Intentar ORO - Gratis

மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?

Dinamani Vellore

|

July 28, 2025

லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.

- அறச்சலூர் இரா.செல்வம்

ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.

மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.

55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.

அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.

மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.

MÁS HISTORIAS DE Dinamani Vellore

Dinamani Vellore

முரண்டுபிடிப்பது திமுகவா? காங்கிரஸா?

'ஆட்சியில் பங்கு' என கடந்த இரண்டு மாதங்களாக காங்கிரஸ் - திமுக இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு முடிந்தபாடில்லை.

time to read

3 mins

February 16, 2026

Dinamani Vellore

இருசக்கர வாகனம் - வேன் மோதல்: 2 குழந்தைகள் உள்பட 5 பேர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை, சுற்றுலா வேனும், இருசக்கர வாகனமும் மோதியதில் 2 குழந்தைகள் உள்ளிட்ட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

time to read

1 min

February 16, 2026

Dinamani Vellore

வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்பு

இந்தியா சார்பில் ஓம் பிர்லா பங்கேற்கிறார்

time to read

1 mins

February 16, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

கலப்பு இரட்டையரில் ஹர்மித்-யஷஸ்வினிக்கு வெள்ளி

டபிள்யூடிடி ஸ்டார் கன்டெண்டர் சென்னை 2026 டேபிள் டென்னிஸ் தொடர் கலப்பு இரட்டையரில் இந்தியாவின் ஹர்மித் தேசாய்-யஷஸ்வினி கோபர்டே இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.

time to read

1 min

February 16, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

2-ஆவது வெற்றியுடன் நூலிழை நம்பிக்கையில் அமெரிக்கா

டி20 உலகக் கோப்பை போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் அமெரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.

time to read

1 min

February 16, 2026

Dinamani Vellore

விவாதமில்லாத நாடாளுமன்றம் எதற்காக?

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிகழ்ந்த அமளிகள் ஜனநாயக நடைமுறைகளுக்கு ஏற்புடையவைகளாகத் தெரியவில்லை.

time to read

2 mins

February 16, 2026

Dinamani Vellore

பிரிவினை சக்திகளுக்கு இடமளிக்கக் கூடாது

அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

time to read

1 min

February 16, 2026

Dinamani Vellore

ராகுல், படிக்கல் சதம்; கர்நாடகம் - 355/2

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் உத்தரகண்டுக்கு எதிராக கர்நாடகம் முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 355 ரன்கள் சேர்த்துள்ளது.

time to read

1 min

February 16, 2026

Dinamani Vellore

தவறான புகார்களுக்கான தண்டனை என்ன?: காவல் நிலையங்களில் காட்சிப்படுத்தக் கோரி மனு

தவறான புகார்கள், ஜோடிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதற்கு என்னென்ன தண்டனைகள் வழங்கப்படும் என எச்சரிக்கும் வகையில் காவல் நிலையங்கள், நீதிமன்ற வளாகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் அறிவிப்புப் பலகைகளில் அந்த தண்டனை விவரங்களைக் காட்சிப்படுத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

time to read

1 min

February 15, 2026

Dinamani Vellore

Dinamani Vellore

மின் ஆவணங்கள்...

ரீன் ஸ்டோன் மென்பொருள் மூலம் எண்ம நூலகங்கள், வினாத்தாள்கள், மின் நூல்கள், புகைப்படங்கள், வெளியீடுகள், மின் இதழ்கள், மின் ஆய்வேடுகள், பிற ஆய்வு உதவு நூல்கள் கிட்டத்தட்ட 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலவச மின் ஆவணங்களைப் பார்வையிட உதவும் வகையில் இணைப்புச் சொடுக்கிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளேன்.

time to read

2 mins

February 15, 2026

Translate

Share

-
+

Change font size