Denemek ALTIN - Özgür
மரபணு மாற்ற பயிர்கள் ஜனநாயகத்தை என்ன செய்யும்?
Dinamani Vellore
|July 28, 2025
லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள இந்த வணிகப் பெரு நிறுவனங்கள் உலகில் உணவுப் பற்றாக்குறை இருப்பதாக மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்கின்றன, தங்களது தொழில்நுட்பங்களால்தான் உலகில் பசியை நீக்க முடியும் என்று நம்ப வைக்கின்றன.
ஜெப்ரி ஸ்மித் நிறைய கள ஆய்வுகளுக்குப் பிறகு 2004-இல் எழுதிய 'சீட்ஸ் ஆப் டெசெப்சன்' என்ற மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்தின் அறியப்படாத, மறைக்கப்பட்ட உண்மைகள் பற்றிய நூல் அமெரிக்கர்களுக்கு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அந்த நூலுக்கு 'தி நெக்ஸ்ட் டயர் பார் ஸ்மால் பிளானெட்' என்ற உணவு அரசியல் குறித்து ஆழமான நூலை எழுதிய பிரான்செஸ் மூரே லேப்பி என்ற அணிந்துரை எழுதியிருந்தார்.
மரபணு மாற்று விதைகள் ஜனநாயகத்தை என்ன செய்திட முடியும்? இப்படியொரு கேள்வியோடு தனது அணிந்துரையைத் தொடங்கியிருந்தார். கொஞ்சம்கூடப் பொருத்தமாக இல்லாத கேள்வியைப் போல இது நமக்குத் தோன்றும். இதற்கு அவர் கூறிய பதில், மரபணு மாற்று விதைகள் எல்லாவற்றையும் செய்ய முடியும் என்பது; அந்த நூலின் பெரும் பகுதி, மரபணு மாற்று உயிரினங்களுக்காக நடந்தவை, நடப்பவை, எந்த அளவுக்கு மரபணு மாற்று விதைகளுக்காக நம் ஜனநாயகம் சிதைக்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் தெரிவித்தது.
55 ஆண்டுகளுக்கு முன்பு தானியங்களைத் தீவனமாக்கி, இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்க்கும் முறை வந்த போது, அது ஒரு ஆபத்தின் அடையாளம் என்று எழுதினேன். இறைச்சிக்காகக் கால்நடைகளை வளர்ப்பதில் என்ன ஆபத்து இருக்க முடியும்? இறைச்சிக்காகவே மாடு வளர்ப்பது பற்றி அறியும்போதுதான் அந்த ஆபத்து புரியும்.
அந்தக் காலக்கட்டத்தில்தான் இறைச்சிக்காகக் கால்நடைகள் வளர்ப்பும், மாட்டிறைச்சி உற்பத்தியும் பெருந்தொழில் வணிகமானது. மாடுகளுக்குத் தேவைப்படும் தீவன மக்காச்சோளத்தை விளைவிப்பது தொடங்கி, உணவாக மக்களின் இல்லங்களுக்குச் செல்லும் வரை பல்வேறு படிகள் உள்ளன. அவற்றை அரசு அமைப்புகள் எப்படி நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதற்கான விதிமுறைகள், ஒழுங்காற்று அமைப்பு முறைகள், கட்டுப்பாடுகளை வடிவமைத்ததில் அந்தப் பெருந்தொழில் நிறுவனங்கள் பெரும்பங்காற்றின. இதைத்தான் ஆபத்தின் அடையாளம் என்கிறார் அவர்.
மேலும், அவை வணிகத்தை அதிகப்படுத்துவதற்காக மக்களின் உணவுப் பழக்கத்தை மாற்றியமைத்தன. காடுகளை அழித்துத் தீவனத்தை வளர்த்தது. நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தது. மாடு வேகமாக அதிகச் சதைப் பிடிப்புடன் வளர ஹார்மோன்கள் தந்தது, ஆன்டிபயாட்டிக்குகளுக்கு எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. மக்களுக்கு இதய நோயை அதிகமாக்கியது, இன்னும் பல பாதிப்புகளை எல்லாம் உருவாக்கியது என்கிறார் அவர்.
Bu hikaye Dinamani Vellore dergisinin July 28, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Dinamani Vellore'den DAHA FAZLA HİKAYE
Dinamani Vellore
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமர்வு அமளியுடன் நிறைவு
நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல்கட்ட அமர்வு வெள்ளிக்கிழமை அமளியுடன் நிறைவடைந்தது.
2 mins
February 14, 2026
Dinamani Vellore
சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு: தனி நீதிபதி உத்தரவு ரத்து
தமிழக மருத்துவக் கல்லூரிகளில் காலியாக உள்ள 40 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்பு களுக்கு 4 வாரங்களில் தேசிய மருத்துவ ஆணையம் கலந்தாய்வு நடத்த வேண்டும் என தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
1 min
February 14, 2026
Dinamani Vellore
ராகுல் காந்தி ஓர் அறிக்கை வீரர்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியை அறிக்கை வீரர் என்று மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான தர்மேந்திர பிரதான் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.
1 min
February 14, 2026
Dinamani Vellore
தொடரும் 'கரடி' ஆதிக்கம் சென்செக்ஸ் கடும் சரிவுடன் நிறைவு!
ஐடி குறியீடு 1.44% சரிவு
1 min
February 14, 2026
Dinamani Vellore
12,300 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள்
அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
1 min
February 14, 2026
Dinamani Vellore
தோல்வி பயத்தால் மகளிருக்கு ரூ.5,000
எடப்பாடி கே. பழனிசாமி
1 mins
February 14, 2026
Dinamani Vellore
பலம் சேர்த்த மிடில் ஆர்டர்: ஓமனை வீழ்த்தியது இலங்கை
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் இலங்கை 105 ரன்கள் வித்தியாசத்தில் ஓமனை வியாழக்கிழமை வென்றது.
1 min
February 13, 2026
Dinamani Vellore
மகா சிவராத்திரியின் மகிமை
பண்டிகைகள், உற்சவங்கள், திருவிழாக்கள் அனைத்துக்குமே ஆன்மிகம், புராணம், அறிவியல் சார்ந்த விளக்கங்கள் உள்ளன.
1 mins
February 13, 2026
Dinamani Vellore
நமீபியாவை வென்றது இந்தியா
இஷான், பாண்டியா, வருண் அசத்தல்
1 min
February 13, 2026
Dinamani Vellore
சுமித் நாகல், சித்தார்த் ராவத் வெளியேறினர்
சென்னை ஓபன் ஆடவர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆட்டம் வியாழக்கிழமையுடன் முடிவுக்கு வந்தது.
1 min
February 13, 2026
Translate
Change font size
