Essayer OR - Gratuit
மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?
Dinamani Vellore
|July 28, 2025
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.
ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.
மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.
55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.
மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.
Cette histoire est tirée de l'édition July 28, 2025 de Dinamani Vellore.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Dinamani Vellore
Dinamani Vellore
சிறுமிகளின் பைஜாமா நாடாவை இழுப்பதும் பாலியல் துன்புறுத்தல்தான்
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
1 mins
February 19, 2026
Dinamani Vellore
நுகர்வோர் சட்டங்களும், பாதுகாப்பும்...
இந்தியாவில் 1986-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
2 mins
February 19, 2026
Dinamani Vellore
மாநில சுயாட்சிக்கு சட்டத் திருத்தம்
பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
2 mins
February 19, 2026
Dinamani Vellore
ஐடி பங்குகளுக்கு திடீர் ஆதரவு: சென்செக்ஸ் நேர்மறையாக முடிவு!
இந்த வாரத்தின் 2-ஆவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமையும் பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
என்ன இருந்தாலும் ‘பெரிய அண்ணன்’ அல்லவா...!
இந்திய அரசியல் நடவடிக்கைகளிலே மிகப் பெரிய தாக்கத்தை நிகழ்காலத்திலும், அடுத்துவரும் காலத்திலும் ஏற்படுத்தத்தக்கது மோடி-டிரம்ப் ஒப்பந்தம்!
3 mins
February 18, 2026
Dinamani Vellore
6.75 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி விநியோகம்
தமிழகத்தில் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களில் இதுவரை 6 லட்சத்து 75,888 மாணவ, மாணவிகளுக்கு அரசு சார்பில் மடிக்கணினிகள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது நியூசிலாந்து
ஃபிலிப்ஸ், ரச்சின் அபாரம்; சம்ரா சாதனை சதம் வீண்
1 min
February 18, 2026
Dinamani Vellore
ரூ.50 கோடியில் அதி நவீன பேரிடர் மேலாண்மை நிறுவனம்
அதி நவீன வசதிகளுடன் கூடிய மாநில பேரிடர் மேலாண்மை நிறுவனம் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்டு வருவதாக நிதி நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
February 18, 2026
Dinamani Vellore
ரூ.2.55 லட்சம் கோடி இடைக்கால பட்ஜெட்
வருவாய் பற்றாக்குறை ரூ.48,000 கோடி; கடன் சுமை ரூ. 10.71 லட்சம் கோடி
1 min
February 18, 2026
Translate
Change font size
