திருமணம் புரிந்து கொள்கிறார்!

WEITERE GESCHICHTEN VON Penmani

Penmani

Penmani

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

time to read

7 mins

October 2025

Penmani

Penmani

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

ஆலங்காட்டு ரகசியம்!

சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.

time to read

1 min

October 2025

Penmani

நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்

ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.

time to read

3 mins

October 2025

Penmani

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!

தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.

time to read

4 mins

October 2025

Penmani

Penmani

இனிப்பு பிறந்த கதை

இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!

யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

தீபாவளி பூ!

இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.

time to read

1 min

October 2025

Penmani

மதுரையில் மஹா பெரியவர் கோயில்!

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!

time to read

1 min

October 2025

Translate

Share

-
+

Change font size