Try GOLD - Free
ஆதிரை நன்னாளும் ஆதித்தன் திருநாளும் !
Penmani
|January 2023
திருவாதிரைத் திருவிழா

வேதங்கள் ஆட,மிகு ஆகமமாட,கீதங்கள் ஆட, கிளர் அண்டம் ஏழாட, பூதங்கள் ஆட, புவனம் முழுதாட, நாதங் கொண்டாடினான் ஞானானந்தக் கூத்தே... என்று திருமூலர் வர்ணிக்கும் ஆனந்தத் தாண்டவமாடும் நடராஜப் பெருமானுக்கு உகந்த நாள் ஆதிரை நன்னாள் அதாவது, திருவாதிரை என்று போற்றப்படும் திருநாள்! சிவபெருமானின் நட்சத்திரம் திருவாதிரை. அதனாலேயே அவருக்கு ஆதிரையான் என்ற திருநாமம் உண்டு.
திருவாதிரைத் திருவிழா ஆருத்ரா தரிசன விழாவாக எங்கும் கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களுக்கும் ஆதாரமாக இருப்பது எம்பிரான் சிவபெருமானின் ஆனந்த நடனம் தான். அவர் நடனம் தான் உலகை வாழ்விக்கிறது. நமது இயக்கத்தின் ஆதார சுருதியே அவரது இயக்கம்தான்! மார்கழி மாதம் தட்க்ஷிணாயத்தின் இறுதி மாதமாகும். இக்காலத்தில் சுவாமி தரிசனம் செய்வது உத்தமமாகக் கருதப்படுகிறது. மாதங்களில் நான் மார்கழி என்று மாதவன் கூறுவதற்கேற்ப மார்கழி மாத பூஜை பெருமாள் கோவில்களிலும் சிவனார் மனம் குளிர சிவன் கோவில்களிலும் விடியற் காலையில் நடைபெறுவது வழக்கம். இவ்வதிகாலை வழிபாட்டை உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமை ஸ்ரீ ஆண்டாள், மாணிக்கவாசகப் பெருமான் ஆகிய இருவரையும் சேரும். அவர்கள் இயற்றிய திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களில் அரியையும் அரனையும் போற்றித் துதித்து அந்த பக்தி மழையில் நம்மையும் நனையச் செய்கின்றனர்.
திருவெம்பாவையில் மாணிக்க வாசகர்,பெண்கள் வீடுவீடாகச் சென்று தோழிகளின் துயில் மயக்கத்தை தெளிவித்து, தேசன், சிவலோகன் தில்லை சிற்றம்பலத்துள் ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய் என்று பாடி கருணைக் கடலான தில்லை நாதனை சரணடையச் செய்கிறார். திருப்பாவையில் ஆண்டாள் நாச்சியார் ஓங்கி உலகளந்த உத்தமன்பேர்பாடி பாவை நோன்பு பூண்டு,கோல விளக்கே!, கொடியே!, விதானமே! ஆலின் இலையாய்! அருளேலோரெம்பாவாய் என்று மனமுருகிப் பாடி, பரந்தாமனைக் கைப்பற்றுகிறாள். இரண்டு பாசுரங்களும் பக்தியுடன் மார்கழி நீராடி, இறைவனை அடையும் மேன்மையை எடுத்துரைக்கின்றன.
This story is from the January 2023 edition of Penmani.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 10,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Penmani

Penmani
தீபாவளி: செந்தில்- கவுண்டமணி அமர்க்களம்!
தீபாவளி திருநாளையொட்டி கவுண்டமணி, செந்தில் மற்றும் நகைச்சுவை நட்சத்திரங்களின் நகைச்சுவை காட்சிகள் கற்பனை கலந்து பெண்மணி வாசகர்களுக்கு தொகுத்து வழங்கப்படுகிறது கொஞ்சம் சிரித்து மகிழுங்களேன்.....
7 mins
October 2025

Penmani
தனித்துவமிக்க தமிழிசை ஆய்வறிஞர் மு.அருணாசலம்!
அருணாசலமும் தனித்துவமிக்கவர் ஆவார். இவருடைய பன்முகங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு வியப்புக்குரியவை.
2 mins
October 2025

