Prøve GULL - Gratis

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

Penmani

|

August 2025

ஆங்கில மாதமான ஆகஸ்ட் மாதம் பிறந்துவிட்டாலே ஆடி ஆவணி மாதங்களில் அனைத்து பண்டிகைளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து நம்மை இன்பத்தில் ஆழ்த்தும்.

- உஷா முத்துராமன், மதுரை

விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டைகள்!

எந்த ஒரு வேலை தொடங்கினாலும் அது குறைபாடு இல்லாமல் முழுமையாக நிறைவு பெற வேண்டும் என்றால் நாம் பிள்ளையார் சுழி போட்டு தொடங்குவோம். அதேபோல் அந்த விக்னமில்லா விநாயகனை போற்றும் நாளான பிள்ளையார் சதுர்த்தி வரும் நாளில் அவருக்கு பிடித்த உணவான கொழுக்கட்டைகள் பல வகை செய்து படைக்கும் போது அவருடைய அருள் நமக்கு கிடைப்பது உறுதி.

தேங்காய் பூரண கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: துருவிய தேங்காய் - இரண்டு கப், வெல்லம் - ஒரு கப், ஏலப்பொடி - சிறிதளவு, அரிசி மாவு - 2 கப், உப்பு - சிறிதளவு, நல்லெண்ணெய் -இரண்டு ஸ்பூன்

செய்முறை: தேங்காய் துருவலுடன் வெல்லம் கலந்து. கைவிடாமல் கிளறி இரண்டும் ஒன்று சேர்ந்து அதில் ஏலப்பொடியையும் சேர்த்து சிறிது தண்ணீர்விட்டு லேசாக சூடாக்கி கீழே இறக்கி வைத்து விட்டால் பூரணம் தயார்.

அரிசி மாவு ஒரு கப் என்றால் இரண்டு கப் என்று வெந்நீரைக் கொதிக்க விட்டு அதில் போட்டு சிறிது உப்பும், நல்லெண்ணெய்யும் ஊற்றி அரிசி மாவை கைவிடாமல் கிளறவும். பிறகு இறக்கி வைத்து அந்த மாவினை சொப்பு போல செய்து அதில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் 10 நிமிடம் வேக வைத்து விட்டால் தேங்காய் பூரண கொழுக்கட்டை தயார்.

imageகேஹுபனீர் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்: கோதுமை மாவு - ஒரு கப்ப, துருவிய பனீர் - 1 கப், துருவிய தேங்காய் - ஒரு கப், வெல்லம் - ஒரு கப், ஏலக்காய் - சிறிதளவு, நெய் - தேவையான அளவு.

செய்முறை: ஒரு இரும்பு சட்டியில் ஒரு ஸ்பூன் நெய்யை ஊற்றி பன்னீரையும் தேங்காயையும் போட்டு நன்றாக வதக்கி அதன் மீத பொடி செய்த வெல்லத்தை போட்டு எல்லாம் ஒன்றாக சேர்ந்து வரும் போது ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி கீழே இறக்கி வைத்து ஏலப் பொடியை போட்டு பூரணம் தயார் செய்து கொள்ளவும். கோதுமை மாவை சிறிதளவு நெய் உப்பு போட்டு சப்பாத்தி மாவு போல் பிசைந்து சப்பாத்தி போல் சிறிதாக வட்டமாக இட்டு அதில் தயாரித்து வைத்துள்ள பனீர் பூரணத்தை வைத்து மூடி இட்லி தட்டில் பத்து நிமிடம் வேக வைத்து விட்டால் சுவையான கேஹூ பனீர் கொழுக்கட்டை தயார்.

FLERE HISTORIER FRA Penmani

Penmani

Penmani

தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!

தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....

time to read

7 mins

October 2025

Penmani

Penmani

தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!

அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

ஆலங்காட்டு ரகசியம்!

சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.

time to read

1 min

October 2025

Penmani

நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்

ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.

time to read

3 mins

October 2025

Penmani

குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!

இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.

time to read

2 mins

October 2025

Penmani

Penmani

தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!

தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.

time to read

4 mins

October 2025

Penmani

Penmani

இனிப்பு பிறந்த கதை

இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!

யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.

time to read

1 min

October 2025

Penmani

Penmani

தீபாவளி பூ!

இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.

time to read

1 min

October 2025

Penmani

மதுரையில் மஹா பெரியவர் கோயில்!

திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!

time to read

1 min

October 2025

Translate

Share

-
+

Change font size