Penmani
ஆலங்காட்டு ரகசியம்!
சிதம்பர ரகசியம்னு ஒன்று இருப்பது எல்லோருக்கும் தெரியும். நடராஜர் பஞ்ச சபைகளில் நாட்டியமாடியவர். நடராஜர் நாட்டியமாடிய முதல் தலம் திருவாலங்காடு ஆகும். சிதம்பரம் திருத்தலத்தில் நடராஜர் ஆகாய வெளியாக இருப்பதை சிதம்பர ரகசியம் என்பர். திருவாலங்காட்டிலும் ஒரு ரகசியம் புதைந்து உள்ளது. சிவபெருமானை தரிசிக்க காரைக்கால் அம்மையார் கைலாயத்திற்கு தலை கீழாக நடந்து சென்று கொண்டிருந்தார். பார்வதி சிவ பெருமானிடம் அவர் யார் என்று கேட்க 'இவர்கள் என் அம்மையார்' என்றார். வெகு அருகில் வந்து விட்ட காரைக்கால் அம்மையாரிடம் என்ன வரம் வேண்டுமென்று கேட்டபோது அவர் எப்போதும் உன் நாட்டிய தரிசனம் காணும் பாக்கியம் எனக்கு வேண்டும் என்றார்.
1 min
October 2025
Penmani
நிஜத்திலும் நாங்கள் காதல் ஜோடி தான்! - ஹரிகா - அரவிஷ்
ஹரிகா எனும் சின்னத்திரை நடிகை மற்றும் அரவிஷ் சின்னத்திரை நடிகர். இவர்கள் இருவரும் லவ் - கம் - அரேன்ஜுடு மேரேஜ் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் கோவையில் 27.03.2024-ல் இனிதே நடைபெற்றது.
3 mins
October 2025
Penmani
குளிர்ந்த பிரதேசத்தில் வெந்நீர் ஊற்றுகள்!
இந்தியாவின் தொலைதூர மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் காண வேண்டிய இடங்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இந்த இதழிலும் தொடர்கிறது.இந்தப் பூமியின் இயற்கை அதிசயத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. ஒவ்வொரு இடத்திலும் அந்த இடத்திற்கேற்ப தானாகவே உருவாகியுள்ள மலைகள், தாவரங்கள், இயற்கை தட்ப வெப்பங்களை அனுபவிக்க நேரில் சென்றால் தான் உணர முடியும். இயற்கையின் அற்புதங்களால் சூழப் பட்டுள்ள அருணாசலப் பிரதேசத்தில் நாம் அடுத்து பார்க்க வேண்டிய இடங்களை தெரிந்து கொள்வோம்.
2 mins
October 2025

Penmani
தித்திக்கும் தீபாவளியில் திகட்டாத இனிப்பு வகைகள்!
தீபாவளி என்றாலே எல்லோருடைய நினைவுக்கு வருவது புத்தாடை பட்டாசு, லேகியம், இனிப்பு, காரம் இவை தான். கடைகளில் என்னதான் விதவிதமான வண்ணங்களில் இனிப்புகளும் காரங்களும் கிடைத்தாலும் நாம் வீட்டில் அவற்றை செய்யும் போது அதில் ஆரோக்கியமும் தனி சுவையும் இருப்பதை உணரலாம். இப்போது தீபாவளிக்கு வீட்டிலேயே தயாரிக்க கூடிய சுவையான ஆரோக்கியமான தித்திப்பு மற்றும் கார வகைகளை பார்ப்போம்.
4 mins
October 2025

Penmani
இனிப்பு பிறந்த கதை
இந்தியாவில் கரும்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பயிரிடப்பட்டு வருகிறது.
1 min
October 2025

Penmani
பிளாஸ்டிக் பயன்பாட்டால் உயிரினங்கள் அழிகின்றன!
யானை முதல் டால்பின்கள் வரை பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரை இழக்கும் நிலை தொடர்வதால், விரைவில் பல உயிரினங்கள் பூமியில் இருந்து அழியும் நிலை ஏற்பட்டுள்ளது.
1 min
October 2025

Penmani
தீபாவளி பூ!
இந்திய வீடுகளில் சாமந்தி பூ சகஜம். வடநாட்டில் மழை காலம் முடிந்ததும் குளிர்ந்த அக்டோபர் மண்ணில் புதிய நாற்றுக்களை மற்றும் விதைகளை நடுவர். உயிர் பெற்றதும் தண்ணீர் தெளிப்பர். ஆனால் தண்ணீர் தேங்கக்கூடாது. பெரும்பாலும் அக்டோபர் ஆரம்பத்தில் நடுவதால் துர்கா பூஜா, தீபாவளி, கார்த்திக் பூர்ணிமா சமயங்களில் இதுவே தெருவில் கிடைக்கும் பூ. அதனை தொடுத்து மாலையாக கட்டி விற்பர். எந்த கோயில் வாசலுக்குச் சென்றாலும் இந்த பூவை தான் கட்டி விற்பர். தீபாவளி சமயம் பூத்துக்குலுங்குவதால் தீபாவளி பூ என அழைப்பர்.
1 min
October 2025
Penmani
மதுரையில் மஹா பெரியவர் கோயில்!
திருப்பணியில் பக்தர்களும் பங்கேற்கலாம்!!
1 min
October 2025
Translate
Change font size